Monday 20 April 2015

புதிய சவால்களுக்கு ....

பெரிதாக வளர்த்து
நடக்குமென்று
காத்திருந்து
எல்லாவிதமாயும்
கடந்து போன 
காத்திருப்பு .....
தாங்க முடியாத
வெறுப்பை
முகத்தில்
முறித்துக் கொண்டு
நிலைமையை ஆழமாக்கி
ஆபத்தில் முடிந்த
அவமானம்....
புறக்கணிக்கப்பட்ட
பொழுதுகளில்
சிரித்து சமாளித்து
சுக்கலாக உடைந்து
விரும்பாமலே
மலிவான வழிகளில்
விட்டுக்கொடுத்த
சுய கவுரவம்....
தீவிரமாக
ஈடுபடுத்திக்கொள்ள
நாலு இடம் அலைந்து
நாலு
விதமாக நாரியை
முறித்தவர்களுக்குத் தான்
தெரியும்
அருகில் இருப்பவர்கள்
நெருக்கடிகள்
இல்லாமல்
அன்பாகச் சொல்லும்
வார்த்தை
ஒதுக்கி வைக்கப்பட்ட
எல்லாதையும் மறக்கடித்து
பழைய
இதயத்தை
புதிய சவால்களுக்கு
தயாராக்கிக் கொடுப்பதை.
19.04.15