Friday 29 December 2017

முகத்தை மூடிக்கொள்கிற வானவில் !

மிகச்சில கோடுகளிலும் ,அதிகம் கவர்ச்சியற்ற நிறங்களிலும் ஒரு ஓவியன் ஆழ்  மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணஓவியத்தை வரையலாம். .இதைப்போல் எளிய மொழியில் காற்றாய்க் கண்ணுக்குப் புலப்படாத மனங்களை  சாதாரணமான சம்பவங்கள் போலவே  என்பது போல எழுதிச் செல்வது எளிய காரியமல்ல.  

                                                        புரியமுடியாத அபத்த மொழியில் ஆழமாக உள்ளிறங்காத  எதுவுமே நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் படைப்பாக முடியாது. அதே நேரம்   எளிமையான கவிதைமொழி  பலசமயங்களில் உயர்ந்த இலக்கியமல்ல  என்கிற தோற்றப்பிழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும் . ஆனாலும் அவர் அவர் மனமுதிர்ச்சிக்கு ஏற்றவாறுதானே எழுதமுடியும். .  


                                                                             கனவுகளில்  இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து கவிதைகள்  எழுதுபவர்கள் . வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை  எப்போதும் உரத்தே சொல்கிறார்கள். மோசமான  இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்படத் தெரிந்துகொள்ள வாசிப்பு அனுபவம் மிகவும் முக்கியம் . இவைகளும் அங்கங்கே சிதறிக்கிடந்த கவிதை போன்ற பதிவுகள் சேர்த்துப்போடுகிறேன். 

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

என் 
இழிநிலை மனதின் 
அடங்க மறுத்துத் திமிரும் 
ஓயாத பெருங்கூச்சலுக்கு 
ஒருநாளுமே 
என்
மனசாட்சியை
ஒப்புக்கொடுத்ததில்லை !
அதில்
அப்பாவிகளான நீங்கள் ,
தேர்ந்தெடுத்த
வெறிக்கூத்தாடல்களைத்
திட்டமிட்டு மறைக்கும்
தந்திரமான
நான்,
ரத்தக் கறைபடிந்த
கைகளுடன் அவர்கள் ,
கொஞ்சம்
முகமூடித்தனத்துடன் இவர்கள்,
எல்லாவற்றையும்
சகித்துப் பொறுத்துக்கொள்ளும் எல்லாரும்!

.
.........................................................................
.
நீளும் பட்டியலில்
விபரங்கள் மேலெழுந்துகொள்கிற
வெளிப்படையில்
உண்மை என்பது அத்தனை
முக்கியமானதா என்ன?
சிலநேரம்
ஆம் !
பலநேரம்
இல்லை !
இந்த எடுகோள் இரண்டில்
எந்த பதிலை தேர்ந்தெடுத்தாலும்
அதில்
இந்தக் கவிதை
தோற்றுப்போவது
கொஞ்சம் வினோதம்தான்.!

.
......................................................................
.
பழக்கதோஷப் பாவனையில்
கண்களைச் சிமிட்டி
மின்மினிகளுக்கு அழைப்புவிடும் 
தெருவிளக்குகள் !
காத்திருப்புக்காகவென்றே 
அலைக்கழித்தும்
மீட்டுக் கொண்டிருத்தலை
வெறுப்படையவைக்காத
பயணம் !

.
......................................................................
.
முழுகாமலிருக்கும்
பெரிய இச்சைகளையடைக்கி
உறைபணியை
உருட்டித் திரட்டி இறக்கிவிடும்
ஆலங்கட்டிமழை !
இரவெல்லாம்
பின் உளைச்சலாகவிருந்த
ராத்திரியை
ஆவேசமெடுத்துக்கொண்டு
துரத்தும் உத்தேசங்களுடன்
முன் வெளிச்சங்கள்! 

.
..............................................................................
.
தனித்துவக் குரலில்
உள்ளுக்குள் ஆழ்ந்துவிடுவது போன்ற
வசந்தப் பறவைகளின்
விடியல்ப் பாடல்கள் !
உணர்ச்சிகளை வெளிக்காட்டி
வாழ்க்கையை அலசுவதை
தவிர்க்க நினைத்து
தோற்றுக்கொண்டிக்கும்
ஒவ்வொரு
அதிகாலையிலும்
மீண்டும் மீண்டும்
இந்தக் காட்சியை
பார்த்துக் கொண்டிருக்கிறேன். !
ஹ்ம்ம் !
இன்னும் சலிக்கவில்லை.!

.
...........................................................................
.
மிகச் சிறந்த 
பல்லின நிறங்களையே 
ஆத்மாவைக் கிண்டியெடுத்துத் 
தேர்வுசெய்கிறேன் !
தலைக்கறுப்புநிறத்தவனும் 
வெள்ளைவெளீர்த் தேவதையும்
நடைபாதையில்
நின்று நிதானமாக மூச்சுவிட்டு
முத்தமிட்டுக்கொள்கிறார்கள் !
கேட்க மனமிருக்கும்
எல்லாருக்குமாகவே
மரங்களின் கிளைகளோடு
மெல்லெனவே அலைகிறேன் !

.
................................................................................
.
மிகச் சரியான
சுரக்கோவை அளவுகளில்
வயலின் வாசிப்பவனின்
விரல்கள் நகருகின்றன !
உன்
கண்களோடு காண்பதெல்லாம்
உனக்கு மட்டுமில்லை
எனக்குள்ளேயே
இறங்கித் தேடியெடுத்துவிடு !
ஏழு வர்ணங்களில்
துப்பட்டாவை விரித்து
மேக மெகந்திக் கைகளால்
முகத்தை மூடிக்கொள்கிறது
வானவில் !

.
.................................................................................
.
நீயென்
இதழ்களைப் பார்க்கிறாய்
நானுன்
விருப்பங்களாகியேவிடுகிறேன் !
இலைகளை வீழ்த்துவது பற்றி
மொழி பேசி கொஞ்சமும்
விழிசிந்திக் கவலைப்படாத
மேப்பிள் மரங்கள் !
என்
அவசரங்களைப் பற்றிக்கொண்டு
அர்த்தங்களில் ஊறி
இப்படித்தான்
விவரணங்கள் தருகிறது
இயற்கை !

.
..............................................................................
.
நட்பின்பிரகாரம் 
அழைப்புக்கொடுத்தனுப்பிய 
நான்குநாட்களின் பின் 
ஒரு 
அருவருப்பான பிசாசு 
ஓவியம் வரைவதைப் பார்க்கக்
சென்றேன் !
அந்தப் பிசாசின்
வரலாற்றில்
மேலோட்டமான பொய்கள்,
மெய்யியலில்
தத்துவமில்லா சமாளிப்புகள்,
நிக்கமுடியாமல்
பக்கம் தேடிச் சாயும்
வெற்றுக்கொள்கைகள்,
இதெல்லாம் வெறுக்க வைத்தாலும்
அந்தப் பிசாசு
மனதுக்குள் சிலாகிக்கவைக்கும்
என் சிநேகிதம் !
பிசாசின் ஓவியக்கூடம்
பிணவாடை வீசும் கடலோரம் ,
சுவர்களில்
பேய்கள் கபாலத்தில் கூழ்குடிக்கும்
கறுப்பு ஓவியங்கள் ,
நிலமெல்லாம்
அநாதரவான ரத்தத் திட்டுக்கள்,
ஜன்னல்களில்
அடர்காட்டின் ரகசியங்கள் !
ஒரு மூலையில்
தலையில்லாத பெண்ணொருத்தி
நடனமாடிக்கொண்டிருந்தாள் !
பீதியெடுக்கும் பதட்டத்தில்
அந்தப் பிசாசு
வரையத்தொடங்கவிருந்த ஓவியத்தின்
தலைப்பை மட்டும்
தட்செயலாகக் கேட்டுவிட்டேன்.
" வானவில் "
என்றது மென்குரலில் பிசாசு!

.
............................................................................
.
எது 
உண்மைகளை ஒத்துக்கொள்ளும் 
அசல் வரிகள் 
எது 
சோடிக்கப்பட்ட 
நகல்ப் பிரதியெடுப்புக்கள்
ஒழுங்கின்றிக் கிடக்கும்
இருவேறு மூலைகளில்
அசாதாரணமான தொகுப்பாக
நிட்கிறது
பெயர்களை ஒளித்துவைத்திருக்கும்
கையொப்பங்கள் !

.
.......................................................................
.
கண்களைக் குருடாக்கிவிடும்
பிரகாசத்தோடு
வெளிப்படுத்தப்பட்ட வர்ணங்கள்
எதையுமே மறைக்கவில்லை !
இறுதிக்கு முன்னதாக
இரக்கமற்ற எளிமையோடு
திடுக்கிடும்படியாக
மூன்று வாக்கியங்கள்
நிஜத்தை வெளிப்படுத்திவிட்டது 

.
.............................................................................
.
என்
பாதிதான் முடிக்கப்பட்டிருக்கும்
நடைப்பயணங்களில்
பாதங்களில் ஒட்டியிருக்கும்
மணல் துகள்கள்
அனுபவத்தை
வானம் முழுவதும் நிரப்பிவிடும் !

.
..........................................................................
.
நீ
மரணத்தவிப்போடு
பழக்கமான
இடைச்செருகல்களைத்
திருத்தவேமுடியாது
இப்படியேதான் எழுதுவாய் !
என்
வயதாகிய துயரமும்
ரகசியமான ஆசைகளும்
சந்தோஷக்கொண்டாட்டங்களுக்கு
விட்டுக்கொடுப்பதில்
முன்னேறிவிடுகின்றன !

.
..................................................................................
.
பூனைபோலவே 
வெய்யில் பதுங்கிக்கொண்டிருக்கும் 
விவர்மர நிழலில் 
அகன்ற தெருமுனை !
வளைத்துப்பிடித்துள்ள 
வீதியோரப் பூக்கடையில்
டூலிப்பையும்
ஆர்கேன்ஸாவையும் தவிர
மற்றதெல்லாமே
பெயர் தெரியாத மலர்கள் !

முண்டுகொடுத்தபடி
அந்த கடை உரிமையாளன்
சிக்கரெட் பத்துகிறான் !

நான்
பிராங் காப்காவின்
" மேடமோர்போஸிஸ் " நாவலின்
நாட்பதியோராவாது பக்கத்திலிருந்து
நிமிர்ந்து பார்க்கிறேன் !
வண்ணங்களில்
மனதின் ஆதாரமான இருப்பு !

ஒரு
வயதான பணக்காரி
பத்துத் கன்றுகள் தெரிவுசெய்கிறாள் !
சுருக்கம் விழுந்தவளின்
வெறுமைக் கண்களை
நிறங்கள் விரித்துவிடுகின்றன!
அவளின்
வெளிறிய முகத்தில்
வீட்டின் வெற்றிடங்கள்பற்றிய
விபரங்கள் எழுதப்பட்டிருக்க
மழை லேசாகத்தூற ஆரம்பிக்கிறது !

மலர்கள்
போட்டிபோட்டு
சிரித்து விரியத்தொடங்குகின்றன !
பூக்கடைவைத்திருப்பவனின்
முகம்
வாடத்தொடங்குகிறது !

.
......................................................................................
.
மத்தியானக் குட்டித் தூக்கம்
இதழ்களைப் பிடுங்குவது போல 
இறுக்கமான முத்தம்
அவள் 
கன்னங்கள் 
நம்பூதிரிப் பெண்களை போல 
சிவந்தே விட்டது
யுவால் ஏறிய மூச்சுக்காற்றே
இரண்டு உதடுகளை 

உரசிக்கொண்டு
செருகித்தான் வெளியேறியது
இரவு
தாழமுக்கம் உருவாக்கிய
அகோரப் புயல்
அலையெழுப்பில் 

கடலைக் கடந்து
கரைகளையும் துவசம் செய்யலாம்!

.
.....................................................................................
.
காதல் 
ஓங்கி அறைந்த 
ரெண்டுவிதமான 
கசப்பான அனுபவம், 

சிலந்திவலைப் பிடிமானத்தில் 
தொங்கிக்கொண்டிருந்த
அவநம்பிக்கையைப்
பன்மடங்கு அதிகமாக்கிய
ஒரேயொரு துரோகம்,


முன்மாதிரிகளில்லாத்
தனித்துவமான ஆளுமையைப்
பிரகடனம் செய்யமுடியாத
உரைரையாடல்கள்,


சொல்லவிரும்பாமல்
அர்த்தமில்லா ஆண்டுகளில்
நிழலில்க் கரைந்துபோகிற
ஆத்துமாவுக்குச் சொந்தமில்லாத 

வயது,

நினைவுகளை அரிக்கவிடாமல்
கனவுகளைப் 

பத்திரப்படுத்திவைத்திருக்கும்
ஒரேயொரு காதல்கடிதம்,

நான்குமுறை
வைத்தக்குறி தவறியதில்
மயிரிழையில் உயிர்தப்பியது,


மன்னிப்பை ஒத்திவைத்ததால்
மரணம்வரையில்
விடாமல்த் துரத்திக்கொண்டிருக்கும்
குற்றவுணர்ச்சி,


பிரத்யேக மனஉளைச்சலின்
கடைசி விருப்பம்போல
மயானவாசலில் கிடக்கும்
சில கவிதைகள் !


இவைதவிர 

தனிமை
தனித்துவாமாகிவிடும்
சுயசரிதை என்னிடமில்லை !

.
........................................................................
.
ஜனனப் பிரசவிப்பு
அடிவயிற்றின் பிடிகொடுக்காத வலி 
விகாரமகாதேவி 
அதன் கிளைகளை பற்றிப்பிடித்தாள் 
ஒரு 

சித்திரா பவுர்ணமியில் 
மஞ்சள் ஒளி சருகுகளை உயிர்ப்பிக்க
அதன் 

சிம்மேந்திர நிழலில்
போதியான 

மனித சுயசரிதையில்
அளவுக்கதிகமான கவனிப்பை 

அள்ளிக்கொண்டது
அந்த அரசமரம்.!

.
............................................................
.
பழக்கமான அந்தப் 
பரதேசிப் பிசாசின் 
தந்திரமான சமையலை 
மண்டியிட்டபடியிருந்து சுவைக்கும்படியான 
சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது! 
அச்சுறுத்தும்படியான மேசையில்
பழுதுபட்ட பித்தளைப்பாத்திரம்
அதனுள்ளே எதுவுமேயில்லை !
பிசாசு
ஏற்கனவே சொன்னபடி
அடுப்புப் பத்தவைக்குமுன்
என்
கண்களைக் கட்டிவிட்டது !
பிசாசின் பேய்த்தனங்கள்
எனக்கெப்பவுமே அத்துப்படியானவைதானே !
பிறகு
கொஞ்சம் தூரத்தில்
ஒரு அலுமினியப் பானை
துலாவப்படும் மெல்லிய ஓசை ,
அதன் பிறகு
ஒரு மண்குடம் அடிவரை துலாவப்பட்டது,
அதன் பிறகும்
ஒரு வெள்ளிப்பானை வழிக்கப்பட்டது !
நான்
ஓசைகளோடு உன்னிப்பாகவிருந்தேன் !
பிசாசு
ஆணவத்தோட அடையாளமாகி
உட்சாகக் குரலெடுத்து
பித்தளைப்பாத்திரத்தை
நொண்டிக்கையால் கிண்டியெடுத்த
திரிசூலக் கரண்டியை
உள்ளங்கையில் வைத்தது!
சும்மா சொல்லக்கூடாது
அறுசுவை நளபாகம் தான்!
அதன் பின்
எப்போதும் பிசாசின் முதுகுசொறியும்
முப்பது பேர் வந்து சுவைத்து
தேசிய அளவில்
பிசாசுக்கு முதலிடம் பிரகடனப்படுத்தினார்கள் !
பிசாசு
உலகளாவிய அளவிலும்
சமைக்கப் போகும்
ஒப்புகையில் மங்கிப்போன நாளுக்கும்
என்னை வரச்சொல்லியிருக்கு !
அன்றைக்கு
என்
கண்களைக் கட்டுவது மட்டுமில்லை
என்
காதுகளை அடைப்பதையும்
பிசாசு மறவாதிருக்கட்டும் !

.
.................................................................................
.
கைவிரல்களில் 
பிசைந்துகசிந்து ஒட்டிக்கொண்ட
பாலப்பழ வாசனைகள் 
ஏதோவொரு கதையைச் சொல்ல 
பாசாங்குகளற்று 
நன்றாகவே நினைவிருக்கு ! 

மெதுவாகவே 
நெருங்கிக்கொண்டிருக்கும் 
ஒவ்வொரு
புளித்துப் புரைத்தட்டிக் 
கிழித்துப்போட்ட நினைவுகளிலும் 
கொட்டி இறுக்கி
அணைத்துக்கொள்ளவேணும்
இனிமையான விசியங்களேயில்லை !

.
.............................................................................
.
அவனுக்குத்தான்
வெட்டையில் நின்ற
காட்டு மரங்களைப்பற்றி,
ஏத்துப்போடும்
வேட்டைக்காரர்களின்
இடியன் கட்டுதுத்துவக்குப் பற்றி,
ஆமணக்கு
இலைகளின் மேல்விழும்
வெளிச்சம் பற்றி ,
அதர் போட்டு அசையும்
அலியன் யானையைப் பற்றி,
கண்வளயத்தை நேரடியாகக்
கருக்கும்
வெய்யிலைப்பற்றி ,
துரமாய்ச் செல்லச் செல்ல
எதட்காக கிரவல்மண் பாதைகள்
சுருக்கிக்கொண்டுபோவதுபற்றி ,
எப்போதாவது
பொறுமையிழக்கும்
குளத்து முதலைகள்பற்றி ,
சிலநேரங்களில்
தலை அசையாமல்
சிலநேரங்களில்
ஓங்கியடித்துக் கொல்லப்போவதுபோலவும்
பார்த்துக்கொண்டிருந்தான்!
சலிப்பாகவும்
அபத்தமாகவுமிருக்குமென்று
வேறு
வழியில்லாமல்
அடுப்புத்¨தீயைக் கிளறி
தண்ணி ஊற்றியது போலவே
ஒன்பது வருடங்கள் முன்னர்
சரித்து விழுதப்பட்ட
முக்கிய சம்பவங்களைத் தொடவேயில்லை!

.
.............................................................................................
.
பிரஞ்சைக்குள்
பெயர்ந்து வந்த ஞாபக அடுக்குகளில்
உள் நுழைந்துவிடும் 

ஒரு
மெல்லிய ஒளிக்கற்றை
மெல்ல
ஊடுருவியதுபோலவே
பாதிமயக்கத்தில்
நாங்கள்
இலக்கற்ற மாயைகளில்
திளைத்துக்கொண்டிருந்தபோதே
முற்றிலுமாக சரணடைந்துவிட்டது
விஷங்களும்
வேஷங்களும்
விஷமத்தனங்களும் நிறைந்த
புராதனமான புழுதி !

.
...........................................................................
.
.வெறுமனையே 
காலாற நடக்காதே 
என்னோடு 
ஆத்மார்த்தமாய்ப் 
பத்தும்பலதையும் பேசிக்கொண்டிரு !
தூக்கிலிடப்பட்டவனின்
சங்கு சளிந்த கழுத்துப்போல
பாதைகள்
வளைந்துகொண்டே செல்கின்றன !
உன்னுடைய
மிகப்பெரிய கனவு பற்றிய
முயட்சியைச் சோதிக்க
நடுகற்களை
முடிவில்தான் வைத்திருக்கிறேன் !

.
................................................................................
.
விஸ்தீரணமான
கருவூலமாக முஸ்தீப்புக்கள்
பழக்கப்பட்டுப்போயிருந்த
அந்தக் காலத்தில்
ஒரு 
கோடை நாளில்
இரவுகளில் நடமாடியதால்
வெளிச்சத்திட்க்குப்
பழக்கப்படாமலிருந்த கண்களில்
கொலைவெறி !
கங்குவேலிகளுக்கு மேலாக
மிடுக்கான முகத்துடன்
நடுவில்
தயார் நிலைப்படுத்தப்பட்ட
தானியங்கிச் சுடுகலன்களோடு
அவர்கள்
மூர்க்கமாக வந்தார்கள் !
யார் அவர்கள் ?
பருவமழைக்கு முன்னதாக
மண்டியிட்டுருந்த
செம்பாட்டு மண்புழுதி
காற்றில் மிதந்துகொண்டிருந்தது !
பிறகு
கந்தகம் கக்கி வாந்தியெடுக்கும்
இலக்குகளற்ற
மரண வெடியோசைகள் !
கண்டுபிடிக்கும் சாதியங்களுள்ள
காலத் தடயங்களும்
தப்பிஓடிவிட்டது !
சுவாரசியமான வியப்போடு
வரிசையாக நின்ற முத்திரைமரங்கள்
அவர்கள் ஓடிப்போன
காஞ்சோண்டிகள்
தலையைக்கவிழ்க்கும்
காட்டுப்புதர்ப் பாதையை
வெறித்தபடியேதான் இருக்கின்றன !
சரி
யார் அவர்கள் .
,
...................................................................................
.
வியர்வை முகத்தைச்
சுளித்துக்கொள்ளவிடாமல்
அசிங்கமாக வெறிபிடித்த
வெய்யிலோடு
அலைமுழுங்கும்
கடல் வரையிலும்
அலைந்துகொண்டிருக்கிறேன் !
மருகி மரியாதையோடு
குறுக்கு வழிகளில்
என்னை
பெருமைப்படுத்துவதெல்லம்
கருணையுள்ள காலம்
பார்த்துக்கொண்டிருக்கும்
உன் காலடிகளைச்
பொக்கிஷமாகச் சேர்த்துக்கொள் !
.
...............................................................................
.!
சந்துபொந்துகளில்
கிடைத்துக்கொண்டிருக்கும்
மலிவான வாசனைகளை
வாசித்துக்கொண்டே நிட்கிறேன் !
என்
கவுரங்களை விட்டுக்கொடுத்து
நீண்டும் குறுகியும் வளைந்தும்
இப்படித்தான்
அனுபவங்கள் தருகிறது
பயணம் !
.
............................................................................
.
முன்னெப்போதுமில்லாதவாறு
உனக்கேயான
ஒவ்வொரு நொடிகளையும்
நினைவாக்கிவிடு !
வயதான தம்பதிகள் 
மர வாங்கில் நெருக்கமாகி
கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள் !
வாழ்ந்துகொண்டிருப்பதே
ஒருவிதமான
ஆதிக்கும் அந்தத்துக்குமிடையிலான
அட்புதமான குறுக்கீடு !
பள்ளிக்குழந்தைகள்
ஓவென்று கத்திச் சிரித்தபடி
பாதையைக் கடக்கிறார்கள் !
.
..........................................................................
.
என்னை
முடிவில் திட்டுவதை நிறுத்து
நான்
கருவில் உருவான
பிறப்பின் ஆரம்பத்திலிருந்தே
உன்னோடு பயணிக்கிறேன் !
ராத்திரியின்
அளவுக்கதிமான ஸம்போகத்தில்
மேலாடைகள் கலைந்த
நகர வீதிகளின் நிசப்தம் !
உன்
இறுதிக்கணப் பாடலை
இப்போதே எழுதி எடுத்துக்கொண்டு
வீரனைப்போலவே காத்திரு !
.
........................................................................
.
காற்றின் திசைகளை
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தேவாலய மணிகள்
விட்டு விட்டு அடித்துக்கொள்கிறது !
என்
ஆத்மாவின் தேடலைப் புரிந்துகொண்ட
ஆழ்மனதின் கெஞ்சலுக்கு
இப்படித்தான்
கடைநிலை விளக்கம் தருகிறது
மரணம் !
.
முடிந்தவரையில்
உன்
சின்னச் சிரிப்புக்குள்
ஓராயிரம்
உணர்ச்சிகளை மறைத்துவிடு !
பார்வைக்கு எட்டியவரையில்
வசந்தகால மரங்கள்
பூக்கத்தொடங்குகின்றன !
.
........................................................
.
அதிகமதிமாய்த்
துயரங்களோடு
அங்கலாய்த்துக்கொண்டே
அலைக்கழியாதே
நன்றாகவே நடந்தால்
கொண்டாடிவிடு !
முன்கோடைப் பறவைகள்
கீழ் வானத்தை
சின்னச் சிறகில் மிதந்து
இன்னுமின்னும் விரித்துக்கொண்டிருக்கின்றன !
.
.....................................................................
.
தோல்விகளைத்
தூசிதட்டிக்கொண்டிருக்காதே
நாளைக்கான
அனுபவமாக்கிவிடு !
பார்வையற்றவொருவன்
மிகத் தெளிவாக
வழி தேடியெடுத்துக்கொள்கிறான் !
.
..............................................................
.
முன்னிருக்கும்
சவால்கள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் எதிர்க்கொள்ளு !
சின்னவனுக்கு
சைக்கிள் பழக்கும் அப்பா
முதன் முதலாகக்
கைகளை விடுவித்துக்கொள்கிறார் !
.
.....................................................................
.
அழகு 
மிகச்சில கோடுகளிலும்
 அவலம் 
 கவர்ச்சியற்ற நிறங்களிலும் 
 உரத்தே சொல்கிற
ஆழ் மனங்களை உயிர்ப்பிக்கும் 
வண்ணஓவியமொன்றின்  

தோற்றப்பிழற்சி !
என்
அர்த்தத்தேடல்களைப் புரிந்துகொண்டு
ஆழ்மனதின் குரலுக்கு
இப்படித்தான்
உரைநடை விளக்கம் தருகிறது
வாழ்க்கை !
.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Tuesday 26 December 2017

A Fresh new dimness !

இது என் முதலே முதலான ஆங்கிலக்கவிதைகள் போன்ற பதிவுகள். எப்போதும் போல கவிதை என்று  நான் சொல்ல விரும்புவதில்லை. நீங்கதான் சொல்லவேணும் !  டூமாங்கோலி உடைஞ்சவாயன் போல என் தாய்மொழி தமிழில் எழுதிக்(கொன்று)கொண்டிருந்தாலும் ஆங்கிலமொழியில் கவிதை எழுத எப்பவுமே நிறையவே விருப்பம் ,

                                                      " ஏன்பா உனக்கு முருங்கை மரமெல்லாம் ஏறி வேதாளம் பிடிக்கிற    இந்த விபரீத விக்கிரமாதித்த   முயட்சி, சரி எதுவாயிருந்தாலும் எங்க பிழை பிடிக்கலாம் என்று  சும்மா மேஞ்சு பார்க்கிறோம்     நீ என்ன எழுதிக் கிழிக்கிறாய் என்று நாங்க பாக்குறோம் ,மவனே அப்பறம் இருக்கு உனக்கு கச்சேரி " 

                                                       என்ற முன்னெச்சரிக்கை வாக்கியம் கொடுக்கும்  ஒருவித தயக்கம் சேர்ந்த பயத்தில் எழுதுவதில்லை.

                                                               இங்கிலீசு என் தாய்திருநாட்டில் இருந்த காலமெல்லாம்  ஆன்டிபார் பூச்சி மருந்துபோல கசப்பு. நிறைய ஆர்வத்தோடு " இங்கிலீஸ் டு டமில் "  என்ற  டிக்சனரி என்ற சொல்லகராதி வைச்சு மைபோட்டுப் படிச்சுதான் அதை உள்ளே ஏற்ற முடிந்தது. ஆனாலும்   அது தமிழ் போல செரிமானம் ஆகவில்லை.கெரில்லாத் தாக்குதல் . முறியடிப்பு, சுற்றிவளைப்பு, நேரடித்தாக்குதல் என்ற சண்டைகளின் பின்    ஒரு  கட்டத்தில் கொஞ்சம் போல கட்டுப்பாடுக்குள் வருவது போலிருந்தது. 

                                                புலம்பெயர்ந்தபின் அதன் பாவனை அன்றாடமாகி, பின் ஆங்கிலப் பாடல்கள் நாளெல்லாம் கேட்டுக்கொண்டு என்  வெள்ளை  மனைவியுடன்  வாழவேண்டிய ஒரு வாழ்வாதார நிலைமை இருந்ததால் ,ஆங்கிலப் பாடல்கள் ஒரு நாளைப்பொழுது   காது நிறையுமளவு கேட்பது. 

                                                        அந்தப் பாடல்களில்  ஆங்கில மொழி எப்படி சரியான இடத்தில மிகக் கச்சிதமான உணர்வு கொடுக்கும்படி ஏறி உக்காந்து கொள்ளும் இடங்களையும், அந்த வரிகளையும் கவனித்த போது அதுவரை தண்ணி காட்டிய  இங்கிலீஸ்சு English என்று தெளிவாகத் திசைகாட்டியது .
                                                           ஒருகாலத்தில்  ஆங்கிலக்கவிதைகள் படித்த அனுபவத்தில் என்னால் சொல்லகூடிய ஒரு முக்கிய விஷயம் ஆங்கிலமொழி அதில் கிரியேட்டிவ் சென்சிபிலிடி உள்ள சொற்கள் உண்மையான உணர்வோடு கவிதைமொழியாகும் போது ஒருவித விண்மீன்களின் தூரத்திலிருந்து இறங்கி வந்து வீட்டு  மீன்தொட்டிக்குள் புகுந்துவிடும் மென்மைத்தன்மை உள்ளவை.
                                                          ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது ஒன்றும் பதினெட்டுச் சித்தரின் மூடுமந்திரச் சொடுக்கு வித்தை இல்லை. தமிழில் ஜோசிப்பதை ஆங்கில மொழியில் எழுதுவது, அவளவுதான் .ஆனால் ஒரு சிக்கல் இருக்கு. ஆங்கிலத்தில் தமிழைவிட இதயம்வரை இறங்கி ஆணி அறையும் படியான டச்சிங் கொடுக்கும் சொற்கள் இருக்கு என்று எப்போதும் நன்புவன் . அவற்றை சரியான இடத்தில போட்டு எழுதினால் அழகாக வரும் கவிதை .
                                                           " இதெலாம் நம்புற மாதிரியா இருக்கு ? " அப்படி இப்படி என்று கிழிச்சு தொங்கவிட்டுராதிங்க, எப்படியோ உங்களுக்குப், பிடித்திருந்தால் மனசாட்சியோட பேசி முடிவெடுத்து துணிந்து உங்க கருத்தைச் சொல்லுங்க, குட்கா சாப்பிட்ட முக்கேஷ் மாதிரி மட்டும் ஆயிடாதிங்க ! வாக்கிய அமைப்பில் இலக்கணப்பிழை, சொற்பிறப்பியல் பிழை, பொருட்பிழை இருந்தாலோ சொல்லுங்க. எதுவாக இருந்தாலும் நான் தாங்கிக்கொள்வேன் !
.

I'm still a child, 
around 48 years old. 
the year 
Apaloo landed on Moon 
with first lunar foot print 
i was born in an island !
And how really science enjoyed !
in my old town
under the palm tatted roof house
my mom may be
thrilled or amused !
Well ,,,

then you'll know just what to do !
.
....................................................................
.
The old coconut hut house
in a gorgeous grassland
a perfect find
And 

if i refused to grow there
simply can't make up my mind !
every time
i do think about that
it was promise pure freedom
Such a sweet memory
for the good old days
which failed to dreams in time !
though...
in a foreign unknown darkness
still stood firm !

.
..........................................................................
.

Along with 

a lonely night sky
feeling have to go there 

to meet my old home !
They may be treat me like beggar,
They' may be sweet and nice ,
i do not know
perhaps
there i would be a total stranger
someones

 love may take me in !
.
.......................................................................
.

Then 
the life was so calm 
Never become boring.
and full of affection.
friends too......
Remembering those days
in 80ies on war...

pretending 
on studying...
school days
evening playground,
even smelling jasmin perfume,
palmyra toddy
and cheap cigarettes..

sometimes Beedies..
tropical wet breeze
all good looking girls
simply
Feel I'm lost somewhare
Something's passing on telling me
I must wake up !!!!!!!!!!!!!

.
................................................................................
.

And the senset lights
crossing the lagoon bridge,

Rivarisha, 
the hevy guns firing 
and 
shelling shaking the wind,
1995 
December,
The day I left
she standing on alone !
Tried to forget
but still hunting.
showing her one pleasant side
They brought me back
to see my way with youth
Talk about the life in oldtown
Speak about the people
I had lived along
writing from digging
And the lights all flashing !

.
................................................................................
.

one place I have seen
will remember forever
more than the present.
All of wild nature sound
and free from stress
This is where I belong to be !

.
.......................................................................
.

Its only me 
always wonder about 
How beautiful her future can be
now all ruff and tumble 
I must be dreaming. Or she ?
today
my name is still nothing
its humbly ok for me 
even its dosent means anything 
In a very bad way
her name is B,,,
It honestly hurts ..

I feel offended.
Probably 

the line ever invented by men !
.
...........................................................
.

I hear a Soothing lullaby
the hues of the sky
during the early morning.
Twilight,,,,,,,,,,,!
don't know the meaning of that
must have taken so much pain in translating
know when to take celestial heights..
and when to sound sweet..
there is sensuality
never makes mistakes
resemblance to purely coincidental !
.
.........................................................................
.
I hear that Soothing tune again
Golden sunset time
I think of my birth
The colour in the sky,
who spill the paint on it?
Happiness in the thoughts of youth
Who add the comfortness in breeze?
Feels tasty
but expression of a lonely village ? .
The scent from a beach, ?
The feeling within this old lass,
is that the Marimbaa rythem beat?
Desires of the rotten Heart;
sound of a mocking bird ?
gost talks
Welcomes of the getting dark !
A Fresh new dimness
It grows, It Sings, its flys, its hides,
its dies too.......
.
........................................................................
.
sun rise,
water ripples,
awesome stillness,
invading morning energy
and they are welcomed, 
but they are only bi-products.
somewhere in household,
emptiness with every hours.
.
............................................................
.
The real benefit of
transcendental and spiritual.
certainly wake up
and bless on hearing
Mahishasura Mandiraa.!
the eternal protection of
devine nature !
If anything,
I would have preferred the chanting
proper pronouncing,
that's why peace of mind
wonderfull updates !
and
complete meditation.
with
ignorance since times immemorial travelling
through birth after birth.
eventhough
cannot fully appreciate that
standing before us is
how to
Easily Understand irrelevant soul?
.
.................................................................
.
Friendship would be so amazing 
with that rotten background. 
Then again it's still amazing 
because she like to talk ,

i like to hear,
when she fill silence
i search hissing sounds,
when her given heart demand
i simply withdraw to corners,
when she blame for nothing
i satisfy with something,
so to speaks honestly
the same procedure !

.
..............................................................
.
Every moments passing
without any distractions.
the entire World,
thus the compliments
built up a symbol of Universe!
to me 

What a divine pace
facilitate the journey
and 

make it filled with bliss..
learned form the past !

.
...........................................................................
.
If you want someone to miss you,
go secretly 

and spray your fragrance
somewhere plenty !

.
.........................................................................
.
Walking through same road and turns
makes me believe perfection exists !
my life is, 

my mistakes,
no one can compare to
This has absolutely to do with
my own 'over shadow'.!

.
......................................................
.
Pleasant red evening
waiting for the homeward bus
pulling with old tricks
careless smoky cold wind
try to whisper a bitter story 
all over dreams lost sky !

.
...............................................................
.
Suddenly
from nowhere
she came and stayed with !
general in shape,
well behave manners,
down to earth dressing,
and pursue careers,
she was white, said Hi, and smiled,
I know
significantly contributing
such a lengthy response
this will not be the end !

.
.....................................................................
.
My color is black, 

and unwelcomed
then
she deep dived into smartphone !
her fingers were just dancing
eyes flowing in splits
bustling entitled her time
for connecting with world forever..... !

.
..........................................................................
.
Anyone can see like this
it its not hard to accept
to creates a self-image,
believe to be consistent with influences. !
I'm sure

 i do neither anticipated 
nor desired such a silence !
however,
my feet getting bored
In distance, 

the green bus !
.
..........................................................................
.
When I was a kid
wanted to be like any other action hero,
I must be dreaming
what i get is enough struggle !
when she were in her teen 
one day told to me
verbalizing promises
a stunning princess !
when kindness touches
Make someone's day beautiful
what this world actually wanted
from her
other than an ordernery woman ?
was most non accurate,
being not so clever,
but cunning, and ruthless.
i failed................!
she did her best
whatever it takes
to becomes a real lady
untill the day she got married,
then she too failed.............!

.
......................................................................
.
Its still all good
closer to now than it is
time is an illusion
though, 

My poor dear
getting older and older 
as ever second passes through
i am aging like old Neem tree
what kind of a challenge is this?
have been diagnosed
with aged depressed sickness
how was i young
running like mad dog
in adults
roaming like hidden figure
associate with unlucky magic
opposed to philosophy !

.
.................................................................
.
Who weren't even listen
rain drops,
who weren't even watch
when northern star shining,
those days
never imagine retirement
but just full of entertainment !
now , 

as the brain freaking out more
remember seeing back
for an extraordinary history !

.
.................................................................
.
Nevermind
life is a story 

calibrated for maximum effect
that is the one
always makes me laugh !!!!!!!!
there could be no better time
to come out feel young
since

 I'm younger than almost all these things !
.
..............................................................................
.
The faded moon in the skies
east on busy for dawn
the wind sing
an old sad song
leading male voice
flowing with female pleading
two extremely personalities
to combine music
and spirit was a miracle .
The guitar tone Hilarious,
sometimes
priceless background
on the lyrics
the sound jump and gurgling
for life underneath the water,
perhaps

 Its knows silence,  !
.
........................................................................
.
I'm sad and down today
Please don't stop keep on
or 

my heart will break,
When I go on my day dreams
dear, old song ,
hold your
breath till the end ,
As long as the song remember me
I'll never be too far
always will be
way to back into the start.!

.
...........................................................................
.
Dear old home,
So hold me in your heart
Till I come back to you
wherever I may roam
I will lost myself
sure for, 

every lonely night
the ,dear, 

good old road 
and 
known rainy wind
That soon guide me home !

.