Saturday 30 May 2015

தோசைக்கல்லு சைசில இசைத்தட்டு..

யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று  ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த,   தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில  பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !

                                   அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் "  வட்டத்தில் நின்று  போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

                                   அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார  "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும்  அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள்  குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே  சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல  அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க ,  இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே  பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய் ,

                        "இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? " 

                                       எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் " அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற  ABBA என்ற  இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம் 

                               " இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?" 

                                    என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது 

                             ," ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?" 

                         என்று  அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரறிஞ்சு போட்டு,

                         " ஆபிரிகாவில இருக்குது , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?" 

                                                எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு ! 

                             " இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?"  எண்டு கேட்டேன் ?

 அவர் ,அதுக்கு

                            "  இல்லை , LP  வடிவிலதான் உள்ளது"  

                                                 என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு,   இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு, 

                              "இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்

                                 " பேந்தும்பார் , இந்தப் பெடி முசுப்பாத்திவிடுறதை , ரேகொர்ட் பண்ணதானே ரேகொர்டிங் பார் வசிருக்கிரம்,வேற என்னதுக்கு  தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வசிருக்கிரம் "

                                         என்றார், அவரை பார்த்து நட்பாக  சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.

                                             இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் சபதம் எடுத்தேன், 


                                              வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக் கார பஞ்சகல்யானியதான் கட்டவேண்டும் எண்டு, சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது,அதுவும் ஸ்வீடனில் நடந்தது!... அந்த கதை பிறகு சொல்லுறன்!


                                         அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ," இங்கபாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை" எண்டு கிண்டல் அடிச்சா ! 


                                  அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த  இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !அதில இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும்  EURO SONG பாட்டுப்போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது, 


                              உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள்,அவர்களின் பெரும்பாலனா "Lyrics "பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன்,காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை,ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!


                                  ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த  இரு பெண்களும்,  இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம்  விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! "  என்று  பாடி,  "DANCING QUEEN " என்று  ஆடி ,"  Honey Honey"  என்று  கட்டிப் பிடிசுக்  காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You  " என்று சொலிப்  பின்னர் பிரிந்தார்கள், 


                                                      பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All  " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பளியப்போட்டு ,ஆற்றாமையில்   " The Day Before You Came  " எண்டு  பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!  

                                      அவர்களின் பாடல்களே அவர்களின் வாழ்க்கை,,,சில பாடல்கள் கேட்கும்போது மனஅழுத்தம் எங்களுக்கே வரும் , அந்த ஜோடிகளில்   பெனிஅன்டர்சன்..அவர் காதலி பிரிடாவை ஏமாற்றினார்,,,பிஜோர்ன் ,அவர் காதலி ,அக்னிதாவை ஏமாற்றினார்.. தனிபட்ட மன உடைவு இந்த இசைக்குழுவை உடைத்துவிட்டது ,,என்னதான் அந்த ரெண்டு ஆண்களான பென்னி அண்டர்சனும், பியோர்ன் உள்ளுவாலும் பின்னாட்களில் தனி அல்பங்களில் இசை அமைத்தாலும், ABBA  வின் இளமை உயிர் அதில இருக்கவில்லை இல்லை .

                       மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய  அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், "thanks you for the music" எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலகஅளவில் பெரபலம்  ஆக்கிய  பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற  இசை குழுவுக்கு இருக்கிறது!

.

" எலிங் " ஒரு நட்பின் கதை.

" எலிங் " என்ற ஒரு தனி மனிதனின் பெயரில் நோர்வேயிய மொழியில், 2001 இல் , நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் புறநகர் பகுதியான மஜாச்ற்றுவா என்ற டவுனில் வாழும் நட்பு தேடும் இரண்டு தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு காமடி போல எடுத்த படம் ,இன்றுவரை நோர்வே தயாரித்த ஒரு அருமையான படம் என்று சொல்லலாம். 

                                           பெண்களே இல்லாத அந்த படத்தின் இரு கதாநாயகர்கள் எவளவு சாதாரண மத்திய வயது மனிதர்களோ அந்த அவளவு சிம்பில் அதன் கதை,,ஆனால் அதைக் கனம் ஆக்குவது அதன் திரைக்கதை. மனிதர்களுடன் அதிகம் பழகாத,வாழ்கையின் வரிகளுக்கு நடுவில் தடுமாறும் மனிதர்களுக்கு  நகைசுவைஉணர்வு அதிகம், அவர்கள் வாழ்கை சூழ்நிலை பலசமயம்,அந்த உணர்வை வெளிப்படுத் சந்தர்பம் கொடுக்காவிடினும்! இது போல  "குருடன் பெண்டிலுக்கு அடித்த மாதிரி " கிடைக்கும் அரிய சந்தர்பங்களில் சும்மா பூந்து விளையாடுகின்றார்கள் அந்த இரண்டு மனிதரும்.!

                                               பழக்கம் என்பது ஒரு மோசமான  மிகப்பெரிய பலவீனம், சிலரிடமிருக்கும் சில பழக்கங்கள்தான் இயல்பாக எல்லாரும் போல வாழ விடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் நாவல் வடிவில் வந்து அதிகம் யாரும் வாசிக்காத ஒரு கதையைக் கையில எடுத்து தயாரிக்கப்பட்ட, பழக்கம் என்பது  ஏமாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம், பலவீனங்களை நியாயப்படுத்தும் ஒரு மோசடிவேலை, இவை எல்லாம் நன்றாகவே தெரிந்தும்,  மாற்றிக் கொள்வது கடினம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டது  எலிங் படம்

                                  , சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் அந்த ஆண்டே ஒஸ்கார் விருதுக்குப் நோமிநெட் செய்யப்பட்டு, இந்தா அந்தா எண்டு பரபரப்பு கிளப்பினாலும் ,அதுக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை, என் அளவில் நான் நினைக்கும் காரணம் அந்தப் படத்தை ,நோர்வே மக்கள் எப்படி ஜோசிப்பார்கள், அவர்களின் வாழ்வியல் அடையாளம் என்ன,என்று   நோர்வேயிட்கு வெளியே வசிக்கும் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாதது  போல இருப்பது ஒரு காரணம், மற்றது நோர்வே மொழி விளங்கினால் தான் முழுமையாக அதற்குள் இறங்கி ரசிக்கலாம் போலவும் இருக்கு.

                                        கதை இதுதான், எலிங் அஸ்மா நோயால அவதிப்படும் ஒரு நாற்பது சொச்சம் வயசுள்ள ஒரு அப்பாவி,கொஞ்சம் எல்லாத்துக்கும் அதிகம் உணர்ச்சி ஆகும் நெர்வஸ் டைப் ,மிகவும் சட்டத்துக்கு பயந்த,வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடின வள்ளளார் ராமலிங்க சுவாமிகளின் இருபதாம் நூ ற்றாண்டு மறு பிரதி போன்ற மனிதர். நனைந்த கோழிக்குஞ்சைப் போல வெளிறிப்போன முகம், மழுப்ப சேவ் எடுத்த கன்னம், உடலுக்குப் பொருத்தமில்லாத ஜீன்ஸ் பேண்ட் , கலர் வெளிறிப்போன ஒரு விண்டர் ஜாகெட் என்று எளிமையா வாழும் எலிங் அவரோட அம்மாவோடதான் அவர் தனியா அந்த வயதுவரை  வாழ்ந்தார். 

                                   அம்மா இறந்து போக, அவரோட வாழ்க்கை சமூக உதவி, மனநிலை பாதிக்கப்படவர்களுக்கு  உள்ள நிலையில் வர,அவருக்கு ஒஸ்லோ கொமுன் என்ற முனிசுபால்டி ஒரு சிறிய அபார்ட்மென்ட், எலின் இன் இயல்பிலும் ,தோற்றத்திலும் எந்த விதத்திலும் ஒத்துவராத , பியோர்னே என்ற இன்னுமொரு தனி மனிதருடன் சேர்ந்து பகிர்ந்து வாழ கொடுகிறார்கள். அதில தான் இருளுக்குள் தீக்குச்சி உரசப்படுவது போலக் கதை சூடு பிடிக்குது...

                                        பியோர்னே என்ற மற்ற மனிதர்  ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வாற வில்லன் போல இருப்பார், நடந்தால் நிலம் அதிரும் உயரமான மனிதர்,பலமான கைகள், அகலமான முகம் அதில் கோரைப் புல் தாடி, கண்ணில மூர்க்கம் ,மூக்கு நுனியில் இயலாமையின் கோபம். அதிகம் படிக்காத எளிமையான சிந்தனை உள்ள, பார்க்கிற பெண்கள் எல்லாரோடும் படுக்க நினைக்கும், எதற்கு எடுத்தாலும் ஜோசிக்காமல் " வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ " எண்டு வாழ்கையை வன்முறையில் எதிர் கொள்ளும் மனிதர். 

                                                       முரட்டு பியோர்னே ஒரு மெக்கானிக் இருந்தாலும் அவருக்குள்ள ஒரு இளகிய நட்பு தேடும் இதயம் இருக்கு,அது படத்தின் முடிவில் வெளிவரும்., அதுக்கு எதிரா எலிங் நோர்வேயில்  பல வருடம் பிரதமரா இருந்த குறு கார்லம் புடுட்லான் என்ற அம்மணியின் கொள்கைகளிலும் ,அவாவின்  கட்சியான தொழித் கட்சியில் ஊறியவர், அரசறிவியல் என்ற அரசியல் படித்த அறிவாளி . இந்த முரண்பாடான இருவரின் அன்றாட வாழ்கை எப்படி குழப்பம் உருவாக்குது எண்டு அந்தப் படம் காமடியா சொன்னாலும் நிறைய அன்புக்கு ஏங்கும் தனி மனித இயல்புகள் அதில மறைமுகமா நாடித்துடிப்பு போல இருக்கு.

                                                            ஜோசிதுப்பார்த்தால் ,நாங்கள் எல்லாருமே எப்பவுமே ஒரு நல்ல இமேஜ் ஐ பொதுவெளியில் உருவாக்கி வைத்திருக்கவே விரும்புகின்றோம்! உண்மையான எங்களின் ,அன்பின் ஏக்கம் போன்ற நல்ல விசயங்களும்  , மிருக்க இயல்பு, அட்டகாசங்கள், போன்ற நெகடிவ் இயல்புகளும்   இலகுவில் வெளியே தெரியாது ! கோபம், பொறாமை, பயம் ,வரும் நேரங்களில் மட்டும்தான் பல ஆழ்மனது மனது  இயல்புகள் பழையபடி பதுங்கி வெழிவருகின்றது  என்கிறார்கள் சைக்காலிச்டுகள் ! 

                                                  பியோர்னேயின் குளறுபடி அடக்காசம் பிரேமுக்கு பிரேம் படத்தில வரும் அதை அந்த அப்பாவி எலிங் எப்படி சமாளிக்குறார்  எண்டு சொல்லும் படத்தின் முடிவில் நிறைய எதிர்பாராத திருபங்கள் நடக்குது,ஒரு கட்டத்தில் எலிங் ,அவர் சக ரூம் மேட் பியோர்னே போலவே வாழ்க்கையைச் சுவாரசியமா எதிர்கொள்ள பழகி விடுகின்றார்.அந்த இரண்டு மனிதர்களின் பரி சுத்தமான நட்பின் விளிம்பில் வடியும் அன்பு அந்தப் படத்தை ஒரு கவிதை ஆக்குது....

                                       எலிங் படத்தை நோர்வே மொழியில் பார்த்தால் தான் அதன் முழு வீச்சு விளங்கும்,அதை ஆங்கில சப் டைட்டில் இல் பார்த்தால் ஆதரமான சில விசியங்கள் அடிபட்டு, என்னவோ ஒரு கலைப் படம் போல இருக்கும் ,அதுதான் அந்தப் படத்தின் பலவீனம். எப்படியோ , தனிமை வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா விதமான  பொறுமைக்கும் , அனுசரிப்புக்கும் ,ஏமாற்றுதனத்திற்கும்,  துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியாக, காமடியக் களமாகக்  கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு.
.


வீட்டுக்கார அம்மா வேலைக்காரனுடன் ஓட்டம் !

இப்பெல்லாம் தாறுமாறா எழுதுவது மட்டுமில்லை ,,தாறுமாறா அதுகளுக்கு தலைப்பு வைத்து "தென்னாலி ராமன் தென்ன மரத்தில புல்லுப் புடுங்கின " மாதிர்  வில்லங்கமான விளக்கம்  கொடுத்து பல படைப்புகள் வருகுது ! பலரோட நாவல், கவிதைத் தொகுதி ,சிறுகதைத்  தொகுதி தலைப்புக்கள் சுவாரிசியமா இருக்கும், உள்ளுக்க அந்தளவு தரமாக சரக்கு  இருக்கும் என்பதுக்கு உத்தரவாதம் இருப்பதில்லை.!

                                                                        பலர் தங்கள் படைப்புகளுக்கு என்னைப் போல சாதாரண அரை விசுகோதுகளுக்கு விளங்காத மாதிர் எல்லாம் தலைப்பு வைச்சு பீதியக் கிளப்புகின்றார்கள் , இது விளங்கவில்லை என்றால் , இதெல்லாம் உங்களக்கு விளங்காது ,, இதை எல்லாம் விளங்க " இன்டலெக்சுவல் நோலேச் " வேணும் எண்டு சொல்லுராகள் ,இது இப்ப இல்லை தருமு சிவராமு என்ற பிரமிளுடன் வெங்கட் சாமிநாதன் என்ற குடுமிப்பிடி சண்டை நடந்த அந்தக் காலத்தில இருந்தே நடக்குது !

                                            உலக மகா மேதைகள் அப்படிதான் தலைப்பு வைப்பார்கள், அதிகம் பேருக்கு விளங்காது , அதுக்கு காரணம் அவர்கள் சொல்லும் விசியம் போலவே அதன் தலைப்பும் இருக்கவேண்டும் எண்டு இருக்கும் போல! பிராங் காப்ப்கா  மமெம்பிச்திசிசிஸ்  எண்டு வைச்சார் அவர் உலகப்புகழ் நாவலுக்கு, பிளேட்டோ அவரோட புத்தகத்துக்கு " ரிப்பப்பிளிக் " எண்டு வைக்க, எனக்கு ரெம்ப்பப் பிடித்த பிரேடிச் நெட்சே அவரோட தத்துவ பைபிளுக்கு "யாரதுச்டிதிரா " என்ற அழிந்துபோன சமயத்தின் பெயரை வைத்தார்!

                                                அதை விடுவம் ..இருந்தாலும் ,தமிழ் நாட்டு எழுத்தாளரை போலவே சுவாரசியமா , ஈழதுது எழுத்தாளர் வைத்த பெயர்களைப் பாருங்கள்."ஒரு விலைமகளைக் காதலித்தேன் " நாவல் , இந்துமகேஷ்,புங்குடுதீவு !"ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் " நாவல், நெல்லைக் க பேரன் ,நெல்லியடி !"சர்மிளாவின் இதய ராகம் " , நாவல் ,ஜூனைதா யுனைகின் ,,மட்டக்களப்பு !" கங்கைக்கரை ஓரம் " ,,,செங்கை ஆழியன் , "நீரில் எழுதப் பட்டிருக்கும் மீனை பூனை வாசிகிறது " கவிதை தொகுப்பு ,அகம்மது பைசல் ,பொதுவில்...இப்படி வைச்சு இருக்கிறார்கள் .

                                                   நோர்வேயில் இருந்து  ஒரு நியுஸ் பேப்பர் வருகுது , அதன் தலைமை பதிப்பகத்துக்கு வெளியே  வெண்கலசிலை  அருகில் இருந்து நானே இந்தப் படம் எடுத்தேன் , யாழ்ப்பாணத்தில காராசில வேலைசெய்யிறவர் போல இருக்குற இவர் ஒவ்வொரு நாளும் இந்தப் பத்திரகை வேண்டி  பதிப்பகத்துக்கு வெளியே இருந்து ஒரு வரி விடாமல் வாசிப்பாராம் , அதல அவருக்கு சிலை வைத்துள்ளார்கள் !பின்னாலே உள்ள  இந்தக் கட்டிடத்தில தான் இன்றும் உலக வீதி என்ற இந்த VG  பத்திரிகையின் பதிப்பு நடக்குது. 

                                                இந்த  VG நியூஸ் பேப்பர் அதன் தலைப்புகளுக்கா அறம்புறமா விற்கும் , கண்ணை திறந்து பார்க்காமே பலர் வேண்டும் அந்த VG நியூஸ் பேப்பர் பற்றிய ஒரு படபதிவுக்கு சென்ற வருடம்  ஒரு ,நண்பர் கேடிருந்தார் ,"உங்களுக்கும் நியூஸ் பேபருக்கும் என்ன சம்பந்தம்" எண்டு! நான் நியூஸ் பேப்பர்,முக்கியமா அந்த VG படிபதில்லை.அது கிசுகிசு கலந்த ஒரு பரபரப்பு பத்திரிகை!முதல் பக்கத்தில கொட்டை எழுதில உப்பு சப்பு இல்லாத விசியத்தை சுவாரசியமா தலையங்கம் போட அது நல்லா விக்குது ! இலங்கையில் மித்திரன் பேபரில முன்னம் எல்லாம் இலக்கியத் தரமா வருமே "வீட்டுக்கார அம்மா வேலைகாரனுடன் ஓட்டம் " போல தலயாங்கம் இருக்கும், வீட்டுகார அம்மா எதுக்கு வேலைகரனனுடன் ஓடி இருப்பா எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும்,அதன் பின்னனி விடுப்பு அறிய எல்லாரும் வேண்டுவார்கள்!

                               இப்படி தலைப்பு புத்தகங்களுக்கு வைக்கும் விபரீத முயற்சியில்  எழுசியும் இருக்கிறது , வீழ்ச்சியும் இருக்கிறது ! சுந்தரராமசாமி  " புளியமரத்தின் கதை "எண்டு அவர் எழுதிய மிக சிறந்த நாவலுக்கு பெயர்  வைக்க ,புளியமரத்தில என்ன இருக்கும், பேய் தான் இருக்கும் எண்டு பலர் அதை ஆரம்பத்தில்  படிக்கவில்லை, அவரே பின்னர். "ஜே ஜே சிலகுறிப்புகள் " நாவல் எழுத அதுவும் நாவலா,கட்டுரையா,என்ற பெயர் குழப்பத்தால தமிழில் அதிகம் அறியப்படவில்லை ! அதன் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பு அதிகம் வித்ததாம் !

                                  இப்ப இந்த வைரஸ் வியாதி பேஸ் புக்குக்கும் தொற்றியுள்ளது. அண்மையில் ஒரு ஆண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் ஸ்போர்ட் ஸ்டீச்சர் அந்த பாடசாலையில் நல்லா ஸ்போர்ட்ஸ் செய்து ஓடக்கூடிய பையனுக்கு அந்தப் பையனோடு சேர்ந்து கிரவுண்டில ஓடி ஓடுறது எப்படி என்று சொல்லிக்கொடுத்தாங்க...அதைப் பார்த்துப்போட்டு பிரபலமான பேஸ் புக் பதிவாளர் கொழுவி குமாரு போட்ட ஸ்டேட்ஸ் . " பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...." .என்று போட்டுள்ளான்.  அய்யோ குமாரு , இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா என்று எஸ்கேப் ஆக வேண்டி வந்திட்டுது கடைசியில் 

                                    கைக் காசைக்  கொடுத்து புத்தகம் வேண்டி   நானே இப்படி ஒரு தலயங்கக்  குழப்பத்தில சில வருடம் முன் ஏமாந்தேன்,  "தேவதைகளின் தூமைச் சீலை " என்ற புத்தகத்தை அதன் தலைப்பு கவர்ச்சியாலும், அதை "போஸ்ட் மொடேர்ணிசம்,எச்சிஸ் டென்சியலிசம்" எண்டு ஒருவர் விமர்சனம் எழுதியாதாலும் வேலைமினக்கெட்டு வாசித்தன் ! அதில,தேவதையும் இல்லை, தீட்டுதுணியும் இல்லை, குறைந்தது ஒரு கோவணம் தன்னும் அதில இல்லை!!..

.

கவிஞர் தாககவி தண்ணிதாசன்.....

" சிலரை எப்படி ஏமாற்றுவதென்று சிலருக்கு தெரிந்திருக்கிறது. பாவப்பட்ட  அந்த  சிலருக்குத்தான் தெரிந்திருக்கவில்லை சிலர் எல்லா விதத்திலும் ஏமாற்றுகிறார்கள் ..." என்று கவிஞர்  தாககவி தண்ணிதாசன்  மிகவும் உருக்கமாக ஒரு ஸ்டேட்ஸ் போட்டு இருக்கிறார் அவரோட பழைய சுண்ணாம்பு உதிர்ந்து விழுகிற மண் சுவரில. 

                                   ஜெர்மனியில்  இருந்த நேரம் அவரும் உங்களையும் என்னையும் போல முன்னம் எல்லாம் இங்கே பேஸ் புக் டைம் லைன் வால் இல்தான் பதிவுகள் போடுவார், யாழ்பாணத்தில வசிக்கும் இப்போது , பல காரணங்களால் இந்த முகப் புத்தகத்தில் மேக் அப் போட்டு எல்லாருக்கும் சும்மா பொய்க்கு லைக்கும்,கொமென்ட்டும் போட சுயமரியாதை வளைஞ்சு நெளிய மறுத்ததால்,  இதை விட்டுப்போட்டு போய் அவரோட வீட்டு மண் சுவரில  இப்ப ஸ்டேடஸ் போடுறார்.. 

                                          அவரின் நடப்பு இலக்கிய முயற்சிகள் பற்றி டெலிபோனில தேங்காய் துருவுற மாதிரி துருவித் துருவி விசாரிச்சாலும் வெளிய வராத பல விசியம் அங்கே நடக்குது போல இருக்கு. தலைமறைவாக இருக்கும் அவர் நண்பர் கவிஞ்சர் வைரஸ் வைரவநாதன் எழுதும் கவிதைகளைப் பெற்றுத் தரச்சொல்லி கேட்டால்  அவரே கோவத்தில 

                              " நான் காதில பூ சுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். அவரை எனக்கு முன் பின் தெரியாதே பிறகு எப்படி அவர் அதை உங்களுக்கு  அனுப்பச் சொல்லி என்னிடம்  கூறுவார். வேறு ஏதாவது உருப்படியாய் பேசுங்கப்பா "   என்று திட்டுறார்.

                                ஜெர்மனியில் இருந்து கட்டுநாயக்கா போய் இறங்கின கையோட டொச்லான்ட் கழுகு படம் போட்ட யூரோபியன் யூனியன்  பாஸ்போட்டை கிழிச்சு எறிஞ்சு போட்டு இப்ப யாழ்பாணதில இருந்து கொண்டு,  கச்சான் அலுவா  கிண்டுற நேரம்  அடிப்பிடிக்க விடாமல் கிண்டுற கடைசிக் கிண்டில கவிட்டுக் கொட்டுற மாதிரி  உடன உடன  தாககவி தண்ணிதாசன்  சில நேரம் அளவுக்கு அதிகமாக அரிச்சந்திரன் ரேஞ்சுக்கு  நேர்மையாக நிலைத் தகவல் போடுவதால் பிரசினையும் வருகுது, 

                                        ஒருமுறை  பொஞ்சாதி பிள்ளைகள்  தன்னைத் தனியா விட்டுப் போட்டு நயினாதீவு தேர் , தீர்த்த,பூங்காவானத் திருவிழாவுக்குப்   போனதால் தான் தனியா வீட்டில  இருப்பதை  ஒரு மூன்று வரி ஹைக்கூ  கவிதையில் எழுதிப்போட, அதை வாசிச்ச கள்ளர்,  இரவு அவரோட வீடுக்குள்ள ஓட்டைப் பிரிச்சு இறங்கி, அவரோட வாயுக்க துணியை அடைஞ்சு போட்டு , அவரைக் கட்டிலோடு கட்டி வைச்சுப் போட்டு ,கிடந்த பெறுமதியான எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போயிட்டாங்கள் , அந்த நிகழ்வைத்தான் அவர் ஆங்கிலத்தில்  " And I won't cry out any more as  Time stands still as I gaze with lost " என்ற கவிதையில் எழுதி இருக்கிறார். 

                                             எனக்கு மிகவும் பிடித்த சமகால இவோகேட்டிவ் ரக பொயட் இந்த கவிஞர்  தாககவி தண்ணிதாசன். அவர் எழுதிய சில கவிதைகள் உலக அளவில் இபோல வைரசை விட பீதியக்கிளப்பி இருக்கு , பல இலக்கிய மேடைகளில் அவர் கவிதைகள் வாசிக்கப்பட்ட போது பலருக்கு மைக்கிறேன் என்ற ஒற்றைத்தலைவலி நிரந்தரமா வரக் காரணமா இருந்து இருக்கு, டொச் மொழியில் மொழிபெயர்த்த அவர் யாழ்ப்பானத் தமிழில் எழுதிய,

                 " பிள்ளைப் பெறுவுக்கு சரக்கு தூள் அரைக்க வரவா  "  என்ற கவிதை வாசித்த பல ஜெர்மன்காரங்களுக்கு ஓட்டோBபான்  போல இருந்திருக்கு  . அவரோட " நான் இரவில  பெரிசா  சாப்பிடுறதில்லை " என்ற சில்வியா பிளாத்தின் கொண்பெஸ்சனல் ஸ்டைலில் எழுதிய  கவிதை உங்களுக்கு சாம்பிளுக்கு நாளைக்கு இங்கே போடுறேன். இரவில  அவர் பெரிசா  என்ன சாப்பிடுறதில்லை என்பதை சர் ரியலிஸ்டிக் ஸ்டைலில் சூட்சுமமா அதில எழுதி இருக்கிறார் என்கிறார்கள்.

                                  ஆனாலும்  பல சமயம் தாக சாந்தி செய்ய வழி இல்லாத நேரம், சில  பேஸ் புக் பதிவாளர்களால் தன்னால் ஒரு  மண்ணாங்கட்டியும் எழுத முடியவில்லை எண்டு புலம்புகின்றார் இந்தப்  கவிஞர் தாககவி  தண்ணிதாசன்.  இந்தப் படத்தில நவீன புதுக்கவிதை படிம உருவக வடிவாக வைன் கிளாசை , ஈசான மூலை எண்டு வாஸ்து சாஸ்திரம் சொல்லும் திசையை பார்த்தவாறு,  பின் நவீனத்துவ கோட்பாட்டில்  ஆல்பர்ட் காம்யு ஸ்டைலில்,

                     'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ " என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு  வம்ச விருத்தியாவது ஒழுங்கா நடக்கட்டும் எண்டு சரிச்சு தாக சாந்தி செய்பவர் தான்  பிரபல   கவிஞர்  தாககவி தண்ணிதாசன். உங்களுக்கு அவரைக் காட்ட வேண்டும் எண்டதுக்கு தான் இந்த விளாதிமிர் உலிச் உலியானவ் போல ஆட்டுக்கிடாய் தாடியோடு உள்ள அவர் தாக சாந்தி செய்யும் படம் போட்டு இருக்கிறேன் 

                              காக்கைப்பாடினியார்  சங்க காலத்திலேயே பொறுமையின்  எல்லையாக குமரியைக் குறிப்பிட்டுள்ள தமிழர்களுக்கு சொந்தமா மண்டையை பாவிச்சு ஜோசிக்கப் பஞ்சி என்றும், யாரவது ஒருவர் புதுவிதமா ஏதாவது தொடக்கினால் அதை " செட்டிநாட்டு பொம்பிளைகள்  மிளகாய்ப் பொடி அரைக்க மிட்டாசு ஜமிந்தார் அரவைக் கல்லுக்கு ஆராத்தி காட்டின மாதிரி " கொப்பி அடிச்சு ,சுடுற தோசைக் கல்லுக்கே நோகாமல் தோசை சுட்டு, உளுந்து வடை போல உல்டா பண்ணி,  உலக அளவில் பிரபலம் ஆகுறாங்க என்று  வெறுத்துப்  போய் இருக்கிறார்   
                                     அதனால   " வைக்கத் தெரியாதவன் " .... " ஐக் கொண்டு போய் மாச வட்டிக்கு " ..... "  சேட்டு  வீட்டில வைச்சாணாம் " என்ற மாதிரி பலர்  நொந்து போகிறார்கள்  என்றும்  அவரோட "இளிச்சவாயன்  கோப்பிரேசன் திணைவாகை " என்ற செய்யுளில்  பாயிரம் பாடி இருக்கிறார்.  

                                      இலங்கையில் அந்த நேரம்அவர் எழுதின தொடக்க நேரமே   திறணாய்வு வித்தகர்கள்  எல்லாம் ஒரு குழுவா மாறி  மாறி முதுகு சொறிஞ்சு,,தாங்க  எழுதுறதுதான் கவிதை என்று வல்லாதிக்கம் செய்து பலரை எழுதவே விடவில்லை . அதால பாதிக்கப்பட்டவர்  கவிஞர் தாககவி தண்ணிதாசன். அதை ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அவர்  எழுதிய " பேர்லின் சுவரில் மூத்திரம் பெய்தவன்  " என்ற நீண்ட கவிதையில் பதிவு செய்திருக்கிறார் 

                                             ஆனாலும்  அவர் கவிதைகளில் , சுதேசியத் தமிழ் மொழி வாசம்,  கவிதைமொழி உவமை, தனித்துவ  உருவகம்,  சொந்தமா சிந்தித்து எழுதும் இன்டலிஜென்ட் அதிகம் இல்லை என்றும்  ,அடுத்தவன் சரக்கில உல்டா பண்ணி  , சில மேற்கு ஐரோப்பிய மொழிபெயர்ப்புக் கவிதைகளை ஜலசா  பண்ணி எழுதியுள்ளதை அவரே ஒத்துக்கொண்டு , " எனக்கு யாழ்பாணத்தில ஆட்கள் இல்லாத  காணிக்க ,வேலிக்  கதியாலை தள்ளிப் போட்ட   பழக்க தோஷம் விடுகுதில்லை " என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

                                          பாவம்பா இவளவு நேர்மையா இருக்கும் அந்த  கவிஞர்பா அந்தாள்  தண்ணிதாசன் , ஏன்பா  " கடவுளின் மொழிதான் குழந்தைகளின் மொழி " எண்டு எப்பவும் அப்பாவியா சொல்லித்திரியும் அந்தாளிண்டயுக்க போய்க் கையைப் போட்டுத்  துலாவி எடுக்குரிங்களே ,  எடுத்து  இன்னும் எவளவு காலத்துக்குத்தான் கவுரவ எழுத்தாளர்கள் எண்ட பெயரில இப்படி அடிமாட்டு இலக்கியம் அடுத்தவங்களின் முதுகில ஏறி இருந்து ஓட்டுவீங்களோ தெரியலை.  இதைத்  தான் "  இல்லாத பிள்ளைக்கு பெயர் வைக்க அலைவது நல்லாகவே இல்லை " எண்டுறதாக்கும்..   

.......................... என்ன சீவியமடா இது !.
.
 .