Tuesday 2 June 2015

வேரும் விழுதுகளும்!!

தாத்தாவின் 
கைப் பிரம்பு 
ஓய்வு பெறுவது போல
பேசுவதுக்கு 
சந்தர்பங்களை 
இழந்து கொண்டு போக
அகஸ்திய மொழியின்
வசனங்களில்
இலக்கணம்
அசந்து தூங்கி விடுகிறது....

வேலையை
இரவல் மொழியில்
சமாளிக்க
இன்னொரு வழியில்
அந்நியமான வீட்டில்
அப்பாவின்
படத்துக்குக் அருகிலேயே
எல்லாத் திருப்பங்களிலும்
பசை போல
வேறு பாசைகள்
ஒட்டிக் கொள்கிறது.......

என்
பிள்ளைக்குக்
கிட்ட வராமல்
விட்டு விலகிப்
போய்க்கொண்டே
பூஞ்சணம் பிடிக்கும்
என்
தாய் மொழியில்
" தன் மொழியை மறந்தவன் "
என்ற தலைப்பில்
கவி விதையை எழுத
முதல் வரியை
தொடக்கினேன்...

அதை
எழுதி முடிக்க
வார்த்தைகள் தேடி
வழியிலாமல்
திணறிய போது தான்
உறுதி மொழியாக
குளத்தடி முடுக்கில்
நாலு தலைமுறைக்கு
அசையாமல்
விழுது விட்ட
ஆல மரம்
நினைவுக்கு வந்தது,
.


.
13.04.15
ஒஸ்லோ .

இங்கமார் பெர்க்மன்...நிழலின் நிஜம்.

யாழ்பாணத்தில, யாழ் மத்திய கல்லூரிக்குப் பின்னால, " அலைஸ் பிரான்சிஸ் " எண்டு ஒரு பிரெஞ்சு கலாசார மையம் இருந்தது. அதில வார விடுமுறை நாட்களில் உலகத்தரமான, உலக அளவில் பல கலை, அழகியல் விசியங்களுகாக விருதுகள் வென்று, " இன்டலக்சுவல் " என்ற அறிவுக் கொழுந்துகள் ஆர்வமாகப் பார்த்து, அதைவிட ஆர்வமாக விமர்சிக்கும், அக்கடமி விருதுகள் ,ஆஸ்கர் பரிசுகள் வென்ற சினிமாப் படங்கள் போடுவார்கள். 

                         அதில போடப்பட்ட ஒரு சுவீடன்  என்ற நாட்டில் எடுக்கப்பட்ட, ஸ்வீடிஷ் இயக்குணரான இங்கமார் பெர்க்மன் இயக்கிய படங்களும், அவரின் பெயரும் அதிகம் எல்லாருக்கும் அந்த நேரத்தில தெரிந்து இருந்தது. அவர் சில வருடம் முன் இறந்த போது யாழ்பாணத்தில் இருந்து ஒரு கவிஞ்சர் வெகு உருக்கமா அவரை சிலாகித்த எழுதியதை சுவிடனில் இருந்து நான் வாசித்த போது ஆச்சரியமா இருந்தது..

                                            இங்கமார் பெர்க்மன் படங்கள் எதுக்காக உலகம் முழுவதும் அறிவாளிகளால் அதிகமாகப் பேசப்பட்டது எண்டு விளக்கமா சொல்ல என்னால முடியலை. பல வருடம் முன் , அவர் எடுத்த படங்கள் எல்லாத்தையும் ஒரு நாள் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக் கொலமில் ,அவர் அதிகம் இயங்கிய ஒரு நாடக மையத்தில் போட்டார்கள்,

                      என்னோட ஸ்வீடிஷ் மனைவியைக் கேட்டேன்

                                   " நீயும் வாறியா , இங்கமார் பெர்க்மன் , உங்க ஆள், பெரிய இயக்குனர் என்று என்னோட சின்ன வயசில் கேள்விப்பட்டு இருக்கேறேன், படம் பார்த்திட்டு, கம்மலா ஸ்தானில் எங்காவது ரேச்ற்றோறேண்டில் சாப்பிடுவம் ,பிறகு சுளுசன் போய் பாலத்தில் நின்று மீன்கள் பாய்வதைப் பார்க்கலாம் "

                                 என்றேன் அவள், சந்தேகமா என்னைப் பார்த்தாள்,,சிரிச்சுப் போட்டு

                                " உனக்கு அதெல்லாம் விளங்குமா, அது தான் ஜோசிக்கிறேன் , அந்தாளோட படம் பார்க்கிறதும் ,வானத்தை சும்மா கொட்டாவி விட்டு ஆ வெண்டு நிமிர்ந்து பார்க்கிறதும் ஒண்டுதான், சுளுசனில் மீன்கள் பாய்வதைப் பார்க்க என்றால் வாறன் , மீன்கள் பாஞ்சு விளையாடுவதை மணித்தியாலக் கணக்கில் பார்த்தாலும் அலுக்காது " என்றாள்.

                                         அவள் வரவே இல்லை. நான் தனியாக போனாப் போகுது எண்டு போய் பார்த்து இருக்குறேன், அந்தப் படங்களை நானும் இயன்றளவு கொட்டாவி விட்டாமல் பார்த்த போது ஒன்று விளங்கியது. அவர் எழுதிய எல்லாப் படங்களின் ஸ்க்ரிப்ட். படமாக்கப் பட்ட விதம் எல்லாதிலையும் ஸ்வீடிஷ் மக்களின், சுவாரசியம் இல்லாத" மன நிலை " இருக்கு, அதுகளை எப்படி யாழ்பாணத்தில் உள்ள ரசிகர்களால் அந்த நாட்களில் சுவாரசியமா விளங்கிக் கொள்ள முடிந்தது எண்டு விளங்கவே இல்லை..

                                        பெர்க்மன் கொட்டாவி விட்ட பல படங்கள் மலையாளப் படத்தை விட மெதுவாக போக,,சில படத்தில கடைசியில் வரவேண்டிய கிளைமாக்ஸ் வரவே இல்லை, ஒரு படதில கதை கல்லு நெரிக்கிற ரோட்டு ரோலரை விட மெதுவாக தொடங்கி அதன் முடிவில் அதிவேக ட்ரைன் பறக்கிற மாதிரிப் பறக்க,பெர்க்மன் ,ஸ்வீடனின் சிறுவயதில் உப்பசலாவில் வளர்ந்த இடத்தின் சூழ்நிலை நிலமை ,எல்லாப் படங்களிலும் நிறைய அபத்தமான சம்பவங்கள், நிலை இல்லாத காதல், துரோகத்தனமான காமம், சுற்றி இருபவர்களின் சூழ்ச்சி, வாழ்வின் நிலையாமை, இறப்பு இருட்டுப்போல எப்பவும் மங்கலாக வருவது, மரண தேவதையின் நடனம் எண்டு சிலாகிக்கப்படும் ஒரு விசியம் பார்க்க பயம் வாறதுக்குப் பதிலா சிரிப்பு வருகுது, ஒரு இளம் பெண் கற்பழிக்கப்படும் போது ,,மாடுகளும்,ஆடுகளும் அசையாமல் அதை சுற்றி நிண்டு பார்ப்பது ,,,இப்படி கொஞ்சம் வாழ்வின் வெளிச்சம் விழாத பக்கங்களை இங்கமார் பெர்க்மன் வெள்ளித்திரையில் கிட்டதட்ட நாற்பது கதைகளை படமாக எடுத்து இருந்தார்...

                                  சினிமா எதுகாகா எடுக்கப்படுகிறது எண்டு இன்னும் சரியா சொல்ல முடியாத காரணங்கள் ஆயிரம் இருக்கும் அவல சூழலில் ,பெர்க்மனின் எல்லா காதல் ரோமன்ஸ் படங்களும்,அபத்தமான காதல் படங்கள், அதுக்கு காரணம் பெர்க்மனின் சொந்தக் காதல்,கலியாணம் அப்படி இருந்தது இருக்கலாம்,அவர் ஐந்து முறை சட்ட்டப்படி கலியாணம் கட்டினார், அதே அளவு சட்டமில்லாத காதலிகள் இருந்தார்கள்,அவர்களுக்கும் சட்டம் திட்டம் எண்டு ஒண்டுமே இல்லாமல் பிள்ளைகள் பிறந்தார்கள்,

                                          அதை விட அவர் படங்களில் அவருடன் நடித்த, அல்லது அவர் இயக்கிய பெண் நடிகைகளுடன் நிறையத் தொடர்ப்பு இருந்தது,ஒரு சாதாரண மனிதருக்குகே அதிகம் பெண்கள் தொடர்பு இருந்தாலே நெறைய ரோமன்ஸ் கதைகள் எதார்த்தமா கிடைக்கும் ,அப்படி எதார்த்தமா அவரின் பாத்திரங்களாய் வெள்ளி திரையில் மின்னிய கன்னிகள் போனாப் போகுது எண்டு கொஞ்சம் அவருடன் எதார்த்தமா பழகி இருக்கலாம் போல,,,


                                          இங்கமார் பெர்க்மன் இறந்த சில மாதங்களில் ஒரு இளம் பெண், திடீர் என்று பெர்க்மன் படங்களில் வரும் நிழல் காட்சிக்குள்ள இருந்து எழுந்து வாற மாதிரி , தன்னோடு அப்பா பெர்க்மன் என்றும், அவர் சொத்தில் பங்கு வேண்டும் என்றும் சுவிடிஷ் நீதிமன்றதில் ஒரு வழக்கப் போட்டா, அதுக்கு ஆதரமா தன்னோட அம்மா எழுதிய நாட்குறிப்பை சாட்சி கொடுத்தாள் அந்தப் பெண். அவளின் அம்மா இங்கமார் பெர்க்மனின் தீவிர ரசிகை என்று,அவர் எடுக்கும் படங்களின் சூட்டிங் ஸ்பாட் இக்கு போய் அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை பார்ப்பதும் அவாவின் ஆர்வமாக இருந்து இருக்கு, பெர்க்மன் அந்தப் பெண்னின் ஆர்வக்கோளாறு அடங்க முதலே கிடைத்த இடைவெளியில் எடுத்த  குறும்படம் தான் அந்த இளம் பெண் என்று தெரியவந்தது.

                                  இவளவு கொஞ்சம் குளறுபடியா அவரைச்  சொன்னாலும்,அவர் எடுத்த சில எதார்த்த படங்கள் உலகம் எங்கும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கு. அப்படி சிம்பாலிக் ஆக பல விசியங்களும் சொல்லித்தான் இருக்குறார். சுவிடனில் பல வருடம், வசிபதால்,ஸ்வீடிஷ் மொழி,கலாசாரம் தெரிந்ததால் விளங்கிய என் அறிவுக்கு , ஸ்வீடன் என்ற சுவாரசியம் இல்லாத நாட்டை உலக அளவில் கொஞ்சம் பிரபலம் ஆக்கிய பெருமை இங்கமார் பெர்மனுக்கு இருக்கு எண்டது உண்மைதான், இங்கமார் பெர்க்மான் உலக மொடேர்ன் எதார்த்த அப்ச்ற்றக் சினிமாவின் தந்தை எண்டு சொல்லுறார்கள் பலர்.

                                        எனக்கு இந்த எதார்த்த சினிமா இயக்குனர் ஆகுவது போன்ற விசியன்களில் ஆர்வமே எப்பவும் இருந்ததில்லை இங்கமார் பெர்க்மானின் ஒரு நிழலான காதலியாக லிவ் உல்மன் என்ற ஒரு நோர்வே வெள்ளைக் குதிரையும் சில வருடம் இருந்தா,,

                                     அண்மையில் அவா மனம் திறந்து தன்னோட இங்கமார் பெர்க்மனுடன் ,ஒரு நடிகையா திரை சீலைக்கு மறைவிலை எதார்த்தமாயும் ,கமராவுக்கு பின்னாலை எதார்த்தமாயும் , சூட்டிங் இஸ்பொட்டிலை எதார்த்தமாயும், லொகேஷன் யூனிட் லைட் எல்லாம் அணைத்த பின் எதார்த்தமாயும் செய்த காதல் ரோமன்ஸ் விசியங்களை எதார்த்தமா , சுவாரசியமா வெளிபடையா சொன்னா, அது கேட்ட போது உடம்பெல்லாம் புல் அரித்தது , நானும் ஏன் சினிமாவில் இறங்கி எதார்த்தமா பல விசியங்களை அனுபவித்து இருந்து இருக்கலாமே எண்டு நினைக்க தோன்றியது!.

.


18.04.14.