Monday 9 March 2015

காயத்திரி மந்திரம்..

மோகம் சருகிட்ட
பார்வைகள்
வைத்த
போட்டிப் பரீட்சையின்
கேள்வித்தாளில்
விடைகள்
தேட முன்னமே
நேரம் முடிந்தது...

கீற்றுச்
சிரிப்பைப் பேச
வைத்த
அழகுராணிப் போட்டியில்
மொழி
தோற்றுப் போய்
அணியலங்காரங்களைக்
கழட்டியது...

பாசம் கொட்டியதை
பரிசீலிக்க வைத்த
பட்டிமன்றத்தில்
நடுவருக்கே
தீர்ப்புச் சொல்ல
நடுக்கம்
வந்தது

வார்த்தைகள்
இசையோடு
போட்டி போட்ட
குரலின் தேடலில்
எதேச்சையாக  
ராகங்கள்
ஆரோகணத்திலையே  
அலங்கோலமானது

அகம்
எதையுமே
எழுதாமல்
சும்மா பார்த்துக்
கொண்டிருவென்று
இதயமெல்லாம்
காயத்திரி  மந்திரம்
உச்சரித்தது
முகம்

இதுக்கு மேலே
நீ
எதை எழுதினாலும்
கவின்ஞன்
ஆகிவிடுவாயென்று
எச்சரித்து
இடை நடுவில்
தடை போட்டு  
மயக்கிப் போகிறது
உன்
மவுனம்.

நாவுக் அரசன்
ஒஸ்லோ 08.03.15