சின்ன வயசில் எங்களின் குளத்தடி குழப்படி குருப்பின்,கிரிகெட் விளையாடி முடிய ,புளிய மர இருட்டில் நடக்கும், பிந்திய இரவு சம்பாசனைகளில் கொஞ்சம் அறிவுபூர்வமா எப்போதும் பயந்து பயந்து விவாதிக்கும் விசியம் ," அடல்ட்ஸ் ஒன்லி " என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள் டவுனில எந்த தியடரில் ஓடுது என்பதும்,அந்தப் படம் ஏன் பார்க்க வேண்டும் என்பது போன்ற மிட் நைட் மசாலா விசியங்கள்.
இனி நான் சொல்லப்போறது அந்தப் படங்களை தியேடரில் பார்ப்பதில் உள்ள சிக்கல்கள , " யங் லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " என்ற 18 என்ற இலக்கத்தைச் சுற்றி வட்டம் போட்ட கொஞ்சம் வில்லங்கமான படம் பார்த்து பெற்ற " அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்பெருங் காடு உளரும் அசைவளி போலும் " ஜென்ம சாபல்யம், அதைப் பார்க்க நாங்கள் எடுத்த ரிஸ்க், அதோடு இணைந்த" மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது" போன்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் சம்பவங்கள்.
டவுனில இருந்த லிடோ ,வெலிங்கடன், ரீகல்,முக்கியமா இசகு பிசகு மூத்திர முடுக்கில இருந்த சாந்தி தியடரில்தான் அந்த மாதிர்ப் படங்கள் அதிகம் போடுவார்கள்,போட்டு அதன் விளம்பரத்தில் 18 என்ற இலக்கத்தைப் போட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு ,சில நேரம் " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் " எண்டு போட்டு இருப்பார்கள், அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்பும்,
அந்த இளந்தாரி வயதில, மீசை முளைத்துக்கொண்டும். தோள்ப்பட்டை விரிந்து கொண்டும்,பார்க்கிற சுமாரான பெட்டைகள் வெட்டி வெட்டி அக்சிடென்ட் பட்ட லொறி போல நடக்கும் போதும் அபிநய சுந்தரித் தேவதைகள் போலவும் ,அவர்கள் இளிக்கும் இழிப்பிலும் புன்னகை அரசிகள் போல தெரிந்து கொண்டு இருந்த போதும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதுக்கும் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இடையில் உள்ள வரன்முறை எங்களுக்கு அப்போது விளங்கவில்லை,.
குளத்தடி குழப்படிக் குருப்பின் நண்பர்களில் கொஞ்சம்,வயதுக்கு மீறி விபரம் தெரிந்த பித்துக்குளி தான் அதை கொஞ்சம் விபரமா சொன்னான்,அவன்தான் முதல் முதல் எங்களுக்கு வெள்ளைகாரிகளின் உடுப்பு இல்லாத படம் போட்ட புத்தகம் முதல் முதல் காட்டி எங்க அறிவுக் கண்ணைத் திறந்தவன் எண்ட படியால அவன் சொல்வதை நாங்க எப்பவும் கேட்போம்,அவன் சொன்னது,
" கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டுபோடுவது கலியாணம் கட்டிய ஆண்கள் பார்க்கும் படம் "
எண்டு, கலியாணம் கட்டிய ஆண்கள்தான் எல்லாத்தையும் ரியலிடியில் லைவ் அக்சனில் பார்க்கலாமே அப்புறம் எதுக்கு அவர்கள் வெள்ளித்திரையில் ஆ வெண்டு கொட்டாவி விட்டுப் பார்க்கவேண்டும் எண்டு நாங்கள் கேட்டதுக்கு அவன் சொன்ன " படு முடைப் பருந்து பார்த்திருக்கும்நெடு மூதிடைய நீர் இல் ஆறே..." போன்ற சங்க இலக்கியச் செறிவுள்ள தெளிவுரையை இங்கே எழுதவே முடியாது,...
யாழ்பாணத்தில அந்த நாட்களில் படிக்கும் மாணவர்கள் இப்படி இங்கிலிஸ் படம் பார்ப்பது ஒரு பஞ்சமகா பாவச் செயல் என்பது போலதான் இருந்தது,முக்கியமா தியடரில் டிக்கெட் எடுக்க முடியாது எண்டு சொன்னாலும், வீராளி அம்மன் புண்ணியத்தில் டிக்கெட் எடுக்கலாம், அதில சில டெக்னிக்குகள் இருக்கு, பாடசாலை வகுப்பைக் கட் அடிச்சு படம் பார்பது எப்பவுமே பயங்கர ரிக்ஸ் , எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள். பிரிஞ்சுபலுக்கு யாரும் சொல்லிக்கொடுதுப் பிடிச்சா வாழ்க்கை அவளவுந்தான்.
அதுக்குதானே வார இறுதி நாட்களில் ரெண்டுநாள் பாடசாலையில் லீவு தருவார்களே. அதைவிட அந்த சனி ஞாயிரு நாட்களில் தியேட்டரில் சனம் அதிகமா இருக்கும். சனத்தோடு சனமா கும்பலில் கோவிந்தா போட்டு கடல் மீன்கள் போல சுழி ஓடலாம் . பொது ஜனம்கள் எப்பவுமே நாங்கள் படிக்கிறமா கிழிக்கிறமா என்று ஆராய்ச்சி செய்வதில்லை. அரைகுறை ஆடை இங்கிலிஸ் படம் பார்த்துக் குட்டிச்சுவர் ஆனாலும் அவர்களுக்கு கவலை இல்லை
முக்கியமா நாங்கள் தியேட்டருக்கு படம் தொடங்க முதலே போக மாட்டோம்,வெளிய ரோட்டில விடுப்பு பார்க்கிற மாதிரி நிண்டுகொண்டு முதலாவது பெல் அடிக்கும் வரை அப்பாவிகள் போல நிற்போம்,அது அடிக்க தியேட்டர் உள்ளுக்க லைட் நிற்பாட்டி போடுவார்கள், அந்த இடை வெளியில் போய் டக்கெண்டு டிக்கெட் கவுண்டரில் கொஞ்சம்,குதிக்காலில் எம்பி நிண்டு கொண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " எண்டு பாடிக்கொண்டு டிக்கெட் எடுப்போம்,
ஒருநாளும் எங்களுக்கு வயது வந்துவிட்டதா எண்டு டிக்கெட் கொடுப்பவர் செக் பண்ணியதே இல்லை,அப்படி எடுத்துக்கொண்டு இரண்டாவது பெல் அடிக்க, படம் பற்றிய தொடக்க டைட்டில் விசியம் மிஸ் பண்ணும் கவலை இருந்தாலும், இருட்டில தடவிக்கொண்டு போய், அதிகம் யாரும் இல்லாத மூலையில் இருந்து பார்த்தல் தான் எங்களுக்கு இங்கில்ஷ் இடைஞ்சல் இல்லாமல் விளங்கும் என்பதால் அப்படி இடங்களை செலக்ட் பண்ணி உடைந்த கதிரையில் இருந்து பார்ப்போம்.
இடை வேளையில்,எல்லா லைட்டும் போடுவார்கள் நாங்கள் போட்டிருக்கிற தொப்பியை நல்லா இழுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்போம்,எழும்பி கண்டின் இக்கு போகமாட்டோம்,போனால் பிறகு கதை மறந்து விடும் என்பதால் கதையின் தொடர்ச்சியை மறக்காமல் இருக்க அப்படியே இருப்போம். படம் முடியத்தான் முக்கிய அலுப்பு தொடங்கும்.வெளிய வாறதுதான் பெரிய கவுரவப் பிரச்சினை,அதிலயும் எல்லாரும் எழும்பிப் போன பிறகுதான் பதுங்கி பதுங்கி வெளிய வருவம்,
அந்த நேரம் தான் வருசத்தில எப்பவாவது கலியான வீடு ,செத்தவீட்டுக்கு மட்டும் தலை காட்டும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமாவை தியேடர் வாசலில் சொல்லி வைச்ச மாதிரி சந்திக்க வேண்டி வரும், தூரத்து சொந்தகாரரே திடீர் எண்டு ரெம்ப அக்கறையான நெருங்கிய ரத்த உறவு சொந்தமா மாறி வீட்டை வந்து சொல்லி கொடுப்பார்கள்,வெலிங்கடன் தியட்டரில் "யங் லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படம் ரசித்து பார்த்து முடிய " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " எண்டு பாடிக்கொண்டு வெளிய வர புண்ணியக் குஞ்சி சித்தப்பு, டவர் கூல் பாருக்கு முன்னால் நிண்டார்,
என்னைக் கண்டார், கண்டும் காணதது போல அண்டங்காகம் போல தலையை வேற பக்கமா திருப்பிக்கொண்டு நிண்டு போட்டு ,நான் வீட்டை வரமுதலே அவர் வீட்டை வந்து அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திட்டார்.. வீட்டை வர முதலே அம்மா,