Friday 6 March 2015

வெளிச்சத்தின் சந்தோஷத்தில்...

ஒரு
இளம் பெண்
காதலிக்கத் தொடங்குவது
போலவே
மயங்குகிறது 
குளிரை
உதறி எறிய முடியாத
மஞ்சள் வெயில்...
வெளிச்சத்தின்
சந்தோஷத்தில்
வார்த்தைகளைத்
தவறவிட்டுப் போட்டு
அதன்
உட்பொருளை
உணரத் தவிக்கிறது
எழுதத் தொடங்கும்
கவிதை
கோடையின்
அடையாளம்
மிகவும் கனமாகி
வெள்ளை நிலம்
முற்றிலுமாய்த்
தொலைந்து விட
பூமியின்
மையத்தை
மறந்து விடும்படி
வெளிப்பரப்பு
விசாலாமாகி விடுகிறது
முதல் சந்திப்பை
நினைப்பதென்பது
எவ்வளவு
அலாதியானதோ
அதேயளவு
புத்துணர்ச்சி தருவது
பிராகாசமான
உன் முகத்தை
நிபந்தனையற்று
என் முகத்தில்
பார்ப்பது.
.
எப்போதும் நேசிக்கும்
இனியவளே
இப்போது சொல்கிறேன்
புத்தம் புதிய வெய்யில்
காதலில்
விழுந்து விட்டதால்தான்
உலகம்
மிக மிக
அழகாகத் தோன்றுகின்றது.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 06.03.15.