Sunday 17 May 2015

அடிப்படை அரசியல் சாசனம் .

நேற்று  17th of may நோர்வேயின் தேசிய தினம்!  அதிலும் நேற்று  அவர்களின் அடிப்படை அரசியல் சாசனம் எழுதி இருநூற்றி ஓராவது  நிறைவு நாள் . தலைநகரம் ஒஸ்லோவுக்கு கொஞ்சம் வெளியே உள்ள எட்ஸ்வொல் என்ற இடத்தில நோர்வே நாட்டின் அடிப்படை அரசியல் சாசனம் எழுதிய 17th of may நாளை நோர்வே மக்கள் தங்களின் சுதந்திர தினம் போல அனுசரிக்கிறார்கள். அப்படி அவர்கள் இந்த நாளை அனுஸ்டிக்க நிறைய உணர்வுநிறைந்த வரலாறு இந்த வடதுருவ நாட்டில் நடந்திருகிறது.

                                 ஐரோப்பாவில் பல நாடுகளில் "சுதந்திர தினம்" வெகு விமர்சையாக, ஆடம்பரமாககக் கொண்டாடப்பட்டாலும், இங்கே,நோர்வேயில், அதை "அடக்குமுறை விடுதலை தினம்போல" உணர்வாகக் கொண்டாடுவார்கள்  நோர்வேயியர்கள்! முக்கியமாக அவர்களின் அடிப்படை சாசணம் எழுதபட்ட நாளை பள்ளிக் குழந்தைகளின் ஊர்வலத்தின் மூலம் சின்ன வயதில் இருந்தே அந்த நாளின் இறைமையின் முக்கியத்துவத்தை வளரும் சந்ததியின் மனதில் ஏற்றிவைக்கும் ஒரே ஒரு நாடு நோர்வே.

                                தலை நகரம் ஒஸ்லோவிலும் ,நாடு முழுவதிலுமே , வயது,பால்,வேறுபாடு இல்லாமல் , பூர்விகமான இன மாண அடையாளமான அவர்களின் "புன்ணட்" என்ற கலாசார உடை அணிந்து,சிறுவர்கள் ,அணிவகுத்து "விடுதலை எங்கள் உசிர் மூச்சு " என்று வீதியெங்கும் , பூமி அதிர கோசமெழுப்பி, அரசரின் அரண்மனையை சுற்றி வருவார்கள் ! இந்தளவு உசிர் மூச்சாக விடுதலை இங்கே ஒலிப்பதுக்கு ஒரு சோகமாண வரலார்த்று காரணம் எல்லா நோர்வேயிர்களிடமும் இருக்கிறது!

                                   நோர்வேயை பல வருடம் அதன் தெற்கே இருக்கும் குட்டி அயல் நாடான டென்மார்க் காலனிபோல ஆண்டு அதன் இய்ட்கை கனியவளங்களை முடிந்த மட்டும் சுரண்டியபின்,அருகில் கிழக்கே இருக்கும் ,நோர்வே போலவே பரபளவுள்ள ஸ்வீடனிடம் கொடுக்க ,ஸ்வீடன்காரரும் மிச்ச சொச்ச கனியவளங்களை சுரண்டி அள்ளிக்கொண்டு போனது மட்டுமல்ல,இரண்டாம் உலக யுத்தத்தில் ,"நடுநிலை " வகிக்கிறோம் எண்டு பம்மாத்து விட்ட ஸ்வீடன் ,ஹிட்லரின் நாசிப் படைகள், ஸ்வீடனுக்குள்ளல்லா நோர்வேயிட்க்கு வந்து நோர்வேயை நாசம் செய்ய மறைமுகமாக சதி செய்தார்கள் !

                                        நோர்வேயை ஆக்கிரமித்த ஹிட்லரின் நாசிப் படைகள், நாட்டின் வடக்கு ,மேற்க்கு,வடமேற்க்கு நகரங்களை நெருப்பு பத்தவைத்து சாம்பல் ஆக்கி, அவர்களில் பூர்வீக வாழ்விடங்களை அடியோடு தரைமட்டம் ஆக்கி,நோர்வேயில் வசித்த ஒண்டும் அறியா அப்பாவி ஜுதர்களை ,கொத்துக் கொத்தாக கைது செய்த, போலந்துக்கு அனுப்பி ,அவர்களின் ஜூத ஒழிப்பு "ஒச்விச்" என்ற விசவாயு அறையில் தள்ளி கொத்துக் கொத்தாக எமலோகம் அனுப்பினார்கள்! நோர்வேயிடம் அப்போது பெரிய ராணுவ படை இருக்கவில்லை, அதால நோர்வே நாட்டு அரசர் பயத்தில நாட்டை " அம்போ" எண்டு விட்டுபோட்டு இங்கிலாந்து ஓட , உள்ளுரில் இருந்த மக்கள், வேட்டை துப்பாக்கி,சிறிய ஆயுதங்களால், ஹிட்லரின் நாசிப் படைகள கடைசிவரை எதிர்த்து வீரமுடன் போராடி வீரச் சாவடைந்தார்கள்!

                                   இவளவு வெளி ஆட்கள் அநியாயம் செய்தபோதும் "அடக்கம் உடையர் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்" எண்டு பொறுமைகாத்த நோர்வேயியர்களுக்கு ,ஆண்டவன் ,அறுபதுக்களில் " ஓடுமீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு " என்பதுபோல அவர்களின் ,மேட்க்குகரை" North Sea " என்ற வட அத்திலாந்திக் கடலில் , அபரிமிதமாக நிலத்தடி எரிவாயுவையும்,பெற்றோளியதையும் அள்ளிக் கொடுக்க, இண்டைக்கு நோர்வே,உலக அளவில் ஒரு பணக்கார நாடு! ஒரு வேலையும் செய்யாமலே , நூரு வருடங்களுக்கு ,காலுக்கு மேல காலைப் போடுக்கொண்டு,அதை ஆடிக்கொண்டு ஸ்திரமாக இருக்கக் கூடிய "தேசிய வரும்மானம் " இருக்கிறது இந்த நாட்டிடம் !

                          அப்படி இருந்தும், சத்தமே இல்லாமல்,அடக்கமாக , தங்களின் தேசிய வரும்மானதின் கணிசமான பகுதியை ,ஏழை ,வறிய நாடுகளின் அபிவிருத்திக்கு கொடுக்கிறார்கள் ,இதயதில ஈரம் உள்ள நோர்வேயியர்கள் ! இப்ப நீங்களே சொல்லுங்க அவர்கள் தங்களின் சுதந்திர தினத்தை "அடக்குமுறை விடுதலை தினம்போல"உணர்வாககக் கொண்டாடுவதில அர்த்தம் இருக்குதா ,இல்லையா?.

.