Saturday 19 December 2015

நீ ஒரு மடையன் மச்சான்,..

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் அலாதியான ஆடம்பரமாக ஆரம்பிக்கும் இந்த நேரம் என் பள்ளிக்கால நண்பன் சில நாட்கள் முன் கனடாவில் இருந்து அவசரமாகக் கதைக்க வேண்டும் என்று டெலிபோன் செய்தான். பொதுவா அவன் தண்ணி அடிச்சுப்போட்டு நிக்கும் போதுதான் என் நினைவு அவனுக்கு வரும் அந்த நேரம் தான் எப்பவும் போன் செய்து 

                           " நீ ஒரு மடையன் மச்சான்,,உனக்கு உலகத்தில் என்ன நடக்குதே எண்டு தெரியாமல் சும்மா வேலையும் வீடும் எண்டு ஓடிக்கொண்டு இருகிறாய்..வாழ்கையை எப்பவும் என்ஜோய் பண்ண வேணுமடா உனக்கு அது தெரியுதில்லை "

                                என்றுதான் தொடங்குவான். சில நேரம் நானும் தண்ணியில் நீந்திக்கொண்டு நிற்பேன் அப்படி நேரம் அவன் போன் எடுத்தால் ரெண்டு பேரும் பிறகு பழைய நினைவுகளில் நீந்துவோம் .சில வாரம் முன் அவன் கவலையாகப் போன் எடுத்தான் . என்ன நடந்தது என்று கேட்டேன்

" மச்சான் கழுத்தில ஒரு கட்டி வந்து இருக்கடா,அதைக் கொண்டுபோய்க் காட்ட, எம் ஆர் ஐ ஸ்கான் எடுக்க வேண்டும் எண்டு சொன்னாங்கள் டா,,"

" ஹ்ம்ம்,, அது நல்லம் தானே அந்த ஸ்கான் இல் என்ன பிரசினை எண்டு கண்டுபிடிப்பாங்கள் ,நீ ஒண்டும் ஜோசிக்காதை "

" இல்லை மச்சான்,,சிலநேரம் பிசகும் போல இருக்கு "

" என்ன பிசகும் "

" இல்லை மச்சான்,கான்சர் வராதுக்கு முதல் டியூமர் போல என்னவும் வந்து இருக்குமோ என்று ஜோசிக்கிரன் மச்சான் "

" ஒண்டும் ஜோசிக்காதை,,நீயே கருங்காலிக் கட்டை போல இருகிறாய் உனக்கு அதெல்லாம் வராது "

" இல்லை மச்சான்..பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக வந்திட்டுதுகள் அதால பிரச்சினை இல்லை "

" ஒரு பிரசினையும் இல்லை,,நீ ஜோசிக்காதை "

" இல்லை மச்சான்,எண்ட மனுசி, நான் லவ் பண்ணுறன் எண்டு சொல்ல உடுத்த உடுப்போட எனக்காக ஓடி வந்தவள் டா, அவளை இருவது வருடம் பூப் போல வைச்சுப் பார்கேறேன் டா, நாளைக்கு நான் பொட்டென்று மேல போனால் , அவள் பாவமடா "

" அட அட அட இதுக்க ஜோசிக்கிறாய் ,இதெல்லாம் சின்னப் பிரச்சினை டா,அதெல்லாம் ஒண்டும் நடக்காது "

" அவளுக்கு எண்டு சோசியல் ஹெல்த் இன்சூரன்ஸ் இல் காசு போட்டு வைச்சு இருக்றேன் ,"

" ஒ இது இன்னும் நல்லா இருக்கே, நீ நல்ல தீர்க்கதரிசனம் உள்ளவண்டா "

" ஹ்ம்ம்,,அவள் வாழ்க்கை பாவமாப் போகக்கூடாது எண்டு அப்படி செய்து வைத்தேன் டா ,உண்மையான அன்பு இருந்தா அப்படிதாண்டா செய்வாங்க,உனக்கு எங்க இதெல்லாம் விளங்கப் போகுது "

" ஹ்ம்ம்,உண்மைதான் ஒரு பெண்ணுக்கு பினான்சியல் சப்போட் இல்லை என்றால் அது சைட் டிஷ் இல்லாமல் தண்ணி அடிக்கிற மாதிரி டா,,நானும் ரெம்பவே கவலைப்படுவேன் "

" என்னடா இவளவு பொசிடிவ் ஆக சொல்லுறாய்,,நான் நிறைய ஜோசிகுறேன் டா மச்சான் "

" ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ,நீ ஜோசிக்காதை "

" என்னடா சொல்லுறாய்

" ஆமாடா படைச்ச ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ஒரு வழி இல்லை இன்னொரு வழி வைச்சு இருப்பான் டா "

" ஆனாலும் கவலையா இருக்குடா "

" இதெல்லாம் சின்னப் பிரசினை டா,மனதை நல்ல திடமா வைச்சுக்கொண்டு போய்க் கழுத்தைக் கொடு "

" உண்மையாவா சொல்லுறாய் டா,,நான் நினைச்சேன் நீ ரெஸ்ட்றோரெண்டுகளில் குக் வேலை செய்து கொண்டு இருப்பதால் ,உனக்கு சமையலை விட்டால் உலகத்தில் ஒரு மண்ணும் தெரியாது எண்டு "

" இல்லைடா,,எனக்குப் பொறுப்பு எண்டு ஏதும் வந்தா அதைப் பொறுப்பா செய்வேண்டா ,இதெல்லாம் சின்னப் பிரசினை "

" என்ன சின்னப் பிரசினை,,,நீயே ஒரு உருப்படாத கழுதை,பேஸ் புக்கில் கதை,கவிதை எண்டு எழுதிக்கொண்டு வீணாப் போற மூதேசி,உனக்கு எங்க உலகம் தெரியும் சொல்லு பார்ப்பம் "

" டேய் இதுக்கு எல்லாம் பெரிசா ஜோசிக்காதை நீ மேல போனால் உன்னோட மனுசியை யாரோ ஒரு நல்லவன் பூப் போல வைச்சுப் பார்ப்பான் டா "

                                   நேற்று இரவு அவன் மறுபடியும் அடிச்சுப் பிடிச்சுப் போன் எடுத்தான்

" மச்சான் அது சும்மா சூட்டில வந்த கட்டி எண்டு டாக்டர் சொன்னார்டா ,அதலா நல்லா தலைக்கு எண்ணை வைச்சுக் குளிச்சேன் , இப்ப ஓகே டா மச்சான் ,நீ ஜோசிக்காதை மச்சான் "

" ஹ்ம்ம் .."

" என்ன சொல்லு பார்ப்பம் மச்சான் நான் பெரிசா பயந்து கொண்டு நினைச்ச மாதிரி கடைசியில ஒண்டுமே நடக்கவில்லை டா "

" ஹ்ம்ம், நானும் தான் பெரிசா நினைச்ச மாதிரி ஒண்டுமே கடைசியில நடக்க வில்லையே .."

.

ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .

MBS என்று செல்லமாக அழைக்கப்பட்டM.B. ஸ்ரீநிவாசன்,ஆந்திராவில் பிறந்து,மலையாளத்தில் புகழ்பெற்ற இவரை ,தமிழ் சினிமாவில் இசை அமைக்க அப்போது இருந்த ஜாம்பவான்களுக்கு சவாலாக ,. தனது தாய் மொழி மலையாளத்தில் தனக்குப் பிடித்தவரை தமிழ் சினிமாவில் இசைஅமைக்க K .J ஜேசுதாஸ் தமிழுக்கு கொண்டுவந்தார் என்கிறார்கள்!

                                        மலையாளத்தில் மறக்க முடியாத பல மெட்டுப் பாடல்களை அவர் K .J ஜேசுதாஸ் இக்குக் கொடுத்து அவரைப் பிரபலம் ஆகியவர்களில் இவரும் ஒருவர் எண்டு மலையாளிகள் பறைகிறார்கள் ! ஜேசுதாசுக்கு தமிழில் முதன் முதல் சந்தப்பம கொடுத்தவர். ..வீணை.S.பாலச்சந்தர்....பொம்மை திரைப் படத்தில்...1963.இல் இத் திரைப் படத்தில் K.V.மகாதேவனும் நடித்திருந்தார் எண்டு நண்பர் ஆதவன் சொன்னார் ,. அதிகம் தமிழ்படம் இசை அமைக்காத M.B. ஸ்ரீநிவாசன் ஜேசுதாசுக்கு தமிழில் சந்தப்பம கொடுத்தஇசைஅமைத்த சில பாடல்களே "செம ஹிட்" ஆகிஇருக்குது! அருமையான பாடல்களை தந்தவர்.சில பாடல்கள் ஆயினும் நிலைத்து நிற்கிறார்.

                                        ஜான் ஆபிரகாம் என்ற புகழ் பெற்ற மலையாள ஆர்ட் பட இயக்குனரின் "அக்கிறகாரத்தில் கழுதை " என்ற படத்தில அவர் ஹீரோவா நடித்தும் இருக்குறார், அந்தப்படம் தேசிய விருது பெற்றது!70 ல்களின் இறுதியில் சிவகுமார் நடித்து வந்த " மதனனமாளிகை " படத்தில் ,ஹிந்துஸ்தானி சாயல் அதிகம் உள்ள " அமீர் கல்யாணி என்ற ராகத்தில "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .."என்ற   இந்த ப்பாடல் இசை அமைக்கப்பட்டது!

                                    இசையானி இளையராஜா இவரிடம் உதவியாளரா இசை அமைப்பு பழகப்போன நேரத்தில் ராஜாவுக்கு "வெஸ்டர்ன் நோட்ஸ்" வாசிக்க தெரியாததால் அவரி தனராஜ மாஸ்டரிடம் "வெஸ்டர்ன் கிளசிகள் பியானோ" படிக்க அனுப்பி இருகிரர்ராராம் ஸ்ரீநிவாசன் ,,என்றும் ஒரு நண்பர் சொன்னார் ,,ஸ்ரீனிவாசனும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றி எதாவது பாடல்கள் வெளிவந்ததா எண்டு எனக்கு தெரியாது ..

                               இந்தப் பாடல் கிடாரில் வெஸ்டர்ன் சுர அமைப்பில் எந்த " scale " இல் வரும் எண்டு எனக்கு சரியா தெரியவில்லை(? ) ! குருடன் பெண்டிலுக்கு அடிச்சா மாதிரி ஒரு குத்து மதிப்பில வாசித்து இருக்கிறேன் ! பின்னணி மிருதங்கம் எனோட கிடாரில மேளம் போல தட்டி வாசித்தால் கொஞ்சம் ஓகே போல இருக்கும் இதே படத்தில "ஒரு சின்னப்பறவை அன்னையை தேடி" என்ற பாடலும் இருக்குறது !

                                    M.B. ஸ்ரீநிவாசன் "மார்படைபால்" திடீர் எண்டு இந்தியாவுக்கு அருகில் உள்ள இலட்ச தீவுகள் என்ற நாடுக்கு சுற்றுலா போனபோது இறந்துவிடார், அவரோட இசையின் ஆன்மாவை நீங்கள் இந்த பாட்டு "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "கேட்கும் போது உணரமுடியும், K .J .ஜேசுதாஸ் உம் P .சுசிலாவும் பிறந்ததே பாடுறதுக்கு எண்டதுபோல பாடி இருக்குறார்கள்! இதே படத்தில் தான் உஷா உதுப் பாடிய Under the Mango Tree...என்ற ஆங்கிலப் பாடலும் இருக்குதாம் என்று சகோதரி அருந்ததி சொன்னார்கள் ..

                                       M.B. ஸ்ரீநிவாசன் இசையின் Chords Arrangements ல் தெலுங்கு வெங்கடேச தட்சனாமுர்தியின் ஸ்டைல் இவரிடம் இருக்குது! இந்த "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "பாடலை அழகாக கலை அம்சமாக படம்பிடிக்கவில்லை! சிவகுமார் ஒரு பைத்தியக்காரன்போல தலை மயிரை வளர்த்து கொண்டு,சம்பந்தா,சம்பந்தம் இல்லாமல் நடனம் ஆடுவார் ! இப்படி பல பாடல்களை கவுத்துருகின்றார்கள் தமிழ் சினிமாவில்! " இளமை எனும் பூங்காற்று " பாடலை அப்படிதான் சொதப்பி படம் எடுத்தார்கள்!

                                               சத்தமே இல்லாமல் ,அரிதான ராகங்களில் ,புதுமையாக எதனை முறை கேட்டாலும் அலுக்கதா சில பாடல்ளை அவரின் " ஆன்மா பாடிய சங்கீதம்" போல M.B ஸ்ரீனிவாசனே இதை அவர் பாடலின் மூலம் தெரிவிக்கிறார் .வாழ்க அவர் புகழ்.வாழ்க அவர் சங்கீதம்
...................