Saturday 30 May 2015

வீட்டுக்கார அம்மா வேலைக்காரனுடன் ஓட்டம் !

இப்பெல்லாம் தாறுமாறா எழுதுவது மட்டுமில்லை ,,தாறுமாறா அதுகளுக்கு தலைப்பு வைத்து "தென்னாலி ராமன் தென்ன மரத்தில புல்லுப் புடுங்கின " மாதிர்  வில்லங்கமான விளக்கம்  கொடுத்து பல படைப்புகள் வருகுது ! பலரோட நாவல், கவிதைத் தொகுதி ,சிறுகதைத்  தொகுதி தலைப்புக்கள் சுவாரிசியமா இருக்கும், உள்ளுக்க அந்தளவு தரமாக சரக்கு  இருக்கும் என்பதுக்கு உத்தரவாதம் இருப்பதில்லை.!

                                                                        பலர் தங்கள் படைப்புகளுக்கு என்னைப் போல சாதாரண அரை விசுகோதுகளுக்கு விளங்காத மாதிர் எல்லாம் தலைப்பு வைச்சு பீதியக் கிளப்புகின்றார்கள் , இது விளங்கவில்லை என்றால் , இதெல்லாம் உங்களக்கு விளங்காது ,, இதை எல்லாம் விளங்க " இன்டலெக்சுவல் நோலேச் " வேணும் எண்டு சொல்லுராகள் ,இது இப்ப இல்லை தருமு சிவராமு என்ற பிரமிளுடன் வெங்கட் சாமிநாதன் என்ற குடுமிப்பிடி சண்டை நடந்த அந்தக் காலத்தில இருந்தே நடக்குது !

                                            உலக மகா மேதைகள் அப்படிதான் தலைப்பு வைப்பார்கள், அதிகம் பேருக்கு விளங்காது , அதுக்கு காரணம் அவர்கள் சொல்லும் விசியம் போலவே அதன் தலைப்பும் இருக்கவேண்டும் எண்டு இருக்கும் போல! பிராங் காப்ப்கா  மமெம்பிச்திசிசிஸ்  எண்டு வைச்சார் அவர் உலகப்புகழ் நாவலுக்கு, பிளேட்டோ அவரோட புத்தகத்துக்கு " ரிப்பப்பிளிக் " எண்டு வைக்க, எனக்கு ரெம்ப்பப் பிடித்த பிரேடிச் நெட்சே அவரோட தத்துவ பைபிளுக்கு "யாரதுச்டிதிரா " என்ற அழிந்துபோன சமயத்தின் பெயரை வைத்தார்!

                                                அதை விடுவம் ..இருந்தாலும் ,தமிழ் நாட்டு எழுத்தாளரை போலவே சுவாரசியமா , ஈழதுது எழுத்தாளர் வைத்த பெயர்களைப் பாருங்கள்."ஒரு விலைமகளைக் காதலித்தேன் " நாவல் , இந்துமகேஷ்,புங்குடுதீவு !"ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் " நாவல், நெல்லைக் க பேரன் ,நெல்லியடி !"சர்மிளாவின் இதய ராகம் " , நாவல் ,ஜூனைதா யுனைகின் ,,மட்டக்களப்பு !" கங்கைக்கரை ஓரம் " ,,,செங்கை ஆழியன் , "நீரில் எழுதப் பட்டிருக்கும் மீனை பூனை வாசிகிறது " கவிதை தொகுப்பு ,அகம்மது பைசல் ,பொதுவில்...இப்படி வைச்சு இருக்கிறார்கள் .

                                                   நோர்வேயில் இருந்து  ஒரு நியுஸ் பேப்பர் வருகுது , அதன் தலைமை பதிப்பகத்துக்கு வெளியே  வெண்கலசிலை  அருகில் இருந்து நானே இந்தப் படம் எடுத்தேன் , யாழ்ப்பாணத்தில காராசில வேலைசெய்யிறவர் போல இருக்குற இவர் ஒவ்வொரு நாளும் இந்தப் பத்திரகை வேண்டி  பதிப்பகத்துக்கு வெளியே இருந்து ஒரு வரி விடாமல் வாசிப்பாராம் , அதல அவருக்கு சிலை வைத்துள்ளார்கள் !பின்னாலே உள்ள  இந்தக் கட்டிடத்தில தான் இன்றும் உலக வீதி என்ற இந்த VG  பத்திரிகையின் பதிப்பு நடக்குது. 

                                                இந்த  VG நியூஸ் பேப்பர் அதன் தலைப்புகளுக்கா அறம்புறமா விற்கும் , கண்ணை திறந்து பார்க்காமே பலர் வேண்டும் அந்த VG நியூஸ் பேப்பர் பற்றிய ஒரு படபதிவுக்கு சென்ற வருடம்  ஒரு ,நண்பர் கேடிருந்தார் ,"உங்களுக்கும் நியூஸ் பேபருக்கும் என்ன சம்பந்தம்" எண்டு! நான் நியூஸ் பேப்பர்,முக்கியமா அந்த VG படிபதில்லை.அது கிசுகிசு கலந்த ஒரு பரபரப்பு பத்திரிகை!முதல் பக்கத்தில கொட்டை எழுதில உப்பு சப்பு இல்லாத விசியத்தை சுவாரசியமா தலையங்கம் போட அது நல்லா விக்குது ! இலங்கையில் மித்திரன் பேபரில முன்னம் எல்லாம் இலக்கியத் தரமா வருமே "வீட்டுக்கார அம்மா வேலைகாரனுடன் ஓட்டம் " போல தலயாங்கம் இருக்கும், வீட்டுகார அம்மா எதுக்கு வேலைகரனனுடன் ஓடி இருப்பா எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும்,அதன் பின்னனி விடுப்பு அறிய எல்லாரும் வேண்டுவார்கள்!

                               இப்படி தலைப்பு புத்தகங்களுக்கு வைக்கும் விபரீத முயற்சியில்  எழுசியும் இருக்கிறது , வீழ்ச்சியும் இருக்கிறது ! சுந்தரராமசாமி  " புளியமரத்தின் கதை "எண்டு அவர் எழுதிய மிக சிறந்த நாவலுக்கு பெயர்  வைக்க ,புளியமரத்தில என்ன இருக்கும், பேய் தான் இருக்கும் எண்டு பலர் அதை ஆரம்பத்தில்  படிக்கவில்லை, அவரே பின்னர். "ஜே ஜே சிலகுறிப்புகள் " நாவல் எழுத அதுவும் நாவலா,கட்டுரையா,என்ற பெயர் குழப்பத்தால தமிழில் அதிகம் அறியப்படவில்லை ! அதன் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பு அதிகம் வித்ததாம் !

                                  இப்ப இந்த வைரஸ் வியாதி பேஸ் புக்குக்கும் தொற்றியுள்ளது. அண்மையில் ஒரு ஆண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் ஸ்போர்ட் ஸ்டீச்சர் அந்த பாடசாலையில் நல்லா ஸ்போர்ட்ஸ் செய்து ஓடக்கூடிய பையனுக்கு அந்தப் பையனோடு சேர்ந்து கிரவுண்டில ஓடி ஓடுறது எப்படி என்று சொல்லிக்கொடுத்தாங்க...அதைப் பார்த்துப்போட்டு பிரபலமான பேஸ் புக் பதிவாளர் கொழுவி குமாரு போட்ட ஸ்டேட்ஸ் . " பத்தாம் வகுப்பு மாணவன் 26 வயது ஆசிரியையுடன் ஓட்டம்...." .என்று போட்டுள்ளான்.  அய்யோ குமாரு , இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா என்று எஸ்கேப் ஆக வேண்டி வந்திட்டுது கடைசியில் 

                                    கைக் காசைக்  கொடுத்து புத்தகம் வேண்டி   நானே இப்படி ஒரு தலயங்கக்  குழப்பத்தில சில வருடம் முன் ஏமாந்தேன்,  "தேவதைகளின் தூமைச் சீலை " என்ற புத்தகத்தை அதன் தலைப்பு கவர்ச்சியாலும், அதை "போஸ்ட் மொடேர்ணிசம்,எச்சிஸ் டென்சியலிசம்" எண்டு ஒருவர் விமர்சனம் எழுதியாதாலும் வேலைமினக்கெட்டு வாசித்தன் ! அதில,தேவதையும் இல்லை, தீட்டுதுணியும் இல்லை, குறைந்தது ஒரு கோவணம் தன்னும் அதில இல்லை!!..

.

1 comment :

  1. ஹஹஹஹஹஹஹஹா ..!

    உண்மை..

    ReplyDelete