Tuesday 29 December 2015

மனம் ..

வருமா வராதா அல்லது வரமா சாபமா என்று வெண்பனிப் பொழிவுக்குக், காத்திருக்க நேற்று இரவு திருவாதிரை நட்சத்திரத்தில் அது இறங்கி இருக்கு. நோர்வேயில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் வெண்பனி இல்லாமல் இருப்பது முதலிரவு இல்லாமல் கலியாணம் போல , அவளவு வாழ்க்கை முக்கியத்தும் அதுக்கு இருக்கு .
                                முக்கிய காரணம் நோர்வே வெண்பனி வெண் இரவுகளில்தான் வளைகாப்புக் பெண்ணின் புது வெட்கம் போல அள்ளி அணிந்து கொண்ட ஜவ்வனங்களுடன் ஜொலிக்கும். அது வந்தாலும் திட்டியும் வராட்டியும் திட்டியும் எப்பவுமே எழுதும் ஒரு மண்டைப்பிழையான ஒரே ஒரு நோர்வேவாழ் இலங்கைத் தமிழன் நானாகத்தான் இருக்க முடியும்.
                                       நான் வசிக்கும் இடத்தில ஸ்கி என்ற பனிச்சறுக்கு தளம் அமைத்து ஓடும் இடமே இருக்கு. ஒரு தமிழ் நண்பர் குடும்பமாக இலண்டனில் இருந்தே நாலு நாள் விடுமுறையில் பிள்ளைகளோடு சில நாட்கள் முன் வந்திருந்தார். அவர் முன்னர் நோர்வேயில் தான் பாஸ்போட் கிடைக்கும் வரை அரசியல் அகதியா வசித்தார்,
                                          பிறகு நோர்ஸ்க் பாஸ்போட் கிடைச்ச கையோடு நோர்வே பிரசை ஆகி இலங்கை போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு வந்து, பிள்ளைகள் பிறந்து முடிய மனைவியுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வாழ்வு கொடுத்த நோர்வேயை வாயும் வயிறுமாக விட்டுப்போட்டு மான்செஸ்டர் இக்கு எஸ்கேப் ஆகிப் போனவர். நேற்று ட்ரம்மன் என்ற இடத்தில இருந்து போன் எடுத்து ,வெறுப்பாக

                               " ஒரே கடுப்பா இருக்கு, இன்னும் சினோ விழவில்லையே,போன வருஷம் நல்ல என்ஜாய், இந்த வருடம் என்ன இப்படி அல்லைப்பிட்டி தரவை போலக்கிடக்கு , உம்மோட பக்கம் வரவே அலுப்பா இருக்கு, வரேக்க கேட்விக் ஏர்போட்டில் ரெண்டு புறா வேண்டிக் கொண்டு வந்தனான் "
                               
                                                 என்று சொன்னார். எனக்கும் கவலையாக இருந்தது அவர் என்னோட பக்கம் வந்தால் எப்பவுமே போத்தல் கொண்டு வருவார் .லண்டனில் போத்தல் நல்ல மலிவு .புறா என்பது புறாப் படம் போட்ட போத்தலில் நிரப்பி வரும் பேமஸ்குருஸ் என்ற ஸ்கொட்லாந்து விஸ்கி. பல வருடம் முன்னர் ஒன்றாக ஒரு இடத்தில இருந்தோம் அதை நினைவுகொள்ள எப்பவுமே நடக்கும் கிறிஸ்மஸ் பாட்டியில் புறா ரெம்பவே அனுசரணையாக இருக்கும்

                                          " சில நேரம் இரவு இறங்கலாம் என்று வானிலையில் சொன்னார்கள், இறங்கத்தான் வேண்டும் இல்லாட்டி எனக்கும் வாழ்க்கை வெறுக்கும். மான்செஸ்டர் இல இருந்து ஒஸ்லோ வந்ததே சினோவில உருண்டு  பிரள ."

                                  " அதெண்டா உண்மைதான் போல இருக்கு "

                                 " சினோ இல்லாட்டியும் என்ன நாலு பெக் அடிச்சுப்போட்டு பழைய கதைகள் கதைப்பம்..அதுக்கும்  சான்ஸ்  இருக்கும்  தானே  "

                                "பிரசினை  இல்லை,,வாங்கோ ,  கதைகளுக்கு  என்ன  குறைச்சல்,,அதுவும் போத்தில் மூடி திறக்கவே கதையள் அவிழுமே  " 

                                  " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப எங்க இருக்கினம் கொண்டக் இருக்கோ "

                                          " பழைய ஆட்கள் எல்லாம் இப்ப பழசாகிப் போனார்கள்,,ஒருவரோடும் தொடர்பு இல்லை,,,சும்மா கண்டா காதுக்க விரலை விட்டுக்கொண்டு கதைக்கிறது "

                                   "   என்ன நடந்தது "

                                 " என்ன நடக்க வேணுமோ அதுகள் தான்  நடந்தது,, எல்லாரும்  இப்ப தனித் தனியா குடும்பம் வாழ்க்கை  எண்டு போட்டாங்கள் "

                                  "   ஹ்ம்ம்,, அது  உண்மைதான்,,நல்லா  இருகுரான்களோ "

                                  "   அது  தெரியாது,,உண்மையில் வெளிய தெரியாது,,துண்டைக் காணோம் துணியைக் காணோம்  எண்டு ஓடிக்கொண்டு இருக்கலாம் "

                        "மோகனுக்கு  அக்செப் பண்ணி பேப்பர் கிடைசிட்டுதோ    "

                                 "  எந்த மோகன்  " 

                              "  அலவாங்கு  மோகன்,,வன்னிப் பொடியன்  " 

                               "அவனைப்  பிடிச்சு  திருப்பி அனுப்பிப்போடான்கள்     " 

                             "  எண்ட  கடவுளே,,அவன்  இயக்கத்தில  இருந்தவன்  எல்லோ "

                            " ஹ்ம்ம்,,,இங்கே  உண்மையான அரசியல் அகதிக்கு வதிவிட  அந்தஸ்து  பேப்பர்  கொடுக்க மாட்டாங்களே,,ஹ்ம்ம்,,,இதைக்  கதைச்சால்  கொதி  வரும்  "

                            "  படிச்ச மனோவும் ,மொக்கு மனோவும் இப்பவும் ஒன்டாவே இழுபடுராங்கள்.. ரெண்டு பேரோடும் கதைச்சே  பலவருடம் "

                             "  படிச்ச  மனோ  கழுவல் துடையல் கொம்பனி பிர்மா வைச்சு நடத்துறான்,,மொக்கு மனோ ஒஸ்லோ கொமுயுன் இல டெக்னிகல் அட்வைசர் வேலை  செய்யுறான் "

                             "  என்னது  நம்பவே முடியவில்லையே,,ரெண்டு  பேரும்  செய்யிற  வேலையே  சம்பந்தா சம்பந்தம் இல்லாமலிருக்கே "

                           "  நம்ப முடியாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சம்பவங்கள் நடக்கிரதுக்குப் பெயர்தான்  வாழ்க்கை "

                                    "   ஹஹஹஹா "

                           "    ஹ்ம்ம்,, ஆனால் ரெண்டு மனோவும்  இப்ப ஒஸ்லோவுக்கு வெளிய சொந்த வீடு வேண்டி இருகிறாங்கள் "

                                        " சாம்பாரு மணியோடும் கொண்டக் இல்லையா அவன் உன்னை விட்டுப் போக மாட்டனே, ரெண்டு பேரும் நல்ல ஓட்டே எப்பவும் , ரெண்டு பேரும் நேரம் காலம் இல்லாத தண்ணிச் சாமிகளே "

                                                 " ஹஹஹ்ஹா,,,சாம்பாரு மணி இப்ப திருந்திட்டான்,,குடிக்கிறது இல்லை,,இப்ப சாமியார் போல ஒஸ்லோ முருகன் கோவில்ல தேவாரம் பாடுறது , சாமி தூக்கிறது , மண்டக்கப்படியில சுண்டல் குடுக்கிறது எல்லாம் அவன்தான் "

                                         " என்ன ,பழைய பம்பல் ஒண்டும் இல்லைப்போல இருக்கே,,என்ன நடந்தது "

                                      " ஒன்டும் வித்தியாசமா நடக்கவில்லை,முன்னம் தனிக் கட்டைகள் எலிகள் போல ஓடித் திரிந்தோம் இப்ப அவர் அவர் வாழ்க்கை அவர் அவர் பாதையில் குடும்பமாகிப் பெருத்து பெருஞ்சாளிகள் ஆகி சுமைகள் அதிகமாகி விட்டது "

                                     " போன வருஷம் ஹோவ்செத்ரா இருந்திச்சே அமல்ராச் இன் பிச்சா கடை அதிலயா இப்பவும் வேலை "

                                             " இல்லை,,அது போன வருசமே நாமம் போட்டு இழுத்து மூடியாச்சு "

                                     "   நீர்  வேலை  செய்த சாப்பாட்டுக் கடைகள் ஒரு வருஷத்தில் இழுத்து மூட  வேண்டிவரும்  என்று  மொட்டை மனோ எப்பவும் சொல்லுவானே "

                                           " ஹஹஹ்ஹா,,உண்மைதான்,,,ஆனால் அமல்ராஜ்  நடத்தின  பிட்சா கடையில் வேற பிரசனை  வந்தது "

                               " என்ன பிரசினை,,,,சொல்லுமன்,,எனக்கும் அமல்ராஜ் போஸ்ட்குருன் இல இருந்த நேரம்   நல்ல பழக்கம் முன்னம் "

                                  "  ஹ்ம்ம்,,அவர்  ஒரு சப்பட்டை  வியட்நாம்காரியை  பெட்சிளிங் ஓடர் டெலிபோனில எடுக்க கொண்டு வந்து வைச்சு இருந்தார் "

                          "   அட,,,பிறகு,,சொல்லும்  சொல்லும் ,,இளம்  பெட்டையோ "

                         " ஓம்...அவள்  படிக்கிற பெட்டை,,பாட் டைமா  பின்னேரம் வருவாள் வேலைக்கு "

                           " பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது,,,"

                          " பிறகு  என்ன நடக்கும்,,,தெரியும்தானே,,அமல்ராஜ்  அவளுக்கு  கீழ வேலைக்கு  நிக்கிற மாதிரியும்,,அவள் முதலாளி போலவும் நிலைமை வந்திட்டுது "

                                "   பிறகு  என்ன நடந்தது "

                                "  பிறகுதான்  பிரசினை வந்தது,  ஒருநாள் இசகு பிசகா அவள் அமல்ராஜ் மடியில் இருந்து கொண்டு ஹம்பெக்கர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் "

                         "  அட அட...அதில  என்ன பிரசினை,,கதிரை மேசை  இல்லையோ  என்னத்துக்கு  மடியில  இருந்து சாப்பிட்டாள்  "

                             "  கதிரை  மேலை  வேண்டிய மட்டும்  இருந்தது,,,நல்லகாலம்  கட்டில்  தான்  இல்லை "

                               "  ஹஹஹஹா,,,சொல்லும்  சொல்லும்  மிச்சத்தை "

                         " அந்த நேரம் அமல்ராஜ் மனுசி வந்திட்டா ,,வந்து அதைப்  பார்திட்டா ..."

                                       "     அட,  ரீட்டா  அக்கா தானே ,,இதென்ன குளறுபடி,,பிறகு  சொல்லும்  சொல்லும்  என்ன நடந்தது  எண்டு "

                                  " ஓம்  அவாதான்,  பிறகென்ன மொப்  அடிக்கிற தடியால எடுத்து விளாசி விளாசி   அவியல்  பூசை  புனஸ்காரம்  மண்டகப்படி அகோரம்  தான்,,,எனக்கும்  நல்ல  பேச்சு தந்தா, அதோடு  அதை நடத்திரத்தை அமல்ராஜ் மனுசி விரும்பவில்லை  

                                           " என்னது,,அமல்ராஜ்ச் எப்படி இருக்க வேண்டிய ஆள்,,இப்ப ஆள் எங்க இருக்கு "

                           " இப்ப அமல்ராஜ்ச் பஸ் முன் சீட்டில இருக்கிறார்  "

                                               " என்னது "

                                   " ஹ்ம்ம், ஆள் பஸ் ஓடுது, பஸ் டிரைவர் , இப்பத்தான் ஆள் இருக்க வேண்டிய இடத்தில இருக்கிறார்,,அவருக்கு ரெஸ்டாரென்ட் சரி வராது எண்டு சொல்லச்சொல்ல கேட்கவில்லையே,,இப்ப நல்ல முன்னேற்றம் "

                                  " ஒ அப்பிடியியே அப்ப தாங்கள் ,,இப்ப என்ன மாதிரி,,வாலை அடக்கி சுருட்டி வைச்சுக்கொண்டு இருகிறியா,,அல்லது இப்பவும் ஹக்கடால் இல் இருந்த மாதிரி... டேய் தம்பி யோக்கியன் வர்றாண்டா சொம்ப தூக்கி உள்ள வைடா போலவா ...இருகிறாயா "

                                      " ஹிஹிஹிஹி நானும் இப்ப கொஞ்சம் நல்லவன் போல வெள்ளைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு திரியிறன், தனிமைக்கு மாறிட்டன் "

                                       " ஓம்,,ஓம்,,அப்படியும் சில நேரம் நடக்கலாம் தான் ,ஏன் நானும் இப்ப அப்பிடித்தானே,,ஒரு பழைய தொடசல்கள் ஒண்டும் இல்லை,,மனுசியோட மட்டும் தான் இருக்கிறேன்  "

                                  " சரி விடுங்க ,, போத்தில் இருக்குதானே ,,பிறகென்னதுக்கு அடிக்க முதலே குழம்புரிங்க ,,அடிச்சுப்போட்டு பிறகு குழம்புவம் ஜோசிக்காம வாறதெண்டா காலையில் போன் அடியுங்கோ ,எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு சாமி கும்பிட்டு ரெடியா நிக்கிறன் "
                                   
                                  என்று அவருக்கும் ,எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னேன். சொன்ன மாதிரி இன்று அள்ளிக்கொட்டி இருக்கு .நண்பர் இன்னும் போன் எடுக்கவில்லை . கோவத்தில கொண்டுவந்த புறாவை நேற்றும், முந்தநாளுமே கொஞ்சம் கொஞ்சமா பறக்க விட்டிருப்பாரோ என்றும் ஜோசிக்கிறேன்.
                                
                               இன்று காலையில் சிசிலியா போன் அடிச்சாள். அவள் என் பிரியமான சகி .    சிசிலியா  சும்மா  ஆள் இல்லை. பெரிய  உடையார் மணியகாரன் போன்ற ரேஞ்சில் உள்ள கொலர் தூக்கி விட்டு சபைசந்தியில் எழும்பிப் பேசிய  நோர்க்ஸ் குடும்பத்தை சேர்ந்தவள், அவளைப் பார்த்தாள் அவள் உயரத்தையும் நடையையும் நீல அக்குவா மரைன் நிறக் கண்களையும்  வைச்சே மிச்ச சாதகம் சொல்லலாம். அவளோட தாத்தா நிலச்சுவான்தார் குடி , கப்பலோடிகள்  கோத்திரம் , அவருக்கு  ஸ்பிலபேர்க்  நகரின்  சந்தியில் வெண்கலச் சிலையே வைச்சு இருக்கிறார்கள் .

                                       " ஹாய் ,என்ன செய்யுறாய்,,  மண்டைப்பிழை ,"

                                       " ஒருமண்ணும் இல்லை சும்மா சூடாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறேன் சிசில் "

                                         " அப்படியா,,சினோவைப்  பார்த்தால்  என்னவும்  எழுதி அறுப்பியே  இண்டைக்கு   என்னமும்  கதை வைச்சு இருக்கிறியா "

                               " ஹஹஹா,,எப்படித்  தெரியும்  சிசில் "

                            "  இவளவு  நாள்  உன்னோடு  இழுபடுறேன்  இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது  உற்றுப் பார்த்தால்  அதுக்குள்ளே ஒரு கதை  குந்திக்கொண்டு இருக்குமே "

                            " அட அட  இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா  சிசில்  " 

                         "  அப்படியா,  மோட்டுக்  கழுதை  ,அதை  நீ சொல்லுறாய்  எனக்கு,,நீ சும்மா  காத்தையே  பிடிச்சு வைச்சு அதையும் உருவிக்    கதை எடுத்து விடுறவன்  ஆச்சே  "

                               " ஹஹஹா,,,அதெண்டா  கொஞ்சம் உண்மைதான் ,,நீ என்ன பிளான் போட்டு வைச்சு இருகிறாய்  இண்டைக்கு "

                                    " ஒ, சினோ ஸ்கி ஒடப்போறேன் வாரியா,சொங்க்ஸ்வான் பக்கம் வரவா, எப்படி உன் பக்கம் சினோ கொட்டுதா "

                                       " ஆமாடி,,அள்ளிக்கொண்டு கொட்டுது ஹ்ம்ம்,,வாவேன் ,"

                                       " உனக்கு வேற பிளான் ப்ரோக்ராம் ஒண்டும் இல்லையா இன்று "

                                  " ஒரு மயிரும் இல்லை ,,நீ வாடி கழுதை "

                                   " பசிக்குமே,,சாப்பாடு என்ன செய்வது,,கிறிஸ்மஸ் ஜூலசிங்கே, சிவைன் ரிப்ப இருக்கு அவனில வைச்சு எடுத்துக்கொண்டு வரவா "

                                         " என்ன எல்லாம் மிச்சம் கிடக்கோ எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வா,,கொலைப் பசியில் நிக்குறேன் "

                                          "அப்படியா ,,ஆச்சரியம் ,உனக்கு சாப்பாட்டில் இண்டரஸ்ட் வந்தது,,பொதுவா உனக்கு கணகணப்பா உள்ளுக்கு இறக்க என்னவும் வேண்டுமே சினோவைக் கண்டதால் "

                                                  " ஹ்ம்ம்,,அதுக்கு ஒருவர் வர இருந்தார். புறா வைச்சு இருக்கிறேன் என்று சொன்னார்,,ஆனால் போன் இன்னும் அடிக்கவில்லை "

                                          " அப்படியா,,போன் அடிச்சால் போயிடுவியா "

                                      " இல்லடி,,அந்தாள் ஒரு செம அறுவை,,பழைய பஞ்சாங்கம் போல சிஞ்ச்ச் சக்க சிஞ்ச்ச் சக்க எண்டு சுயபுராணம் பாடிக்கொண்டு இருக்கும் "

                                         " ஒ ,,என்றாலும் உன் நாட்டு மக்களுடன் உன் மொழியில் பேசுவது அலாதிதானே "

                                     " ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ,அந்தாள் இருக்கிற என்னோட அரைவாசி உயிரைத்தான் எடுக்கும் ,நீ வாடி என் கப்பக்கிழங்கு "

                                            " பரவாயில்லை,,,என்னட்ட மான் இருக்கு ,,டென்மார்க் கப்பலில வேண்டிக்கொண்டு வந்தது,வேற என்னவும் வேணுமா "

                                             " இதுக்கு மேல என்னடி வேணும் "
                                        
                                           மான் என்பது மான் படம் போத்தலில் போட்ட ஜேகமாஸ்டர் என்ற மூலிகைகளில் செய்யப்படும் அல்கஹோல் குடிவகை. டென்மார்கில் அதைப் பாதிரிமார்களின் வடிசாலையில் உற்பத்தி செய்வார்கள். அதன் ரெசிப்பி அந்தப் பாதிரிமாருக்கும் பரமபிதாவையும் தவிர வேற ஒருவருக்குமே தெரியாது .பூச்சிகளுக்கு அடிக்கிற டி டி டி போல வாசம். கஷாயம் போலக் கசக்கும் குடிக்க, குடிச்சு முடிய நுனி நாக்கு அரிநெல்லி போல இனிக்கும் .
                                          
                                           சிசிலியா டெலிபோனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு தொடர்ந்தாள், எனக்கு அவளின் சொண்டுதான் முன்னுக்கு வந்தது . சிசிலியாவின் சொண்டு அது ஒரு சிதம்பர நடராஜா ரகஸியம் . சும்மாவே அவள் சொண்டு மொங்கன் வாழைப்பழக் கலர். அதுக்கு விக்டோரியா சீ க்கிரெட்  தயாரித்த லிப்ஸ்டிக்  போட்டாள் என்றால் ரெண்டு தென்னம் கிளி நடுவில கொவ்வைப் பழத்தை வைச்சு உறிஞ்சுற மாதிரி அட்டகாசம் போடும். விக்டோரியா சிகிரெட் உலகப்புகழ் பெற்ற பசைன் டிசைன்  உடுப்பு  விக்கும்  கடை , ஒஸ்லோவில் அதுதான் மிக்கப்பிரபலம்  ,அவர்கள் தயாரித்து  வெளியிடும்  லிப்ஸ்டிக் பயங்கர விலை, ஆனால் நம்பர் வன் என்று சிசிலியா அவள் சொண்டை சாட்சிக்கு வைத்துச் சொல்லுவாள் ,,,

                                            " ஒ ,,நல்ல உடுப்பு போடு இது வேட் குளிர்,எலும்பில பிடிக்கும்,கழுத்துக்கு மப்பிளர் சுத்து,,இந்த லேட் வின்டர் நல்லதில்லை . மண்டையில் லூவர் ஸ்கோ கொழுவு,,இல்லாட்டி தலைக்கால தண்ணி இறங்கும் பிறகு உனக்கு சைனஸ் வரும் பா "

                                    " அடியே வீக்கிபீடியாவை விழுங்கினாவளே,,ஜெகமாஸ்டர் போதுமடி,,குளிரை சமாளிக்க "

                                       " சரி,,உனக்கு நான் நன்மைக்கு சொன்னாலும் கிண்டல் போல இருக்கு மாடு ,,ஜெக மாஸ்டர் முக்கால் லீட்டர் கிளாசிகல் பிரீமியம் போத்தல் தான் கொண்டு வாறன் "

                                              " அதைக் கொண்டுவா,,முதல் கதைச்சுக்கொண்டு இருக்காமல் வேலையில் இறங்கடி மவளே "

                                                " விண்டர் புல் கவர் ஓவர் ஒல் போட்டுக்கொண்டு வாறன் ,புது லீமாரோஸ் ஜக்கட் கிறிஸ்மஸ் பரிசில் கிடைததுடா "

                                             " அடியே,,என்னத்தையாவது போட்டுக்கொண்டு வாடி,,இலகுவாக் கழட்டக்கூட்டியதைப் போட்டுக்கொண்டு வாடி என்சைக்கொலோப்பிடியாவுகுப் பிறந்தவளே "

                                                  " அடி செருப்பால ,,மவனே உன்னோட உயரத்துக்கு உனக்கு நினைப்பு அதிகம் பா "

                                          " வாவ்,,வாவ்,,நீதாண்டி எண்ட ராசாத்தி ,, என்னைவிட்டால் யாருமில்லை என் உயிரே உன் கை அணைக்க "

                                                        " டேய் ,,என்னடா ஸ்ரீலன்கிஸ்கா மொழியில் பாட்டு எல்லாம் பாட்டு பாடுறாய் எ ன் னை வி ட்டா ல் யா ரு மில் லை,,இதுக்கு என்னடா அர்த்தம் மோட்டுக் கழுதை "

                                                  " எண்ணை விட்டால் என்னைப் போல கார் ஓட ஒருவரும் இல்லை எண்டு அர்த்தமடி அகராதி பிடிச்சவளே ,முதல் இறங்கு வெளியே "

                                    " ஹஹஹஹா, ஜெகமாஸ்டர் பெயரைக் கேட்டால் உனக்கு நாக்கு வெளிய தொங்குமே "

                                                " ஹ்ம்ம்,,எல்லாம்தான் வெளிய தொங்குது,,முதல் வெளிக்கிட்டு வாடி "

                                              " சரி,,உன் ப்ரென்ட் புறாவோட வந்தால் என்ன செய்வாய்,,அவரோடு போவியா தண்ணி அடிச்சுக் கும்மாளம் போட "

                                                       " அந்தாள் நோர்வேயை விட்டுப்போட்டு லண்டனுக்கு ஓடிப்போன ஒரு ஆள்..அவர் எனக்கு முக்கியமில்லை ,,நீதானே வேணும் என்ற ஏங்குறேன் ,,அன்பே வா அருகிலே குளிர் காதில கிளிப் பேச்சுக் கேட்க வா "

                                                 " என்ன,,இண்டைக்கு நல்ல குஷி மூட்டில நிக்குறாய் போல,,பாட்டு எல்லாம் பறக்குது .."

                                          " நீ வாவேன் மிச்சம் இருக்கு உனக்கு இண்டைக்கு,,ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ,,ஒரு கொள்ளை நிலா உடல் நனைகின்றது ,"

                                                " அப்புறம் பாடு மிச்சத்தையும்,,நல்லா இருக்கே பாட்டு மெலோடி "

                                            " மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா மனம் சூடான இடம் தேடி அலைகின்றது ஹஹஹஹா "

                                               " எதுக்குப்பா,,ஹஹஹாஹ் ஹஹஹா எண்டு வட துருவக்கரடி போல இழிகிறாய் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு "

                                           " ... ............................. "

                                                       " ஒ அடப்பாவி... கசபிளங்கா படத்தில வார சீன் போல சொல்லுராயே , ஆனாலும் நீ சும்மா வெறும் வாயல ஹோலிவுட் படம் ஓட்டுற ஆள் தானே ,,சரி,,இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ..அப்படியா ,,,பார்க்கலாம்,,,ஹ்ம்ம் ,,வந்து சொல்லுறேன் மோட்டு எருமை மாடு "
                                  
                                     அவள் குரலைக் கேட்க இண்டைக்கு " கட்டிப்பிடி கட்டிபிடி டா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடி டா " கதை போலதான் போகும் போல இருக்கு..
.

.