Saturday 3 October 2015

வெங்க பொஸ் நோர்வேயின் இதயரானி

இந்த படத்தில் ,வெண்கல சிலை வடிவில், சந்தோசமாக கைகளை விரித்து, ஒரு தேவதை போல இருக்கும் பெண்மணி, 66 வருடங்கள் ஒபேரா இசைப் பாடகி, நாடகநடிகை, எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூக விழிப்புணர்வு வாதி, மாற்று திறனாளிகளின் சமூகசேவகி, என்று நோர்வ்யியர் இதயங்களை ஒரு அரை நுற்றாண்டு கொள்ளைக்கொண்ட நோர்வேயின் இதயராணி வெங்க பொஸ் !

                                வெங்க பொஸ், மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ள, பணகாரா என்யினியர் அப்பாவுக்கும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத, மத்தியவர்க்க, கொஞ்சம் படித்த அம்மாவுக்கும் பிறந்ததால், அவாவின் வாழ்நாள் முழுவதும் இந்த முரண்பாடில் வாழவேண்டி வந்ததாலோ என்னவோ பல சமூக விசியன்களில் எப்பவுமே, அவாவின் காலத்துப் பெண்கள் எல்லாரையும் விட ஒரு முன்னோடியாகா இருந்து இருக்கிறா !

                                   " வைகிங்" என்ற கடல் கொள்ளைக்கார்களின் வம்சாவளிகள் இன் வழிதோன்றல்கள் ஒரு சமூக அமைப்பாக வாழும் நோர்வே ஒரு கலை,கலாசாரா பின்னனி சிறப்பாக இருந்த ஒரு நாடு எண்டு சொல்வதில் நிறையக் குழப்பம் இருக்கு!

                                    ஆனாலும் அதன் சென்ற நூற்றாண்டு வரலாறிற்றில் கொஞ்சம் உலக அளவில் சொல்லும்படியா பலரை உருவாகிய, அதன் அன்றய தலைநகர் கிரிஸ்தானியா இல் இருந்த "நேஷனல் தியட்டர் " என்ற இசை ,நாடக கலை நிறுவனம் எவளவு முகியமனதோ அதே அளவு முக்கியமானது வெங்க பொஸ் இன் பங்களிப்பு. அந்த "நேஷனல் தியட்டர் " என்ற நிறுவனத்துக்கு, அதாலதான் அதன் அருகில், இன்றைய தலைநகர் ஒஸ்லோவில் ,வெங்கலத்தில் சிலை வைத்து கவுரவிதுள்ளார்கள் நன்றியுள்ள நோர்வேயிர்கள்!

                                வெங்க பொஸ், " மேஸ்ச்சோ சபரான்னோ " ஒரு அரிதானவகை ஒபேரா பாடகி , பிறக்கும் போதே அந்த அரிதானவகைப் குரலுடன் அவா பிறந்திருக்கிறது ,பிற்காலத்தில் ஒபேரா நாடகங்களில் பாடி ,நடிக்க அவாவுக்கு உதவி இருக்கு.

                                  வெங்க போஸின் ஒபேராப் பாடல்கள், நான் ஒண்டுமே கேட்டது இல்லை ! அந்த வகைப் பாடல்கள் கொஞ்சம் " செத்த வீட்டில ஒப்பாரி வைகிரமாதிரிர் இருக்கும் " என்னைப்போன்ற அதன் டெக்க்னிகல் இசை வடிவம் தெரியாதவர்களுக்கு ! அவா நடித்த ஒரு நாடகம் மட்டும் DVD இல் பார்த்தேன் .

                                        நிறைய முக்கியமான நாடகங்கள் நடித்து பல விருதுகள் வேண்டிக்குவித்த, இதயங்களைக் கொள்ளைகொண்ட, வெங்க பொஸ் இன் முதல் காதல், கலியாணக் ,குடும்ப வாழ்கை சரியாக அமையாமல், அவாவின் முதல்க் குழந்தை "டௌன் சின்றோம் " இல் பிறந்து,சில வருடங்களில் இறக்க, அதே வருடம் கணவர் அவாவை அம்போ எண்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் போக, இது எல்லாம் போதாது எண்டு அவவுக்கு மார்பகப் புற்றுநோயும் வந்திருப்பதாக டாக்டர்கள் சொல்ல இரண்டாகஉடைந்துபோனா வெங்க பொஸ்!

                                         அந்த வாழ்க்கைப் பாடங்களை மறக்காமல், தன்னுடை ஒபேராப் பாடல்களில் பிழிந்து பிழிந்து பாடிய வெங்க பொஸ், பிற்காலத்தில் பிரபலமும், பணபலமும் வந்தபின்னர் ,தன்னோட சொத்தில் பெரும்பகுதியை "டௌன் சின்றோம் " என்ற அந்த பிரவிக் குறைபாட்டு நோயின் விளிபுனர்வுக்கும், ஆராய்ச்சிக்கும் கொடுத்து ,மாற்றுதிரனாளிகளின் சமூக அந்தஸ்து, விஞ்ஞான ரீதியான கடவுள் மறுப்பு , ஒரேபால் இணக் கலியாணத்துக்கு ஆதரவு, போயன்றவற்றுக்கு ஆதரவு தெரிவித்து கட்டுப்பெட்டி, பழமைவாத நோர்வேயிர்களின் மண்டையில மணி அடித்து இருக்கிறா !

                            கடவுள் நம்பிக்கை இலாதபோதும், ஓய்வு பெறும் நிலையில் இருந்த தன்னோட நண்பரான ,ஒஸ்லோ முதன்மைத் தேவாலயதுக் குருவுக்கு போன் பண்ணி

                                  " நீங்கள் ஓய்வு பெறுமுன்னர் , உங்களின் தலைமையில் என்னோட மரணச் சடங்கை நடத்த விரும்புகேறேன் "

                                என்று பகிடியாக சொன்ன சில நாட்களில் மார்பகப் புற்றுநோயுடன் பலவருடம் விடாமல்ப் போராடி, அதை வென்ற, வெங்க பொஸ் கடசியில் இறந்துபோனா!

                                      இன்பத்திலும் துன்பத்திலும் தங்களை பாடி , ஆடி , நடித்து மகிழ்வித்த தங்கள் இதயரானியின் மரணச் சடங்கை 2011 இல் நோர்வேயில் முழு அரச மரியாதையுடன் ,தேசிய துக்க தினமாக கொண்டாடினார்கள் இதயம் முழுவதும் ஈரம் உள்ள நோர்வேயியர்கள்,

                                     இந்த சிலையிட்கு ,"தேசிய துக்க தின" ஒரு கிழமை, அவாவின் ரசிகப் பெருமக்கள் , வயோதிபர்கள், அபிமானிகள் வந்து பூங்கொத்து , மெழுகுதிரி வைத்து மரியாதை செய்தார்கள். நானும் என் சிறிய பங்குக்கு ஒரு பூங்கொத்து வேன்டி வைத்தேன்!
.

.

/// .03.10.2013 ///