என்னைப் போல மன உளைச்சலை வார்த்தைகளில் ஏற்றி எழுதி வைத்து அமைதி காணவிரும்பி எல்லாருக்கும் புரியும்படி எளிமையான கவிதைமொழியில் எழுதும் பலர் இருக்கிறார்கள். எங்களின் கவிதைகள் காற்றில புடைக்கிற சுளகில இருந்து பறக்கிற உமி போல. அற்பமான ஆயுள் உள்ள ஒருமுறை வாசிக்கவே விளங்கும்படியான ஒரு பொழுது ஒரு உணர்வு என்ற வகையைச் சேர்ந்தவை, அவற்றால் நிரந்தரமான தலைஇடி இல்லை.
அப்படி இருந்தும் பல கவிதைகள் விளங்கவில்லை என்று கேட்பார்கள், அதுக்கு முடிந்த விளக்கம் கொடுப்பது எழுதியவர்களின் மதிப்பை அதிகரிக்கும். அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு கட்டாயம் விளக்கம் சொல்லவேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லைதான். விளங்கவில்லை என்று சொல்ல கட்டாயம் தில் வேணும்.ஏனென்றால் கீழைத்தேய மன ஓட்டத்தில் ஒன்று எங்களுக்கு விளங்கவில்லை என்று கேட்டால் அவர்களைப் படுமுட்டாள்கள் என்ற வகையில் சேர்ப்பார்கள். உண்மையில் மேலைநாட்டு பழக்கத்தில் தெரியவில்லை என்பவர்களிடம்தான் தேடலே அதிகமிருக்கும்
அம்மாவின் ஞாபகம்....
..................................................
என்னைப் போல மன உளைச்சலை வார்த்தைகளில் ஏற்றி எழுதி வைத்து அமைதி காணவிரும்பி எல்லாருக்கும் புரியும்படி எளிமையான கவிதைமொழியில் எழுதும் பலர் இருக்கிறார்கள். எங்களின் கவிதைகள் காற்றில புடைக்கிற சுளகில இருந்து பறக்கிற உமி போல. அற்பமான ஆயுள் உள்ள ஒருமுறை வாசிக்கவே விளங்கும்படியான ஒரு பொழுது ஒரு உணர்வு என்ற வகையைச் சேர்ந்தவை, அவற்றால் நிரந்தரமான தலைஇடி இல்லை.
மாமரங்களுக்கு வயதாகி விட்டது..
........................................................................
வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன்....
..................................................................................
இந்த
குளிர் காலம் முழுவதும்
ஒளிந்து பிடித்து
விளையாடும்
குழந்தைகளின்
உற்சாகம் போல
கவிதைகள்
கவனித்துக்கொண்டேயிருந்தன..
மைய உணர்வுக்குள்
இணைத்துக்கொண்ட
தருணம்களில்
ஒதுக்குப் புறத்தில்
வார்த்தைகளை
உருவக் காரணமாயிருந்தது
தனிமை.....
விமர்சனங்கள்
வெளியடையாத
அதில் தேர்ந்த கவிஞ்சனின்
கர்வமோ
புத்திசாலித்தனமோ
அடிப்படையிலுமில்லை....
பார்த்த போது ஏற்பட்ட
விந்தையான
எண்ணத்தைத்
இழுத்தெடுத்து
உருகிப் போகாத
உறைபனியில்
எழுதி வைத்தேன்.
சறுக்கி
நடக்கும்போதோ
வழுக்கி நகரும்போதோ
மாற்றுமுயற்சிகளிலும்
புதிய இரசனைகளிலும்
தீவிர உரையாடல்களிலும்
அவைகளின்
பங்களிப்பும்
இணைந்திருக்கவில்லை..
நம்மையறியாமல்
நம்பிக்கையில்
கொண்டு வந்து
நிறுத்தும்
மனசாட்சி
அதுவாகவே
என்னை இயக்கியது
எனச் சொல்லலாம்.
அந்நியமான வரிகள்
உருவானதற்குப்
பின்னணியில்
இருந்தவர்கள்
பற்றிச் சொல்லேன் என
நீ
ரகசியமாகக் கேட்டால்
நீ
என்ன பதில்
வைத்திருக்கிறாயோ
அதேயே தான் நானும்
வெளிப்படையாகவே
வைத்திருக்கிறேன்.
தெருவிளக்கின் விளக்கம்...
............................................................
மங்கலான
தெருவிளக்குகள்
நடைபாதைகளின்
அமைதியோடு
மல்லுக்கட்டினாலும்
வழி நெடுகிலும்
நிழல் வழிந்து கொண்டே
வரத்தான் செய்கின்றன
யாருமேயில்லாத
பொழுதுகளிலும்
இருட்டுக்கு
அளவுகடந்த
எதிர்ப்புக் காட்டி
ஆழ்மனத்திலும்
அவைகள் ஒரு பிடிப்பு
வைத்திருக்கின்றன
வாழ்வில்
எங்கேயாவது
காதல் இருக்கட்டும்,
சாகசம் ஏதாவது
கிடைக்கும் வரை
பரிசோதனை
செய்து பார் என்பதுபோலப்
பார்க்கின்றன
கொஞ்ச நேரம்
நின்று நிமிர்ந்து பார்க்க
உனது இதயத்தில்
தேடுவதுக்கு ஏதாவது
இருக்கிறதா
இல்லையென்றால்
நேரத்தை வீணடிக்காமல்
வீட்டுக்குப்
போய்ச்சேரும்
நேரத்தைச் சொல்லியது
புரிந்துகொண்டு
பிறர்மீது கடினமாக
இருப்பது மறையத் தொடங்க
என்ன தான்
செய்யமுடியும்
வெளிச்சத்தில்
கிடைக்காத விளக்கம்
பின் தொடர்வுகள்
நிகழும்போது
நிகழ்ந்துவிடுகின்றன.
சிற்பியின் மொழி
............................................
மங்கலான
தெருவிளக்குகள்
நடைபாதைகளின்
அமைதியோடு
மல்லுக்கட்டினாலும்
வழி நெடுகிலும்
நிழல் வழிந்து கொண்டே
வரத்தான் செய்கின்றன
யாருமேயில்லாத
பொழுதுகளிலும்
இருட்டுக்கு
அளவுகடந்த
எதிர்ப்புக் காட்டி
ஆழ்மனத்திலும்
அவைகள் ஒரு பிடிப்பு
வைத்திருக்கின்றன
வாழ்வில்
எங்கேயாவது
காதல் இருக்கட்டும்,
சாகசம் ஏதாவது
கிடைக்கும் வரை
பரிசோதனை
செய்து பார் என்பதுபோலப்
பார்க்கின்றன
கொஞ்ச நேரம்
நின்று நிமிர்ந்து பார்க்க
உனது இதயத்தில்
தேடுவதுக்கு ஏதாவது
இருக்கிறதா
இல்லையென்றால்
நேரத்தை வீணடிக்காமல்
வீட்டுக்குப்
போய்ச்சேரும்
நேரத்தைச் சொல்லியது
புரிந்துகொண்டு
பிறர்மீது கடினமாக
இருப்பது மறையத் தொடங்க
என்ன தான்
செய்யமுடியும்
வெளிச்சத்தில்
கிடைக்காத விளக்கம்
பின் தொடர்வுகள்
நிகழும்போது
நிகழ்ந்துவிடுகின்றன.
சிற்பியின் மொழி
............................................
நல்லவர்களுக்கு நடுவில்.....
................................................................
தெரியாமத்தான் கேட்கிறேன்,
....................................................................
நன்றாகவே
நினைவிருக்கு
விழுதுகளை அறுத்த
புது உலக தந்திரம்
சும்மா கிடைக்க
இறந்துபோன
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கிள்ளித் தந்து போன
சந்தோசங்கள் ..
பழைய வீட்டின்
கதை சொல்லும்
வேப்பமரக் கதவுகள்
தாழ்வாரமெங்கும்
பாட்டியின்
நினைவைத்தின்னும்
நிழல்.
கன்னிக்கால்
முள் முருக்கின்
வேலியோட
ஓதியமரக் கிளையெங்கும்
வளைந்து ஓடி
இருட்டிலும் ரகசியமா
இலை தடவும் அம்பலவி,
பின்னால கொய்யாவும்
மறக்காத மாதுளையின்
நடுவே
அடர் பாசி
அள்ளிக் கொட்டி
இருள் போல
துலாக் கிணறு.
இடையில
எலுமிச்சை
நாவுற நாரத்தங்காய் ,
தெற்கால தென்னையும்
கரை எல்லாம் கமுகோடு
வாசல் வரைக்கும்
குலை தள்ளி
வாழ்வாங்கு வாழ வைத்த
வாழைமரம் ,
தெரியாமத்தான் கேட்கிறேன்,
குளத்தையும் ,
கோவிலையும்
குடும்பங்களையும்,
கும்மாளத்தையும்
உறவுகளையும்
ஊர்களையும்
இருபதாயிரம் மைல் தள்ளி
இழந்து போட்டு வந்து
அப்படியென்ன
சுதந்திரம்
அடுத்தவனின் நாட்டில் ?
...............................................................
ஆய்த எழுத்துக்கள் மட்டும்
.....................................................
மறந்த இறுதி நிமிடத்தில்...
..................................................
காதல்
எந்தத் தந்திரத்திலும்
விட்டுக்கொடுப்பதில்லை
விட்டு விடுதலையாகிச்
சுதந்திரத்தில்
பறப்பது.....