Tuesday 11 August 2015

சிதைவின் ராகங்கள்.....

யாழ்பாணத்தில இருந்த புனித யாகப்பர் கோவில் பொம்பர் குண்டு போட்டு அழிந்ததை, திருப்பிக்கட்ட நிதி சேகரிக்க "சிதைவின் ராகங்கள் " என்ற ஒலிநாடா "90"களில்  அந்தக் கோவிலின் பங்கில் உள்ள இறை அடியார்கள் எல்லாரும் சேர்ந்து தயாரித்தார்கள்! கெசட் வடிவில் வந்த  அதை ஆணைக்கோட்டையில் இருந்த,கிறிஸ்தவப் பாடல் இசை அமைப்பாளர் ஜேசு..... மாஸ்டர்,கிடத்தட்ட பத்து பாடல்கள் இசைஅமைத்தார். 

                                                       நான் அந்த நாடாவுக்கு "ரிதம்" கிடார் வாசித்தேன் . இனி நான் சொல்லப்போறது  " சிதைவின் ராகங்களுக்குள் " நான் இசைத்த கிட்டார் வாசிப்பு சிதையாமலே தொலைந்து போன ஒரு காலம் விழுங்கிய  கதை.இது முழுவதும் உண்மைக்கதை போலிருக்கு என்று நீங்கள்  நம்பினால் அது  என் கதைசொல்லி உத்திக்குக் கிடைத்த வெற்றி . அப்படி இல்லை இது சும்மா உடான்ஸ்  உல்டா என்று நினைத்தால் அதுவும் என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் .

                                                   அந்த நாட்களில் சுமாரான தூறல் போல இசை மழை பொழியும் ஒரு இசைக்குழுவில் Bass கிடார் வாசித்த என்னை, அந்த இசைக் குழுவுக்கு "சவுண்ட் சிஸ்டம் " கொடுக்கும்  நாவாந்துறை  "தொம்சன் சவுண்ட்ஸ்" பாலச்சந்திரன், அந்த நாடாவுக்கு "ரேகோர்டிங்கில் " Rytham Guitar வாசிக்க கேட்க, உலக இசை வரலாற்றில் முதல் முதல் ஒரு ஒலிநாடாவில் என்னோட கிட்டார் சத்தம் இரைச்சல் கலந்த சத்தம் ஆகி வந்தது!

                                                      எனக்கு அப்போது  ரிதம்  கிட்டார்  ஸ்டைலா வாசிக்க தெரியும், ஆனால் ஹர்மோனி ஸ்ட்ரக்சர் டெக்னிகல் , அரிதான  கோர்ட்ஸ் அரன்ச்மெண்ட்ஸ், ரிதமிக் ஒர்கேச்ற்றசன் போன்ற  ஒரு ரெக்கோர்டிங் ஆர்டிஸ் இக்கு விளங்க வேண்டிய  சிக்கலான கோட்ஸ் விசியங்கள் தெரியாது,ஆனாலும் மாஸ்டர் பல விசியங்கள் சொல்லி தந்ததால் ஒரு மாதிரி புனித யாகப்பர் புண்ணியத்தில் வாசித்து ஒப்பேற்றினேன். 

                                   ஜேசு....மாஸ்டர் மீசையில்லாத  எழுபதுக்களின் தமிழ் சினிமாவில் வரும் வில்லன் போல இருப்பார். என் எஸ் கிருஷ்ணன் போல பின்னுக்கு சுருட்டி நீவிவிட்ட சுருள் முடி. ஆறடிக்குக்  கிட்ட  நெருங்கும்  உயரமான தோற்றம். அகலமான வட்ட முகம் ,கண்களில் பணிவும் கருணையும் பேசவைக்கும்   அன்பான மனிதர். அவர் பத்து விரல்களில் கறுப்பு வெள்ளைப் பியானோக் கட்டைகள் தவண்டு உருண்டு ஓடிப்பிடித்து விளையாடும் 
                                                               
                                  அந்த இசைப்பதிவு O.L .R சேர்ச்சுக்குப் பின்ன இருந்த அடைக்கல மேரி பாதிரிமாரின் பங்களாவில் நடந்தது. ஆரம்பத்தில் அந்த ரெக்கோர்டிங் ரிகர்சல் ஒத்திகையில் ஆர்மோனியத்தை வைத்து நோண்டி மெட்டுப் போட்ட ஜேசு.... மாஸ்டர், கடசியா ,ரெகொர்டின்கில் பாதிரிமாரின் கிளாசிகல் ஜெர்மன் மரப் grand piano வில அழகாக பூந்து விளையாடுவதை பார்க்க அவரின் பியானோ அறிவு கைகளில்  நடனம் செய்யும் சரஸ்வதி கடாச்சம் உண்மையில்  ஆச்சரியமா இருந்தது !

                      நான்  ஒரு நேரம் தெரியாமல்  ஆர்வக்கோளாறு அதிகமான டும்மாங்குள்ளி. அதால கிட்டாரில் காலநேரம் இல்லாமல் புதுமையாக இசை  யாசிக்கிறேன்  பேர்வழி என்று  எப்பவும் எதையாவது வைச்சு நோண்டுறது . நான் அவர்கள் படிய பாடல்களை இடையே ஓய்வு நேரத்தில "லீடில் " கிடாரில் சும்மா பொழுது போக  வாசிப்பதைக் கேட்டு கொண்டு இருந்த ஜேசு.....மாஸ்டர், ஜோசிச்சுப் போட்டு 

                              " அப்ப ,நான் கொஞ்சம் இண்டர்டக்சன் ,இண்டர்ளு ,பில்லிங்க்ஸ் , லீடில போடுறன் கவர்-அப் பண்ணுரறீரா, டெம்ப்போ எல்லாம் நீர் பிடிப்பீர் போல இருக்கு, மற்றப்படி அதுகள் எங்க வருகுது எண்டு நோட் சீட்டில எழுதித்தாரன்  அதையும் பாடல்கள் இடையில் வரும் பிறி இன்டர்லூட்களில் சேர்க்கலாம் போல இருக்கு   ?"

                          எண்டு கேட்க , ஆரவக்கோளாரில ,நான் மண்டைய ஆட்ட, அந்த மனுஷன் ,  சடார் புடார் எண்டு ,  கிளாசிகல் "BAR NOTATION " எழுதித்தந்தார் ,நான் அதை இங்கிலீசுப் பேப்பரை பார்க்கிறமாதிரி பார்த்துக் கொந்டிருந்தன் ,ஜேசு...மாஸ்டர் பொறுமையானவர்  இல்லாட்டி  என்னைப்போல  ஒரு  அல்லக்கையை  வைச்சு  அவளவு துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்.

                                நான் "போர்மல் சிலபஸ் தியரி" முறைப்படி கிற்றார் படிக்கவில்லை. இப்பவும்தான், அப்பவும்தான் " பார் " என்டா என்னண்டு நல்லா விளங்கும். அதுக்குள்ள நல்லா பூந்து விளையாடுவேன் ,ஆனால் இசைக் குறிப்புகளை நோட் வடிவில் தாள லயம் எல்லாம் தெளிவாக குறியீடுகள் வண்ணாத்திப்பூச்சி முள்ளுக் கம்பிக்கு மேலயும் கீழயும் பறக்கிற மாதிரி  ராகம்,  தாளம், பல்லவியை  வெஸ்டர்ன் கிளாசிகல் இசை வடிவில் எழுதும் "BAR NOTATION "  என்றால் விளங்காது,!

                              நான் முளிகிரத்தை பார்த்திட்டு மாஸ்டர், மென்மையாக 

                          " உமக்கு , பார் நோடேசன் விளங்காது போல கிடக்குது, 

                          "  ஓம்  சேர்  எனக்கு  டப் வடிவில் கிட்டார்  நோட்ஸ் ஓரளவு  விளங்கும் ,,,கிளாசிக்கல் பார் நோடேசன் சுத்தமா விளங்காது "

                             " எனக்கு டப் வடிவில் எழுதத் தெரியாது,,என்ன  செய்யலாம், ஹ்ம்ம்,,,,ஹ்ம்ம்,,,,அதுதான் வேற என்னவும் ஒரு  மாத்து  வழி   இருக்குமோ  என்று ஜோசிக்கிறேன் "

                              "  அப்ப  பின்ன விடுங்க  மாஸ்டர்,,ரிதம்  கிட்டார்  மட்டும்  வாசிக்கிறேன்,எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்     "
                                                                          
                              " இல்லை    நீர்  நல்லா  வாசிக்கிரீர்  ஆனால் நோட்ஸ் போட்டால்தான் ரெகொர்டிங்கில் மற்ற வாத்தியக்காரர்  சரியான டைமிங்கில் இடத்தைப் பிடிச்சு  உமக்கு முன்னுக்கும் பின்னுக்கும் டெம்போ விட்டு ஒர்கெஸ்ஸ்டேசன் செய்ய லேசா  இருக்கும், இல்லையா "

                              " ஓம்,,சேர்  அது  உண்மைதான்,,நானும்  அதைக்  கவனித்து இருக்கிறேன் "

,                              " இல்லையோ,,சொல்லும் பார்ப்பம் , இல்லாட்டி  ரெக்கொர்டிங்கில் கேப் விழும்  எல்லோ,,அதுதான்  ஜோசிக்கிறேன்..ஹ்ம்ம் "  

                                 "அதுதான்  நானே  சொல்லுறேன்  என்னை விடுங்க  மாஸ்டர்,  நான் ,ரிதம்  கிட்டார்  மட்டும்  வாசிக்கிறேன் " 
                                              
                                    " இல்லை    நீர்  நல்லா  வாசிக்கிரீர்,   சில  விசியங்கள்  லீட் கிட்டாரில் போட்டால்  கொஞ்சம் ரிச் ஆக  வரும்  பாடல்கள். ஹ்ம்ம் ,,அப்ப  பேசாம , நாளைக்கு வீட்ட வாரும் ,சாருமதி ,வயலினில வாசித்து காட்டுவா" எண்டார் ,"

                 "சாருமதி யார்? "

                              எண்டு கேட்க வாய் வந்தது,  மாஸ்டருக்கு கோபம்வந்து,  சிலநேரம் அதால எனோட எதிர்கால இசைப் பிரபலமாகி மைகள் ஜாக்சன் போல வரும் கனவு பாதிக்கப்படலாம் எண்டு கேட்கவில்லை!

                               மாஸ்டரே  நான் மனதில நினைத்ததை வாசித்தது போல , நெஞ்சில பாலை வார்த்து  ,  

                     " சாருமதி ,என்னோட மகள், அவள்தான்  பைனல் ரெக்கோர்டின்கில் வயலின் வாசிக்கப் போறாள், அவள் கர்நாட்டிக் ஸ்டைலில்  சொல்லி தருவாள்,,நான்  நோட்ஸ்  எழுதி அவளிட்டக் கொடுக்கிறேன்,,அவள்  பொறுமையா சொல்லிதருவாள்,,நீர்  பிடிசிடுவீர்,,பிறகு  உமக்கு  ஏற்ற  மாதிரி  அதை டப்  ஸ்டில்  குறிச்சு  வையும்,,என்ன  நான்  சொல்லுறது  ஓகே  தானே  " என்றார்!

                           அடுத்தநாள் காலையில கிற்றாரை A .K 47போல தோளில கொழுவிக்கொண்டு , ஆணைகோட்டைக்கு சைக்கிளை மிதிசுக்கொண்டு போனால்,அங்க வீட்டில ,மாஸ்டர் இல்லை,சாருமதி மட்டும்தான் நிண்டாள்! அவளைப் பார்க்க சாருகேசி  ராகம் போலவே அழகா,இளமையா ,அம்சமா,அடக்கமா,வேதகாரருக்கே உரிய நட்பான,பந்தா போடாத இயல்பில் வீட்டு வாசலில் வந்து நின்று ,

                                " நான் தான் சாருமதி ,,அப்பா நீங்க வருவிங்க எண்டு சொன்னார் ,,தேத்தண்ணி ஒண்டு குடிச்சுப்போட்டு  நோட்ஸ் அரேஞ்மென்ட்ஸ்  பார்ப்பமா...உங்களுக்கு ஓகே யா  , 

                                     "    ஓம்,,ஓம்.,,,எனக்கு  பிரசினை  இல்லை ,,,உங்க வீடு  சோலைக்கு நடுவில உள்ள மாதிரி குளிர்ச்சியா இருக்கு    "       

                                    "  அப்படியா...நன்றி ..  உங்கட  வீடு  எங்க இருக்கு,,,நெறையத் தூரமா  இருந்து  சைக்கிள்  மிதிசுக்கொண்டு வாறிங்களா "

                                  "    ஓமோம்,,,என்னோட  வீடு  நல்லூர்  கோவிலுக்கு  கிட்ட  இருக்கு. அங்க  இப்படி  வீடுகள்  ஐதாக  இருக்காது,,நெருக்கம்  அதிகம் ."

                                "  ஒ ,,அப்படியா,,நீங்க  சைவைக்காரரா...எப்படி  அப்பாவைத்  தெரியும், பாதர்  மரிய சேவியரின் ,கலா மன்றத்துக்கு  போறனிங்களா    "                                
                                   
                                                "  இல்லை,,,ஜேசு  ..மாஸ்டரை,,தொம்சன்  பாலச்சந்திரன் தான்  அறிமுகம் செய்து வைத்தார்,,ஒரு  இசைக்குழுவில்  கிட்டார் வாசிப்பேன்,,,அதுக்கு தொம்சன்ஸ்  தான் சவுண்ட்ஸ் சிஸ்டம்  கொண்டுவருவார்கள்  "

                                       "  எந்த தொம்சன்ஸ்,,,,,பாலா  மாமா  அவரா,,கொம்போறிமூக்கன் பாம்புபோல  தலையை  ஆட்டுவார்  அவரா...ஹஹஹஹ "

                             " ஓம்,,ஓமோம்,,அவர்தான்  "                                                                                                                              
                                 "   ஹ்ம்ம்,,,அவர் அப்பாவின்  நல்ல  பிரெண்ட்,,நான்  அவரை  வைச்சு  முசுப்பாத்தி விடுவேன்,,எல்லாத்துக்கும்  ஹெக்கே ஹெக்கே  என்று சிரிப்பார் "

                                   "   அப்படியா , பாலா  என்னோடும்  நல்ல  ஒட்டு , நல்ல ஒரு  சவுண்டிங் டெக்னிசியன் ... ஹ்ம்ம்   "       

                                    "  வீடில அம்மா இல்லை உலை வைச்சுட்டு  ,பார்த்துகொள் பிள்ளை என்டுட்டு  ,ஆறுகால் மடம் சந்தைக்குப் போயிட்டா .. "

                             "   சரி,,நீங்க  சமையல்  முடிய  வாங்க,,ரிகர்சல்  பார்க்கலாம்,,நான்  இருப்பேன்,,,நல்ல  காத்து  அடிக்குது  இந்த  வீட்டுக்கு  முன்னாலே     "                    

                                    " அப்பா மறைக் கலா மன்றத்தில் ஏசுவின் பாடுகள் நாடகத்துக்கு மூசிக் பழகப் போயிட்டார் கொஞ்சம் இங்க இருங்க நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் . ஆனைக்கோட்டைக்கு முதல் வந்து இருகுரின்களா ..."    

                 எண்டு ஏதோ வருசக் கணகில என்னைத் தெரிஞ்ச மாதிரி தன்னை அறிமுகம் செய்தாள் .

                           நான் அவர்கள் வீட்டு வாழவில நிண்ட செவ்விழனி மரங்களை பார்த்துக்கொண்டு வெளிய விறாந்தையில் இருந்தேன் , கல்லுண்டாய் வெளிக் காற்று மானிப்பாய் வீதியைக் கடந்து மெலிதாக அவர்கள் வீட்டு வேப்ப மரம் எல்லாத்தையும் தடவ ,அவர்கள் வீட்டு  வாசலில்,வெளிக் கதவுக்கு மேலே  தேவ மாதாவின் படம் கொழுவி ,அதுக்கு மேல குருத்தோலை போல என்னவோ காய்ந்து போன ஒரு ஓலையை செருகி ,

                      "  ஜீவிதத்தில்  கர்த்தரை மறவாதிரு ...நான் உன்னுடனே எப்போதும் வருவேன் ,

                          எண்டு பைபிளின் வேத வாசகம் எழுதி இருந்தது.  கொஞ்ச நேரத்தில சாருமதி சட்சம சுருதியில் பாடுவது போல இயல்பாக 

                                        "சோறு வடிசிட்டன் ,இனி அம்மா வந்து மிச்சத்தைப் பார்க்கடும், உங்களுக்கு பால் டீயும் எனக்கு, பிளேன் டீயும்  போட்டேன் ,சீனி காணுமா பாருங்க,,, "

                          எண்டு சொல்லிக்கொண்டு வந்து  , முதலில் கொஞ்சம் குழப்பாமா ஜோசிதுப்போட்டு ,

                                " எனக்கு எங்க இருந்து தொடங்கிறது எண்டு தெரியவில்லை , அப்பா நோட்ஸ் எழுதிய பேபரில இருக்கிற பல்லவி ,சரணத்துக்கு இடையில் வார பில்லிங்க்ஸ் கொஞ்சம் பார்ப்பம் "

               எண்டுபோட்டு

                          " முதல் பாடல் ஆபேரி ராகத்தில ,அதுக்கு என்ன கோர்ட்ஸ் பிடிக்கப் போரிங்க? "

                           எண்டு இயல்பாகக் கேட்க அன்றுதான் முதல் முதல் என்னோட வாழ்கையில்  ஒரு அழகான இளம் பெண்ணுக்கு முன்னால என்னோட விதி விளையாட தொடங்கியது....

                      எனக்கு அந்த ராகம் என்ன நாசமறுப்பு எண்டே தெரியாது , ஒரு குத்து மதிப்பில ,உலகத்து கடவுளை எல்லாம் கும்பிட்டு போட்டு  Cm என்ற கோர்ட்ஸ் ஐப் பிடிசன் ,

               அவள் சடார் எண்டு

                           " இது சண்முகப்பிரியா ராகதுக்குதான் பொருந்தும் ,

                           " என்னது "

                         " ஓம் ,,அவரோகணம்  நோட்ஸ்  அப்படிதானே  வரும் "

                            "  அதென்ன "

                             " அய்யோ கடவுளே  அப்பா  போட்டுள்ள நோட்ஸ்  ஹரிகாம்போதி  போல எனக்கு  இருக்கு "

                           "  அய்யோ கடவுளே அதென்ன  "

                          "  போச்சுடா,,அப்பா  விபரம் ஒன்றும் குறிக்கவில்லை ,எனக்கும் குழப்பமா  இருக்கு "

                            " எனக்கு உயிரே போறமாதிரிக் குழப்பாமா  இருக்கே "

                    " ஹஹஹ ,,குழம்ப வேண்டாம்,,நான் சொல்லித்தாரேன் "

                                  "  பிளிஸ்..சொல்லித்தாங்க "

                               "  சரி, ஆனால்  நீங்க  கிட்டார் பிடிக்கிற விதம் ஸ்டைலா இருக்கு. "

                                   " ஹ்ம்ம்,அப்படி ஸ்டைலா பிடிக்க மட்டுமே  எனக்கு  தெரியும் போல இருக்கு,,அதுவும்  உங்களை இப்படி இடக்குமுடக்கா  சந்தித்த பிறகு   "

                                 " இதில என்ன இருக்கு,  எல்லாருமே ஒருவிதத்தில் கத்துக் குட்டிகள் தானே,,நான் உட்பட "

                                       " நான்  என் விதி எப்படிப்போகும் என்ற காலக்கொடுமை தெரியாமல் ,,வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன் போல இருக்கே "

                              " ஹ்ம்ம்,, பிரசினை இல்லை  நான் சொல்லித்தாரேன் "

                     "  பிளிஸ்,,சொல்லுங்க  நீங்க சொல்லுறபடி வாசிக்கிறேன்

                             "முதலில் உங்கள் கிடார் சரியா சட்ஷமம் சுருதியில்  இல்லையே  , சுரங்கள்   பிழைக்குதே, நான் நினைக்கிறன் சரியா  Tune பண்ணப்படவில்லை , முதலில் அதை சரிசெய்யுங்கள்"    என்றாள்  ,

                      நான் கிடாரில் தட்டிய முதல் தட்டிலேயே ,என்னோட கிடாரில் சரியாக சுரங்கள் ஹர்மொனியா சத்தம் வரவில்லை எண்டதை சொன்னது ஆச்சரியமா இருந்தது, அவளின் இசை புலமை அதிரவைக்க , இவளிட்ட சடையல் பருப்பு ஒண்டும் வேகாது எண்டதை நினைக்கப் பயம வந்து  பால் டீயைக் குடிச்சும் நாக்கில தண்ணி வறண்டு போச்சு !

                                வெட்கத்தை விட்டு

                   " சட்ஷமம் என்றால் என்ன நோட் வார கம்பி கிடாரில் " எண்டு கேட்டேன்,,,

                               அவள் " எனக்கும் கிட்டார் பற்றி அதிகம் தெரியாது ,வயலின் தான் தெரியும் அப்பா சொல்லி இருக்குறார்,சட்சமம் தான் Open E நோட் வார கம்பி எண்டு, E Mjor சட்ஷமம் வார கம்பியோட B Major பஞ்சமம் வார கம்பியை ஒரே நேரம் சேர்த்து தட்டினால் ஹர்மோனியா சிங்கரனைசிங் செய்யும் "   என்றாள் 

              எண்டு போட்டு

                 " இதுவும் அப்பாதான் சொல்லித் தந்தார் "

                               எண்டு வஞ்சகம் இல்லாமல் வாயெல்லாம் சூரியகாந்திப் பூப் போல சிரித்தாள்.  , என்ன சீவியமடா இது இந்த சின்னப் பெண்ணிடம் இவளவு வழிந்து கேட்டுக் கற்க வேண்டி இருக்கே எண்டு வந்த வெறுப்பில

                      " பேசாம உங்க அப்பாவுக்கே பிள்ளையாப் பிறந்து தொலைச்சு இருக்கலாமே "

                      எண்டு சொல்ல நினைச்சேன் ,,ஆனால் அவை அடக்கத்தால் சொல்லவில்லை..  

                               கடைசியில் நான் Open E கம்பியை Open B  கம்பியோடு சேர்த்து தட்ட அவள் சொன்ன மாதிரியே ஹர்மோனியா சிங்கரனைசிங் பண்ணி நாதம் கிளம்ப,நான் அவள் முகத்தை முதல் முதல் முழுவதும் பார்க்க  , மாதுளம்பூப்  போல மென்மையான கன்னத்தில் , இரண்டு பெரிய ஜன்னல் போன்ற விழிகளில் சங்கத் தமிழ் மொழி எழுதி, பல்லவ காலச் சிற்றன்ன வாசல்  ஆயிழைச்  சிற்பம் போன்ற அமைதியான முகத்தில் ஒரு வித பணிவு இருக்க,  வகிடு பிரித்து பின்னுக்கு ரெட்டைப் பின்னல் பின்னிய தலை மயிரில் ,கொஞ்சம் முரண்டு பிடித்து முன்னுக்கு சுருண்டு விழுந்த சில  மயிர்க் கற்றைகள் நெற்றியில்

                                  " வேம்பின் அமலை வான் பூச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,குன்று தலைமணந்த கானம்சென்றனர் கொல்லோ சேயிழை! நமரே..... "

                         என்று குறுந்தொகைக் கவிதை எழுத,  அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே வேப்ப மரக்காற்றின் வாசத்தில் வழுக்கி வழுக்கி நான்  விண்வெளியிற் பறந்தேன்......

                                                 அதுக்கு பிறகு சாருமதி வயலினை கொண்டுவந்து, மாஸ்டர் எழுதின நோட்ஸ்களை " சா ,பா ,ரி ,நி ,அரை இடம்,கால் இடம் , அபேரி, இந்தோளம் " எண்டு கார்நாடகதில முழங்க, எனக்கு வயித்தக் கலக்கத் தொடங்கிவிட்டது ,நாசமாப்போன கர்நாடக சங்கீதமும் எனக்கு ஒழுங்காத தெரியாது, முழுமையா அதைப் படிக்க சந்தர்ப்பம் இருந்தும் அதை நான் முழுமையா படிக்கவேயில்லை. அதைவிடக் கேவலம்,ஒரு அழகான பெண்ணிடம் அதை தெரியாது எண்டு சொல்வது,அனுபவித்துப் பார்த்தாதான் அது தெரியம் அந்த அவலம்  !

                 நான் அவள் வயலினை இழுத்து, இழுத்து வாயல கட கட எண்டு யாழ்தேவி போன மாதிரி ,

                                          " இதில ஆதிதாளம் திஸ்ர நடைக்கு மாறுது ......இதில ஒரு சின்ன எட்டுக்கு எட்டு இடைவெளி வருகுது .........இந்த அனுபல்லவி சங்கராபரணம் ,,,,  இதில ஒரு ஹால்ப் நோட் இடைவெளி வருகுது.....இதை அரை இடத்தில தொடங்குங்க .. கடைசிப் பாடல் நீலாமணி ராகத்தின் ஜென்ம ராகம் சிவரஞ்சனி இல வரும் ஆனால் அதில அதிகம் தாய் ராக சாயல் இல்லைப்போல இருக்கே எண்டு  "

                              எண்டு  என்னைக் கேட்டாள் , எனக்கு நீலாமணி சிவரஞ்சனியே தெரியாது,,இதில அதிண்ட ஜென்ம ராகம்,தாய் ராகம் வேற தெரியுமா எண்டது போல  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அவள் கேட்கிறள்,,நான் சும்மா இருந்தேன் அவள்  சொல்லுறதை, வெறுமே TV இல் இங்கிலீசு நியூஸ் சொல்லுறதைப் போல பார்துக்கொண்டு இருந்தேன்! அவளுக்கு எப்படியோ அதுகள் எனக்கு விளங்கவில்லை எண்டு தெரிந்து , கொஞ்சம் ஜோசிதுப்போட்டு , சாருமதி கதிரைய கிட்ட இழுத்துப்போட்டு எனக்கு கிட்ட இருந்து சிம்பிளான 1/2/3/ ஸ்டைலில் சொல்லிதர அவளின் தலைமயிரில் இருந்து சந்தனாதித்தைலம் வாசம் வந்தது!

                                          "   அப்பா  போட்டுள்ளா  ராகங்களைக்  கவனிச்சிங்களா ,,கடைசிக்கு  முதல்  பாடல் சிமேந்திரமதிமம் ,,எப்படி  அழகா  இருக்கு அந்த  பாடலின் அனுபல்லவி  கேட்டிங்களா ,,அதைக்  கவனிச்சிங்களா "

                                        "   நான்  உங்களைதான்  இவளவு நேரமும் கவனிசுக்கொண்டிருந்தேன்  "  

                                     " என்ன என்ன சொல்லுரிங்க , சத்தமா  சொல்லுங்க ,சரியாக் கேட்கவில்லை,நீங்களே  வாயுக்க  உங்களுக்கு  மட்டும்  கேட்கிற மாதிரி  முணுமுணுக்காமல் ,இன்னொருக்கா உரத்து சொல்லுங்கோ "

                                  "  நான்  நீங்க  சொல்லிக்கொண்டு இருந்த கிட்டார்  நோட்ஸ் விசியங்களைதான்   இவளவு நேரமும் கவனிசுக்கொண்டிருந்தேன் என்று  சொன்னேன் "

                                      "   அட அட அட ...ஹ்ம்ம்           ஆனந்தராகம் கேட்கும்  நேரம் ,,, ஆனந்தராகம்  கேட்கும் நேரம் "

                                      "  இதென்ன ,,,இது  ஒரு  சினிமாப்பாடல்  எல்லா,,,ஏன்  இதை  இப்ப பாடுறிங்க "

                                         "இந்தப்பாடல்  சிம்மேந்திரமத்திமம்  ராகம்,,,,எனக்கு  நல்ல  விருப்பம் அந்தப்  பாடல்  அதுவும்  அது சிம்மேந்திரமத்திமத்தில் உள்ளதால் "

                                     " அப்படியா ,,நல்லது   "                                                                                                                                                                   
                               கட்டுப்பாடு மீறிப்போன ஆத்தில  நாட்டுக்கோட்டை செட்டியார்  ஒரு மரத்துண்டைப் பிடிச்சுக்கொண்டு குழறிக்கொண்டு போன மாதிரி  "ரிகர்சல்"  ஒருமாதிரி முடிய , சாருமதி கொஞ்சம் களைத்துப்போய் , ஆனால் உற்சாகம் இழக்காமல் ,

                       "உங்களுக்கு களைப்பாக இல்லை என்றால், எனக்கொரு பாடல் கிடாரில வாசிசுக்  காட்டுங்கோ "

                எண்டு சின்னப் பிள்ளைகள் போல சிரிக்க ,

                          நான் அவளுக்கு "இளையநிலா பொழிகிறது " ஐ வைச்சுப் பொழிஞ்சன்!

               அதுக்குப் பிறகு ரேகோர்டிங்கில் சாருவும் பிஸி, நானும் பிஸி , ஒரு நாள் முழுவதும் நடந்த அந்த ரேகொர்டிங்கில் , இசை அமைப்பில் வரும் டெக்னிகல் விசியம் மட்டும் சைகையால பாடல்களுக்கு நடுவே ரேகொர்டிங் தொடங்க முதலும் ,இடையிலும் பேசினோம் ,,,வேற  எந்த விசியமும் பேச சந்தர்பம் கிடைக்கவே இல்லை!,

                                          ,"சிதைவின் ராகங்கள் " ஒலிநாடா யாழ்ப்பான புனித யாகப்பர் கோவிலில் வெளியிட்டு, எனக்கும் அதில வந்து கலந்துகொள்ளச்  சொல்லி ஒரு தகவல் அனுப்பினார்கள் , அதில் இசைக்கருவி வாசித்த எல்லாரையும் தலைமைக் குருவானவர் சந்தித்து கவுரவித்தார். நான் அந்த நிகழ்வு பார்க்கப் போனேன் , அந்த ரெக்கொர்டிங்கில்  சம்பந்தப்பட்ட யாரையும் சந்திக்கவில்லை ! 

                                                            முக்கியமா நான் மேடைப் பக்கமே போகவில்லை, ரோட்டு வெளியே , ஓரமாக இருட்டில நிண்டு "லவுட் ஸ்பீகரில்" இல முதல் முதல் அந்த ஒலிநாடாவைத்  தலைமைக் குருவான பாதிரியார் வெளியிட்ட போது  அவர்கள் போட்ட "சிதைவின் ராகங்கள் " களைக் கேட்டேன். வழமையாகக்  கேட்கும்  கிறிஸ்தவ தவக்காலப் பாடல்கள் போலத்தான் இருந்தது 

                                      லைட் போஸ்ட்டில தலைக்கு மேல கட்டி இருந்த "லவுட் ஸ்பீகரில்" ,சத்தம் காதைக் கிழித்துக்கொண்டு வர ,நான் வாசித்த என்னோட கிடார் சத்தம் அந்தப் பாடல்களில் வருகுதா எண்டு உன்னிப்பாகக்  கேட்டேன் , அந்த "லவுட் ஸ்பீகரில்" ஒரே நேரத்தில எல்லா இசைக்கருவிகளின் சத்தமும் கும்பலில்  கோவிந்தா போல வர நான் வாசித்த என்னோட கிடார் சத்தம் அதில மேல் எழுந்து வரவேண்டிய இடங்களில் கூட அந்த சத்தம் வரவே இல்லை . 

                                                    தகரப் பேணியுக்க சல்லிக் கல்லைப் போட்டுக் குலுக்கின மாதிரி "சிதைவின் ராகங்கள் " அந்த "லவுட் ஸ்பீகரில்" கொஞ்சம் சிதைந்துதான் வந்தது ! மண்ணெண்ணைப் புனல் போல இருக்கும் லவுட் ஸ்பிகரில்  இசை என்பது எப்பவும்  கதைக்கிழிக்க வைப்பதுபோல வரும் ஆனால் இனிமையாக வரவே வராது  என்பதும் முன்னமே தெரியும் 

                              சில வரங்களின் பின் மாஸ்டரை கண்டன் அவர்

                                " அரசன்,ஏன் வெளியிடுக்கு வரவில்லை,பாதர் ,ரிதம் வாசித்த உம்மைப் பார்க்க ஆசைப்பட்டார், அவருக்கு உம்மட ரிதம் பிடித்துவிட்டது, அவரும் ஒரு கிளாசிகல் பியானோ வாசிப்பவர் " என்றார்.

                                                   நான் என்னத்த சொல்லுறது , நீங்களே சொல்லுங்க பார்ப்பம் வந்து வெளியில நிண்டு "லவுட் ஸ்பீகரில்" நான் வாசித்த என்னோட கிடார் சத்தம் தந்த இசைமழையில் நனைத்தேன் எண்டு பொய் சொல்ல விரும்பாமல் , அமைதியாகா அவரிடம் இருந்து ஒரு "சிதைவின் ராகங்கள் " ஒலிநாடாவை வேண்டிக்கொண்டு

                  " நன்றி மாஸ்டர் "

                               எண்டுபோட்டு நைசா வீட்டை வந்திட்டன் 

                                வீட்டை வந்து முதல் வேலையா வீட்டில இருந்த டேப் ரெகார்டரில் அந்த "சிதைவின் ராகங்கள் " கேசட்டை போடுக் கேட்ட நேரம் , சிதையாமல் அருமையான சத்தம் அகோச்டிக் லெவலில் வந்தது , என்றாலும் டெக்னிகலா அதில நான் வாசித்த சில கோர்ட்ஸ் , சில ரிதம் பிழைகள் இருந்தது, அது டெக்னிகலா கிடார் ரேதம் அரென்மென்ஸ் விளன்கியவர்களுக்தான் தெரியும் ,,அதாலா நான் அதை ஒரு பெரிய பிழையா நினைக்கவில்லை ,அதைவிட நானும், டெக்னிகலா சொன்னால் , சும்மா ஒரு கத்துக்குட்டி கிடாரிஸ்ட் தான் அந்தநேரம் .

                                          வீட்டில இருந்த டேப் ரெகார்டரில் அந்த "சிதைவின் ராகங்கள் " கேசட்டை போடுக்கேட்ட நேரம் என்னோட அம்மாவுக்கு கோபம் வந்திட்டுது, 

                                                   "  டேய் நிப்பாட்ரா , இந்த அல்லோலோயா பரம பிதா , பாவ மன்னிப்பு பாட்டை, "

                                           "  ஏன் அதுவும் பக்திப் பாட்டுதானே "

                                          " என்ன பக்திப் பாட்டு  சொல்லு   கண்டறியாத வேதகாரரிண்ட பாட்டை இங்க என்னத்துக்கு போட்டு, அதை எதோ , சினிமா பாடுப்போல ரசித்து கேட்கிறியே,"

                                       "   நல்லா இல்லையா "

                                        " போற போக்கில வேதக்காரனாய் மாறி கழுத்தில குருசை மாட்டிக்கொண்டு, எங்கயும் ஒரு சேர்சில பங்க்குத்  தந்தைக்கு பின்னால நிண்டு சுவிஷசம் சொல்லுவாய் போல இருக்கே ,"

                            " ஹ்ம்ம்,,அதுவும்  நல்லா இருக்கும் போல "

                            "  பொத்தடா வாயை  ,உனகென்ன விசரா?"  எண்டா.

                       என்னோட அம்மா வீடில சைவசமய பக்திப் பாடல்கள் ,அதுவும்  சூலமங்கலம் சகோதரிகளின் "கந்தசஷ்டி கவசம் ", சீர்காழி கோவிந்தராஜன் ,M ,S ,சுப்புலட்சுமி பாடிய சங்கீதம்  சந்தனம் போலத் தடவிய பாடல்கள்,கீர்த்தனைகள், மட்டும்தான் கேட்பா, வேற ஒண்டுமே கேட்கமாட்டா , சினிமாப் பாடலே எழுவத்தி  அஞ்சுக்கு முன் வந்த கறுப்பு வெள்ளைப்  படப் பாடல்கள் மட்டும் தான் விரும்பிக் கேட்பா.   

                              அந்த "சிதைவின் ராகங்கள் " இசை நாடவுக்கு நான் கிடார் வாசித்ததை நான் அம்மாவுக்கு அதுவரை சொல்லவே இல்லை ,,சிலநேரம் அவா கிறிஸ்தவர்களோட நான் அள்ளுப்பட்டு போயிடுவானோ எண்டு பயந்தாலும் என்றோ அல்லது அவாவுக்கு சொல்லி என்ன வரப்போகுதோ எண்டோ சொல்லவில்லை !

                                  முதல் முறையா இனி என்ன வரப்போகுது எண்டு நினைச்சு  

                               " இந்த பாடலுக்கு நான்தான் அம்மா ரிதம் கிட்டார்  வாசித்தேன் " என்றேன்,

                          அம்மா அதிர்ந்து ,திடுக்கிடு, கிட்டவந்து என்னை கொஞ்சநேரம் பார்த்திட்டு,

                           "  அதென்ன ரசம் வைக்கிற கிட்டார் , என்னவோ சொல்லுறாய் எனக்கு விளங்கவில்லை , ஆனாலும் இதை முதலில சொல்லி இருக்க கூடாதா "

                                       எண்டு போட்டு, அந்தக் கேசட்டை முதலில் இருந்து போடசொல்லி ,முழுவதையும் கேட்டுப்போட்டு , முழுவதையும் ஒரு பாடல் விடாம கேட்டுப்போட்டு , என்னையும் டேப் ரேக்கார்டரையும் மாறி மாறி நம்ப முடியாமல்ப் பார்த்தா. நான் அவாவுக்கு அமைதியாக  இதை அவாவுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்பது போல ..

                                " இல்லையம்மா,  இது  புளி கரைச்சு ஊத்தி உள்ளி மிளகு சீரகம் குத்திப் போடுற ரசம் இல்லை அம்மா,  இது ரிதம் கிட்டார்,ஒரு பாடலுக்கு பிண்ணனியில் ஒத்திசைவா தாள கதியில் இணைந்து கோர்ட்ஸ் பிடிச்சு இசைப்பது "

                           எண்டு முடிந்தவரை சுருக்கமா சொன்னேன், அதுக்கு அம்மா ,

                         " நீ  கிட்டார் அடிச்ச பாடல்கள் எங்கட  கந்தசஷ்டி கவசத்தைவிட அருமையா இருக்கே "

                            எண்டு, என்னைக் கொஞ்சநேரம் நம்பவே முடியாமல் பார்த்துக்கொண்டு நிண்டுபோட்டு

                             "  இந்த கேசட்டை சீர்காழியின் கேசட்டோட வையடா ,நான் பிறகும் கேட்க வேண்டும் " என்டுடு போயிட்டா . 

                               அதுக்கு பிறகு ஊருக்குள்ள வந்தவை, போனவை, கண்டவை , நல்லூர் திருவிழாக்கு எங்கடை வீட்டை வந்த சொந்தக்காரர் எல்லாருக்கும்

                                " என்னோட மகன் வேதக்காரருக்கு இசை அமைத்து (?)  கிற்றார் அடிச்சு  இருக்குறான் "

                                     எண்டு கொஞ்சநாள் அமளி துமளி!  நான் ஒருவருக்குமே வாயைத் திறந்து சொல்லவே இல்லை அடுத்த சில வருடங்களில் , குடாநாட்டு "சூரிய கதிர் " இடம்பெயர்வில் நாங்கள் ஒரே இரவில் போற இடம் தெரியாமல் இடம் பெயர , நாங்கள் அடையாளம் இல்லாமல்ப் போனது போல எப்படியோ அந்த  ஒலி நாடாக் கெசட்டும்  காணமல்ப் போயிட்டுது...

                                                     விசர் நாய்க்குத்  தண்ணிய ஊத்தின மாதிரி அடிபட்டு, இடிபட்டு , நாட்டுக்குள்ள இடம்பெயர்ந்து,  நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து , தாறுமாறாய் வாழ்க்கை வந்த வழி, போன வழி முழுவதும் வலி தந்து 22 வருடங்கள் ஓட்டமாய் ஓடியபின் ஜோசிக்கிறன் " சிதைவின் ராகங்களுக்குள் " நான் இசைத்த கிட்டார் வாசிப்பு சிதையாமலே தொலைந்து போன அந்த "ஒலி நாடா "யாரிடமாவது இருக்குமா எண்டு  , யாரும் அதை எனக்கு தேடித் தந்தால், என்னோட சொத்துப் பத்தில் அரைவாசியை உங்க பெயரில எழுதி வைப்பேன், இது எல்லாம் வல்ல ஆண்டவர் மேல உறுதியா சொல்லுறன்!.
.
.

பால் வீதி நட்புக்கள் ...!

இருட்டியும் இருட்டாத இரவில் நட்ச்சத்திரங்களை அண்ணாந்துபார்த்து அதிசயித்த நிகழ்வுகள்தான் இப்பவும் அழகாக நினைவு இருக்கு. அந்தப் பால்வீதியில் பருவ வயது  எல்லாவிதமான கனவுகளையும் சந்தோசங்களையும் இரவிரவாகத் தந்தது. அதிகாலையில் உயிரோடு எழும்புவது ஒரு அதிசயமாக இருக்காத வயதில் நிறைய நினைவுகள் கரை ஒதுங்கவிடமால் காலம் அலைக்கழித்தது இன்னும் அலாதியாகவே இருந்தது.

                               அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி  ,  " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......"   எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில்

                     " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, "   எண்டு  பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப்  பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு.

                              இனி நான் சொல்லப்போற கதை கர்த்தர் மேல் ஆணையாக, ஆங்கில ஆசிரியராக அரசாங்க உத்தியோகம்  பார்த்த அன்டனி மாஸ்டர், பெரியாஸ்பத்திரியில் நேர்ஸ் ஆகவேலை செய்த  ஜோசப்பின் அக்கா, செமினரியில் பாதருக்கு படிக்கப்போறதா சொல்லிக் கொண்டு இருந்த ஜேசுதாசன் பற்றியது அதிகம் இல்லை. பதிலாக " வானம்பாடிக்"  கவிஞ்சர்களின் புதுக்கவிதைகள்  விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த, மேரி பிலோமினா அமலோற்பவ ரதி என்ற மேரி, வானம் பாடிப் பாதை மாறிப் போன சம்பவம்  நிறையவே உள்ள கதை . 

                                    பைபிள் படி வாழ வேண்டும் எண்டு வாழ்ந்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் பற்றி அதிகம் சொல்ல ஒண்டுமில்லை, அவரின் அந்த சமய நம்பிக்கைகளை நடைமுறையில் செய்து காட்டிக்கொண்டு இருந்த  ஜோசப்பின்  அக்கா எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மதர் தெரேசா. அவா பற்றி சொல்ல கொஞ்சம் இருக்கு, 

                                ஜோசப்பின் எங்கள் வீட்டுக்கு வருவா,ஆனால் எங்களோடு பைபிள் கதைக்க மாட்டா. சிரிச்சு சிரிச்சு எப்பவும் எல்லாப் பெண்கள் கதைப்பது போல குடும்ப சந்தோஷ,துக்க  விசியங்கள் கதைப்பா, எங்கள் வீட்டில எப்பவும் நாங்கள் கையைக் காலை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்காமல் விழுந்து,உருண்டு,பிரண்டு உடைப்பதால், நாவல்க் கலர்ல இருக்கும் கொண்டிஸ் என்ற பொட்டாசியம் பெர்மங்கனட் என்ற புண் வந்தா போட்டுக் கழுவுற  மருந்து ,சவரின் பார் சவுக்காரம் போல பூசுற களிம்பு எப்பவும் ஆசுப்பத்திரியில இருந்து எடுத்துக்கொண்டு கொண்டு வந்து தருவா. சில நேரம் அவாவே போட்டு உரஞ்சி கழுவி மருந்து போட்டு விடுவா.

                               அம்மச்சியா குளக் கரையில தனிய இருந்து அலைஞ்ச தாடி பாலாவுக்கே காலில சிரங்கு வந்த நேரம் அவதான் கொண்டிஸ் போட்டு கழுவி விடுவா. தாடிபால அவா உரஞ்சிற உரஞ்சலில்

                            " எண்ட அம்மாளாச்சி என்னைக் காப்பாற்று ,,உயிர் போகுதே  அம்மாளாச்சி " 

                                எண்டு கத்துவார், ஜோசப்பின் அக்கா இப்படி ஒவ்வொருநாளும் அவாவிண்ட வேலையில் பார்க்கிறதால் ஒண்டும் சொல்லாமல்

                                       " நான் தான் அம்மாளாச்சி,உன்னைக் காப்பாற்ற வந்து இருக்கிறேன், உயிர் போற மாதிரி இப்ப என்னத்துக்கு கிடந்தது குளறுறாய்  " 

                                        எண்டு சொல்லி உரஞ்சி உரஞ்சி மருந்து போட்டே தாடி பாலாவைக்  காப்பாற்றினா. 

                                     இந்த சம்பவம்  கேள்விப்பட்ட  அம்மாவே ஒருநாள் ஜோசப்பின் அக்காவை  இழுத்து வைச்சு 

                                 " என்ன ஜோசப்பின்,உனக்கு வேற வேலை இல்லையே, பால பாஸ்கரன் காலில சிரங்குக்கு மருந்து போடிறியாம்.அவன் விசரன் , ஜோசிச்சு ஜோசிச்சு சொறிச்ச சொறிய சிரங்கு வரும்தானே,உனக்கேன் இந்த நாய் வாலை நிமித்துற வேலை " 

                                 எண்டு சொல்ல, அதுக்கு  ஜோசப்பின் அக்கா, 

                                   " அப்படி சொல்லாதயுங்கோ மனோன்மணி அக்கா, எங்கட பைபிளில் ஜேசுநாதர்,குஸ்டரோகி ஒருவரின் காலைக் கழுவி விட்டவர், அவர் தேவ மைந்தன் அவரே செய்து இருக்குறார், இம்மையில் நான் செய்யுறது மறுமையில் எங்களுக்கு கிடைக்கும் அக்கோய், " 

                                  எண்டு சொன்னா. அவா அப்படிதான் தேவை அதிகம் இல்லாத இடத்திலையும் அவாவின்  சேவை அதிகம் இருக்கும்,,,   

                                  செமினரிக்கு போய்ப் பாதருக்குப்  படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் என்ற ஜேசுதான் எங்கள் குளதடிக் குழப்படிக் குரூப்பில் குழப்படி செய்யாத ஒரே ஒரு மெம்பர். அவளவு உலகம் தெரியாத வெள்ளாந்தியான அப்பாவி.  வெள்ளைச் சொண்டன் வீட்டில் கள்ள மாங்காய் பிடுங்க போகப் பிளான் பண்ணினாலோ,பண்ணை வளவில கள்ள இளனி இறக்க திட்டம் போட்டாலோ ஆரம்பத்திலேயே அதை

                           " சத்துருக்களுடன் ஜீவிதம் செய்வோர் பாவிகள்.... " 

                                        எண்டும் பைபிள்ப் படி இதெல்லாம் பிழை எண்டு சொல்லுவான். புளியமர இருட்டில பித்துக்குளி என்ற எங்கள்  வயசிலேயே வெம்ப்பிப் பழுத்த அறிவுஜீவி தலைமையில் நடக்கும் பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய பின் இரவு " மிட்நைட் மசாலா " ஆராய்ச்சி உரையாடல்களில் பங்கு பெறவே மாட்டான்.

                                        குளத்தடிக் குரூப் சட்ட திட்டத்தில் முக்கியமா அதில உள்ள மெம்பர்கள் மற்ற மெம்பர் வீடுகளுக்குள்ள கேட்டுக் கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்குள்ள நாய் போன மாதிரி போகலாம், வரலாம் எண்டுதான் உறுதி மொழி எடுத்து இணைந்து இருந்தோம். ஆனால் ஜேசு மட்டும் எங்களில் என்னைத் தவிர மற்ற ஒருவரையும் , ஒரே ஒரு நாள்த் தவிர அவன் வீட்டுக்கு உள்ள கூப்பிடமாட்டன், வாசலோடு வைச்சுக் கதைச்சு சலாப்பி அனுப்புவான். இவன் எங்க வாழ்கையில் முன்னேறப் போறான் எண்டு நாங்களும் அவனை ஒண்டிலையும் வற்புறுத்தி இழுத்து வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 

                                            நான் அடிக்கடி அவன் வீட்டுக்கு ஏதாவது ஒரு சாட்டில எட்டிப் பார்க்கப் போனாலும், ஜேசு டிசம்பர் மாதம் வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டதுக்கு மட்டும் எங்கள் குரூப் மெம்பர்கள் எல்லாரையும்  அவன் வீட்டின் ஹோலில ஒரு மூலையில் சவுக்கு மரம் வைச்சு, அதுக்கு கீழ ஜேசுநாதர் மாட்டு தொழுவத்தில் பாலனாகப் பிறந்து உள்ள சம்பவத்தை, சின்ன சின்ன பிளாஸ்டர் பரிஸ் சிலைகளில் அலங்கரித்து, அதுக்கு மின்னி மின்னி மறையும் சின்ன சின்ன பல்ப் போட்டு,

                                 " பைபிளின் பழைய ஏட்பாட்டில் ஜோசுவா தீர்க்கதரிசி சொன்ன மாதிரி கர்த்தர் பாலனாய் ஜெருசலாமில் பிறக்க,வெள்ளிப் போளங்களுடன் பரிசேயர் வர, அந்தக் குழந்தையைக் கொலை செய்ய ரோம வீரர்கள் வீடு வீடாக தேடி வர, ஜோர்டான் ஆற்றம் கரையில் வால் வெள்ளி தோன்றியது...  " 

                                   எண்டு கண்ணை உருட்டி உருட்டி விளக்கம் வேறு சொல்லி எங்களுக்கு அந்த சோடிணையைக் காட்டுவான்.

                                      நாங்கள் அதை ஆர்வமாகப் பார்க்காமல்,கதவில அரைவாசியை மறைஞ்சு அதிகாலை விடி வெள்ளி போல மின்னும் அவனோட தங்கச்சி மேரியைக்  கண்ணை நல்லா விரிச்சு வைச்சு ஆர்வமாகப் பார்ப்போம். அதுதான் நான் முன்னமே சொன்னேனே ஜேசுதாசன் எவளவு வாழ்கையில் முன்னேறத் தெரியாத உலகம் தெரியாத அப்பாவி எண்டு.

                            மேரி எல்லா இளம் பெண்கள் போலதான் அம்சமா அடக்கமா வத்தகப் பழம் போல சிவப்பாக இருப்பாள்., தேவமாத போல நெற்றியில் சுருள் முடி விழ , சுண்டங்காய் போல சின்ன மூக்கு அமுங்கிப்போய் இருக்க வெள்ளரிக் கன்னத்தில் குறும்பு எப்பவும் ஒரு சின்னக் குழி விழித்திக்கொண்டு இருக்க  ,முக்கியமாப் பேசும் போது காற்றுக்கே அதிராமல் மென்மையாகப் பேசுவாள்.கழுத்தில ஒரு மெல்லிய சிங்கப்பூர் செயின் போட்டு அதில ஜேசுநாதரை அறைந்த சிலுவை பென்டன் போட்டு அதோட ஒரு சிகப்பு குண்டுமனியும் சேர்த்தே தொங்கவிட்டு இருப்பாள்.

                                   அவள் நந்தியா வெட்டைக் கண்கள் அன்புக்கு இலக்கணம் எழுத, நீரோடைப்  பார்வை கருணைக்குப் பாயிரம் எழுத ,மொத்தமாக அவள் முகத்தில் பாசத்துக்கு ஏங்கும் இதயத்தின் வாசம் இருந்தது அந்த சின்ன வயசிலேயே.  டவுனில இருந்த கன்னிகாஸ்திரிகளின் கொன்வென்ட்  பள்ளிக் கூடத்தில படித்த அவள் படிப்பில புலி ,ஆனால் அந்த வீடிலேயே எல்லாருக்கும் ஓடின மாதிரி அதிகம் கிறிஸ்தவ சிந்தனையில் அவள் மனம் ஓடவில்லை. வேற என்னதில ஓடினது எண்டு நீங்க கட்டாயம் கேட்பிங்க, காரணம் இந்தக் கதையே மேரியின் கதை அதால சொல்லுறேன். 

                                          மேரி அந்த சின்ன வயசிலேயே அதிகம் வாசிப்பது கவிதைகள், அது எப்படி  வெளிய தெரியும் என்றால் கவிஞ்சர் கந்தப்பு எங்கள் ஊர் வாசிக்க சாலையில் நடத்திய " கை எழுது " என்ற சின்ன மாட்டுத்தாள் பேப்பர்  கையெழுத்துப்  பத்திரிகையில் அவள் அதிகம் எழுதுவாள். வானம்பாடிக் கவிஞ்சர்களின் காதல் நனைந்த கவிதை போல இல்லாமல், அதிகம் நா. பிச்சமூர்தி,ஆத்மாநாம் போறவர்களின் பாதிப்பில் அவர்கள் போலவே  கொஞ்சம் எளிமையா எழுதுவாள் என்று கவிஞ்சர் கந்தப்புவே ஒரு முறை இலக்கிய சந்திப்பு கூட்டத்தில அவளைப் பற்றி சொன்னார்.

                               உண்மையா எண்டு அதை உறுதிப்படுத்தும் அளவுக்கு எங்களுக்கு அப்ப அறிவு இருந்ததில்லை. ஜேசுதாசன் சில நேரம் அந்தப் பேப்பர் கொண்டு வந்து காட்டுவான். ஜேசு ஒத்துக்கொண்டது போலவே எங்களுக்கும்  அதிகம் அதன் அர்த்தம் விளங்காது.  ஆனாலும் ஜேசு

                       " நான்  பாதருக்கு படிச்சு பங்குத்  தந்தை ஆகினாலும் அவள் கட்டாயம் இலக்கிய உலகத்தில் ஒரு நாள் பிரகாசிப்பாள் "  

                                 எண்டு சொல்லுவான். எங்களுக்கு அந்த நேரம் தெரியாமலே போன ,விதி திரை போட்டு மறைச்சு வைச்ச மிகப்பெரிய சோகம், பல  நிகழ்வுகள்  எதிர்காலத்தில் நடக்காமலே போகப் போறது தெரியாமல் நாங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்தது ... 

                        ஒரு நாள்......வேரோடி விளாத்தி முழைச்சாலும் தாய்வழி தப்பாது யாரோடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பென் என்பது போல

                                        என்னோட அம்மா ,சுப்பிரமணியம் கடையில, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் போத்தல் வேண்டிக்கொண்டு வந்து ,கொஞ்சம் முட்டைகளையும் ஒரு கடுதாசி பையில போட்டுக்கொண்டு

                                     " ஜோசப்பின் வீட்டை போட்டு வாறன் "

                      எண்டு சொல்லிப்போட்டு போனா. போய் சில மணித்தியாலங்களில் திரும்பி வந்து வீட்டு வெளி வாசலில் நிண்டு கொண்டு,  

                                        "  தீட்டுத் துடக்கு வீட்டுக்குப்  போட்டு வாறன்,பின்னால வா, வந்து கிணத்தில மூன்று வாளித் தண்ணி அள்ளி தலையில ஊத்தடா "  

                                      எண்டு சொன்னா,நான் போய் ஒண்டுமே விடுப்பு கேட்காமல் அள்ளி ஊத்திப் போட்டு வந்து வீட்டுக் ஹோலில இருந்தேன். அம்மா தலையில ஒரு துவாயைச் சுற்றிக்கொண்டு வந்து,முதல் வேலையா என்னட்ட வந்து,

                                     " இனி ஜேசுதாசன் வீட்டுக்கு தேவை இல்லாமல் நத்தார் பாப்பா பார்க்கப் போறேன்,அது இது எண்டு சொல்லிக்கொண்டு போனி எண்டால் முழங்காலை அடிச்சு முறிப்பேன் "

                              என்றா,நான் என்னோட முழங்காலைத் தடவிப் பார்த்தேன்,அது பிற்காலத்தில் எனக்கு எவளவு முக்கியம் எண்டு நினைச்சுப் போட்டு ஒண்டுமே சொல்லாமல் பேசாமல் இருந்தேன். அம்மா  

                                      " ஜோசப்பின் ஆட்கள் வேதக்காரர் அவயல் எங்களைப்போல பால் அறுகு, மஞ்சள் வைச்சு தலைக்கு தண்ணி ஊத்த மாட்டுதுகள், என்றாலும் என்னோட கடமைக்கு நான் வேண்டிக் குடுக்கிறதைக் குடுத்திட்டேன் "

                                    எண்டு எனக்கும் கொஞ்சம் நடக்கிற சம்பவங்களின் விபரம் சொல்ல வேண்டும் போல சொல்லிக்கொண்டு இருந்தா.  

                                     அதுக்கு பிறகு நான் ஜேசுதாசன் வீட்டை போறது இல்லை, மேரியும் அதிகம் வெளிய வாறது இல்லை,பள்ளிக் கூடம் போறது தெரியாமல்ப் போவாள் ,வாறது தெரியாமல் வருவாள்.கவிஞ்சர்  கந்தப்புவின் மாட்டுத்தாள் பேப்பரிலும் அவளின் கவிதைகள் அதன் பின் வரவில்லை. அவள் படிச்சுக்கொண்டு இருந்த பின்னேர  டுயுஷன் இக்கு போறதை நிற்பாட்டிப்  போட்டு அவர்கள் வீட்டுக்கே ஒரு மாஸ்டர் வந்து சொல்லி கொடுத்தார் எண்டு தான் குளத்தடியில் நியூஸ் அடிக்கடி கசிந்து கொண்டு இருந்தது. ஆனால் ஜேசு  எங்கட வீட்டை வந்து

                                       " வீட்டை வாட , அப்பா ஒரு எக்கோடியன் வாங்கி வைச்சு இருக்கிறார்,வா வந்து பார்,மேரியும் கொஞ்சம் கொஞ்சம் அதை இப்ப வாசிக்க பழகிறாள் ,வாட வாட "

                                              எண்டு இழுப்பான், எக்கோடியன் வாத்தியம் எப்படி இருக்கும் எண்டதை விட மேரி இப்ப எப்படி இருப்பாள் எண்டு பார்க்க ஆவலா இருந்தது. ஒரே ஒரு நாள் அவளை வீராளி அம்மன் கோவில் தேர் முட்டியடியில் என்னோட பெரிய மாமாவின் கடைசி மகள் ஜெயந்தியோட சும்மா கதைச்சுக்கொண்டு நிண்ட நேரம்,மேரி சைக்கிளில் ஓடிக்கொண்டு எங்களைத் திரும்பி திரும்பி வடிவாப் பார்த்துக்கொண்டு போனாள்.ஜெயந்தி மேரியோட  டூஷனில் ஒன்றா படித்தவள். நான் அவளைப் பார்க்காத மாதிரி வடிவாக் கவனித்தேன்.....

                                       சொல்லி வைச்ச மாதிரி அந்த வருடமும் டிசெம்பர்  மாதம்  கிறிஸ்மஸ் அமளி துமளியா வந்தது.......

                                                    அம்மாவே வந்து " இந்த முறையும் ஜோசப்பின்  வீட்டை நத்தார் இக்கு போகப்போறியா, போறது எண்டாப் போ,ஒழுங்கா போய்ப் பேசாமல் கேக்கை திண்டு போட்டு ஒழுங்கா திரும்பி வாறது எண்டா போயிட்டு வா " ,

                          எண்டு எனக்கே ஆச்சரியமா சொன்னா,நான் என்னோட முழங்காலைப் பார்த்த்துக் கொண்டு இருந்தேன்.

                     " பரவாயில்லை ஜேசுதாசன் வந்து வரச் சொன்னால் போட்டு வா "

                              எண்டு மறுபடியும் சொன்னா, ஜேசு முதலே எனக்கு மட்டும் சொல்லி இருந்தான் வர சொல்லி அதைப் பயத்தில நான் சொல்லவில்லை. மற்ற குளத்தடி குரூப் மெம்பர்களுக்கு இந்த வருடம் சொல்லவில்லை எண்டும் சொல்லி இருந்தான். ஆனால் நான் மற்ற பிரெண்ட்ஸ் உம் வந்தால் தான் வருவேன் இல்லாட்டி வரமாட்டேன்,என்று ஜனநாயக வழி முறையில் அவனுக்கு சொன்னேன்,அவனும் ஜோசித்துப் போட்டு ஓகே எண்டு சொல்லி இருந்தான்.

                                  கிறிஸ்மஸ் இரவு நாங்கள் ஜேசுதாசன் வீட்டுக்குப் போன நேரம், ஏறக்குறைய ஜேசு பாலன் பிறக்கும் சின்ன சோடினையில் லைட் சுற்றி சுற்றி சோம்பலா ஓடிக்கொண்டு இருக்க, டேப் ரெகொர்டரில் ஜிம் ரிவிஸ் பாடின " ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்... " பாடல் அதிகம் சத்தம் இல்லாமல்ப் பாடிக்கொண்டு இருக்க , மாஸ்டரின்,ஜோசப்பின் அக்காவின் அவர்களின் உறவினர் பலர் வந்து இருந்தார்கள்,ஜோசப்பின் அக்கா ஓடி ஓடி எல்லாருக்கும் கேக் குடுத்துக்கொண்டு இருக்க,ஜேசு நல்ல வடிவா உடித்திக்கொண்டு எப்பவும் போல அவன் சவுக்கு மரத்துக்கு கீழே சோடினை செய்த அலங்காரங்களை  எங்களுக்கு காட்டி எங்களை வியக்க வைத்துக்கொண்டு இருக்க, அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பைபிளை எடுத்துக்கொண்டு வந்து

                     " இண்டைக்கு பொடியள் உங்களுக்கு ஒரு கதை சொல்லுறேன்... "

                         எண்டு சொல்ல தொடங்க, இதென்ன இம்சை இந்தாள் இந்த நேரம் அறுக்கப் போகுதே எண்டு நாங்க மண்டையச் சொறிய , நெஞ்சில பாலை வார்த்த மாதிரி , பிரில் வைச்ச வெள்ளை நீண்ட கவுன் போட்டுக் கொண்டு  மேரி மெல்ல மெல்ல தேவதை போல மிதந்து வெளிய அவர்களின் ஹோல் இல நாங்க இருந்த இடத்துக்கு வந்தாள், 

                                                   வந்து எங்கள் எல்லாரையும் பார்த்து மின்னல் எறிஞ்சு  பொதுவாக சிரிச்சுப் போட்டு, ஜேசுக்கு பக்கத்தில போய் இருந்தாள். அந்த இருட்டு நிறைந்த இடத்திலையும்  நிறைய வித்தியாசமா இருந்தது அவளின் திடீர் வளர்ச்சி.முகத்தில ஒரு ஜென்மத்துக்குப் போதுமான ஏக்கம் இருந்தது. சரியா சொல்ல முடியவில்லை அது எந்த வகை ஏக்கம் எண்டு.   

                           மாஸ்டர் ஜோசப் ஒவ்வொரு வருடமும்  போல அந்த வருடமும்  பழைய ஏட்பாட்டு கால பைபிள் கதையான , " ஜோசப்பும்  அவனோட கடவுள் நம்பிக்கையும்   " என்ற  கதையைச்  சொன்னார், 

                                          அதில ஜோசப்பின் உடன் பிறந்த சகோதரர்கள் அவனை எபிரேய வியாபாரிகளுக்கு அற்ப விலைக்கு அடிமையாக விற்க,ஜோசப்பை அந்த வியாபாரிகள்  பண்டி வளர்க்கும் கொட்டகையில் அடைத்து, குதிரைக்கு வைக்கும் கொள்ளைத் தின்னக் கொடுத்து கொடுமை எல்லாம் செய்தும், அரண்மனை எடுபிடி  வேலைக்காரனாகச் சேர்ந்த ஜோசப் கடைசியில் அந்த நாட்டுக்கே அரசன் ஆக,  அவனை விற்ற பின் நாட்களில் குடித்துக் கும்மாளம் போட்டு ஏழைகள் ஆகிப்போன  அவனோட உடன் பிறப்புக்கள் ஜோசப் அரசன் ஆனது கேள்விப்பட்டு வந்து பார்க்க,அவன் அவர்களை மனமுவந்து மன்னித்து, தன்னோட வயதான தகப்பனையும்  அழைத்து சாகும்வரை அவரை அன்பாக வைத்துப் பார்க்க,சாகும் போது அவனோட அப்பா  கடைசி வாக்கு மூலம் போல இறை நம்பிக்கையின் சாட்சியாக,   

               " தேவனோட வாழும் பிள்ளைகள் தேவப் பிள்ளைகள்,அவர்கள் நீர் அண்டையில் நடப்பட்ட மரங்கள்,அவை எப்போதும் செழித்து கிளை பரப்பி வளரும்...."  

                                   எண்டு சொல்லிப்போட்டு செத்துப்போனாராம் எண்டு மாஸ்டர் சொல்லி முடிய, நாங்கள் மவுனமாக இருந்தோம்,ஜேசுதாசன்  தலையை குனிந்து கொண்டு கையை இறுக்கி பிடித்துக்கொண்டு ஜபம் சொல்லிக்கொண்டு இருந்தான்,மேரி " இதெல்லாம் உண்மையா,அல்லது பொய்யா "   எண்டது போல ஒண்டும் அதிகம் உணர்ச்சி காட்டாமல் இருந்தாள்.

                                         கவிஞ்சர் கந்தப்புவின் மாட்டுத்தாள் கையெழுத்து பத்திரிகையில் ஒருமுறை மேரி கிரிஸ்மஸ் கொண்டாத்தைக் விமர்சித்து கவிதை எழுதி இருந்தாள். அந்தக் கவிதையைக் கிழித்து எறிந்து  கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தார். அந்தோனிப்பிள்ளை மாஸ்ட்டர். மேரிக்கு அது மிகவும் மனச்சோர்வாக இருந்தது என்று சொன்னாள், அந்தக் கவிதை இதுதான் ,

கர்த்தருக்கு 
மகிமையுள்ள ஸ்தோஸ்திரங்கள் ,
இந்த வருடமும் 
வாடிப்போன ஊசியிலை மரம் ,
மின்சார இணைப்பில் 
சுடரும் மெழுகுதிரி ,
பரிசேயர்களின் 
வெள்ளிப்போளங்கள் 
அலுமினியத்தில் ,
திசைத்துருவ நட்ச்சத்திரங்கள் 
ஜிகினாப் பேப்பரில் ,
ஆட்டுத் தொழுவத்தில் 
பிளாஸ்டர்பரிஸ் இடையர்கள், 
மேரியும் ஜோசேப்பும் 
பிளாஸ்டிக்கில் ,
பாலன்பிறகும் இன்றைய இரவில் 
நீர் ஒருவராவது 
இயற்கையாகவிரும் பிதாவே ! 

                                               ஜேசுதாசன் எக்கோடியன் வாத்தியத்தை தூக்க முடியாமல்த் தூக்கிக் கொண்டு வந்து அதை நெஞ்சில கொழுவ வளம் தடுமாறிக்  கொழுவிப்போட்டு, பிங் குரோஸ்பி பாடினா " வட் எ வொண்டர்புல் நைட்.. " பாட்டு வாசிக்கவா எண்டு கேட்டான், மேரி அதைக் கேட்டு சிரிக்க தொடங்கினாள், 

                                                        மற்ற நண்பர்கள் எல்லாரும் கும்பலா அவனோட சேர்ந்து அந்த அக்கொடியனை ஒவ்வொரு பக்கத்தால அதன் கட்டைகளை அமுக்க, ஜேசுதாசன் அவன்கள் எல்லாரையும் இழுத்துக்கொண்டு முன்னுக்கு வெளி விறாந்தைக்கு போக,மேரி மட்டும் எனக்கு முன்னால இருந்தாள், மேசையில் கனக்க புத்தகங்கள் கிடந்தது, ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறது போல நடிச்சுக் கொண்டு 

                  " எப்படி சுகம், ஏன் எங்கள் வீட்டுக்கு இப்ப அடிக்கடி வாறதே இல்லையே,என்ன நடந்தது " எண்டு மெதுவா கேட்டாள்,

                   " மேரி  ..நீ  இப்ப  பெரிய  பொண்ணு,,நாங்க  முன்னம் போல எல்லாம் உன்னோட  பேச முடியாது,,பழக முடியாது "

                           "  அப்படி  யார் சொன்னது "

                         "  அம்மா சொன்னா ,,மேரி , நீ ஏன்  உங்க அப்பா சொன்ன பைபிள் கதையை ஆர்வமாக் கேட்கவில்லை "

                           "   உனக்கு எப்படி  தெரியும்  அது "

                       " மேரி,  நான் உன் முகத்தைக் கவனிச்சேன்,,அதில  ஆர்வம்  இருக்கவில்லை "

                        "  ஹ்ம்ம்,,ஏன்  பைபிள் கதையை  நான்  ஆர்வமா கேட்க வேண்டும்,,சொல்லு,,என்ன காரணம் "

                               "அது  எனக்குத்  தெரியாது, மேரி ,,நீங்க  எல்லாம் வேதக்காரர்கள்  உங்களுக்கு  பைபிள் தானே கடவுளே வேத வாக்கியம் "

                              "   பைபிள்  ஒரு  வரலாற்றுக்  கதை , இரண்டாயிரம் வருடம் நடந்த  கதை "

                              " அவளவுதானா ,மேரி ,,என்ன இப்பிடி  சுருக்கமா சொல்லுறாய் "

                               "   எனக்கு அவளவுதான் , போதுமா விளக்கம் "

                             "  ஆனால் உன் அப்பா அதில இருந்து எப்பவுமே அழகான வாழ்க்கைப் படிப்பினை, கடவுளின் நம்பிக்கை பற்றி நல்ல நல்ல கதைகள் சொல்லுறார் "

                           "  அப்பா  ஓரளவு பரவாயில்லை,,அவர்  லொயிக்  ஆக ஜோசிப்பவர்,,அம்மாவுக்கு பைபிள் நம்பிக்கை,,ஒவ்வொரு  வாக்கியமும் கடவுளின் வாயில் இருந்து வந்து விழுந்த மாதிரி நம்பிக்கை "

                           "    அது ,நல்ல விசியம் தானே "

                       "  ஹ்ம்ம்,,இப்ப  என்னத்துக்கு பைபிள் பைபிள் என்று சாகிறாய்,,இப்பிடி  கதைக்க  சந்தர்ப்பம் கிடைப்பதே அருமை  ,,அதில வேற என்னவும் உருப்படியா கதைப்பமா "

                        "    அதென்ன,,நீயே  சொல்லு,,மேரி ,,படிப்பைப் பற்றியா "

                         "    அது  அடுத்த அறுவை,,,"

                         "   அப்ப வேற என்ன, மேரி,,நீயே  சொல்லு "

                          " நான் தான்  எல்லாம் தொடக்கிக் கதைக்க வேணுமா,,ஏன் நீயே ஏதாவது சுவாரசியமா சொல்லன்,,உன்னோட  காதல்  ரொமான்ஸ்  ,,உன்னோட  லைன்கள்  ,,சொல்லு ,,"

                              "ஹஹ  ஹஹ  ஹஹா       " 

                             " இப்ப எதுக்கு அம்மசியா  குளத்தடி  விசரன்  பாலா போல சிரிக்கிறாய்    "

                        " உன் கேள்வியில் சிரிப்பு வந்தது,  ஹ்ம்ம்,,உண்மையில் அப்பிடி  ஒன்றும்  இல்லை..மேரி "                 

                          "  அட அட அட அட அட அட....என்ன ஒரு  வளர்ப்பு "
                    

                          நான் பதில் சொல்லாமல் இருந்தேன், மேரி கையில வைச்சு இருந்த புத்தகத்தை காட்டி "  இது என்ன புத்தகம் தெரியுமா " எண்டு கேட்டாள், 

              " எனக்கு எப்படி தெரியும் ,நீயே சொல்லு " என்றேன், 

               " பால் வீதி,அப்துல் ரகுமான் எழுதியது " எண்டு சொன்னாள் சொல்லிப்போட்டு ,

                  " வேலிக்கு மேலாக வளரும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே ,,என் கால்களில் வேலிக்கு  கீழே ஓடும் வேர்களை என்ன செய்வாய் .....என்ற கவிதையை வாசித்தாள்.. வாசிச்சுப் போட்டு அதைப் படார் எண்டு மேசையில் வைச்சுப் போட்டு...

                    " தேர்முட்டியடியில் ஜெயந்தியோட என்ன கதை வசனம் அண்டைக்கு ஓடினது " எண்டு கேட்டாள். 

                      நான் " எண்டைக்கு,....எந்த ஜெயந்தி..... " எண்டு கேட்டேன்,,  

                    " ஹஹஹா , ஹ்ம்ம், அவள் தான்  உங்க மச்சாள், ரெட்டைச் சிலுப்பி,  வெத்திலை போட்ட கிளவியால் போல மஞ்சள் காவி பிடிச்ச பல்லால ஈஈஈஈ எண்டு இழிப்பாலே அவள்தான்..." என்றாள்,

                   " ஜெயந்தி கொமர்ஸ் பாடத்தில ஐந்தொகை பலன்ஸ் செய்யுறது எப்படி எண்டு டவுட் கேட்டாள் சொன்னேன்..." என்றேன், அதுக்கு அவள்.

               " ஹஹஹஹாஹ் ,  அடிடா சக்கை எண்டானாம், டவுட் என்னத்துக்கு தேர்முட்டியில் பதுங்கி நிண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்,  எனக்கும் தான் ஐந்தொகை பலன்ஸ் செய்ய வருதில்லை,,,,சொல்லி தரலாமே, அதென்ன ஜெயந்திக்கு மட்டும் பதுங்கி பதுங்கி ஸ்பெஷல் டவுட் கிளியரன்ஸ் நடக்குதே,,"  என்றாள் 

                 நான்,, " மேரி ,நீ கேட்கவில்லை அதால சொல்லவில்லை, அதைவிட அம்மா உங்க வீட்டுக்கு போக வேண்டாம் எண்டு சொல்லி இருக்கிறா அதால இங்கே வாரதில்லை,சரி அதை விடு நீ ஏன் இப்ப கவிதை எழுதுறது இல்லை  " 

                             " ஹ்ம்ம்,, இப்ப அதுவா முக்கியம், அப்பாவுக்கு படிப்பு முக்கியம் அவருக்கு ரிப்போர்ட் இல் எப்பவும் முதல் மூன்று இடதுக்க வரவேண்டும் ,அம்மாவுக்கு பைபிளும்,செபமும் முக்கியம் ,,ஹ்ம்ம் இதுக்குள்ள கவிதை எழுத எந்த உற்சாகமும் கிடைக்குதில்லை, "

                    "  உனக்கு என்ன என்ன தோன்றுதோ அதை அதை அப்பப்ப எழுது "

                      " கிழிஞ்சுது  என்னக்கு என்ன தோன்றுது என்று சொல்லவா,,,,ஹ்ம்ம்,,,சொன்னா  மட்டும் எல்லாரும் என்ன கேட்டா கிழிக்கப் போகினம் "

                    "  இல்லை, மற்றவர்களின் வாழ்கையை நீ ஒருநாளும் வாழாதே,,உனக்காக வாழு "

                     "   அட அட அட  ,,தத்துவத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை,,,சரி,,ஜெயந்தி இப்ப என்ன செய்யுறாள் ,,உன்னோட கதைப்பாளா இப்பவும்,,,இன்னும் அவளுக்கு டவுட் கிளியர் செய்யுறியா, "

                  " இல்லை,,அவளைக்  கண்டே ஒரு வருசத்துக்கு மேலே,,கடைசியா வீராளி அம்மன் துர்க்கையம்மன் திருவிழாவில பார்த்தேன்,,,வெளிவீதி உலாவில் பயனைக் கோஸ்டியோடு பக்திப் பரவசமா பாடிக்கொண்டு போனாள்.."

                   " பொய் சொல்லாதே,,,ஹ்ம்ம்,,அவள்  பக்திப் பரவசமா பாடிக்கொண்டு போனாள்..,,ஹ்ம்ம்,,நல்ல விபரமாதான் விடுப்புப் பார்த்த மாதிரித் தெரியுதே...ஹ்ம்ம் ,,"

                          " இல்லை, உண்மையதான்  சொல்லுறேன்,,அவளவுதான் தெரியும்,,பெரியமாமா அவளை அவுஸ்த்ரேலியாவுக்கு படிக்க அனுப்ப போறதா அம்மா வீட்டில சொன்னா.."

                        " ஒ,,,அது  வேறையா,,அவள் எண்ணத்தைப் படிசுக் கிழிப்பாள்...உன்னையும் வரச்சொல்லி இருப்பாளே ..அவள்தான் உன் மச்சாளே,,பிறகென்ன மற்றாக்கள் என்ன சொல்லி என்ன வரப்போகுது "

                         " மேரி,,என்னோட  என்னைப்பற்றி மட்டும் கதை,,சும்மா கிடந்தது அலட்டாதே   " எண்டு கொஞ்சம் கோபமாச் சொன்னேன்.

                                                   ஜோசித்துப் பார்த்தா எல்லா இளம் பிள்ளைகளின் இளம் வாழ்கையில் உள்ளது போல  இதில தெளிவான காதல் இல்லை, கவர்ச்சியான கனவுகள் ஹோர்மோன் குளறுபடியால எகிறினாலும் வெறும் பரஸ்பர நட்புதான் அடித்தளமா இயங்க வைக்குது போல இருந்தது  , அதிலும் வயசுக் கோளாறு கொஞ்சம் அதிகமா இருக்கு போல தான் உணர்ச்சி வசப்படாமல் ஜோசிக்கும் போது இருந்தது.. ...

                      ஜேசுதாசன்  "  வட் எ வொண்டர்புல் நைட்..வட் எ வொண்டர்புல் நைட்.. " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்க வந்தான்,மேரி நெற்றியில் கையை வைச்சு தேச்சுப் போட்டு, " தலை இடிக்குது...."  எண்டு சொல்லிக்கொண்டு எழும்பிப் போயிடாள்,ஜேசு கிட்ட வந்து ,

                               " என்னடா ஒரு மாதிரி இருகிறாய்,மேரி ஏதும் சொன்னவளா ,  அவள் அப்படிதான் எப்பவும் குழம்பிக்கொண்டு இருக்கிறாள், வா வெளிய வா நொள்ளைக்கண்ணன் குரலை மாற்றி கண்டசாலா போல காவியமா ஓவியமா ...பாட்டுப்  பாடுராண்டா, ஒரே கலாட்டாவா இருக்கு வெளிய,  நீ இங்க தனிய மேரியோட அறுவையைக் கேட்டுக்கொண்டு இருகிறாயே.,,,"

                                      எண்டு சொல்லி வெளிய இழுத்துக்கொண்டு போனான்...அதுதான் அன்டனிப் பிள்ளை மாஸ்டர் வீட்டுக்கு நான் போன கடைசி கிறிஸ்மஸ் நாள் எண்டு நினைக்கிறன். 

                               அதுக்குப் பிறகு சில வருடங்களில் நிறைய விசியங்கள் வீட்டிலையும், நாட்டிலையும் நடக்க,குளத்தடிக் குரூப் மெம்பர்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கமா பிரிந்து போய்விட்டோம்.  அதில முக்கியமா நடந்த சம்பவம் ஜேசுதாசன் வீட்டில தான் நடந்தது எண்டு பின் நாட்களில்த் தெரிய வந்தது,  பாதருக்கு படிக்கப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன் அது படிக்கப் போகவில்லை,  பதிலாக " அங்கொடை " எண்டு நாங்க சொல்லும் புவனேஸ்வரியை ஒரு நாள் மாஸ்டருக்கும் ,ஜோசப்பின் அக்காவுக்கும் கொண்டு வந்து தன் காதலி அவளைத் தான் கலியாணம் கட்டப்போறேன் எண்டு சொல்ல,மாஸ்டர்

                          " ....இனி உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவும் இல்லை, ....சேர்ச் பக்கமே இனிப் போக முடியாதே , ....இப்பிடி சொந்தம், உறவுகள் முகத்தில முழிக்க முடியாமல் செய்து போட்டியே, ...வீட்டு வாசல்ப் படி இனி மிதிக்காத வெளிய போடா,....உன்னை வளர்ததுக்கு ரெண்டு தென்னம் பிள்ளையை தண்ணி ஊற்றி வளர்த்து இருக்கலாம்,கடைசிக் காலத்தில தேங்காயாவது பிடுங்கி இருக்கலாம், ....உன்னோட கூ ட்டாளிமாரோட குளத்தடியில் இழுபடும் போதே தெரியும்,  நீ இப்படி என்னவும் ஒரு நாள் செயப்போறாய் எண்டு....,    "

                                   எண்டு சொல்லி அவனை அடிக்கப் போக,ஜேசுதாசன் அவளைக் அன்றே கூட்டிக்கொண்டு மன்னார் மடு மாதா கோவிலுக்கு கிட்டத்தில இருந்த ஒரு இடத்துக்கு கூ ட்டிக்கொண்டு போனானாம்...ஜோசப்பின் அக்கா மாஸ்டருக்கு தெரியாமல் மன்னார் போய்த் தேடிய போதும் அவனைக் காண முடியவில்லை எண்டும் சொன்னார்கள்.....அவளவுதான் அதுக்கு பிறகு ஒரு தகவலும் இல்லை..

                              வீட்டில இந்த அவலம் நடந்த கொஞ்ச நாளில் ,மேரி படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு ,கண்டியில் உள்ள சிஸ்டர்மாரின் செமினரிக்கு கன்னிகாஸ்திரியாகப்  போயிட்டாளாம்........... 

.