Tuesday 29 December 2015

மனம் ..

வருமா வராதா அல்லது வரமா சாபமா என்று வெண்பனிப் பொழிவுக்குக், காத்திருக்க நேற்று இரவு திருவாதிரை நட்சத்திரத்தில் அது இறங்கி இருக்கு. நோர்வேயில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் வெண்பனி இல்லாமல் இருப்பது முதலிரவு இல்லாமல் கலியாணம் போல , அவளவு வாழ்க்கை முக்கியத்தும் அதுக்கு இருக்கு .
                                முக்கிய காரணம் நோர்வே வெண்பனி வெண் இரவுகளில்தான் வளைகாப்புக் பெண்ணின் புது வெட்கம் போல அள்ளி அணிந்து கொண்ட ஜவ்வனங்களுடன் ஜொலிக்கும். அது வந்தாலும் திட்டியும் வராட்டியும் திட்டியும் எப்பவுமே எழுதும் ஒரு மண்டைப்பிழையான ஒரே ஒரு நோர்வேவாழ் இலங்கைத் தமிழன் நானாகத்தான் இருக்க முடியும்.
                                       நான் வசிக்கும் இடத்தில ஸ்கி என்ற பனிச்சறுக்கு தளம் அமைத்து ஓடும் இடமே இருக்கு. ஒரு தமிழ் நண்பர் குடும்பமாக இலண்டனில் இருந்தே நாலு நாள் விடுமுறையில் பிள்ளைகளோடு சில நாட்கள் முன் வந்திருந்தார். அவர் முன்னர் நோர்வேயில் தான் பாஸ்போட் கிடைக்கும் வரை அரசியல் அகதியா வசித்தார்,
                                          பிறகு நோர்ஸ்க் பாஸ்போட் கிடைச்ச கையோடு நோர்வே பிரசை ஆகி இலங்கை போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு வந்து, பிள்ளைகள் பிறந்து முடிய மனைவியுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வாழ்வு கொடுத்த நோர்வேயை வாயும் வயிறுமாக விட்டுப்போட்டு மான்செஸ்டர் இக்கு எஸ்கேப் ஆகிப் போனவர். நேற்று ட்ரம்மன் என்ற இடத்தில இருந்து போன் எடுத்து ,வெறுப்பாக

                               " ஒரே கடுப்பா இருக்கு, இன்னும் சினோ விழவில்லையே,போன வருஷம் நல்ல என்ஜாய், இந்த வருடம் என்ன இப்படி அல்லைப்பிட்டி தரவை போலக்கிடக்கு , உம்மோட பக்கம் வரவே அலுப்பா இருக்கு, வரேக்க கேட்விக் ஏர்போட்டில் ரெண்டு புறா வேண்டிக் கொண்டு வந்தனான் "
                               
                                                 என்று சொன்னார். எனக்கும் கவலையாக இருந்தது அவர் என்னோட பக்கம் வந்தால் எப்பவுமே போத்தல் கொண்டு வருவார் .லண்டனில் போத்தல் நல்ல மலிவு .புறா என்பது புறாப் படம் போட்ட போத்தலில் நிரப்பி வரும் பேமஸ்குருஸ் என்ற ஸ்கொட்லாந்து விஸ்கி. பல வருடம் முன்னர் ஒன்றாக ஒரு இடத்தில இருந்தோம் அதை நினைவுகொள்ள எப்பவுமே நடக்கும் கிறிஸ்மஸ் பாட்டியில் புறா ரெம்பவே அனுசரணையாக இருக்கும்

                                          " சில நேரம் இரவு இறங்கலாம் என்று வானிலையில் சொன்னார்கள், இறங்கத்தான் வேண்டும் இல்லாட்டி எனக்கும் வாழ்க்கை வெறுக்கும். மான்செஸ்டர் இல இருந்து ஒஸ்லோ வந்ததே சினோவில உருண்டு  பிரள ."

                                  " அதெண்டா உண்மைதான் போல இருக்கு "

                                 " சினோ இல்லாட்டியும் என்ன நாலு பெக் அடிச்சுப்போட்டு பழைய கதைகள் கதைப்பம்..அதுக்கும்  சான்ஸ்  இருக்கும்  தானே  "

                                "பிரசினை  இல்லை,,வாங்கோ ,  கதைகளுக்கு  என்ன  குறைச்சல்,,அதுவும் போத்தில் மூடி திறக்கவே கதையள் அவிழுமே  " 

                                  " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப எங்க இருக்கினம் கொண்டக் இருக்கோ "

                                          " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப பழசாகிப் போனார்கள்,,ஒருவரோடும் தொடர்பு இல்லை,,,சும்மா கண்டா காதுக்க விரலை விட்டுக்கொண்டு கதைக்கிறது "

                                   "   என்ன நடந்தது "

                                 " என்ன நடக்க வேணுமோ அதுகள் தான்  நடந்தது,, எல்லாரும்  இப்ப தனித் தனியா குடும்பம் வாழ்க்கை  எண்டு போட்டாங்கள் "

                                  "   ஹ்ம்ம்,, அது  உண்மைதான்,,நல்லா  இருகுரான்களோ "

                                  "   அது  தெரியாது,,உண்மையில் வெளிய தெரியாது,,துண்டைக் காணோம் துணியைக் காணோம்  எண்டு ஓடிக்கொண்டு இருக்கலாம் "

                        "மோகனுக்கு  அக்செப் பண்ணி பேப்பர் கிடைசிட்டுதோ    "

                                 "  எந்த மோகன்  " 

                              "  அலவாங்கு  மோகன்,,வன்னிப் பொடியன்  " 

                               "அவனைப்  பிடிச்சு  திருப்பி அனுப்பிப்போடான்கள்     " 

                             "  எண்ட  கடவுளே,,அவன்  இயக்கத்தில  இருந்தவன்  எல்லோ "

                            " ஹ்ம்ம்,,,இங்கே  உண்மையான அரசியல் அகதிக்கு வதிவிட  அந்தஸ்து  பேப்பர்  கொடுக்க மாட்டாங்களே,,ஹ்ம்ம்,,,இதைக்  கதைச்சால்  கொதி  வரும்  "

                            "  படிச்ச மனோவும் ,மொக்கு மனோவும் இப்பவும் ஒன்டாவே இழுபடுராங்கள்.. ரெண்டு பேரோடும் கதைச்சே  பலவருடம் "

                             "  படிச்ச  மனோ  கழுவல் துடையல் கொம்பனி பிர்மா வைச்சு நடத்துறான்,,மொக்கு மனோ ஒஸ்லோ கொமுயுன் இல டெக்னிகல் அட்வைசர் வேலை  செய்யுறான் "

                             "  என்னது  நம்பவே முடியவில்லையே,,ரெண்டு  பேரும்  செய்யிற  வேலையே  சம்பந்தா சம்பந்தம் இல்லாமலிருக்கே "

                           "  நம்ப முடியாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சம்பவங்கள் நடக்கிரதுக்குப் பெயர்தான்  வாழ்க்கை "

                                    "   ஹஹஹஹா "

                           "    ஹ்ம்ம்,, ஆனால் ரெண்டு மனோவும்  இப்ப ஒஸ்லோவுக்கு வெளிய சொந்த வீடு வேண்டி இருகிறாங்கள் "

                                        " சாம்பாரு மணியோடும் கொண்டக் இல்லையா அவன் உன்னை விட்டுப் போக மாட்டனே, ரெண்டு பேரும் நல்ல ஓட்டே எப்பவும் , ரெண்டு பேரும் நேரம் காலம் இல்லாத தண்ணிச் சாமிகளே "

                                                 " ஹஹஹ்ஹா,,,சாம்பாரு மணி இப்ப திருந்திட்டான்,,குடிக்கிறது இல்லை,,இப்ப சாமியார் போல ஒஸ்லோ முருகன் கோவில்ல தேவாரம் பாடுறது , சாமி தூக்கிறது , மண்டக்கப்படியில சுண்டல் குடுக்கிறது எல்லாம் அவன்தான் "

                                         " என்ன ,பழைய பம்பல் ஒண்டும் இல்லைப்போல இருக்கே,,என்ன நடந்தது "

                                      " ஒன்டும் வித்தியாசமா நடக்கவில்லை,முன்னம் தனிக் கட்டைகள் எலிகள் போல ஓடித் திரிந்தோம் இப்ப அவர் அவர் வாழ்க்கை அவர் அவர் பாதையில் குடும்பமாகிப் பெருத்து பெருஞ்சாளிகள் ஆகி சுமைகள் அதிகமாகி விட்டது "

                                     " போன வருஷம் ஹோவ்செத்ரா இருந்திச்சே அமல்ராச் இன் பிச்சா கடை அதிலயா இப்பவும் வேலை "

                                             " இல்லை,,அது போன வருசமே நாமம் போட்டு இழுத்து மூடியாச்சு "

                                     "   நீர்  வேலை  செய்த சாப்பாட்டுக் கடைகள் ஒரு வருஷத்தில் இழுத்து மூட  வேண்டிவரும்  என்று  மொட்டை மனோ எப்பவும் சொல்லுவானே "

                                           " ஹஹஹ்ஹா,,உண்மைதான்,,,ஆனால் அமல்ராஜ்  நடத்தின  பிட்சா கடையில் வேற பிரசனை  வந்தது "

                               " என்ன பிரசினை,,,,சொல்லுமன்,,எனக்கும் அமல்ராஜ் போஸ்ட்குருன் இல இருந்த நேரம்   நல்ல பழக்கம் முன்னம் "

                                  "  ஹ்ம்ம்,,அவர்  ஒரு சப்பட்டை  வியட்நாம்காரியை  பெட்சிளிங் ஓடர் டெலிபோனில எடுக்க கொண்டு வந்து வைச்சு இருந்தார் "

                          "   அட,,,பிறகு,,சொல்லும்  சொல்லும் ,,இளம்  பெட்டையோ "

                         " ஓம்...அவள்  படிக்கிற பெட்டை,,பாட் டைமா  பின்னேரம் வருவாள் வேலைக்கு "

                           " பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது,,,"

                          " பிறகு  என்ன நடக்கும்,,,தெரியும்தானே,,அமல்ராஜ்  அவளுக்கு  கீழ வேலைக்கு  நிக்கிற மாதிரியும்,,அவள் முதலாளி போலவும் நிலைமை வந்திட்டுது "

                                "   பிறகு  என்ன நடந்தது "

                                "  பிறகுதான்  பிரசினை வந்தது,  ஒருநாள் இசகு பிசகா அவள் அமல்ராஜ் மடியில் இருந்து கொண்டு ஹம்பெக்கர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் "

                         "  அட அட...அதில  என்ன பிரசினை,,கதிரை மேசை  இல்லையோ  என்னத்துக்கு  மடியில  இருந்து சாப்பிட்டாள்  "

                             "  கதிரை  மேலை  வேண்டிய மட்டும்  இருந்தது,,,நல்லகாலம்  கட்டில்  தான்  இல்லை "

                               "  ஹஹஹஹா,,,சொல்லும்  சொல்லும்  மிச்சத்தை "

                         " அந்த நேரம் அமல்ராஜ் மனுசி வந்திட்டா ,,வந்து அதைப்  பார்திட்டா ..."

                                       "     அட,  ரீட்டா  அக்கா தானே ,,இதென்ன குளறுபடி,,பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது  எண்டு "

                                  " ஓம்  அவாதான்,  பிறகென்ன மொப்  அடிக்கிற தடியால எடுத்து விளாசி விளாசி   அவியல்  பூசை  புனஸ்காரம்  மண்டகப்படி அகோரம்  தான்,,,எனக்கும்  நல்ல  பேச்சு தந்தா, அதோடு  அதை நடத்திரத்தை அமல்ராஜ் மனுசி விரும்பவில்லை  

                                           " என்னது,,அமல்ராஜ்ச் எப்படி இருக்க வேண்டிய ஆள்,,இப்ப ஆள் எங்க இருக்கு "

                           " இப்ப அமல்ராஜ்ச் பஸ் முன் சீட்டில இருக்கிறார்  "

                                               " என்னது "

                                   " ஹ்ம்ம், ஆள் பஸ் ஓடுது, பஸ் டிரைவர் , இப்பத்தான் ஆள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்,,அவருக்கு ரெஸ்டாரென்ட் சரி வராது எண்டு சொல்லச்சொல்ல கேட்கவில்லையே,,இப்ப நல்ல முன்னேற்றம் "

                                  " ஒ அப்பிடியியே அப்ப தாங்கள் ,,இப்ப என்ன மாதிரி,,வாலை அடக்கி சுருட்டி வைச்சுக்கொண்டு இருகிறியா,,அல்லது இப்பவும் ஹக்கடால் இல் இருந்த மாதிரி... டேய் தம்பி யோக்கியன் வர்றாண்டா சொம்ப தூக்கி உள்ள வைடா போலவா ...இருகிறாயா "

                                      " ஹிஹிஹிஹி நானும் இப்ப கொஞ்சம் நல்லவன் போல வெள்ளைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு திரியிறன், தனிமைக்கு மாறிட்டன் "

                                       " ஓம்,,ஓம்,,அப்படியும் சில நேரம் நடக்கலாம் தான் ,ஏன் நானும் இப்ப அப்பிடித்தானே,,ஒரு பழைய தொடசல்கள் ஒண்டும் இல்லை,,மனுசியோட மட்டும் தான் இருக்கிறேன்  "

                                  " சரி விடுங்க ,, போத்தில் இருக்குதானே ,,பிறகென்னதுக்கு அடிக்க முதலே குழம்புரிங்க ,,அடிச்சுப்போட்டு பிறகு குழம்புவம் ஜோசிக்காம வாறதெண்டா காலையில் போன் அடியுங்கோ ,எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சாமி கும்பிட்டு ரெடியா நிக்கிறன் "
                                   
                                  என்று அவருக்கும் ,எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னேன். சொன்ன மாதிரி இன்று அள்ளிக்கொட்டி இருக்கு .நண்பர் இன்னும் போன் எடுக்கவில்லை . கோவத்தில கொண்டுவந்த புறாவை நேற்றும், முந்தநாளுமே கொஞ்சம் கொஞ்சமா பறக்க விட்டிருப்பாரோ என்றும் ஜோசிக்கிறேன்.
                                
                               இன்று காலையில் சிசிலியா போன் அடிச்சாள். அவள் என் பிரியமான சகி .    சிசிலியா  சும்மா  ஆள் இல்லை. பெரிய  உடையார் மணியகாரன் போன்ற ரேஞ்சில் உள்ள கொலர் தூக்கி விட்டு சபைசந்தியில் எழும்பிப் பேசிய  நோர்க்ஸ் குடும்பத்தை சேர்ந்தவள், அவளைப் பார்த்தாள் அவள் உயரத்தையும் நடையையும் நீல அக்குவா மரைன் நிறக் கண்களையும்  வைச்சே மிச்ச சாதகம் சொல்லலாம். அவளோட தாத்தா நிலச்சுவான்தார் குடி , கப்பலோடிகள்  கோத்திரம் , அவருக்கு  ஸ்பிலபேர்க்  நகரின்  சந்தியில் வெண்கலச் சிலையே வைச்சு இருக்கிறார்கள் .

                                       " ஹாய் ,என்ன செய்யுறாய்,,  மண்டைப்பிழை ,"

                                       " ஒருமண்ணும் இல்லை சும்மா சூடாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறேன் சிசில் "

                                         " அப்படியா,,சினோவைப்  பார்த்தால்  என்னவும்  எழுதி அறுப்பியே  இண்டைக்கு   என்னமும்  கதை வைச்சு இருக்கிறியா "

                               " ஹஹஹா,,எப்படித்  தெரியும்  சிசில் "

                            "  இவளவு  நாள்  உன்னோடு  இழுபடுறேன்  இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது  உற்றுப் பார்த்தால்  அதுக்குள்ளே ஒரு கதை  குந்திக்கொண்டு இருக்குமே "

                            " அட அட  இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா  சிசில்  " 

                         "  அப்படியா,  மோட்டுக்  கழுதை  ,அதை  நீ சொல்லுறாய்  எனக்கு,,நீ சும்மா  காத்தையே  பிடிச்சு வைச்சு அதையும் உருவிக்    கதை எடுத்து விடுறவன்  ஆச்சே  "

                               " ஹஹஹா,,,அதெண்டா  கொஞ்சம் உண்மைதான் ,,நீ என்ன பிளான் போட்டு வைச்சு இருகிறாய்  இண்டைக்கு "

                                    " ஒ, சினோ ஸ்கி ஒடப்போறேன் வாரியா,சொங்க்ஸ்வான் பக்கம் வரவா, எப்படி உன் பக்கம் சினோ கொட்டுதா "

                                       " ஆமாடி,,அள்ளிக்கொண்டு கொட்டுது ஹ்ம்ம்,,வாவேன் ,"

                                       " உனக்கு வேற பிளான் ப்ரோக்ராம் ஒண்டும் இல்லையா இன்று "

                                  " ஒரு மயிரும் இல்லை ,,நீ வாடி கழுதை "

                                   " பசிக்குமே,,சாப்பாடு என்ன செய்வது,,கிறிஸ்மஸ் ஜூலசிங்கே, சிவைன் ரிப்ப இருக்கு அவனில வைச்சு எடுத்துக்கொண்டு வரவா "

                                         " என்ன எல்லாம் மிச்சம் கிடக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வா,,கொலைப் பசியில் நிக்குறேன் "

                                          "அப்படியா ,,ஆச்சரியம் ,உனக்கு சாப்பாட்டில் இண்டரஸ்ட் வந்தது,,பொதுவா உனக்கு கணகணப்பா உள்ளுக்கு இறக்க என்னவும் வேண்டுமே சினோவைக் கண்டதால் "

                                                  " ஹ்ம்ம்,,அதுக்கு ஒருவர் வர இருந்தார். புறா வைச்சு இருக்கிறேன் என்று சொன்னார்,,ஆனால் போன் இன்னும் அடிக்கவில்லை "

                                          " அப்படியா,,போன் அடிச்சால் போயிடுவியா "

                                      " இல்லடி,,அந்தாள் ஒரு செம அறுவை,,பழைய பஞ்சாங்கம் போல சிஞ்ச்ச் சக்க சிஞ்ச்ச் சக்க எண்டு சுயபுராணம் பாடிக்கொண்டு இருக்கும் "

                                         " ஒ ,,என்றாலும் உன் நாட்டு மக்களுடன் உன் மொழியில் பேசுவது அலாதிதானே "

                                     " ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ,அந்தாள் இருக்கிற என்னோட அரைவாசி உயிரைத்தான் எடுக்கும் ,நீ வாடி என் கப்பக்கிழங்கு "

                                            " பரவாயில்லை,,,என்னட்ட மான் இருக்கு ,,டென்மார்க் கப்பலில வேண்டிக்கொண்டு வந்தது,வேற என்னவும் வேணுமா "

                                             " இதுக்கு மேல என்னடி வேணும் "
                                        
                                           மான் என்பது மான் படம் போத்தலில் போட்ட ஜேகமாஸ்டர் என்ற மூலிகைகளில் செய்யப்படும் அல்கஹோல் குடிவகை. டென்மார்கில் அதைப் பாதிரிமார்களின் வடிசாலையில் உற்பத்தி செய்வார்கள். அதன் ரெசிப்பி அந்தப் பாதிரிமாருக்கும் பரமபிதாவையும் தவிர வேற ஒருவருக்குமே தெரியாது .பூச்சிகளுக்கு அடிக்கிற டி டி டி போல வாசம். கஷாயம் போலக் கசக்கும் குடிக்க, குடிச்சு முடிய நுனி நாக்கு அரிநெல்லி போல இனிக்கும் .
                                          
                                           சிசிலியா டெலிபோனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு தொடர்ந்தாள், எனக்கு அவளின் சொண்டுதான் முன்னுக்கு வந்தது . சிசிலியாவின் சொண்டு அது ஒரு சிதம்பர நடராஜா ரகஸியம் . சும்மாவே அவள் சொண்டு மொங்கன் வாழைப்பழக் கலர். அதுக்கு விக்டோரியா சீ க்கிரெட்  தயாரித்த லிப்ஸ்டிக்  போட்டாள் என்றால் ரெண்டு தென்னம் கிளி நடுவில கொவ்வைப் பழத்தை வைச்சு உறிஞ்சுற மாதிரி அட்டகாசம் போடும். விக்டோரியா சிகிரெட் உலகப்புகழ் பெற்ற பசைன் டிசைன்  உடுப்பு  விக்கும்  கடை , ஒஸ்லோவில் அதுதான் மிக்கப்பிரபலம்  ,அவர்கள் தயாரித்து  வெளியிடும்  லிப்ஸ்டிக் பயங்கர விலை, ஆனால் நம்பர் வன் என்று சிசிலியா அவள் சொண்டை சாட்சிக்கு வைத்துச் சொல்லுவாள் ,,,

                                            " ஒ ,,நல்ல உடுப்பு போடு இது வேட் குளிர்,எலும்பில பிடிக்கும்,கழுத்துக்கு மப்பிளர் சுத்து,,இந்த லேட் வின்டர் நல்லதில்லை . மண்டையில் லூவர் ஸ்கோ கொழுவு,,இல்லாட்டி தலைக்கால தண்ணி இறங்கும் பிறகு உனக்கு சைனஸ் வரும் பா "

                                    " அடியே வீக்கிபீடியாவை விழுங்கினாவளே,,ஜெகமாஸ்டர் போதுமடி,,குளிரை சமாளிக்க "

                                       " சரி,,உனக்கு நான் நன்மைக்கு சொன்னாலும் கிண்டல் போல இருக்கு மாடு ,,ஜெக மாஸ்டர் முக்கால் லீட்டர் கிளாசிகல் பிரீமியம் போத்தல் தான் கொண்டு வாறன் "

                                              " அதைக் கொண்டுவா,,முதல் கதைச்சுக்கொண்டு இருக்காமல் வேலையில் இறங்கடி மவளே "

                                                " விண்டர் புல் கவர் ஓவர் ஒல் போட்டுக்கொண்டு வாறன் ,புது லீமாரோஸ் ஜக்கட் கிறிஸ்மஸ் பரிசில் கிடைததுடா "

                                             " அடியே,,என்னத்தையாவது போட்டுக்கொண்டு வாடி,,இலகுவாக் கழட்டக்கூட்டியதைப் போட்டுக்கொண்டு வாடி என்சைக்கொலோப்பிடியாவுகுப் பிறந்தவளே "

                                                  " அடி செருப்பால ,,மவனே உன்னோட உயரத்துக்கு உனக்கு நினைப்பு அதிகம் பா "

                                          " வாவ்,,வாவ்,,நீதாண்டி எண்ட ராசாத்தி ,, என்னைவிட்டால் யாருமில்லை என் உயிரே உன் கை அணைக்க "

                                                        " டேய் ,,என்னடா ஸ்ரீலன்கிஸ்கா மொழியில் பாட்டு எல்லாம் பாட்டு பாடுறாய் எ ன் னை வி ட்டா ல் யா ரு மில் லை,,இதுக்கு என்னடா அர்த்தம் மோட்டுக் கழுதை "

                                                  " எண்ணை விட்டால் என்னைப் போல கார் ஓட ஒருவரும் இல்லை எண்டு அர்த்தமடி அகராதி பிடிச்சவளே ,முதல் இறங்கு வெளியே "

                                    " ஹஹஹஹா, ஜெகமாஸ்டர் பெயரைக் கேட்டால் உனக்கு நாக்கு வெளிய தொங்குமே "

                                                " ஹ்ம்ம்,,எல்லாம்தான் வெளிய தொங்குது,,முதல் வெளிக்கிட்டு வாடி "

                                              " சரி,,உன் ப்ரென்ட் புறாவோட வந்தால் என்ன செய்வாய்,,அவரோடு போவியா தண்ணி அடிச்சுக் கும்மாளம் போட "

                                                       " அந்தாள் நோர்வேயை விட்டுப்போட்டு லண்டனுக்கு ஓடிப்போன ஒரு ஆள்..அவர் எனக்கு முக்கியமில்லை ,,நீதானே வேணும் என்ற ஏங்குறேன் ,,அன்பே வா அருகிலே குளிர் காதில கிளிப் பேச்சுக் கேட்க வா "

                                                 " என்ன,,இண்டைக்கு நல்ல குஷி மூட்டில நிக்குறாய் போல,,பாட்டு எல்லாம் பறக்குது .."

                                          " நீ வாவேன் மிச்சம் இருக்கு உனக்கு இண்டைக்கு,,ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ,,ஒரு கொள்ளை நிலா உடல் நனைகின்றது ,"

                                                " அப்புறம் பாடு மிச்சத்தையும்,,நல்லா இருக்கே பாட்டு மெலோடி "

                                            " மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா "

                                               " எதுக்குப்பா,,ஹஹஹாஹ் ஹஹஹா எண்டு வட துருவக்கரடி போல இழிகிறாய் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு "

                                           " ... ............................. "

                                                       " ஒ அடப்பாவி... கசபிளங்கா படத்தில வார சீன் போல சொல்லுராயே , ஆனாலும் நீ சும்மா வெறும் வாயல ஹோலிவுட் படம் ஓட்டுற ஆள் தானே ,,சரி,,இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ..அப்படியா ,,,பார்க்கலாம்,,,ஹ்ம்ம் ,,வந்து சொல்லுறேன் மோட்டு எருமை மாடு "
                                  
                                     அவள் குரலைக் கேட்க இண்டைக்கு " கட்டிப்பிடி கட்டிபிடி டா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடி டா " கதை போலதான் போகும் போல இருக்கு..
.

.

Saturday 19 December 2015

நீ ஒரு மடையன் மச்சான்,..

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் அலாதியான ஆடம்பரமாக ஆரம்பிக்கும் இந்த நேரம் என் பள்ளிக்கால நண்பன் சில நாட்கள் முன் கனடாவில் இருந்து அவசரமாகக் கதைக்க வேண்டும் என்று டெலிபோன் செய்தான். பொதுவா அவன் தண்ணி அடிச்சுப்போட்டு நிக்கும் போதுதான் என் நினைவு அவனுக்கு வரும் அந்த நேரம் தான் எப்பவும் போன் செய்து 

                           " நீ ஒரு மடையன் மச்சான்,,உனக்கு உலகத்தில் என்ன நடக்குதே எண்டு தெரியாமல் சும்மா வேலையும் வீடும் எண்டு ஓடிக்கொண்டு இருகிறாய்..வாழ்கையை எப்பவும் என்ஜோய் பண்ண வேணுமடா உனக்கு அது தெரியுதில்லை "

                                என்றுதான் தொடங்குவான். சில நேரம் நானும் தண்ணியில் நீந்திக்கொண்டு நிற்பேன் அப்படி நேரம் அவன் போன் எடுத்தால் ரெண்டு பேரும் பிறகு பழைய நினைவுகளில் நீந்துவோம் .சில வாரம் முன் அவன் கவலையாகப் போன் எடுத்தான் . என்ன நடந்தது என்று கேட்டேன்

" மச்சான் கழுத்தில ஒரு கட்டி வந்து இருக்கடா,அதைக் கொண்டுபோய்க் காட்ட, எம் ஆர் ஐ ஸ்கான் எடுக்க வேண்டும் எண்டு சொன்னாங்கள் டா,,"

" ஹ்ம்ம்,, அது நல்லம் தானே அந்த ஸ்கான் இல் என்ன பிரசினை எண்டு கண்டுபிடிப்பாங்கள் ,நீ ஒண்டும் ஜோசிக்காதை "

" இல்லை மச்சான்,,சிலநேரம் பிசகும் போல இருக்கு "

" என்ன பிசகும் "

" இல்லை மச்சான்,கான்சர் வராதுக்கு முதல் டியூமர் போல என்னவும் வந்து இருக்குமோ என்று ஜோசிக்கிரன் மச்சான் "

" ஒண்டும் ஜோசிக்காதை,,நீயே கருங்காலிக் கட்டை போல இருகிறாய் உனக்கு அதெல்லாம் வராது "

" இல்லை மச்சான்..பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக வந்திட்டுதுகள் அதால பிரச்சினை இல்லை "

" ஒரு பிரசினையும் இல்லை,,நீ ஜோசிக்காதை "

" இல்லை மச்சான்,எண்ட மனுசி, நான் லவ் பண்ணுறன் எண்டு சொல்ல உடுத்த உடுப்போட எனக்காக ஓடி வந்தவள் டா, அவளை இருவது வருடம் பூப் போல வைச்சுப் பார்கேறேன் டா, நாளைக்கு நான் பொட்டென்று மேல போனால் , அவள் பாவமடா "

" அட அட அட இதுக்க ஜோசிக்கிறாய் ,இதெல்லாம் சின்னப் பிரச்சினை டா,அதெல்லாம் ஒண்டும் நடக்காது "

" அவளுக்கு எண்டு சோசியல் ஹெல்த் இன்சூரன்ஸ் இல் காசு போட்டு வைச்சு இருக்றேன் ,"

" ஒ இது இன்னும் நல்லா இருக்கே, நீ நல்ல தீர்க்கதரிசனம் உள்ளவண்டா "

" ஹ்ம்ம்,,அவள் வாழ்க்கை பாவமாப் போகக்கூடாது எண்டு அப்படி செய்து வைத்தேன் டா ,உண்மையான அன்பு இருந்தா அப்படிதாண்டா செய்வாங்க,உனக்கு எங்க இதெல்லாம் விளங்கப் போகுது "

" ஹ்ம்ம்,உண்மைதான் ஒரு பெண்ணுக்கு பினான்சியல் சப்போட் இல்லை என்றால் அது சைட் டிஷ் இல்லாமல் தண்ணி அடிக்கிற மாதிரி டா,,நானும் ரெம்பவே கவலைப்படுவேன் "

" என்னடா இவளவு பொசிடிவ் ஆக சொல்லுறாய்,,நான் நிறைய ஜோசிகுறேன் டா மச்சான் "

" ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ,நீ ஜோசிக்காதை "

" என்னடா சொல்லுறாய்

" ஆமாடா படைச்ச ஆண்டவன் பூப்போல உள்ள பெண்களை அந்தரிக்க விடமாட்டன் பா ஒரு வழி இல்லை இன்னொரு வழி வைச்சு இருப்பான் டா "

" ஆனாலும் கவலையா இருக்குடா "

" இதெல்லாம் சின்னப் பிரசினை டா,மனதை நல்ல திடமா வைச்சுக்கொண்டு போய்க் கழுத்தைக் கொடு "

" உண்மையாவா சொல்லுறாய் டா,,நான் நினைச்சேன் நீ ரெஸ்ட்றோரெண்டுகளில் குக் வேலை செய்து கொண்டு இருப்பதால் ,உனக்கு சமையலை விட்டால் உலகத்தில் ஒரு மண்ணும் தெரியாது எண்டு "

" இல்லைடா,,எனக்குப் பொறுப்பு எண்டு ஏதும் வந்தா அதைப் பொறுப்பா செய்வேண்டா ,இதெல்லாம் சின்னப் பிரசினை "

" என்ன சின்னப் பிரசினை,,,நீயே ஒரு உருப்படாத கழுதை,பேஸ் புக்கில் கதை,கவிதை எண்டு எழுதிக்கொண்டு வீணாப் போற மூதேசி,உனக்கு எங்க உலகம் தெரியும் சொல்லு பார்ப்பம் "

" டேய் இதுக்கு எல்லாம் பெரிசா ஜோசிக்காதை நீ மேல போனால் உன்னோட மனுசியை யாரோ ஒரு நல்லவன் பூப் போல வைச்சுப் பார்ப்பான் டா "

                                   நேற்று இரவு அவன் மறுபடியும் அடிச்சுப் பிடிச்சுப் போன் எடுத்தான்

" மச்சான் அது சும்மா சூட்டில வந்த கட்டி எண்டு டாக்டர் சொன்னார்டா ,அதலா நல்லா தலைக்கு எண்ணை வைச்சுக் குளிச்சேன் , இப்ப ஓகே டா மச்சான் ,நீ ஜோசிக்காதை மச்சான் "

" ஹ்ம்ம் .."

" என்ன சொல்லு பார்ப்பம் மச்சான் நான் பெரிசா பயந்து கொண்டு நினைச்ச மாதிரி கடைசியில ஒண்டுமே நடக்கவில்லை டா "

" ஹ்ம்ம், நானும் தான் பெரிசா நினைச்ச மாதிரி ஒண்டுமே கடைசியில நடக்க வில்லையே .."

.

ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .

MBS என்று செல்லமாக அழைக்கப்பட்டM.B. ஸ்ரீநிவாசன்,ஆந்திராவில் பிறந்து,மலையாளத்தில் புகழ்பெற்ற இவரை ,தமிழ் சினிமாவில் இசை அமைக்க அப்போது இருந்த ஜாம்பவான்களுக்கு சவாலாக ,. தனது தாய் மொழி மலையாளத்தில் தனக்குப் பிடித்தவரை தமிழ் சினிமாவில் இசைஅமைக்க K .J ஜேசுதாஸ் தமிழுக்கு கொண்டுவந்தார் என்கிறார்கள்!

                                        மலையாளத்தில் மறக்க முடியாத பல மெட்டுப் பாடல்களை அவர் K .J ஜேசுதாஸ் இக்குக் கொடுத்து அவரைப் பிரபலம் ஆகியவர்களில் இவரும் ஒருவர் எண்டு மலையாளிகள் பறைகிறார்கள் ! ஜேசுதாசுக்கு தமிழில் முதன் முதல் சந்தப்பம கொடுத்தவர். ..வீணை.S.பாலச்சந்தர்....பொம்மை திரைப் படத்தில்...1963.இல் இத் திரைப் படத்தில் K.V.மகாதேவனும் நடித்திருந்தார் எண்டு நண்பர் ஆதவன் சொன்னார் ,. அதிகம் தமிழ்படம் இசை அமைக்காத M.B. ஸ்ரீநிவாசன் ஜேசுதாசுக்கு தமிழில் சந்தப்பம கொடுத்தஇசைஅமைத்த சில பாடல்களே "செம ஹிட்" ஆகிஇருக்குது! அருமையான பாடல்களை தந்தவர்.சில பாடல்கள் ஆயினும் நிலைத்து நிற்கிறார்.

                                        ஜான் ஆபிரகாம் என்ற புகழ் பெற்ற மலையாள ஆர்ட் பட இயக்குனரின் "அக்கிறகாரத்தில் கழுதை " என்ற படத்தில அவர் ஹீரோவா நடித்தும் இருக்குறார், அந்தப்படம் தேசிய விருது பெற்றது!70 ல்களின் இறுதியில் சிவகுமார் நடித்து வந்த " மதனனமாளிகை " படத்தில் ,ஹிந்துஸ்தானி சாயல் அதிகம் உள்ள " அமீர் கல்யாணி என்ற ராகத்தில "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .."என்ற   இந்த ப்பாடல் இசை அமைக்கப்பட்டது!

                                    இசையானி இளையராஜா இவரிடம் உதவியாளரா இசை அமைப்பு பழகப்போன நேரத்தில் ராஜாவுக்கு "வெஸ்டர்ன் நோட்ஸ்" வாசிக்க தெரியாததால் அவரி தனராஜ மாஸ்டரிடம் "வெஸ்டர்ன் கிளசிகள் பியானோ" படிக்க அனுப்பி இருகிரர்ராராம் ஸ்ரீநிவாசன் ,,என்றும் ஒரு நண்பர் சொன்னார் ,,ஸ்ரீனிவாசனும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றி எதாவது பாடல்கள் வெளிவந்ததா எண்டு எனக்கு தெரியாது ..

                               இந்தப் பாடல் கிடாரில் வெஸ்டர்ன் சுர அமைப்பில் எந்த " scale " இல் வரும் எண்டு எனக்கு சரியா தெரியவில்லை(? ) ! குருடன் பெண்டிலுக்கு அடிச்சா மாதிரி ஒரு குத்து மதிப்பில வாசித்து இருக்கிறேன் ! பின்னணி மிருதங்கம் எனோட கிடாரில மேளம் போல தட்டி வாசித்தால் கொஞ்சம் ஓகே போல இருக்கும் இதே படத்தில "ஒரு சின்னப்பறவை அன்னையை தேடி" என்ற பாடலும் இருக்குறது !

                                    M.B. ஸ்ரீநிவாசன் "மார்படைபால்" திடீர் எண்டு இந்தியாவுக்கு அருகில் உள்ள இலட்ச தீவுகள் என்ற நாடுக்கு சுற்றுலா போனபோது இறந்துவிடார், அவரோட இசையின் ஆன்மாவை நீங்கள் இந்த பாட்டு "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "கேட்கும் போது உணரமுடியும், K .J .ஜேசுதாஸ் உம் P .சுசிலாவும் பிறந்ததே பாடுறதுக்கு எண்டதுபோல பாடி இருக்குறார்கள்! இதே படத்தில் தான் உஷா உதுப் பாடிய Under the Mango Tree...என்ற ஆங்கிலப் பாடலும் இருக்குதாம் என்று சகோதரி அருந்ததி சொன்னார்கள் ..

                                       M.B. ஸ்ரீநிவாசன் இசையின் Chords Arrangements ல் தெலுங்கு வெங்கடேச தட்சனாமுர்தியின் ஸ்டைல் இவரிடம் இருக்குது! இந்த "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "பாடலை அழகாக கலை அம்சமாக படம்பிடிக்கவில்லை! சிவகுமார் ஒரு பைத்தியக்காரன்போல தலை மயிரை வளர்த்து கொண்டு,சம்பந்தா,சம்பந்தம் இல்லாமல் நடனம் ஆடுவார் ! இப்படி பல பாடல்களை கவுத்துருகின்றார்கள் தமிழ் சினிமாவில்! " இளமை எனும் பூங்காற்று " பாடலை அப்படிதான் சொதப்பி படம் எடுத்தார்கள்!

                                               சத்தமே இல்லாமல் ,அரிதான ராகங்களில் ,புதுமையாக எதனை முறை கேட்டாலும் அலுக்கதா சில பாடல்ளை அவரின் " ஆன்மா பாடிய சங்கீதம்" போல M.B ஸ்ரீனிவாசனே இதை அவர் பாடலின் மூலம் தெரிவிக்கிறார் .வாழ்க அவர் புகழ்.வாழ்க அவர் சங்கீதம்
...................

Thursday 10 December 2015

மங்களேஸ்வரி இரண்டாவது சண்டை

மூன்றாம்நாள் மங்களேஸ்வரி நேரத்துக்கு வந்து நான் என்ன சமைக்கிறேன் எண்டு பார்த்தா. சக்சுயுவர் கசுவல் சமர் டீசேட் மேல போட்டு ஒரு வடிவான நீலோட்பவ மலர்கள் நாவல் கலரில் அடுக்கி வைச்ச  ஸ்கார்ப் கழுத்தில சுத்திக்கொண்டு,  டிம்பர்லான்ட் டெனிம் கீழ போட்டு இருந்தா. அந்த டெனிம் ஜீன்ஸ்  அவாவின் குண்டு உடம்புக்கு தமிழ்நாட்டு பொலிஸ் போல இடைவெளிகள் விட்டு இன்னும் ரெண்டுபேரை  உள்ளுக்கு இறக்கலாம் போலப் வண்டிப் பக்கமா பிதுக்கிக் கொண்டு நிண்டது  எனக்கு வாயை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்க முடியாது,

                           " மங்கல்ஸ் இந்த ஸ்கார்ப் நல்ல வடிவா இருக்கு உங்களுக்கு, பார்பரா ஸ்டைன்பில்ட்  பாடின ஐ  ஆம் எ வுமன் இன் லவ் பாட்டுக்கு அவா பாடுறதைப் பார்த்து இருக்கிறிங்களா , அவாவும் இப்படிதான் நாவல் கலர் ஸ்கார்ப் கழுதைச் சுற்றிக் கட்டிக்கொண்டு பாடுவா"

                        " ஒ அப்படியா நான் இப்ப இதெல்லாம் உன்னட்ட கேட்டனா.."

                       " இல்லை மங்கல்ஸ்,,உங்களுக்கு இந்த ஸ்கார்ப் அட்டகாசமா இருக்கு.."

                        " ஒ அப்படியா,,சரி  நீ வந்தா முதல் வேலையைப் பார், பெண்டுகளின் உடுப்புப் பற்றி சொல்ல நீ என்ன பெரிய பசைன் டிசைனரா,,நீ செய்ய வேண்டிய வேலையே உனக்கு ஒழுங்காத் தெரியாது "

                        " என்னோட கருத்தைச் சொன்னேன் மங்கல்ஸ் "
                 
                         " நீ கருத்தும்,,கிருத்தும் சொல்ல வேண்டாம்,,இதுக்கு உனக்கு நோர்வே அரசாங்கம் சம்பளம் தரவில்லை தெரியுமா,,வந்தமா அண்டா குண்டாவை உருட்டிப் பிரட்டி சமைக்கத் தொடங்கினமா எண்டதை விட்டுப்போட்டு ,பெண்டுகளின் தாவணியில் என்ன முடிஞ்சு இருக்கு எண்டு ஆராய்ச்சி செய்யத் தேவை இல்லை இப்ப, "

                          " தேங்க்ஸ் மங்கல்ஸ்,   வேலைக்கு வந்த முழுவியளத்துக்கு உங்களிடம் திட்டு வேண்டியாச்சு ,,மங்கல்ஸ் ,,இண்டைக்கு வேலை ஆகோ ஓகோ எண்டு பிச்சிக்கொண்டு போகப் போகுது "

                        " அப்ப உன்னில முழிக்கிற எனக்கு என்ன முழுவியளம்,,அதயும் சொல்லு "

                       " தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."

                            " முதல் இந்தப் பாட்டை நிப்பாட்டு,,கேக்கக் கொதி வருகுது,,,நீ இவளவு நாள் சொல்லியும் திருப்பியும் திருப்பியும் என்ன மங்கல்ஸ் எண்டுதான் சொல்லுறாய்,,அதாவது இருந்திட்டுப் போகட்டும் ,,ஆனால் இந்தப் பாட்டை நிப்பாட்டு,,கேக்கக் கொதி வருகுது "

                               " சரி மங்கல்ஸ் இனி நான் இந்தப் பாட்டைப் பாடவில்லை,,ஓகே தானே "

                                 அன்றைக்கு புதன்கிழமை  மெனுவில் பெப்பர் ஸ்டேக் என்ற நோர்வே உணவு இருந்தது .பிரிச்சைத் திறந்து பார்க்க,அது செய்வதுக்கு மாட்டுத் துடை பீப் இறைச்சி குறைவாக இருந்தது,போன கிழமை நல்ல சூரியா வறுத்த மிளகாய்த்தூள் போட்டு அதில அரைவாசியை நானே பிரட்டல் கறி செய்து சாப்பிட்டது நினைவு வந்தது. .ஆனால் அந்த மெனுவில் சூப் இல்லை .நான் பீப் ஐக்கைக் கவர் பண்ண சூப் ஒன்று போட்டேன் .கொஞ்சம் இந்தியன் ஸ்டைலில் லென்டில் சூப் வேண்டுமென்றே மங்கல்ஸ் பார்க்கட்டும்  என்று போட்டேன்

                                             வயதானவர்கள் என்னோட சூப்புக்கு  எப்பவுமே அடிமை போல எப்ப வருகுது என்று பார்த்தே இருப்பார்கள். அதை செய்து எல்லாருக்கும் பரிமாறினேன். மங்கல்ஸ் சந்தேகமாப்  பார்த்துக்கொண்டு இருந்தா என்ன நடக்குது எண்டு. வயதானவர்கள் ரசித்து கடைசித்துளியையும் கரண்டியால் அள்ளி உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள் . அது அவாவுக்கும் அவாவின் சத்துணவு சட்டத்துக்கும் பிடிக்கவில்லை

                               "  பெப்பர் ஸ்டேக் தானே மெயின் கோர்ஸ் ஆக இருக்கு  என்னத்துக்கு இப்ப சூப் அதுக்கு முதல் செய்து கொடுக்கிறாய் அது சத்துணவுச் சட்டப்படி கலோரியை அதிகமாக்கும் அது உனக்கு சட்டப்படி பிழை என்று தெரியவில்லையா வயதானவர்கள் கையைக் காலை ஆட்டி எக்ஸ்ரா கொழுப்பை எரிக்க முடியாவிட்டால் இந்த சூப் ரத்த ஓட்டத்தில் உப்பை அதிகாரிக்கும்  அது உனக்குத் தெரியுமா "

                               என்று நான் எதிர்பார்த்த வில்லங்கமான கேள்வியைக்  கேட்டா
                                 
                                " சாப்பாட்டுக்கு முதல்    சூப்    ஒண்டு குடுத்தா,,அது நாக்கைத் திறக்கும் மங்கல்ஸ் "

                                " நாக்கை திறக்கிறதா ,இல்லை நாக்கை நீட்டுறதா எண்டு  நீ டிசைட் பண்ணக்கூடாது,அதை நாங்கள் தான் டிசைட் பண்ணுவம்.அது கட்டாயம் தேவை என்டா நாங்களே அதை இன்றைய மெனுவில் சேர்த்து இருப்பமே."

                              " சரி,,மங்கல்ஸ்,,இனி இப்பிடி செய்யவில்லை "

                               " இப்பிடித்தான் சொல்லுறாய்,,ஆனால் நீ நினைச்சதை செய்துகொண்டு தானே இருக்கிறாய், வியாழகிழமை உனக்கு விசாரணை மூன்று பேர் வருவாங்கள் உன்னை விசாரிக்க,அவங்களுக்கும் எண்ணுக்குக் காட்டுற மாதிரி வாய்க்கு வாய் காட்டாதை "

                                " சரி,,மங்கல்ஸ் ,,உண்மையைக் சொல்லுறேன் "

                                   " வெள்ளிகிழமை எனக்கு,,ஹ்ம்ம் , மங்களேஸ்வரிக்கு இங்கே  கடைசி நாள் ,,ஹ்ம்ம்,,,உணக்கும் கடைசி நாளா இருக்கும் இங்கே வேலை செய்வதுக்கு "

                                  " ஹ்ம்ம்,,சரி மங்கல்ஸ் ,,இதில ஜோசிக்க என்ன இருக்கப்போகுது "

                                    " ஹ்ம்ம்,,இந்த வேலை போனால் பிறகு என்ன வேலை செய்யிற உத்தேசம் .."

                                    " ஹ்ம்ம்,,ஒரு தமிழ் பிரன்ட் ரின்சோரின் பிர்மா வைச்சு இருக்கிறார்,,சன்விக்காவில் ஒரு பெரிய வீடறவன்ச ஸ்கூல் இல்  கழுவ வேலை இருக்கு விரும்பினா வரச்சொன்னார் "

                                     " ஒ ,,அப்படி வேலைதான் உணக்குச் சரிவரும்,,அதையாவது உருப்படியாச் செய்து வாழ்கையில் முன்னேறு,,ஆனால் நான் அடிச்சுச் சொல்லுறேன் நீ அதையும் ஒழுங்கா செய்ய மாட்டாய்,,இருந்து பார் "

                              "   ஹ்ம்ம், அந்த வேலையே இன்னும் தொடங்கவில்லை,,ஆனாலும் உங்கள் மங்களகரமான வாழ்த்துக்கு நன்றி மங்கல்ஸ் "

                          " கழுவல் துடையல் கொம்பனி,,அது உனக்கு ஒத்துவரும்,,மண்டையைப் பாவிக்கத் தேவை இல்லை அந்த வேலைக்கு "

                                  " நன்றி உங்களின் ஆசீர்வாதத்துக்கு மங்கல்ஸ் "

                            "  எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம்,,சிசிலியா யார் உனக்கு ,,அவள் பிறகும் இப்பிடி வேலை எங்கயும் பழசுகளிண்ட மண்டையைக் கழுவுற இடத்தில எடுத்து தருவாளே,,அவள் தானே இந்த வேலை எடுத்து தந்தது என்று பிளான்லாகனிங்  ஒப்பிஸ் இல் கேள்விப்பட்டனே "

                               "  ஒ சிசிலியாவை உங்களுக்கு தெரியுமா மங்கல்ஸ் ,சிசிலியா என்னோட பிரெண்ட்..

                               "  அது  தெரியுது  அந்த  எடுபட்டவள்  உனக்கு  ரெக்கமென்ட்  செய்து  இருக்கிறாள் ..அதுதான்  ஆச்சரியம் "

                                   "  சிசிலியாவை  அப்பிடி  சொல்ல  வேண்டாம் மங்கல்ஸ்   அவள்  நல்லவள் "

                                 "    அட அட  கோபம்  மூக்கில முட்டிச்சிவந்துகொண்டு வருகுதே "

                                 "  என்னைப்பற்றி  என்னவும்  சொல்லுங்கோ   சிசிலியாவை  விடுங்க "

                                    "அட அட  உன்னை  ஒருத்திபோய்  வேலைக்கு  ரெக்கமென்ட்  செய்து  இருந்தால்  அவள்  கட்டாயம்  எடுபட்டவளா தானே  இருக்க  வேண்டும் "

                                    "  அவளுக்கு ஏற்கனவே நிறைய அலுப்புக் கொடுத்திட்டேன்,,இனி அவளா வந்து ஏதும் வேலை எடுத்து தந்தாலும் போக மாட்டேன் "

                       "   பரவாயில்லையே,,குற்றவுணர்வு எல்லாம் இருக்கே உனக்கு , சிசிலியா யாரா இருந்தாலும் எனக்கு ஒண்டும் கொம்பு இல்லை,,நீ அவளை தலையில தூக்கி வைச்சு ஆடு..நான் அவளுக்கு பயமுமில்லை ..மதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.."

                               " ஹ்ம்ம் சிசிலியா நல்லவள்...அருமையான பெண் ,,என்னோட எல்லா அட்டகாசமும் ரசிப்பாள்...உங்களை மாதிரி ரிப்போட் எல்லாம் எழுத மாட்டாள் "

                                 " ஏனென்றால் அவள் உன்னை நம்புறாள் ,,அதால அவளிண்ட தலையைக் கழுவி நீ உன் வேலையைக் நசுக்கிடாமல் கொண்டு போறாய்..இதுதான் நடக்குது "

                                  "  சரி மங்கல்ஸ் நீங்க சொல்லுறது ,,அப்படிதான் நடக்குது "

                              " வெட்கமாக இல்லையா உனக்கு ஏமாந்த சோணகிரிப் பெண்டுகளின் தலையில இழுத்து இழுத்து சம்பல்அரைக்கிறாயே "

                              "  எனக்கு வெட்கமும் இல்லை ,ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை "

                                " அதெண்டா  உண்மைதான் , ரோச நரம்பு எப்பவோ அறுந்த மாதிரி உன் முகத்தில நல்லாவே எழுதி ஒட்டி இருக்கு "

                                        மங்கல்ஸ்க்கு கரிநாக்கு ,அவா சொன்ன மாதிரித்தான் அந்த சன்விக்காவில் கழுவுற  வேலையில் இருந்தும் ஒருநாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த பியானோவில் யாருமில்லாத நேரம்  அந்தப் பள்ளிக் கூடாப் பிரிஞ்சுபல் ரெபெக்காவை  மடியில இருத்தி வைச்சு பாட்டு வாசிக்கப் போய்...வேலைக்குச் சேர்ந்து   மூன்று மாதத்தில் தும்புக்கட்டையால அடிச்சுத் துரத்திப் போட்டாங்கள். மங்கல்ஸ்க்கு கரிநாக்கு ,அவா சொன்ன மாதிரியே தான் அது நடந்தது,,அதைப்  பிறகு ரெபேக்கா கதையில் சொல்லுறேன்...

                                              அந்த எல்டர் சென்டரின் இன்னொரு மூலையில் ஹெல்த் செண்டர் இருந்தது. அதில ஒரு நேர்ஸ் வேலை செய்தாள். வயதானவர்களின் பிளட் சுகர்  , பிரஷர் செக் பண்ணுவாள். பல  உடல்நலக்குறைவுக்கு பரிகாரம் சொல்லி அவர்களை வேண்டுமென்றால் டாக்டரிடம், சிலநேரம் தேவையென்றால் பிசியோதிரபி கொடுக்கும் இடங்களுக்கு அனுப்புவதுக்கு ஒழுங்கு செய்வது அவள் வேலை. முக்கியமாக வயதானவர்கள் அவர்களின் நடையில் , முகத்தில் வைச்சு அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்டு பிடிப்பாள்.

                                   அவளுக்கு நடுத்தர வயது. இங்கிலிங் பேரிட் சோல்பேர்க் என்று பெயர். ஸ்மார்ட் ஆக குத்திக் காலில  குத்திக் குத்தி மாரித் தவக்கை மண்டுவம் தண்ணியில நீந்துற மாதிரி கையை விசுக்கி நடப்பாள். சில நேரம் அவள் போலவே அவளுக்கு முன்னால நான் நடந்து காட்டுவேன்,ஈஈஈஈஈஈஈஈ எண்டு ருவாண்டா பபூன் குரங்குபோல சிரிப்பாள். சிலநேரம் என் முதுகில டோம் என்று ரெண்டு முஸ்டிக் கையாலும் குத்துவாள். இதை மங்கல்ஸ் ஒருநாள் பார்த்துக்கொண்டு இருந்தா. இதுவும் சத்துணவுச் சட்டப்படி பிழை என்று நினைச்சு இருப்பா.

                                இங்கிலிங் காசு குடுத்தாலும் கதிரையில் இருக்க மாட்டாள் எப்பவுமே என்னவாவது ஓடி ஓடிச் செய்துக்கொண்டு இருப்பாள்  . எல்டர் சென்டரில் வயதானவர்களுக்கு நான் சமைக்கும் சாப்பாடு ஒருநாளும் சாப்பிட மாட்டாள்.வீட்டில இருந்து சாப்பாட்டுப் பெட்டியில் பகல் உணவு கொண்டு வருவாள்.  சில நேரம் நான் என்ன தில்லுமுல்லு  சமையலில் செய்யுறேன் என்று அவளுக்கு நல்லாத் தெரிந்து இருக்கலாம். வந்த முதல் நாளில் இருந்து மங்கல்ஸ் அதையும் கவனித்துக் கொண்டு இருந்தா.

                                         ஒரு அற்ப விசியமும் என்னோட கதைக்காத இங்கிலிங் ஒரு விசியம் மட்டும் என்னோட எப்பவும் அவளாவே வந்து கதைப்பாள்.அவள் ஜெகோவா விட்னஸ் என்ற கிறிஸ்தவ நம்பிக்கை அமைப்பில் தீவிர விசுவாசியாக இருந்தாள்.அதால் அந்த அமைப்பு வெளியிடும் வோச் டவர்  என்ற பத்திரிகையின்  தமிழில் வரும் காவற் கோபுரம் மொழிபெயர்ப்பைக்  கொண்டு வந்து வாசிக்கச் சொல்லி தருவாள். அதில எப்பவுமே ஒரு கட்டுரை மோசமான மனிதர்களாக இருந்து எப்படி ஜெகோவா தங்களை முழுமை மனிதர் ஆக்கினார் என்று விசிவாசிகள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை எழுதி இருப்பார்கள், அதை மட்டும் தான் அதில நான் வாசிப்பேன்.

                                     அன்றைக்கு வெளியால நல்ல வெய்யில் வசமா வடக்கு தெற்கு பக்கமா விழுந்து கொண்டு இருந்தது,மரங்கள் கொஞ்சம் பாசியாக பச்சை நிறத்தை உறிஞ்சிக்கொண்டே மெல்லிய குளிர் காற்றோடு பழங் கதைகள் கதைத்துக்கொண்டு   இருக்க , எல்டர் செண்டர் இக்கு வெளியே மரவாங்கில் இங்கிலிங் கோப்பி குடிச்சுக்கொண்டு இருந்தாள் ,நான் மங்கல்ஸ் ஐத் தேடினேன் அவா கண்ணாடி போட்டுக்கொண்டு,ஒரு மூலையில்  சத்துணவு ரிப்போட் எழுதிக்கொண்டு இருந்தா

                                " மங்கல்ஸ் ஒரு கோப்பி எடுத்துக்கொண்டு வாங்களேன் வெளிய போய் மரவாங்கில் கொஞ்ச நேரம் இருப்பம்."

                                      "  ஒ ,,இப்ப நான் பிஸி,,இப்ப நான் என்ன எழுதிக்கொண்டு இருக்கிறான் தெரியுமா "

                               " என்ன வேற  எழுதப்போரிங்க,,,எனக்கு ஆப்புத்  தானே எழுதுறிங்க,,அதைக் கொஞ்சம் வெளிய போய் முகத்துக்கு வெயில் பிடிச்சுட்டு வந்தா இன்னும் இறுக்கி எழுதலாமே "

                               "  உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை ,  உனக்குப் பயம் இல்லையா "

                             "  இல்லை மங்கல்ஸ் ,,பயத்தை எப்பவுமே பத்தடி தள்ளியே வைப்பேன்,பயம் உண்மையில் பிரயோசனம் இல்லை..சும்மா டைம் வேஸ்ட் அது ,நான் அதை மண்டைக்குள் ஏற்றுவதேயில்லை "

                                " ஒ.சும்மா  வாய்தான் ."

                                   " நெல்சன் மண்டேலா இருவத்தி மூன்று வருடம் ஜெயிலில் இருந்தாராம் , அவர் வாழ் நாள் முழுவதும் விரும்பிப் படித்த ஒரே ஒரு கவிதை Invictus ,,,அது  தெரியுமா மங்கல்ஸ் ."

                                   "இது எல்லாம் யார் உனக்கு சொல்லித் தந்தது, சிசிலியா  சொல்லித் தந்தாளா  " 


                                  " இல்லை ,,நானே அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் படிச்சேன் மங்கல்ஸ் " 


                           

                            " சரி, அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் "

                    

                                " வில்லியம் எர்னெஸ்ட் ஹென்லி என்பவர் எழுதியது அந்தக் கவிதை ,தன்னோட வாழ்கையில் முதலில் பயத்தைஅடியோடு அகற்றியது என்றும் பின் அகிம்சை வழிப் போராடதுக்குத் தன்னை  மாற்றியது என்றும் மண்டேலா எழுதி இருக்கார் "

          

                                 " ஒ,,, அதால இப்ப தாங்கள் சொல்ல வாறது என்னவென்று அறிய முடியாமா , மிஸ்டர் N ... "
     

                                  " அதெல்லாம் எல்லாம் படிச்சிருந்திங்க என்றால் இப்படி கேள்வி எல்லாம் கேட்க மாட்டிங்க மங்கல்ஸ் அதுதான் நான் சொல்ல வந்தது மேடம் " 


                              " பெரிய தத்துவத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை,,சரி கோப்பி மிசினில கோப்பி எடுத்துக்கொண்டு வாறன்,அந்த நேர்ஸ் உடன் எனக்குக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை,,சும்மா வாறன் "

                           "  இங்கிலிங் நல்லவள்,,சும்மா வாங்க ,,வந்து இருங்க ,,அவள் ஒரு தண்ணி தெளிச்சுவிட்ட  பைபிள் கேஸ்..அவள் வாயைத்திறந்து விட்டால் சுவிசேசம் தான் கொட்டும் "

                                       " அந்த  அறுவையை  என்னையும்  கேட்கச்  சொல்லுறியா ,,நான்  சுத்த  சைவம்  தெரியுமா,,வெள்ளிகிழமை   பாம்புப்  பொத்துக்கு  பால்  ஊற்றி விரதம்  இருக்கும்  குடும்பத்தில்  பிறந்த  ஆள்  தெரியுமா  அது  உனக்கு "

                                    "பாம்பு  பால்  குடிக்காது....சயன்சில்  பாம்பு  பால்  குடிக்கும்  என்று  இல்லை,,,அது சும்மா  ஒரு  நம்பிக்கை  " 

                                     " அட  அட    ,,,பாம்பு  பால்  குடிக்காதா ,,உண்மையாவா  சொல்லுறாய் "

                                       " ஓம்...மங்கல்ஸ்  பாம்பு  பால்  குடிக்காது,,,நான்  சொல்லுறது  பொய்  என்றால்  ஒரு  பாம்பு  கொண்டுவாரன்  பால்  வைச்சுப்  பார்ப்பமா "

                                      " அய்யோ,,,ராமா  ஆளைவிடு ,,சரி  கோப்பி  குடிப்பம்..ஆனால்  நான்  அந்த  நேர்ஸ் உடன்  கதைக்க மாட்டேன் "

                                     ".சும்மா கதைப்பம் வாங்க மங்கல்ஸ் ,இப்பிடி ,ரிப்போட் எழுதி எழுதியே உங்களுக்கு ஒயில் இல்லாதா எஞ்சின் போல மண்டை இறுகப்போகுது "

                               "  அடி  செருப்பால ,,முதலில்  மேலதிகாரிக்கு  நக்கல்  நளினம்  நெளிப்புக்  காட்டாதை "

                                        ஹம்..செருப்பால  பிறகு  அடியுங்க,,இப்ப கோப்பி  குடிப்பம்  வாங்க  மங்க்ல்ஸ் 

                                      நான் ஒரு கோப்பிக் கோப்பையில் கோப்பி எடுத்துக்கொண்டு போய் இங்கிலிங்க்கு முன்னால இருந்தேன். மங்கல்ஸ் ஆப்டன் போஸ்டன் நோர்வே நியூஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு வந்து அந்த மரவாங்கின் தொங்கலில் இருந்தா. இங்கிலிங் மங்கல்சுக்கு ஹைய்  சொன்னாள், மங்கல்ஸ் ஹைய் சொன்னா, நியூஸ் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அதை ஆர்வமா வாசிப்பது போலப் பாவனை செய்துகொண்டு இருந்தா .

                                            நான் ஒரு பரமுன்ட் கோல்ட் சிகரட்டைப் பெட்டியில் இருந்து உருவி எடுத்தேன்.அதை மேசையில் மூன்றுதரம் பில்டர் பாக்கமாகத் தலை கீழாகத்  தட்டினேன், பிறகு அதை மேலும் கீழும் நீவி விட்டேன், பிறகு அதை முகர்ந்து பார்த்தேன். எரிஞ்சு கரியாகப் போகப் போற சிகரட்டில் தான் வாழ்வின் உன்னதமான விசியங்கள் அடங்கி இருப்பது போல அதை வைச்சு விளையாட்டுக் காட்டினேன். நான் எப்பவுமே அப்படிதான் சிகரட் பத்துறத்தை வளைக்காப்பு போட்ட பெண்கள் நடு இரவில் நடந்த சம்பவங்களை நினைப்பது போல  ஒரு நல்ல சந்தோஷ நிகழ்வாக நினைப்பது


                                       பிறகு நான் இங்கிலிங் உடன் கதைக்கத் தொடங்கினேன். அவள் 

                                 "  புதிதாக நோர்வேயிட்கு வந்துள்ள அரசியல் அகதிகளுக்கு ரோட்டில நிண்டு காசு சேர்கிறோம் உண்டியல் குலுக்க வாறியா " எண்டு கேட்டாள். 

                                      "  நானே  சீவியத்துக்கு  உண்டியல்  குலுக்கிக்கொண்டு  நிக்கிறேன் இங்கிலிங் ,,நீ  வேற முசுப்பாத்தி  விடுறாய் "

                                     "  உனக்கு  என்ன  குறை ,,நல்ல  குக்  வேலை  செய்யுறாய்  தானே "

                                " அதுவும்  சில  நாட்களில் கையை விட்டுப்போயிடும் இங்கிலிங் "

                               "   என்ன  சொல்லுறாய் ,,என்ன  நடக்குதுப்பா  உன்  வாழ்க்கையில்  "

                                    " காலைவார  ஒரு   கூ ட்டம்  இருக்கும்வரை ,,எது  எல்லாம்  நடக்கவேணுமோ  அதெல்லாம்  நடக்கும்  போலதான்  இருக்கு நடப்பு  நிலவரம்  இங்கிலிங் "

                                     "   அது  பெரிய பிரசினை  இல்லை ,,ஆண்டவர்  கைவிட  மாட்டார்  நம்பு  பைபிளில் ஏசயா  தீர்கதரிசி  சொல்லி  இருக்கிறார் தடம்புரளும்   நேரத்திலும்   ஆட்டுக்குட்டி  மான்  போலப்  பாயும்  ஆண்டவர்  உன்  கண்ணீருக்கு பதில்  தருவார்  என்று  பயப்பிடாதை "

                                      "   ஹ்ம்ம்,,ஆனாலும்  பசுத்தோல் போர்த்த  புலிகள்  தானே  நரிகள்  போல  உலாவுதுகள்  நம்மைச்சுற்றி இங்கிலிங் "

                                    "  ஹ்ம்ம்,,நீ  என்னவோ  வெறுப்பில  யாரையோ  குத்திக்காட்டும் நோக்கத்தில்  என்னவோ  சொல்லுறாய்,,ஒழுங்கா சொல்லு "

                                     " சொல்லுறதுக்கு  இதுக்குமேலே  ஒன்றுமில்லை இங்கிலிங் "

                                     "  சரி  விடு  ஜோசிக்காதை  நல்லதே  நடக்கும்  உனக்கு "

                                                 நான் உண்மையில் அவளுடன் அதிகம் பைபிள் பற்றி  கதைக்கவில்லை எண்டுதான் சொல்ல வேணும்  என்னோட கடைசி நரிக்குறவக்  குறளிவித்தையை அவளை நடுவில வைச்சு மங்கல்ஸ்க்குக் அதில காட்டினேன். ரெண்டாவது பொறுத்த சண்டை அந்த மேசையில் உருவாகும் என்று அம்மாவனா என்னோட வீராளி அம்மாளாச்சி சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்லை,,,

............தொடரும் .........


Monday 7 December 2015

சல்லிமுட்டி

வாழ்க்கை போலத்தான் ஒரு கதையும் எங்கே தொடங்கும் எப்படி முடியும் என்று சொல்லவே முடியாது. நாசமாப்போன இந்தக் கதை எங்கள் ஊரில் பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும் அம்மச்சியா குளத்துக்கும் நடுவில் தொடங்கி வட அமெரிக்காவில் இருக்கும் போஸ்டன் ,மசாசூசெட்,நியூ ஜோர்க்,பிலடெல்பியா  என்று அலைந்தது. ஆனால் வலிகள் என்னவோ ஒரே மாதிரித் தான் வாட்டி எடுத்தது .

                                                          இருவத்தி எட்டு  சொச்சம் வருடங்களின் முன்னர் நடந்த கதையை இப்ப திருப்பிப் புரட்டிப் போட்டு தூசு தட்டுவதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகுது என்றுதான் நினைச்சுக்கொண்டு இருந்தேன், ஆனால் அந்தக் கதை ஒரு காதல் கதை. அதுக்கு இன்னும் ஒரு முப்பது வருடம் சென்றாலும் மல்லிகைப்பூ வாசம் இருக்குமென்று சத்தியமா நினைக்கவேயில்லை. அதுதான் காதல் அழிவதில்லை என்று எழுதியே வைத்தார்கள் போலும்.

                                   வன்னியில் உள்ள உடையார்கட்டில் பிறந்த வித்தியா எங்களின் ஊரில் வந்திருந்து அட்வான்ஸ்  லெவல் படிச்சாள். வித்தியாவின் அம்மா, ஜப்னா  கம்பஸில் பிசிகல் சயன்ஸ் படிச்ச அவளின் அக்கா. ஒரு குட்டித் தங்கச்சி இவளவுதான் குடும்பம். அவளின் அப்பா முல்லைத்தீவு எடிகேசன் டிப்பார்ட்மெண்டில் கணிதத்துறையில் ஆசிரியப் போதனாசிரியர் வேலை செய்தார். அதால் லீவு நாட்களில் இவர்கள் உடையார்கட்டில் இருந்த அவர்கள் வீட்டுக்குப் போவார்கள்.

                                  வித்தியா ஓ லெவல் வரை வன்னியில் படிச்சாள். அட்வான்ஸ் லெவலுக்கு அந்த வன்னிப் பாடசாலையில் அப்பிளிகேசன் போட்டு விட்டு யாழ்பாணத்தில் வந்திருந்து பிரைவட் டுயுட்டரியில் அப்பனுக்குத்ப் தப்பாமல் பிறந்து கணிதப் பிரிவில் படிச்சாள். டியூசன்   எல்லாம் ஓடி ஓடிப்  படிச்சாள். அப்படி செய்தால் பரிட்சை முடிவுகள் வர வன்னி கட்டவுட் மார்க்ஸ் உடன் கம்பஸ் போகலாம். அப்படிப் பலர் அந்தநேரம் செய்தார்கள், செய்து வென்றார்கள். அதில யாருக்கும் ஆட்சேபனையும் இருக்கவில்லை.

                                         எங்கள் ஊரில் பெரிய கட்டு மதில் கட்டின வளவில் இருந்த ,புருஷன்  அனுராதபுரதில ஆர் எம் ஒ என்ற அரச மருத்துவ அதிகாரியாக  வேலை செய்ததால் தனியாக இருந்த, பணக்கார, அப்போதிக்கரி அண்ரியின் பெரிய வீட்டின் பின்பக்கம்  இருந்த பகுதியை அனெக்ஸ் ஆகப் பிரித்துக் கொடுத்த சின்ன இடத்தில இருந்தது அவளின் சிக்கனமாக வாழத்தெரிந்த சின்னக் குடும்பம். 

                                     அவளின் அம்மாவும் மூன்று பெண்பிள்ளைகளுக்கும் குருவி கூடு கட்ட சுள்ளி பொறுக்கின மாதிரி  சீதனம் சேர்க்கவோ தெரியவில்லை கணக்குப் பார்த்துதான் வாழ்ந்தது போல இருந்தது . ஒரு கிழமையில் ரெண்டு நாள்த் தான் குருக்கள் வளவுச்  சந்தியில இருந்த  சுப்பிறமணியம் கடையில மரக்கறி வேண்டுவா. அதுவும் மூச்சு வாங்குமட்டும் பேரம் பேசித்தான் அதையே வேண்டுவா .

                                            நாலு பெண்கள் மட்டுமே இருந்த அந்த வீட்டுக்குள்ள வித்தியாவுக்கு  சந்தடி சாக்கில காதல் சிக்னல் போட்டுப் பார்க்க முதல் எதிரியாக இருந்தது யூனிவெர்சிட்டியில் படிச்சுக்கொண்டிருந்த அவளின் அக்கா.  எங்களின் குளத்தடிக் குருப்பைக் கண்டாள் உள்நாக்கு இழுத்த நேரம் உச்சந்தலை வலிச்ச மாதிரி  மண்டையை திருப்புவா. கண்ணை உருட்டி படிச்சு உருப்படாதவங்கள் என்பது போலப் பார்ப்பா. அவள் அக்காவைப் பொறுத்தவரை படிக்க வேணும், கம்பஸ் போக வேணும், அரசாங்க வேலை எடுக்க வேண்டும், இந்த மூன்றும்தான் மூடு மந்திரம். காதல் ,கலியாணம் ,கத்தரிக்காய் கண்ணிலையும் காட்டக்கூடாது .

                               அப்போதிக்கரி அண்ரியின் பெரிய வீட்டுக்கு அருகில தான் எங்களின் இளமைக்கால  குளத்தடிக் குருப்  விபரம் தெரியாத பொடியன்கள் விடலைப்பருவத்தில் சோலி சுறடுக்குப் போகாமல் அவங்கள் பாட்டில் விளையாட்டித் திரியுறாங்கள் என்ற நிழல் மறைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது. அப்படி இயங்கவில்லை பல வில்லங்கமான சில்லெடுப்புக்களில்  குளத்தடிக் குருப் மெம்பர்களின் பங்களிப்பு இருந்தது என்று  பழங்கிணத்தடி வீராளி அம்மனுக்கு மட்டும் நல்லாத் தெரியும் .

                                              ஆடு  அறுக்கப் போற நேரம் காது குத்துற   அலட்டல் என்று நீங்க நினைச்சாலும்   அந்தக்  குளத்தடிக் குழப்படிக் குருப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் சொல்லத்தான் வேண்டும் . ஏனென்றால் வித்தியாவின் எதிகாலத்தை ஏறக்குறைய சின்னாபின்னமாக்கும் அளவுக்குக் கொண்டு வந்த சல்லிமுட்டி என்ற  நல்ல பொடியனும் அந்தக் குழப்படிக்  குருப்பில்தான் இருந்தான், அவன்தான் பினாஸ் மினிஸ்டர் போலப் பொறுப்பிலேயே இருந்தான் எண்டுதான் சொல்ல வேண்டும்

                                  எங்களின் ஊரில கதவழிப்பட்ட எல்லாக் கதைகளிலும் குளத்தடிக் குருப் வந்து இருக்கு. அம்மாசிய குளத்தையும் அதுக்கு அருகில் இருந்த வயல்வெளி,வீராளி அம்மன் கோவில்,  கிரிகெட் கிரவுண்ட் , இருட்டுப் புளியமரத்தடி , தேய்வேந்திரத்தின் மாந்தோப்பு ,பால்ப்  பண்ணை வளவு,  இவைகளைத் திட்டமிடும் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கிய அதில இருந்த மெம்பர்களுக்கும்  படிப்புக்கும் நாலஞ்சு கிலோமீட்டர் இடைவெளி .  வீட்டில உள்ள வேலையத் தவிர வெளிய உள்ள அத்தனை அலுப்புகளிலும் தலையை விடுவது தான் சத்தியப் பிரமாணம் எடுத்த கொள்கை. குளத்தடிக் " குழப்படிக் " குருப்.இந்த நடுவில வாற "  குழப்படி " என்ற வார்த்தை தான் சட்டப்படி பதியப்பட்டஎங்களின்  ட்ரேட் மார்க் .

                                 மற்றப்படி அந்தக் குருப்பில்  நிறைய ஒற்றுமை இருந்தது. என்னவும் கும்பலாக நாங்க செய்யிற திருகுதாளங்களில்  ஒருத்தனாவது பிடிபட்டாலும் உயிரே போனாலும் உண்மை சொல்ல மாட்டோம். சொல்லக்கூடாது . அற்ப  ஆசைகளைக் காட்டினாலும் மற்றவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். அப்படி யாரவது மற்றவனை மாட்டி விட்டது தெரிஞ்சா அவன்தான் கந்தசாமி மாமாவின் மரவள்ளி தோட்டத்துக்கு பனை வடலி கருக்கு மட்டை வேலிக்கால பொட்டுப் போட்டுப் போய்,பதுங்கி இருந்து சத்தம் வராமல் கிண்டி  கிழங்கு இழுத்துக்கொண்டு வந்து சுட்டுத் தரவேணும். அப்படிதான் அதுக்கும் தண்டனை கடுமையாக இருக்கும்.

                                      ஆம்பிளைத் துணை இல்லாமல் குஞ்சுகளைப் பொத்தி வைச்சுக்கொண்டு இருந்த  வித்தியா குடும்பம் ஆபத்தான ஏரியாவில் இருந்து அவளுக்குத் தெரியும். அவள் அக்காவுக்கு நல்லாத் தெரியும்,பாவம் அவள் அம்மாவுக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனாலும் குளத்தடிக் குருப் அரசியல்சாசனப்படி நாங்கள் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கக்கூடாது. இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற ஜனநாயக விழிமியங்களில் கடுமையாக இருந்தோம். அதை மீறினால் அந்த மெம்பர்தான் பால்ப் பண்ணை வளவில கள்ள இளனி இறக்கப் பிளான் போட்டா மரத்தில ஏறவேண்டும்.அதுதான் பணிஸ்மென்ட் .

                                            வித்தியா வீடு போலக் கொன்ரோல் அதிகமான வீட்டுகளில் தான் காதல் உயரமான மதிலையில், கம்பிக் கதவையும் ஏறிக் கடந்து சத்தமில்லாமல் நுழைஞ்சு வைரஸ் கிருமிபோலப் பரவி , நுழைஞ்ச அடுத்த சில மாதங்களில் வரிஞ்சு கட்டிக்கொண்டு  அந்த வீட்டின் அமைதியையும் நின்மதியையும் கெடுக்கும் என்று குளத்தடிக் குருப்பில் வெம்பிப் பழுத்துப் போய் இருந்த எங்களுக்கு நல்லாவே தெரியும். ஏன் அதுதான் புவனேஸ்வரி,பாவானி ,ஜேசுதாசன்  வீட்டிலையும் நடந்தது , அதுவே வித்தியா வீட்டில கொஞ்சம் வித்தியாசமா நடந்து.அவளவுதான்

                                           வித்தியா எப்படி அழகா இருந்தாள் என்று நான் சொல்லப்போறதில்லை. ஏற்கனவே பெண்டுகளை அவர்களின் சொண்டில இருந்து ....எல்லாம் தடவி வழிச்சுத் துடைச்சு அடிப்பாதம் வரை வர்ணிக்கிறதைத் தவிர உன்னோட கதையில் குறைந்த பட்சம் கொள்ளிக்கட்டையால சுண்டு விரலில சுட்ட மாதிரியான  யதார்த்த ரியாலிட்டி என்று ஒரு மண்ணும் இல்லை என்று பலர் புலம்பித் திரிவதால், அவளை ஒரே வரியில் சொல்லிப்போட்டு அங்காலே பாஞ்சு போறன், மவுனராகம் படத்தில வாற ரேவதி உங்களுக்கு தெரியும் தானே,அந்த நடிகையின்  ஈ அடிச்சான் கொப்பிதான் வித்தியா, இது  போதும் தானே.

                                        குளத்தடிக் குருப் எங்களின் ஊரில அந்த நேரம் எங்களின் வயதில் இருந்த பெட்டைகளுக்கு ,அவள்களின் அப்பன், ஆத்தா வைச்ச பெயரை அங்கால தூக்கிஎறிஞ்சு போட்டு நாங்கள் எப்பவுமே ஒரு காரணஇடுகுறிப் பெயர்  சுத்தமான தமிழில் வைப்போம் . அப்படிதான் புவனேஸ்வரிக்கு அங்கொடை எண்டும், ஊர்மிளாவுக்கு சோலாப்பூர் செருப்பு எண்டும் ,பவானிக்கு தட்டாப்பருப்பு  எண்டும் வைச்சம், அதுபோல வித்தியாவுக்கு வித்தியாசமாக ஆங்கிலத்தில் உடையார்கட்டைச்  சுருக்கி UK எண்டு வைச்சம் .

                                     அப்போதிக்கரி அண்ரி வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி வசித்த  விக்கினேஸ்வரனை அவனோட வீட்டில விக்கி எண்டுதான் சொல்லுவார்கள். நல்ல வசதியான குடும்பம் . அவனோட  அப்பா சாராயம் கள்ளமா வித்தாப் பிடிக்கிற காலால் திணைக்கள இன்ஸ்பெக்டர் . அவன்தான் எங்களுக்கு சொக்கன் கடையில வடையும் ப்ளேன் டீயும் வேண்டித் தருவான். இரவில புளியமர இருட்டில ரகசியமா ஊதிப்பழக ட்ரைனிங் எடுத்த நேரம்  ஊதுவத்துக்கு ஊதுவத்தியும் வேண்டக் காசு தருவான். 

                                       அஷ்ட லஷ்மி  கடாட்சம் போல அப்பப்ப கையை விட்டுத் துலாவி சில்லறை புரட்டுவதே அவன் எங்க குருப்பில் இருந்தபடியால் தான் .  அதால சல்லிமுட்டி எண்டு காரணப் பெயரை வைச்சம். பத்தாம் வகுப்போடு படிப்பு  உள்ளே  இறங்கி செரிமானம் ஆகக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்ததால்  லண்டனுக்குப் போகப் போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்தான். அவன் குடும்பம் வைப்புச் சொப்பு உள்ள வசதியான குடும்பமாக இருந்ததால் அவன் வெளிநாடு போவான் போலத்தான் இருந்தது .

                                           நாங்கள் எல்லாம் புகை அடிச்சுப்போன றாத்தல் அரிக்கன் லாம்பு போல கறுப்பா இருந்த நேரம் சல்லிமுட்டி நல்ல வெள்ளையாக இருந்தான். வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசாக வளரும் வாளிப்பு அவன் முகத்தில்,உடம்பில்,அவன் போடும் உடுப்புக்களில் இருந்தது உண்மை. நரி நாரி உழைவுக்கு நல்லெண்ணெய் தடவின மாதிரி தேகத்தில் ஒரு மினுமினுப்பு இருக்க இங்கிலீஸ் வேற அப்பப்ப அவிட்டு விடுவான்.

                                        சல்லிமுட்டிக்கும் வித்தியாவுக்கும் நடுவில ரண்டு வீடுதான் தூரத்தை  இடைவிட்டு  இருந்தது.ஒன்று  பெட்டிசம் பாலசிங்கம் வீடு. மற்றது மசுக்குட்டி மாமியின் வீடு. ரெண்டுமே காதலுக்கு சிக்னல் போட்டு நல்லா எண்ணை  தோச்சு திரிச்சீலை திருகி விட்டு  நுழைக்க இடைஞ்சல் இல்லாத வீடு . காதலைப் பத்த வைக்கிறது தான் கஷ்டம். பத்தீட்டுது என்றால்,பிறகு அங்க இங்க பிடிச்சுப் பிடிச்சு நுழைஞ்சு கொழுந்துவிட்டு எரியும். இந்த " அங்க இங்க பிடிச்சுப் பிடிச்சு நுழைச்சு விடுறதுக்குத் தானே " நாங்கள் நண்பேண்டா என்று சொல்லிக்கொண்டு ஒரு குறுப்பாவே இருந்தோம், வேற என்னத்துக்கு இருந்தோம்,நீங்களே  சொல்லுங்க பார்ப்போம்

                                 யாழ்பாணம் அந்த நேரத்தில எந்த நேரம் எங்க இருந்து வரும் எண்டு தெரியாத அகோரமான பொம்பர் அடியில் அதிர்ந்து கொண்டு இருந்தது.தரை வழியாக முன்னேற முடியாத இராணுவம் விமானப்படையால் வான் வழியாகச்  சரஸ்வதிப் பூசைப் படையல் போல  அள்ளிக் கொட்டிக் கொண்டு இருந்தது .விமானத் தாக்குதல் படு பயங்கரமாக இருக்கும்  அதால எல்லா வீடுகளிலும் பங்கர் என்ற பதுங்குகுழி வெட்டி அதுக்கு மேல தென்னங்குத்தி பரவி அதுக்கு மேலே மண் மூட்டை அடுக்கி அதுக்கு உள்ளதான் பொம்ப்ர் பம்பரம் போல சுழரும் நேரம் சனங்கள் ஓடிப் போய்ப் பாதுகாப்பாக  இருப்பார்கள்.அதை எல்லா வீடுகளிலும் கட்டாயமாக வெட்டச் சொன்னார்கள் .

                                       அப்போதிக்கரி அண்ரி வீட்டில பங்கர் வெட்ட ஆம்பிளைகள் இல்லை. அவா இன்ஸ்பெக்டர் அண்ரிக்கு அதைச் சொல்ல, அதை விக்கியின் அம்மாவும்  இன்ஸ்பெக்டரும்  வீட்டில கதைச்ச நேரம் கேள்விப்பட்ட சல்லிமுட்டி நல்ல ஒரு சந்தர்பத்தை நழுவ விடாமல் ,எங்களைக் கொண்டு வெட்டு விக்காலமே எண்டு சொல்லி இருக்கிறான் . இந்தக் கதைவழி திருப்பி மற்றப்பக்கம் உணவுச் சங்கிலி போலப் போய் வித்தியாவின் அம்மாவுக்கு சேர்ந்த நேரம், அந்த வீட்டில் நாங்கள் உள்ளிட்டு பங்கர் வெட்டுவதுக்கு முதல்  எதிர்ப்பு வித்தியாவின் அக்காவிடம் இருந்து வந்திருக்கு. எப்படியோ கோட்டை அடிபாட்டில் பொம்பர் அடி அகோரமாக ஒருநாள் எங்களுக்கு அழைப்பு வந்தது .

                                           நாங்கள் இப்படியான மனிதாபிமான உதவிக்கு எப்பவுமே தயார். சல்லிமுட்டிதான் கட்டாயம் ஆம்பிளை உதவி இல்லாத   அப்போதிக்கரி அண்ரிக்கு வெட்டிக்குடுக்க வேண்டும் என்றான். ஆனால் அந்த பெரிய வீட்டில இருந்த சின்ன வித்தியா குடும்பத்துக்குதான் அவன் அதிகம் கவலைப்படுற மாதிரி இருந்தது . ஆனால் எங்களின் மண்வெட்டிப் பிளானுக்குள்ள இன்னுமொரு மாஸ்டர் பிளான் இருக்கு என்று நாங்கள் கதைச்சுக்கொண்டு இருந்த நேரமே பைபிள் மேல் நம்பிக்கை உள்ள ஜேசுதாசன் உதுக்கு நான் வரமாட்டான் எண்டு சொல்லிட்டான். அதால ஆறு பேரைச்  செலட் செய்யப்பட்டார்கள். நொள்ளைக் கண்ணா, ஜெகதீஸ், பித்துக்குளி ,ஐஸ்பழம் ,இவர்களுடன் என்னையும் சேர்த்தான் சல்லிமுட்டி.

                             வித்தியா அதிகமா சனிக்கிழமை தான் வீட்டில நிற்பாள் என்றான் சல்லிமுட்டி,அதனால அந்த நல்ல நாளையே தேர்ந்தெடுத்து ,புண்ணியக் குஞ்சி வீட்டுக்குப்போய் எக்ஸ்றாவா ரெண்டு மண்வெட்டியும், மதியாபரணம் டீச்சர் வீட்டில போய் அலவாங்கும் எடுத்துக்கொண்டுபோய்  அப்போதிக்கரி அண்ரி வீட்டுக்குப் போய் ரோட்டுக் கதவுக்க மன்னார் அடிபாட்டு டீம் போல நின்டோம் . அப்போதிக்கரி அண்ரி உள்ளுக்க வரச்சொல்லி கூட்டிக்கொண்டு போய் எங்க வெட்டலாம் ,எப்படி வெட்டலாம் என்று கேட்டா .

                       "  எங்களுக்கா இப்ப பங்கர்,,,,உங்களுக்குத் தானே  அண்ரி...உங்களுக்கு என்ன மாதிரி வேணுமோ அதேபோல வெட்டலாம் ..பின் வீட்டு ஆட்களும் பாவிக்கிற மாதிரி வெட்டலாமே "

                                       என்று சல்லிமுட்டி சொன்னான். நாங்கள் அதுக்கு முதல் ஒரு இருவது பங்கர் ஊருக்குள்ள வெட்டிக்கொடுத்திருப்போம். வித்தியாவை வெளிய இழுத்து எடுப்பது, அவளோடு தான் கதைப்பது  எங்களின் அந்தப் பிளானில் முக்கியம் என்று சல்லிமுட்டி சொல்லி இருந்தான் ,அதால நாங்கள் பேசாமல் ஹீரோயின் என்டர் பண்ணக் காத்திருந்தோம் .

                          " பொறுங்கடா வாறன்,,நான் தனிய,,எனக்கு என்னத்துக்கு தனி பங்கர் .. ம்,,பின்னால வீட்டில மூன்று பிள்ளையளும் ,,ஒரு அம்மாவும் இருக்கினம்,,அவையளும் வந்து இறங்கிற மாதிரி வெட்டினாத்தான் நல்லம்,,அதுகளும்  பாவமெல்லே "

                     "  ஓ அண்ரி,அதுதான் நல்லம்,அவயளை வரச்சொல்லுங்களேன் ,அவையின்ட பிளான் என்ன எண்டு கேட்ப்பம்  " 

                             "   அதுகள் வீட்டில கம்பசில படிக்கிற ஒரு பெடிச்சி இருக்கிறாள் அவளுக்கு இதுகள் விளங்கும் "

                                   "    ஓம்,,அன்ரி ,,அவயளை  வரச் சொல்லுங்கோ "

                            "   என்னது  அந்தப் பிள்ளைகளை முதலே தெரியுமோ,,பழக்கமோ "

                                     "   இல்லை,அன்ரி,,இப்ப பழகினாப் போச்சு "

                                     "  என்னடா ,நீ ,,இப்பிடி சொல்லுறாய்,,இன்ஸ்பெக்ட்டர் வீட்டு பொடி தானே நீ,,விக்கி தானே உனக்குப் பெயர் "

                                        "   ஓம்,ஓம் அன்டி "

                                 "  கதை பேச்சு என்னவோ சவட்டுரா மாதிரி கதைக்கிறாய் "

                                " அப்படி ஒண்டும் இல்லை அன்டி,,அம்மா தானே பங்கர் வெட்டிக்கொடுக்கச் சொல்லி,,எங்களை உங்களோடு பொருந்தி கதைச்சு ஒழுங்குபடுத்தி விட்டவா "

                                   " ஓமோம்,,,நான் அறிமுகம் ஆன அயலடடைப்பொடியள்என்று தானே வீட்டுக்கு எடுத்தேன், அதுவும் மனுசன் இல்லாத நேரம் , இல்லாட்டி  நான் நிண்டது வந்தது போனதுகளை வீட்டுக்கு அடுக்க மாட்டேன் தெரியும்தானே "

                                         "  ஓம் ஓம் அன்டி,,நீங்க ஒண்டுக்கும் ஜோசிக்க வேண்டாம்,,நாங்க நல்ல பிளான் போட்டு வைச்சு இருக்கிறோம்,,பங்கர் உங்களுக்கு சொல்லப்பட்ட மாதிரி வடிவா வெட்டுவம்,"

                                 என்று ஏற்கனவே போட்டு வைச்ச பிளான் படி சொன்னான் சல்லிமுட்டி. என்னதான் பிளான் "  A  *" , சந்தனத்தில பிள்ளையார் பிடிச்ச மாதிரிப் போட்டு வைச்சு இருந்தாலும் பின் வீட்டில இருந்து சொர்ணமக்கா  போல கம்பஸ்காரி வந்தாள் என்றாள் என்ன சொல்லுவாள் என்பது பற்றியும், அதுக்குப் பிறகு அவளை  வழிக்குக் கொண்டுவர  பிளான் " B  "யை வைச்சு  நாக்கு வழிக்கவும் எங்களிடம் " ஒன் த ஸ்பொட் " இல் பிளான்   ஒன்றும் கைவசம் இருந்ததில்லை. முதல்  " ஒன் த ஸ்பொட் " இல் பிளான் எடுத்துவிடும் திறமை உள்ள மண்டையுள்ள ஒருத்தனுமே அந்த மண்வெட்டி டீமில் இல்லையே . 

                       அப்போதிக்கரி அண்ரி பின் வீட்டுக்கு போய்க் கதவைத்திறந்து உள்ளே  கதைக்க போனவுடனேயே மதிலுக்கு பக்கத்தில நிண்ட ஆணைக்கொய்யா மரத்தில கிடந்த காய், பிஞ்சு, பழம், எல்லாத்தையும் உருவிப் பிடுங்கி காட்சட்டை பொக்கட்டுக்க அடைஞ்சிட்டம். ரெண்டு செவ்விழனி மரத்திலையும் இளனிப் பதமா நாலு குலை பிள்ளைத் தாச்சிகளின் வயிறுபோல தள்ளிக்கொண்டு நிண்டது ,அதயும் வடிவாக் கவனிச்சு வைச்சுட்டம் .

                                         அப்போதிக்கரி அண்ரி வித்தியாவின் அம்மாவைக் கையோடு கூட்டிக்கொண்டு வந்தா, இந்த ரெண்டு பழசுகள் தப்புறதுக்கா நாங்க பங்கர் வெட்ட வந்தம் எண்டு நாங்கள் ஆளை ஆள் பார்த்தம். அப்போதிக்கரி அண்ரியும் வித்தியாவின் அம்மாவும் ஒரு பிளானும் போடவில்லை, வித்தியாவின் அம்மா,

                        " கொஞ்சம் பொறுங்கோ ,டொக்டர் அண்ரி எனக்கும் ஒண்டும் விளங்குதில்லை, என்னோட பெட்டையளைக் கேட்ப்பம் " ,

                       எண்டு சொல்ல்லிக்கொண்டு போய்க் குசினிப் பக்கமாக இருந்த ஜன்னலுக்கால  

                            "  சத்தியா, சத்தியா,,எடி பிள்ளை,,இங்க ஒருக்கா வானை ராசாத்தி,,இங்க பெடியங்கள் பங்கர் வெட்ட வந்து நிக்குறாங்கள்,,எல்லாரும் உடன ஓடியாந்து இறங்க எங்க வெட்டின்னா லேசா இருக்குமெண்டு சொல்லணை ,,"

                                 என்று சொல்ல கம்பஸ்காரி  பின் கதவால் வெளிய வந்தாள், வந்து படி இறங்கி நிலத்தில கால் வைச்சுப் போட்டு ரெண்டு அடி பின்னுக்கு எடுத்து வைச்சாள். எங்களை வடிவாப் பார்த்தாள். மண்வெட்டிகளைப் பார்த்தாள். அலவாங்கைப் பார்த்தாள், எங்கள் மண்டைகளை நல்லா உற்றுப் பார்த்தாள்,

                            "  எனக்கு நேரமில்லை அம்மா , செமஸ்டர் டெஸ்ட் வருகுது  அதுக்கு தீசிஸ் எழுதிக்கொண்டு இருந்த என்னை என்னத்துக்கு இப்ப கூபிட்டு வைச்சு கேட்குறிங்க அம்மா, எனக்கு உதுகள் ஒண்டும் தெரியாது,,வித்தியாவை கேளுங்க அவள் சொல்லுவாள் சிலநேரம்  "

                                   எண்டு சொல்லிப்போட்டு உள்ளுக்கு போட்டாள் . நாங்க சல்லிமுட்டியப் பார்த்தோம் .அவன் " அவள் வருவாள் பாருங்கடா " என்பது போல சைன் லான்குவேயில்  சைகை கொடுத்தான் . கொஞ்ச நேரத்தில் வித்தியா " மன்றம் வந்த தென்றலுக்கு நெஞ்சம் வர  நேரமில்லையோ ...."என்பது போல சிரிச்சுக்கொண்டு வந்தாள்.

                               நாங்கள்"  L " போல வெட்டுவமா எண்டு கேட்க்க அவள் " W " போல வெட்டினால் தான் நல்லம் எண்டும் அதில் நிறைய நிலப் பிரமாண அடர்திப் பாதுகாப்பும் , குண்டின் மிகை சோனிக் அதிர்வு ஒலிகள் நேரடியாக உள் நுழைய முடியாமை  இருக்கு எண்டும், சுவர் மதில் கட்டிடங்களுக்கு அருகில் வெட்டக்கூடாது அதுகள் இடியும் போது வாசல் மூடப்படலாம் என்றும்  ஒரு சிவில் எஞ்சினியர் போல கைகளால் பேசிக்கொண்டு , அழகான குழந்தைக் குரலில் விளக்கம் சொன்னாள்.

                              அது  அப்போதிக்கரி அண்ரிக்கும் வெட்டுக் கொத்து ரெண்டையும் தவிர வேற ஒண்டும் அறியாத மண் வெட்டி ,அலவாங்கு போட்டு மலையையும் பிளக்க  மட்டும் நல்லாத் தெரிந்த  எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவள் பிற்காலத்தில் ஒரு எஞ்சினியர் ஆக வரும் சாத்தியங்கள் நிறையவே இருந்தது. இருந்தது என்ன , அவள் அமரிக்காவில் போஸ்டனில் உலகப்புகழ் மஸ்சாஸ்சுசெட் M,I,T இல் Phd  செய்து   அப்படிதானே ஸ்ட்க்ரக்சறல் எஞ்சினியர் ஆக வந்தாள்.

                              நாங்கள் பங்கர் வெட்டுற வீடுகளில் நல்ல சாப்பாடு தருவார்கள்.சில இடத்தில காசும் தருவார்கள்.  எங்களுக்கு பாடிப் பாடி வெட்ட நேரம் போறது தெரியாது. ஆழம் இறங்கிக்கொண்டு போகும்,  அப்போதிக்கரி அண்ரி நாரிய ரெண்டு கையாலும் இடுப்போடு பின் பக்கமா சேர்த்துப்  பிடிச்சுக்கொண்டு , சல்லிமுட்டியப் பார்த்து  

                                 " நாரிக்க குத்துது..தலையும் லேசுவா சுத்திர மாதிரிக் கிடக்கு, பிரசர் குளிசை போடப்போறேன் "

                                "  ஓம், ஓம் அன்டி  ,,நீங்க  போய்ப்படுங்கோ,,நாங்க  பின்னேரதுக்கு இடையில வெட்டி ,குத்தி எல்லாம் அடுக்கி மண் பரவிப் போடுவோம் "

                                  " நீங்கள்  வெட்டுங்கோடா பொடியள்,,மண்வெட்டியள்  கவனம் ஆளை ஆள் பிராக்குப் பாத்து கால் வழிய மாறி மாறிப் போட்டுடாதையுன்கோடா,பிறகு மருந்துகட்ட இங்க மனுசனும் இப்ப இல்லை "

                                  "  ஓம்,ஓம் அன்டி  ,,அதெல்லாம் வெண்டு தருவம்,,ஜோசிக்காதையுங்கோ.மண் மூட்டையும் சைட்டுக்கு அடிச்சு விடுறோம்  "

                                    " தண்ணி விடாச்சா செவ்விழனிக்குலை ஒன்டை இறக்கிக் குடியுன்கோடா ..   " 

                                   " ஓம்,ஓம் அன்டி  , சொல்லிட்டீங்க எல்லோ  , இனி அதிலையும்  எங்கட பொடியள் வெண்டு தருவாங்கள் ,,ஜோசிக்காதையுங்கோ மரத்தை மொட்டை அடிச்சுப்போட்டுத் தான் போவாங்கள் "

                                     " சரி பின்ன  வெட்டுங்கோடா பொடியள்,  சொல்லிப்போட்டேன் , மண்வெட்டியள்  கவனம் ஆளை ஆள் பிராக்குப் பாத்து கால் வழிய மாறி மாறிப் போட்டுடாதையுன்கோடா,பிறகு மருந்துகட்ட இங்க மனுசனும் இப்ப இல்லை "

                                        எண்டு நாரியப் பிடிச்சுக்கொண்டு வீட்டுக்கு உள்ள போட்டா. போக முதல் வித்தியாவுக்கு  என்னவோ அட்வைஸ் செய்துபோட்டு போனா அப்போதிக்கரி அன்டி. அந்த அட்வைஸ் எங்களோடு கவனமா இருக்க சொன்னாவா, அல்லது ஒழுங்கா பங்கர் வெட்டுறாங்களா என்று பார்க்கச் சொன்னாவா ,  அல்லது இளனி மரத்தை மொட்டை ஆக்கிப்போடுவாங்கள் பார்த்துக்கோ பிள்ளை என்பதா என்று அறியமுடியவில்லை.

                                         நாங்கள் மேல் சேட் எல்லாத்தையும் களட்டிப் போட்டு, லோங்க்ஸ்சை முழங்கால் வரை மடிச்சு விட்டுப்போட்டு வித்தியா வி சேப் பெட்டி போல கோடு கீறிய இடத்தில வெட்டத்தொடங்கினோம். சல்லிமுட்டி சேடும் கழட்டவில்லை. நெஞ்சு பட்டனை நல்லாக் கீழ இறக்கித் திறந்து போட்டிருந்த நாலு பவுன் சங்கிலியை வெளிய தெரியிற மாதிரி விட்டுப்போட்டு எங்களுக்கு லீடர் போல ஒரு மண் வெட்டிய மண்ணில பாட்டில விழுத்திப்போட்டு அதில குந்தி இருந்தான் . 

                                            எங்களோட இறங்கி வெட்ட வரவில்லை. எங்களுக்கு எப்படி மண்வெட்டி போடுறது  எண்டு எங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச வித்தையை என்னவோ அவன்தான் கண்டு பிடிச்ச மாதிரி ஓடர் போட்டுக்கொண்டு இருந்தான். வித்தியா எங்களை  மிக மிக இயல்பாக எந்தப் பந்தாவும் போடாமல் நிண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

                                      வித்தியா  சல்வாரி  ஹக்கொபா ப்ரில் வச்ச மேல் சட்டையும், சிவப்பும் கறுப்பும் சதுரமாகக் கட்டம் போட்ட பாவாடையும் போட்டிருந்தாள். கை மணிக்கட்டு ரெண்டிலும் நிறையக் கலர் கலரா நேர்த்தி வைச்ச நூல் காப்புக் கட்டி இருந்தாள். நகங்களைக்  கூட அழகாக அளவோடு வெட்டி மஜந்தாக் கலர் நெயில் பொலிஸ் அடிச்சு இருந்தாள். 
அவள் தலைமயிர் அப்படியே மவுனராக ரேவதிபோல அலைபாய்ந்து கொண்டு இருந்தது. அப்புறம் வெறுங்காலில் செம்பாட்டு மண்ணில  நின்றாள். அந்த கால்கள் காமராசனின் ஹைக்குவின் கடைசி வரிபோல குறுனிக்கற்களோடு உருண்டு  விளையாடிக்கொண்டிருந்தது.

                                      ஒருத்தன் வன்னியில அலியன் யானை இருக்கா எண்டு கேட்டான், ஒருத்தன் பாலப் பழம் பிசுக்கு பிசுக்கு எண்டு கையில ஒட்டுமா எண்டு கேட்டான் , ஒருத்தன் இரணைமடுக்குளத்தில முதலை இருக்கா எண்டு கேட்டான். இடியன் துவக்கு எப்படி இருக்கும் என்று பித்துக்குளி   கேட்ட நினைவு இருக்கு . எங்களுக்குள் இருந்த  வன்னி என்ற காட்டுப்பகுதி பற்றிக்  கேள்விப்பட்ட சந்தேகங்களைக் கேட்க   வித்தியா  எல்லாக் கேள்விக்கும் விளக்கமா பதில் சொன்னாள் . 

                                        வித்தியா  இடியன் துவக்குத்  தான் பார்த்ததில்லை என்று சொன்னாள், இரனைமடுத் தண்ணியில் வரும் அஞ்சாம் வாய்க்கால் நீர் வழியில் தான் அவர்கள் சிறுபோகம் நெல் வயல் செய்வதாகச் சொன்னாள். மற்றக் கேள்விகளுக்கு அவள் இயல்பாக  சொன்ன விவரணங்களைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. 

                          " பேசாமல் வன்னியில போய் காட்டுக்க கட்டுத் துவக்கால சுட்டு மிருகங்களை வேட்டையாடி சீவிக்கலாம் போல இருக்கு "

                                                    என்று ஜெகதீஸ் சொன்னான்  .  வித்தியா சொன்ன விசியங்கள் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை,  மன்னாரில்  ,பண்டிவிரிச்சானில், உயிலங்குளளத்தில் ,விடத்தல்தீவுவில் காடுகளில் இருந்தவர்களும் அந்த பங்கர் வெட்டில் இருந்தார்கள் . சும்மா கேட்டுக்கொண்டு இருந்தார்கள் . 

                                       சல்லிமுட்டி மட்டும் கேட்கவேண்டும் என்று நினைத்த சில கேள்விகளை எங்களுக்கு காது கேட்காது என்பது போல நினைச்சுக்கொண்டு வித்தியாவுக்கு அருகில் நிண்டு இடை இடை அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான். நாங்கள் வித்தியாவைக் கேள்வி கேட்பது பிடிக்கவில்லை போல முகத்தை வைச்சுக்கொண்டு சல்லிமுட்டி மேல நின்றான். நாங்கள் அடிமைகள் போல கீழ இறங்கி இறங்கி வெட்டிக்கொண்டு நின்டோம்.

                                           மத்தியானப் பகல் உச்சி வெய்யில் தணல் அள்ளி எறிஞ்ச மாதிரி கொழுத்தி எறிஞ்சு கொண்டு இருந்தது . வித்தியா பக்கத்தில நின்டதோ தெரியாது நாங்கள் மண்வெட்டிய மின்னல் வேகத்தில போட்டுக்கொண்டு போறதைப் பார்க்க  போறபோக்கில நிலாவரைக் கிணறு போலத் தோண்டி தண்ணியும் கண்டுடுவம் போல வேலை போய்க்கொண்டு இருந்தது . நொள்ளைக்கண்ணா தான் கொஞ்சம் கோபமா குரலை உயர்த்திக்கொண்டு,

                                "  சல்லிமுட்டி என்னடா,,கும்பாபிஷேகதுக்கு கோபுரத்தில குடம் வைக்கிற குருக்கள் போல நிக்குறான், இவனுக்கு நாளைக்கு குளத்தடியில் அலுப்பு வைக்கிறான் பார்,,எடுப்பு கூடிப்போச்சு , தம்பி நீ தலைகால் தெரியாமல் ஆடாதை "

                                         என்று எங்களுக்கு மட்டும் கேட்கிற மாதிரி.சொல்லிக்கொண்டு இருந்தான், அதைத்தான் நாங்களும் நினைச்சுக்கொண்டு இருந்தோம் வெளிய சொல்ல விரும்பாமல். எப்படியோ கொஞ்ச நேரத்தில பித்துக்குளியும் ,

                           " டேய் பாருங்கடா , இவன்ட்ட கிள்ளிப்போட்டு படப்போற அல்லிராணி விளையாட்டை ,  சல்லிமுட்டி   ஒரு முடிவோடாதான் இதை தொடக்கிறான்டா . வித்தியா நல்ல விபரம் தெரிந்தவள் போல கதைக்கிறாள். இவனிண்ட பருப்பு இவளிட்ட நாலு நாள் ஊறவைச்சு அவிச்சாலும் வேகாது போல இருக்கு "

                                எண்டு அவனும் புறு புறுத்தான். ஆனால் சொன்னா நம்பமாட்டிங்க இளம் பெண்களுக்கு ஈஸ்ட்றோயன் ஹோர்மோன் பாயும் போது எது பிடிக்கும், யாரைப் பிடிக்கும் என்று மாட்டுச் சாணக்குறி போட்டு பார்த்தாலும் பிடிபடாது. ஏனென்றால் சல்லிமுட்டி போட்ட  அற்ப குத்துக்கரணம் எல்லாம் விவரமான வித்தியாவுக்கு பிடித்ததால் தானே பின் நாட்களில் அவள் வாழ்கையில் சாவு வரைக்கும் அவனுக்காகத் துணிந்தாள்  என்று கேள்விப்பட்டோமே.   

                                     கம்பஸ்காரி இடை இடையே கையில பேப்பர் கட்டுடன் எட்டிப் பார்த்தாள். அவளோட குட்டித் தங்கச்சி வந்து

                               " அம்மா எல்லாருக்கும் சமைக்கிறாவாம் சின்னக்கா, இவயளுக்கு இப்ப குடிக்க தேத்தண்ணி வேணுமா எண்டு கேட்டுக்கொண்டு வரச் சொன்னா  " 

                                   எண்டு சொன்னாள், பிறகு நாங்கள் எப்படிக் கிடங்கு வெட்டுறம் எண்டு பார்க்க கிட்ட வந்தாள். நொள்ளைக்கண்ணா கழுத்தில கட்டி இருந்த கறுப்புக் கயிறில என்ன தொங்குது எண்டு கேட்டாள். சல்லிமுட்டி அதுக்கு, 

                               " டேய், உங்களுக்கு தேத்தண்ணி வேணுமாடா இப்ப,, அல்லது அரைவாசிக்கு கொண்டு வந்து போட்டு சைட் எல்லாம் மட்டம் புடிச்சிட்டு மேல வாறிங்களாடா , பால் தேத்தண்ணியா, அல்லது ப்ளேன் டீ யா உங்கட அம்மா ஊத்தப்போறா, இவங்கள் என்ன குடுத்தாலும் மாடு தவிட்டுக் கஞ்சி இழுத்த மாதிரி இழுத்துக்கொண்டு  குடிப்பாங்கள்,,எனக்கு அங்கர் பால்மா  போட்ட டீ மட்டும்தான் குடிச்சுப் பழக்கம் "

                      "  ஹ்ம்ம்,,நான் போய் அம்மாட்ட சொல்லுறேன் " 

                         என்று அந்தக் குட்டித் தங்கச்சி சொல்லிக்கொண்டு போகமுதல் ,வித்தியா அவளிண்ட கையை இழுத்து 

                 " எல்லாருக்கும் பால்டீ போடச் சொல்லுங்கோ அம்மாட்ட சூட்டி "

                               என்றாள். நாங்கள் சல்லி முட்டியப் பார்த்தோம். அவன் சேட் கொலரை மேல இழுத்து விட்டு உள்ளுக்கு காத்துப் போக கையால விசிக்கிக் கொண்டு இருந்தான்.

                                 அதுக்குப் பிறகும் வித்தியா அவடத்திலதான் நின்றாள். நாங்க விட்ட முசுப்பாத்திப் பகிடிகள்  எல்லாத்துக்கும் சிரிச்சு சிரிச்சு பதில் சொன்னாள். அவள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மசுக்குட்டி மாமியையும் ,,அவாவின் செட் அப் ஆக இருந்த மாப்பிளை மாமாவையும் வைச்சு நாங்க கதைச்ச  டபிள் மீனிங் கதைகளை ,அதன் அர்த்தம் விளங்கினாலும் ரசிக்க விரும்பவில்லை போல மவுனமாக இருந்தாள். மாப்பிள்ளை மாமா யார் எண்டு கேட்டாள். ஐஸ்பழம் அதுக்கு 

                            " மாமி வீட்டில ஒரு கிளி வளர்கிறா தெரியுமா உங்களுக்கு,,ஒருநாள் அதிட்டப் போய்க் கேளுங்கோ அது சொல்லும் மாமா யார் எண்டு "

                            என்று  சொன்னான். நாங்க எல்லாருமே ஹஹஹஹஹா சிரிச்சம் . 

                               " டேய் உழவாரம்,,நீ தாண்டா இவங்களுக்கு வெடி கொழுத்திப் போட்டு கதை கிண்டி விட்டுக்கொண்டு நிக்குறாய்,,இப்ப இறங்கி வந்து உனக்கு செவிட்டில ரெண்டு போட்டா எல்லாம் அடங்கும் "

                          என்று எனக்குச் சொன்னான்.என்னை உழவாரம்  எண்டுதான் குளத்தடிக் குறுப்பில் சொல்லுவாங்கள். அதுக்கு  ஜெகதீஸ், 

                         " டேய்,,இப்ப நீ கிடங்குக்க இறங்கினா ,,உன்னைப் போட்டு மித்திசு இதுக்குள்ள தாட்டுப்போட்டு,மண் இழுத்து மூடிப் போட்டு ஓடிப் போயிடுவம்,,கரட்டி ஓணாண் போல வெருட்டாதை " 

                         என்றான், அதுக்கும்  நாங்கள்   எல்லாரும் சிரிக்க  வித்தியாவும் சிரிச்சாள். சல்லிமுட்டிக்குக் கோபம் வந்திட்டுது 

                               "  டேய்,கழுதைகள் ,,இடம் தந்தா வாயால மடம் கட்டுவியலே,,ஏண்டா உங்கட கொசப்புக்  கதைகளை இப்ப கதைக்கி ரிங்க, அதுக்குத்தானே குளத்தடி ஆ வெண்டு திறந்து கிடக்கு,,வாயப்  பொத்திக்கொண்டு  முதல் ஒழுங்கா வந்த வேலையை முடியுங்கடா,
 இவங்கள் இப்பிடித்தான் டீசென்ட் டிசிப்பிளின் தெரியாத செம்மறி ஆடுகள் போல வித்தியா "

                                                   "     ஹ்ம்ம் "

                                                  "  ,,,எங்க என்ன கதைக்க வேண்டும் எண்டு தெரியாது,, ..நீங்க குறையா எடுக்க வேண்டாம் வித்தியா  "

                                                       "      ஹ்ம்ம் "

                                    " என்ன எல்லாத்துக்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்டு மண்டையை ஆட்டுரிங்க வித்தியா "

                                         "  ஹ்ம்ம் "

                                      " இதில ஒருத்தனுக்கு இங்கிலீஸ் தெரியாது, வட்  ஸ் யுவர் நேம் எண்டு கேட்டாலே கோழி திருடுறவன் போல முழிப்பான்கள் ,எல்லாம் அரையும் குறையுமா படிச்சுப்போட்டு நிக்கிறவங்கள் "

                                                "        ஹ்ம்ம் "

                                           " ஆக்களிண்ட மூஞ்சியையும் மோரக்கட்டையையும் பாருங்கோ வன்னி உழுவன் மாடுகள் போல "

                                               "  அப்பிடி சொல்ல வேண்டாம்  பாவம்,,அது "

                                                 "  நான் தான் இந்த பிளானை போட்டுக்கொடுத்தேன்,,இல்லாட்டி இந்த பங்கரையும் உடையார் வளவில் நிக்கிற கோணல் புளியமரம் போல தான் வெட்டுவாங்கள் "

                                           "    ஹ்ம்ம் "

               
                                " என்ன எல்லாத்துக்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்டுறிங்க   இவங்கள் இப்பிடித்தான் டீசென்ட் டிசிப்பிளின் தெரியாத செம்மறி ஆடுகள் போல வித்தியா "

                                                           என்று பத்தடி எழும்பிப் பாஞ்சான். வித்தியா ஒரு ரியாக்சனும் கொடுக்காமல் அதுதான் அவளோடு பிறவியிலேயே ஒட்டிக்கொண்டு வந்த  ஸ்டைல் போல கேட்டுக் கொண்டு இருந்தாள். ஏன் சல்லிமுட்டி பவுசு விடுறான், தன்னை முன்னிறுத்திக் கொண்டு இருக்கிறான் . முக்கியமாக எதுக்கு அப்பாவி போல முகத்தை வைச்சுக்கொண்டு வில்லங்கமான கேள்விகள் கேட்கிறான் எண்டு சந்தேகமா இருந்து இருக்கலாம்.

                               அவள் அதை நினைவு வைச்சு இருவது  வருடங்களின் பின் டோஹா கட்டார் ஏர்போட்டில் அவள் ட்ரான்ஸ் அட்டிலாண்டிக் பாதையில் கட்சானியா  லுப்தான்சா விமானம் ஏறக்காத்திருந்த  ட்ரான்ஸ்சிட்  லவுஞ்சில், விளாடிமீர்  மொஸ்கோவா  போகும் பிளை வித் எமிரேட்ஸ்க்குக் காத்திருந்த என்னை தற்செயலாகக்  கண்ட போது, காதல் எங்கே அவளை அந்த அப்பாவி முகத்தை நம்பிய போது விழுத்தியது என்று அழுது அழுது சொன்னபோது  அதையும் சொன்னாளே.

 .................வாழ்க்கை போலத்தான் ஒரு கதையும் எங்கே தொடங்கும் எப்படி முடியும் என்று சொல்லவே முடியாது. நாசமாப்போன இந்தக் கதை எங்கள் ஊரில் பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும் அம்மச்சியா குளத்துக்கும் நடுவில் தொடங்கி வட அமெரிக்காவில் இருக்கும் போஸ்டன் ,மசாசூசெட்,நியூ ஜோர்க்,பிலடெல்பியா  என்று அலைந்தது. ஆனால் வலிகள் என்னவோ ஒரே மாதிரித் தான் வாட்டி எடுத்தது . ஒரு குளக்கரையில் உருவான காதல் ஏன்  ரெண்டு கோடுகள் சந்திக்காத பாதையில் உள்ளங்களைத்  திசை மாற்றியது என்ற   பயணத்தை..............

,,,,,,,,,,,,,,,,,தொடராக எழுதுகிறேன்.....
.
.