Saturday 14 March 2015

" நீ ஏன் குடிக்கிறாய் " ..

சென்ற வருடம் பிறப்பதுக்கு சில மணித்தியாலங்கள் முன்,மம்மல் நேரம் நல்லா மை பூசிக்கொண்டு மம்மிக்கொண்டு மெட்ரோ ட்ரெயினில் ஏறி இருந்து " உலகம் பிறந்தது உனக்காக எனக்கா இல்லை ,,இல்லவே இல்லை " என்று பாடிக்கொண்டு உலகம் மறந்து வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்த நேரம் ஒரு ஆபிரிக்க இளஞ்சன்,கொஞ்சம் நடக்கக் கஷ்டப்பட்டு நடந்து வந்து எனக்கு முன்னால இருந்த சீட்டில வந்து இடி அமின் போல இருந்தான் ,
                 நான் சந்தோசமா பாடுறேன் என்று நினைத்து சிரித்துக்கொண்டே
                " ப்ரதர் ஹாப்பி நியூ இயர் " 
                             என்று ஆங்கிலத்தில் சொன்னான்,நான் அதுக்கு பதில் சொல்ல தாமதித்தேன் ,
                 " ஏன் உனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்ல தயக்கமா " 
       என்று கேட்டான்,,

                 நான் " புதுவருடமும் புடலங்காயும்...." 

                                 என்று ஆங்கிலத்தில் வேண்டா வெறுப்பாக சொன்னேன்,அவன் திடுக்கிட்டு 
                                " ஏன்பா இப்படி சொல்லுறாய் "
                                                                                     என்று பொப் மார்லி ஸ்டைலில் கையை பொத்திக்கொண்டு கேட்டான்,நான் அதுக்கும் ஏதவாது எடக்கு முடக்கா பதில் சொல்லுவேன் போல அவனைப் பார்த்தேன் ..
                 அவன் கொஞ்சம் ஜோசிதுப்போட்டு
                                                  " நீ உண்மையில் சந்தோஷமா ஹப்பி நியூ இயர் என்று சொல்லாலம் " என்று சொன்னான், 
                                     " நீ ஏன் இப்படி சொல்லுறாய் " என்று கேட்டேன்,,,அவன்

                                        " நல்லா ஜோசிதுப்பார் நீ இப்ப அந்தா இந்தா என்று ஆசுப்பதிரியிலையோ, கம்பி எண்ணிக்கொண்டு ஜெயிலிலையோ.அல்லது விழி பிதுங்க பயங்கர அகதிகள் தட்டுப்பு முகாமிலோ இல்லை கையைக் காலை நல்லா ஆட்டிக்கொண்டு சுதந்திர மனிதன் போல இருக்கிறாய்,அதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லியாவது ஹாப்பி நியூ இயர் என்று சொன்னால் உனக்கு என்ன நாலு பணம் குறைந்து போகப்போகுது " 

                      என்று சொல்லி அவன் ருவாண்டா என்ற ஆபிரிக்க நாட்டில் இருந்து உயிர் அரசியல் அகதியாக நோர்வே தப்பி வந்த கதை சொன்னான்

                                           அவனைப் பார்க்க கொஞ்சம் பயமா இருந்து, எழும்பி என்னோட முகத்தில குத்தினான் என்றால் என்னோட சீவியமே கிழியும் போல இருந்தது அவன் தோற்றம், ஆனால் அவன் பொறுமையா " இவன் வாயை மட்டும் வைச்சுக்கொண்டு வாழ்கையை ஓட்டும் அற்ப ஜீவன் " போல பார்த்துக்கொண்டு இருந்தான் .இடை இடையே " வாழ்க்கை சுவாரசியமானது அதை ரசித்து வாழ முயற்சிக்கும் போது " என்று மெதுவா சொல்லி கொண்டு இருந்தான்
                                           நான் பொறுமையாகக் அவன் சொன்ன அவலக் கதையைக் கேட்டேன். கேட்டுப்போட்டு

                          " என்னிடம் இப்ப வோட்கா இருக்கு குடிக்கப் போறியா என்னோட சேர்ந்து " என்று கேட்டேன் ,அவன் அமைதியாக இருந்தான், கொஞ்ச நேரத்தில் ஒரு கேள்வி கேட்டான்
                             ," நீ ஏன் குடிக்கிறாய் " 

                                            என்று கேட்டான் ,நான் அதை விட நினைத்தாலும் அது என்னை விடுகுது இல்லையே என்று " வாயல வங்காளம் போகும் மகாரசன் பெண்சாதி மர்மக்காரி யாருடன் சொன்னாலும் திறமைக்காரி " கதை போல வித்தையைக் காட்ட நினைத்தேன் ,ஆனாலும் அது எடுபடாது என்று நினைச்சு வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தேன்..
                                                            இந்தக் கேள்வியோட அவன் கொஞ்சநேரம் என்னைப் பார்த்திட்டு ,
                                      " சில நேரம் நீ உன் கடந்தகாலக் கவலையை மறக்கக் குடிக்கலாம் ஆனாலும் இந்த உலகத்தில் பெண்கள் எவளவு கஷ்டத்தை தாங்கி வாழுறாங்க,அவர்கள் எல்லாரும் குடிகுரார்களா " 

                                             என்று கேட்டுப்போட்டு,நொண்டி நொண்டி அடுத்த ஸ்டேஷனில் இறங்க வெளிக்கிட அவனோட காலைப் பார்த்தேன் ,அவன் இரண்டு காலும் பிளாஸ்டிக் கால் போட்டது போல இருந்து,
                                    " என்ன பார்க்கிறாய், கண்ணி வெடியில சிதறிப் போய் விட்டது என்னோட இரண்டு காலும் முழங்காலுக்கு கீழே " 

                                  என்று சொல்லிப்போட்டு கெந்திக் கெந்திக் இறங்க முதலும் " ஹாப்பி நியூ இயர் " என்று சொல்லிப்போட்டு போயிட்டான்

                          அவன் கேட்ட , " நீ ஏன் குடிக்கிறாய் " என்ற கேள்வி சென்ற வருடம் முழுவதும் மனடையைக் குடைந்துகொண்டே இருந்தது ,பல சமயங்களில் நாங்கள் எல்லாருமே கிருஷ்ண பரமாத்மா ஜீவாத்மாக வாக வரும் மகாபாரத்தில் கிருஷ்ணனிதும் யாதவ குலத்தினதும் அழிவு ஏற்பட்ட " எந்தக்கடலில் இரும்பு உலக்கை பொடி செய்யப்பட்டு கரைக்கப்பட்டதோ அதே கடலின் கரையிலேயே இவர்கள் மது அருந்தி களி நடனம் புரிந்தனர்." போன்ற .....வாக்கியங்களையும் அதலா வந்த சாத்யகி , கிருதவர்மன் மது உறக்கத்தில் இருந்த உபபாண்டவர்களை அஸ்வத்தாமனுடன் சேர்ந்து கொன்ற சம்பவங்களை என்னமோ உலக மகா தத்துவம் போல திருப்பி திருப்பி படித்தும்,ஜோசிதுக்கும் கொண்டும் இருக்கிறோம்,ஆனால் சாதாரண ஒரு மனிதன் கேட்ட ஒரு சின்னக் கேள்வி இப்பவும் என்னை சித்திரவதை செய்கிறது....
                      .....என்ன சீவியமாட இது .....


2 comments :

  1. ஹஹஹஹஹஹஹஹஹா
    ஹஹஹஹஹஹஹஹஹா
    கியல வடக் னா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete