Tuesday 20 October 2015

எனக்கொரு கனவு இருக்கு ,,

தோசைக்கல்லு LP  இசைத் தட்டுக்களின் காலம் ஒரு பொற்காலம் . அதில் வந்த இசை மனித உணர்வுகளின் மார்கழி மாத வாசல்க் கோலங்கள் . இரைச்சல் இல்லாத  இயற்கையான சங்கமம்.அவைகள்  ஒரு காலத்தின் அடையாளம் போல இப்பவும் பல பழைய சாமான்கள் விற்க்கும் கடைகளின் அலுமாரிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கு. அதன் வரலாற்றுக் கவர்சிக்கும், கலைப் பெறுமதிக்கும் மதிப்புக் கொடுக்கும் மக்கள் தேடித் தேடி அதை வேண்டிச் சேர்ப்பதை பார்த்து இருக்கிறேன். 

                                                    யாழ்பாணத்தில " பஸ் ஸ்டாண்டில " 80களில் " நியூ விக்டேர்ஸ் " என்று  ஒரு " மூயுசிக் ரோகொரடிங் பார் " இருந்தது, அதன் வெளியே பல இங்கிலிஸ் பாலடகள் பதிந்து வந்த,   தோசைக்கல்லு சைசில இருந்த பிளாஸ்டிக் தட்டில  பல இசைதட்டுகளை வெளியே எல்லாருக்கும் தெரியிற மாதிரி வைத்திருந்தார்கள் !அதில ஒரு LP அல்பத்தின் கவரை " ஷோ கேசில் " வைத்திருக்க ,அதில இரண்டு வெள்ளைகார ஆண்களும்,இரண்டு வெள்ளைகார பெண்களும் அருகருகே ஒட்டிக்கொண்டு , கைகளைக் கட்டிக்கொண்டு நிண்டு, சிரித்துக்கொண்டு, ஒரு "ஒளி வெள்ளம் பாயும் "  வட்டத்தில் நின்று  போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

                                        அந்த இரு ஆண்களும் ஸ்டார் வார் படத்தில வார  "வேற்றுகிரக வாசிகள் " போல இறுக்கமாக உடை அணிந்துகொண்டு இருக்க, அந்த இரு பெண்களும் அதைவிட இறுக்கமாக உடைஅணிந்து, மார்புப் பகுதிய வஞ்சகம் இல்லாமல் தாராளமாக காட்டிக்கொண்டு இருக்க, அந்த இரு பெண்களும்  அணிந்திருந்த குட்டைப் பாவாடை அவர்கள்  குனிந்தால் எல்லாம் தெரியும்போல இருக்க, சொக்கநாதரே  சொக்கிப்பிவிடுவார்போல இருக்க , அவர்களை சும்மா விரலால சுண்டினாலே சரி கம ப த நி ச நாதம் பேசும்போல  அவர்களின் உடலமைப்பு வில்லா வளைஞ்சு நிக்க ,  இசை மீது இருந்த தீராத தாகத்தால் , அவர்களே  பாடினால் எப்படி இருக்கும் என்பதை அறிய அந்த" ரோகொரடிங் பார் " இக்குள்ள துணிந்து போய்

                                      "இந்த அல்பத்தின் கவரில் இருபவர்கள் யார்? "

                                                 எண்டு அங்கே தலையில "ஹெட் போனை" கொழுவி வேலை செய்தவரிடம் கேட்டேன் "

                                                 அவர் இவர்கள்தான் உலகப் புகழ் பெற்ற  ABBA என்ற  இசைக் கோஸ்டி " என்றார். அவரிடம்

                              " இசை என்றால் எனக்கு உசிர், இந்த அல்பத்தை கொஞ்சம் கிட்டத்தில பார்க்க தரமுடியுமா?"

                                               என்றேன், அவர் எடுத்து தந்தார்,தெரிந்த தற்குறி இங்கிலீசை வைச்சு நோண்ட அதில் அவர்கள் ஸ்வீடன் என்ற நாடில இருக்குறார்கள் எண்டு எழுதிக்கிடந்தது ,

                                                  " ஸ்வீடன் என்ற நாடு எங்க இருக்குது ?" அவரிடம் அவரிடம் கேட்டேன் , அவர் "ஹெட் போனை" கழட்டி,தலையை சொரிஞ்சுபோட்டு,

                                                 " ஐரோப்பாவில்  இருக்குது எண்டு நினைக்குறேன்  , அதுக்கு முதல் உமக்கு இப்ப என்ன வேணும்?"

                                                        எண்டு கோபமாகாக் கேட்டார் , நான் கோவிக்கவில்லை , நானே பிட்காலதில ஒரு புகழ் பெற்ற கிடாரிச்ச்டா வருவேன் எண்டு எனக்கே அப்போது தெரியாது , பிறகு அவர்க்கு எப்படி என்னோட அருமை தெரியப்போகுது எண்டு போட்டு !

                                              " இவர்களின் பாடல்கள் கேசட் வடிவில் உள்ளதா?"  எண்டு கேட்டேன் ?   அவர் ,அதுக்கு

                                                     "  இல்லை , LP  வடிவிலதான் உள்ளது" 

                                                 என்றார் , இதுக்குமேல கேட்டால் மூன்சியில அறை விழும் என்பதுபோல என்னை சுவாரசியம் இல்லாமல் பார்க்க , நான் படு சுவாரசியமகா அந்த இரு பெண்களையும் பார்த்துகொண்டு,   இனி அவரிடம் என்னத்தை கேட்கிறது எண்டுபோட்டு,

                                              " இதை கேசட்டில ரெகார்ட் பண்ணி தருவீர்களா ?" என்றேன், அவர்

                                    " பேந்தும்பார் , இந்தப் பெடி நேரம் காலம் தெரியாமல் முசுப்பாத்தி செய்யுறதை, ரேகொர்ட் செய்யத் தானே ரேகொர்டிங் பார் வச்சிருக்கிரம்,வேற என்னதுக்கு  தலைமயிர் வெட்டுரதுக்கே இதை வைச்சிருக்கிறம் "

                                   என்றார், அவரை பார்த்து நட்பாக  சிரிச்சுப்போட்டு , அந்த அல்பத்தை கடைசியா கொஞ்சம் முகத்துக்கு கிட்ட வைச்சுப் பார்த்தன்.

                                         இனி பொய் சொல்லி என்ன வரப்போகுது ,எல்லாத்தையும் இழுத்து மூடிக்கொண்டு இருக்கிற யாழ்ப்பாணக் கலாசார சூழலில் இருந்ததால் , கிட்டத்தில பார்க்க அந்த இரு பெண்களும் சொக்க தங்கம் போல இருக்க, அவர்களின்கண்களில் ஒருவித வசியம் இருந்தது, அப்பவே மனதளவில் அந்த நேரம் சபதம் எடுத்தேன், வளர்ந்து கலியாணம் கட்டினால் ,இப்படி ஒரு வெள்ளைக்கார .பொன்னிற கூந்தல் சடைச்ச சொப்பன சுந்தரியத் தான்  கட்டவேண்டும் எண்டு.  சொல்லி வைச்ச மாதிரி விதி ஆரைத்தான் விட்டு வைக்குது, நாசாமாப் போன அந்த யாழ்ப்பான சபதம் என்னோட வாழ்கையில் நடந்தது, அதுவும் ஸ்வீடனிலயே  நடந்தது!

                                                     அவர் அப்படி ரேகொட் பண்ணிதந்த அந்த கேசட்டை வீட்டில இருந்த ஒரு லொட்டு லொடக்கு "டேப் ரெகார்டரில் " போட்டுக் அடிக்கடி கேட்பேன், என்னோட அம்மாவே வியந்து பார்த்து ,

                                                    " இங்க பாரடா இவனை, இங்கிலிஸ் பாடத்துக்கு 26 மார்க்ஸ் இக்கு மேல ஒருநாளும் போகாத இவன், இங்கிலீசு பாட்டுக் கேட்கிறதை"

                                                                 எண்டு கிண்டல் அடிச்சா ! அவர்கள் பாடிய அந்த ஆங்கிலப் பாடல்களின் கருத்து விளங்கவில்லை,, ஆனால் அவர்கக்ளின் அந்த இசை அந்த  இரு பெண்களைப் போலக் கவர்சியாதான் இருந்தது !

                                            வீட்டுக்கு கொண்டுவந்த கெசட்டில்  இருந்த "DANCING QUEEN" பாடல் , அது தான் ABBA இன் முதல் பாடலாம் , இதை அவர்கள் ஐரோப்பா அளவில் நடக்கும்  EURO SONG பாட்டுப் போடியில் பாட, அது முதலாவதா வர, இதுதான் அவர்களை உலகம் அறியச் செய்தது, உலகை கலக்கிய ABBAஇன் பாடல்கள் டெக்னிகலா MUSICALLY GENIOUS வகையில் இல்லை,வெறும் POWER CHORDS ஐ வைத்து "மைல்ட் பொப் " மெலடிகள், அவர்களின் பெரும்பாலனா "Lyrics " பாடல்வரிகளும் " உன்னை நினைத்தன், காதல் வந்தது,கவிதை எழுதினன்,அதை பாட்டப்படிச்சன்" டைபில வெறும் மேம்போகானவை, ஆனால் அவர்களின் இசை அந்த வரிகளுக்கு உலகளவு உயிர் கொடுத்தது உண்மை!

                                                  ABBA வின், நான் ஜொள்ளுவிட்ட அந்த  இரு பெண்களும்,  இரு ஆண்களும் ," Take A Chance On Me " எண்டு மனம்  விரும்பி , அவர்களுக்குள்ளையே " Gimme! Gimme! Gimme! "  என்று  பாடி,  "DANCING QUEEN " என்று  ஆடி ,"  Honey Honey"  என்று  கட்டிப் பிடிசுக்  காதலர்கள் போல வாழ்ந்து , " I Do, I Do, I Do, I Do, I Do " எண்டு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பெற்று , கொஞ்சம் அலுத்துப் போக " Knowing Me Knowing You  " என்று சொலிப்  பின்னர் பிரிந்தார்கள், பிரிந்து அந்த காதலையும், காதலின் பிரிவையும் " " The Winner Takes It All  " என்று உருக்கமாக , ஆளை ஆள் மாறி மாறிப் பழியப்போட்டு , ஆற்றாமையில்   " The Day Before You Came  " எண்டு  பாடலாக பாடினார்கள்! அப்படி வேற எந்த ஒரு இசைக்குழுவும் செய்யவில்லை!

                             நான்கு இசைக்கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழு, அதில் அக்னிதா என்ற பாடகி சின்ன வயசிலேயே தனிப் பாடகியா கொஞ்சம் புகழ்பெற்ற ஒருவர்  , பெனி என்ற கிட்டாரிஸ் , அக்கொர்டியன் வாசித்துக்கொண்டு இருந்த பிஜோர்ன் என்ற பின்நாட்களில்  பியானோ வாசிப்பவர் இவர்கள் மூவரும் சுவிடிஷ் இனத்தவர்கள்.சுவிடனில் பிறந்தவர்கள். அந்தக் குழுவில் இருந்த நாலாவது பெண் பாடகியான  பிரிடா நோர்வேயில்ஜெர்மன் நாசி இராணுவ அப்பாவுக்கும்,வட மத்திய  நோர்வே நாட்டு பெண்மணிக்கும்  பிறந்தவா.

                                                     மிகச் சிறிய வயசில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிடாவின் அப்பா ,மனைவியையும்,பிள்ளையையும் கைவிட்டுப்போட்டு மறுபடியம் ஜெர்மனிக்கு போக பிரிடாவை அவாவின் பாட்டி சுவிடன் கொண்டுவந்து வளர்த்த . தான்னோட முப்பது சொச்சம் வயசில் தான் தன்னோட ஜெர்மன் நாசி ராணுவ அப்பாவைக் கண்டு பிடித்தா பிரிடா. தற்போது பிரிடா ஜெர்மனியில் வசிக்கிறா. தன் அப்பாவழியில் ஒரு பிரபுக்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தவர்.பணக்காரி .

                                          உலகின் முக்கிய  நட்ச்சத்திரன்ங்களாய் ABBA ஜொலித்த போது  அவர்களின் இசைக் குழுவின்  LIVE நிகழ்ச்சி 1979: இல்  Wembley Arena London இல் நடந்தபோது இசை படிக்கும் பாடசாலை மாணவிகள் "  I Have A Dream  " என்ற பாடலை தாங்கள் மேடையில் படிக்கப்போவதாக கேட்க அவர்களுடன் சேர்ந்து மேடையில் பாடிப் படித்தார்கள். சுவுடிஷ் மக்கள் பந்தா போடமாட்டார்கள் ,அதைவிட குழந்தைகளை நேசிப்பவர்கள்.

                                     இன் இசை வெற்றிக்கு முக்கியமான் ஒரு  காரணம் அவர்களின் இசை ஒலிப்பது டெக்னிக். சுவிடன் அந்த நாட்களில் உலகின் முக்கிய டெக்னிகல் வளர்ச்சியுள்ள நாடாக இருந்தது.அதனால் அவர்கள் ஸ்டாக்ஹோலம் போலர் ஸ்டுடியோவில் மிகத் தரமான தெளிவான ஒலிப்பது மற்ற எல்லா இசைக்குழுக்களையும் விட முன்னோடி டெக்னிக்கில் கொஞ்சம் புதுமையாக செய்தார்கள்.

                                      இன் பாடல்களை அதிகம் எழுதியது ஸ்டிக் அன்டர்சன் என்ற பாடலாசிரியர். ஒரு சுவிடன் நாட்டவர்  சுவிடிஷ்   தாய் மொழியாகக் கொண்டவர் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி அசத்தியது இன்னுமொரு ஆச்சரியம் . அதைவிட அவர்களின் ஆங்கில உச்சரிப்பு இங்கிலிஸ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பாடல் கேட்கும் போது மூக்கில விரலை  வைச்சு ஜோசிக்க வைத்திருக்கு 

                                        என்பதுக்களின் இறுதியில் ABBA  மிகவும் அடக்கமான , பப்ளிசிட்டி விரும்பாத " I Have A Dream " எண்டு தன்கள் இசை வாழ்வை அடக்கமாகத் தொடங்கிய  அவர்கள் ,அவர்களின் இசைவாழ்வு முடிந்தபின், " thanks you for the music " எண்டு பாடிப்போட்டு, பொது மேடைகளில தோன்றுவதை பெரும்பாலும் தவித்தார்கள் ! இன்றைவரை ஸ்வீடன் எண்ட நாட்டை உலக அளவில் பிரபலம்  ஆக்கிய  பெருமை எனக்கும் ...கொஞ்சம் ABBA என்ற  இசை குழுவுக்கு இருக்கிறது!
.
.