Monday 16 March 2015

ஸ்காபுரோ பெபையர் - ஆற்றம்கரையின் அலை

பருவ வயதில் அடக்கி வைக்க முடியாமல் பாலுணர்வு ஹோர்மோன்கள் தொடக்கிவைக்க மன்மதனின் ஐந்து பாணங்களும் பாயும் நேரம் உலகம் எங்கும் காதலர்கள், தங்கள் காதலை ஆண் பெண்ணிடமோ,அல்லது பெண் ஆணிடமோ சொல்லும் விதங்கள் ஏறக்குறைய நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் ஒரே மாதிரி தான் ரொமாண்டிக் கலந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்குது,
                                           16 வயதினிலே படத்தில வரும்" செந்தூரப்பூவே செந்துரப்பூவே " பாடல் எவளவு காதல் விரகதாபத்துடன் தென்றலைத் தூது விட்டு ஒரு செய்திக்குக் காத்திருக்கும் ஒரு இளம் கிராமத்துப் பெண்ணின் ஏக்கத்தை சொல்லுதோ அதே போல, Scarborough Fair என்ற இந்த ஸ்கொட்லாந்து நாடுப்புற நாட்டார்பாடல் மத்தியகால ஆங்கிலத்தில சொல்லுது. அவளவுதான் வித்தியாசம்,
                                            மற்றப்படி ballad ஸ்டைலில் இருக்கும் இதன் தாளநடையை பலர் பலவிதத்தில பாடியுளார்கள் ,முக்கியமா இதன் வாசனங்கள் "typical of the middle English period " ஆங்கிலத்தில் இருக்கும் இந்தப் பாடலை செல்டிக் யாழ், செல்லோ வயலின் , தம்பரின் போன்ற வாத்தியங்களுடன் ஐரிஸ் மக்கள் பாடுகின்றார்கள். இந்தப் பாடலில் வரும் .Between the salt water and the sea strand என்ற வரியில் வரும் strand என்ற சொல்லு நோர்வே நாட்டு நோர்க்ஸ் மொழியில் உள்ளது அதுக்கு அர்த்தம் கடல்,ஆறு போன்றவற்றின் கரை 
                                    ஒரு கிராமப் பெண்ணின் மீது காதலில் விழுந்த ஒரு இளைஞன் ,அந்தப் பெண்னின் காதலை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் "நடைமுறைக்கு ஒத்துவராத " செயல் ஒன்று அந்தப் பெண் செய்து காட்ட வேண்டும் எண்டும் , "தனக்கு ஒரு ஹம்பரிக் ஷர்ட் தைத்து தரவேண்டும்,ஆனால் அதில துணிகள் வைத்து இனைக்கக்கூடது ,அப்புறம் அதை தண்ணி இல்லாத கிணத்தில தோய்த்து தரவேண்டும் எண்டு , வில்லங்கம் பிடிச்சு " கல்லில நார் உரிச்சுதா " அப்பத்தான் உன் காதலை ஏற்றுக்கொள்வேன் இளம் பெண்ணே என்பதுபோல சொல்லூறான்.
                                         சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் அந்தப் பாவப்பட்ட இளம்பெண்ணும், தான் அதுகள் எல்லாத்தையும் செய்துவிட்டேன், " Scarborough Fair, சந்தைக்குப் போகும் Parsley, sage, rosemary, thyme என்ற வாசைனை இலை,குழை ,தளைகளே, என் கண்ணாளன் சொன்ன எல்லாத்தையும் நான் செய்துவிட்டேன், என் கண்ணாளனை கண்டால் வீட்டுக்கு வீடுக்கு வந்து என்னை கலியாணம் செய்ய சொல்லுங்க " என்று," tell him to come and he'll have his shirt And he shall be a true love of mine " என்று மனம் உருகி, வஞ்சகம் இல்லாமல் கிராமியத்தனமாக ஆற்றம்கரையில் அலைபாய்ந்து தூது விடுகின்றாள ,
                                       அந்தக் கண்ணாளன் வந்து கலியாணம் காட்டினானா ,அல்லது திருநெல்வேலி இருட்டுக்கடை "அல்வா" கொடுத்திட்டுக் கம்பி நீட்டிணாணா எண்டு இந்தப் பாடலில் இல்லை. எனக்கும் ஐரிஸ் மொழி வரலாறு தெரியாது. ஆனால் இதுவும் காதவர்ராஜன்-ஆரியப்பூமாலை தமிழ் வரலாற்று காதல் நாடகம் போல, ஒரு தொடர் நாடகமாக middle English period இல் இருந்திருக்காம்.
                                            எனக்கு மிகவும் பிடித்தபாடல் "Scarborough Fair" என்பதால் மிகவும் மனதிருப்தியாக சில வருடங்களின் முன் " pan flute " என்ற லத்தின் அமரிக்க பழங்குடியினர் வாசிக்கும் புல்லான்குழல் போன்ற காற்று வாத்தியத்தில் அவர்கள் வாசித்த, CD ஒன்று வாங்கி இருந்தேன் ,அதில இந்த பாடலும் இருந்தது ,அதை எப்போதும் கேட்பேன் , பஸ்சில ,ட்ரெயினில் வேலைக்கு போகும்போதும் வரும்போதும் சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் இளம் பெண்களைக் கண்டாள் சத்தமில்லாமல் வாயிற்குள் " ஹம் " பண்ணிப் பாடுவேன்.
                                முக்கியமா உலகப் புகழ் பெற்ற பாடகர் டேவிட் வித்தாகர் என்ற ஜெர்மன் நாட்டு பாடகர் பாடிய வேர்சனும் என்னிடம் இருந்தது, அதில இருந்து கிளாசிக்கல் இசை நுணுக்க ஐடியாவை உருவி எடுத்து , இந்தப் பாடலை நானே பிண்ணனி ரிதம் கிட்டார் வாசித்து,சின்னமேளம் வாசித்து  கிளாசிகல் ஸ்டைலில் , அக்கொச்டிக் கிட்டாரில முடிந்தளவு ஒரு " கிளாசிகல் பிங்கர் பிளக்கிங் ஸ்டைல் " என்ற இசைக்கும் முறையில் விரல்களால் மீட்டி கிட்டாருக்கே நோகாமல் நானும் வாசித்துள்ளேன்
https://www.youtube.com/watch?v=TmBNkO4w2Ac