Saturday 29 August 2015

Sinnap Puraa Ondru ,Guitar Cover ,,Mestro Ilayaraaja





இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை!



இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ  எல்லாம் வைத்து இசை அமைத்து  அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்!



பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வரும் அண்ணன் தங்கை பிரிவைச் சொல்லும் இந்தப் பாடலை S .B பாலசுப்பிரமணியமும் அவரின் தங்கை S .P .சைலயாவும் பாடியுளார்கள் என்பது ஒரு அழகு! இந்தப் படத்திலேயே p .ஜெயச்சந்திரன் "பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனடா " என்ற பாடல் இருக்குது! ஜென்சியும் ,ஜெயச்சந்திரனும் பாடும் "கீதா சங்கீத " என்ற கர்நாடக சங்கீத அடிப்படைப் பாடலும் இருக்கு!



.நீட்டிமுழக்கி அறுக்காமல் சுருக்கமா சொல்வது என்றால் "சின்ன புறா ஒன்று " பாடல் எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் இன்றும் என்றும் வாழ்கின்றது , அதை இசைஅமைத்த இளையராஜா ,நினவில் உலவும் நிழல் மேகம் , அவர் நூறாண்டுகள் வாழ்கவே நூறாண்டுகள் வாழ்கவே!