Monday 5 October 2015

காமம் வென்றது ....

நித்திடால்  என்ற பள்ளத்தாக்குக்கு மேட்குபக்கம் உள்ள சமவெளியில் இருந்த   ஒரு  குதிரைப்பண்ணைக்கு அருகில்  ஒரு ரெஸ்டாரெண்டில்  வழக்கம்போல  ஆடிக்கு இலை அறுக்கிறேன் அம்மாவாசைக்குக்   குலை அறுக்கிறேன் என்று  வேலைசெய்துகொண்டிருந்தேன் . அந்தப்  பண்ணையில் ஆரோக்கியமான   இளம் பெண்பிள்ளைகள் வேலை செய்வார்கள் .


                                                    ,வேலை முடியக் குதிரைப் பசிபோல   சாப்பிட வருவார்கள் , குதிரைபோலவே வாய் உளையாமல் திண்டுகொண்டு இருப்பார்கள் . அவர்கள் வந்தால் சேறும்  சகதியும் பிசைந்து   குதிரைமயிர் மொச்சக்கொட்டை  எல்லாம் கலந்தடிச்சு சும்மா  வியர்வை  வாசம்  பிரட்டி எடுக்கும் . அப்பிடி  ஒரு   ஈரோடிக் ரொமான்டிக் வாசம்.                 


வாழ்கையில் தெரிந்தும் தெரியாமலும் பல சம்பவங்களில் நாங்கள் சாட்சியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நடக்காவிட்டாலும் எப்பவாவது நடக்கும் . அதன் நல்லதும் கெட்டதும் ஒரு நேரம் சுவாரசியமா இருக்கும்போது அதன் முழுப் பரிமாணத்தில் மனிதர்களின் குணங்கள் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கி ஹோமோ நியண்ட்தாஸ் என்ற கற்கால சிந்தனைக்குப் போகலாம், 

அல்லது இன்றைய மனித விழுமியங்களில்  அர்த்தமில்லாமல் பின் கதவைத்திறந்து கொண்டு ஓடியும் போகலாம் .

                                          
ஒஸ்லோவில் வியர்த்துக்கொட்டி மிதமான வெய்யில் குளிரோடு போராடி அதிகமான மனிதர்கள் வீடுகளை விட்டு வெளியே இழுத்து எடுத்து நகரத்தின் பாதைகளில் விடுப்புப் பார்க்க வைத்த இந்தக்  வருடத்தின் கோடை காலத்தில் நான் சமையல்காரனாக வேலை செய்யும்  ரெஸ்ட்ரோரிண்டிலும் வெளியே பாதை ஓரம்  மேசைகள் போட்டு அதில் மலர்க்கொத்து வைத்து அலங்கரித்தாள் ரெபேக்கா.

                                           நான் குசினியில் வேலை, முன்னுக்கு ரெபேக்கா கனகாலம் செர்விற்றிஸ் என்ற பரிமாறும் வேலை அவள் தான் ரெஸ்டாரென்ட் நடத்துவது போல முக்கிய பொறுப்புகளில் இருந்தாள். ஹீரோயின் போல திறந்ததில் இருந்து  ஒரு வேலை நாள் முடியும்வரை  அவள்தான் எல்லாக் காட்சியிலும் என்னோட பொஸ் அவளுக்கு அப்படி அதிகாரங்கள் கொடுத்துக் கெடுத்து வைச்சு இருந்தார் .

                                            முன்னுக்கு அவளோடு இன்னுமொரு அவள் வயதை சேர்ந்த இளம் பெண் வேலை செய்வாள். அவள் ஹிரோயின் இல்லை.உப நடிகை போல .ஆனால்  அமைதியானவள் , அதிகம் பேசமாட்டாள். அலங்காரம் போட மாட்டாள். வந்தமா வேலையை முடிச்சமா என்று போய்க்கொண்டு இருப்பாள். வேலைக்கு  பாங்கில் வேலை செய்யும் அவளோட அம்மா கார்ல கொண்டுவந்து இறக்குவா நடு இரவு வேலை முடிய கார்ல ஏத்திக்கொண்டு போவா .

                                 ரெபேக்கா அப்படி இல்லை.வாய் கொடுத்தால் தப்ப ஏலாது. நாய்க்கு வாயில சவ்வு போட்டால் எப்படி கிடந்தது வாயை சுழட்டுமோ அதைப்போல வைச்சு அறுப்பாள். அவளுக்கே தெரியாது என்ன அலட்டுறாள் என்று . ஆனால் அது எங்கள் ரெஸ்டாரென்ட்க்கு நாக்கு நனைக்க வரும் குடிவிரும்பிகள்  பலருக்கு விருப்பம் .

                                                             அதை ஒருவிதமான கவர்ச்சிபோல நினைப்பதாக என்னோட பொஸ் சொல்லுவார்.அதைக் கேட்டால்  பொஸ் இன் காதலி என்றும் சொல்லமுடியாத  மனைவி எண்டும் சொல்லமுடியாத முதலாளி அம்மாவுக்கு விறகு அடுப்பு  பத்தின மாதிரி கோவம் வரும்

                                      எனக்கு வேலை குறைவான பொங்குசனி நேரம், அவளுக்கும் வேலை குறைவான அசதியான  நேரம்  ரெபேக்கா எப்பவும்  என்னோட கதைப்பாள். முக்கியமா எங்கள் வேலை இடத்தில என்னோட பொஸ் அல்லது அவரின் செட் அப் மனைவி எப்பவும் ரெண்டுபேரில் ஒருவர் நிற்பார்கள். 

                                                    சில நேரம் இரண்டு பேரும் நிற்பார்கள். செட் அப் நின்றால் பொஸ் ஏகப்பத்தினி விரதன் போல நடிப்பார். செட் அப் இல்லாட்ட்டி தான் நாமக்கல் ஆஞ்சநேயரின் அட்டகாசம் நடக்கும்

                                  
ரெபேக்கா அழகானவள்.கரீபியன் கடல் போல  அழகான  நிலநிறக் கண்கள் , அதுக்கு மஸ்காரா வால்நீட்டி  இமைகளுக்கு நிரந்தர வாழ்க்கை கொடுத்திருப்பாள்  , கிளாசிக்கல் அளவுகளில் ஸ்கண்டிநேவியக்  கால்களில்  உயரம் , முகம் நாங்கள் பார்க்கும்  பார்வையே ரேக்ஸ்சோனா சோப் போல அதில வழுக்கும்  வழுவழுப்பு .

                                                  ரஷியன் பர்புஸ்கா பொம்மை பொறாமைப்படும் இடுப்பு . அவளோட சிரிப்பு அதுதான் அவளின் மக்னம் பிஸ்டல். கண்ணாலும் சொண்டாளும் கொழுவி இழுத்தாள் எண்டால் ஸ்பானிஸ் பொம்பலோனா அடங்கா மாடுகளே முன்னம் காலில் மண்டியிடும் .

                              அவள் போடுற உடுப்பு...ஹ்ம்ம் அதுதான் அடங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு . அதிலும் அவள் போடுற உள் உடுப்பு.. யப்பா சாமி அலகு குத்திக்கொண்டு தலையில சூடம் பத்தவைச்சுக்கொண்டு சாமியாட வைக்கும்.அதுவும் ஒருவித உற்சாகம் அதன் எல்லைகள் வாழ்கையை வருடப்பிறப்பு வான வேடிக்கை போல கலர் கலரா விந்தை காட்டும் .

                           
நாற்பத்தி ஐந்து வயது கடந்தபின் வரும் காமம் முழுக்க சாதாரணத்துவம் வாய்ந்ததல்ல அதுவும் பாவங்கள் நிறையவே செய்து சேமித்து வைத்துள்ள வாழ்கையில் பாதி கடந்த பின்னும் கூட நிறைய உறவு விசியன்களில் சந்தேகங்கள் இருந்து கொண்டும், அது நிழல் போல வந்த கொண்டும் இருந்ததை நினைத்துக்கொண்டு வேலை தொடங்கமுதல் போட்டுக்கொண்டு போற உடுப்பு மாற்றி சமையல் குக் வேலை உடுப்புப் போட அதுக்கென ஒதுக்கப்பட்ட அறையத் திறந்தேன் . 

                                      ரெபேக்காவும் வந்தாள் , வந்து மாதவி போலவே சிரித்துக்கொண்டே ஹக்கோபா போல பிரில் வைச்ச டொப் மேலாடையைக் கழட்டிட்டி எறிஞ்சாள், பிறகு சிரிச்சுக்கொண்டு கீழே குனிந்து குதியுயர லெதர் சப்பாத்தைக் கழட்டி ஓரமாக வைச்சுப்போட்டு போட்டு இருந்த இறுக்கமான டிம்பர்லான்ட் டெனிம் காற்சட்டையும் மெல்ல கீழே இறக்கி ....


                                   
                         

                                     

                                   



















.















.
























.