Sunday 6 September 2015

Don't Cry For Me..Agerntina





அஜண்டீனவின் "ஆன்மிக பெண்மணி" Eva Perón அஜண்டீனவின் அதிபரராக இருந்த Juan Perón இன் இரண்டாவது மனைவி, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலும் ,அழகான,புகழ் பெற்ற நடன,பாடகியான எவாவை மணந்து "first lady " அந்தஸ்து கொடுத்து வைத்து இருந்தார் ,அவர் இறந்துபோக ஏவா அரசியலில் நுழைந்து, பல அதிரடியான மாற்றங்கள் பெண்கலின் சமுதாய வாழ்கை நிலைய உயர்த்தக் கொண்டுவந்தா ,அதால இன்றுவரை அஜண்டினியன் மக்களின் அபிமான தேவதை ஏவா.



                                                            அந்தப் பெண்மையின் அரசியல்,காதல், வாழ்வின் எழுச்சியயும்,வீழ்ச்சியயும் வைத்து " ஏவாவின்செல்லப் பெயரான "Evita" என்று உலககத்தை கலக்கி சக்கைபோடு போட்ட இசை நாடகத்தில இந்த " Don't Cry for Me Argentina " என்ற இந்தப்பாடல்" வந்தது,        



                                           ஸ்பானிஷ் மொழியில் ஒருவர் எழுதிய ஒரு கதையை துரும்பாகப் பிடித்துக்கொண்டு ,மிச்ச கதைய டெவெலப் பண்ணி,ஆங்கிலேயரான அன்று லோஎட்ஸ் வெப்சர் இசை அமைத்தார் .இந்த பாடல் பல அரசியல் குறியீடுகளை சொல்லாமல் சொல்வதால்,சில ஆண்டுகள் ஆயெண்டினா இராணுவ அரசாங்கம் தடை செய்தார்கள்.



                                 இன்றுவரை உலகம் முழுவது இருந்து இந்தப் பாடல் கொடுத்த உணர்வாள் ,பல்லாயிரக்கனக்கான டுரிச்டுகள் அஜென்டினா படை எடுகுரார்கள், Evita இன் கல்லறையப் பார்த்து வணக்கம் செய்ய..இந்தப் பாடல் பலர் பல தாள கதியில் பாடியிருக்க்ரர்கள் ,,நான் ஒரு" semi dance beat " ஸ்டைலில் கிடாரில் வசித்து இருக்குறேன்!



                                    பல இலங்கை தமிழர்கள் இசைஅமைகிறார்கள் , போனாப் போகுது எண்டாவது " EVITA " போல பாவப்பட்ட, 30 வருட யுத்தத்தில நொந்து, நூடில்ஸ்ஆகி நிமிரமுடியாம நிக்கும் இலங்கை தமிழரின் விடுதலையின் கண்ணீர்கதையை யாரவது ஆங்கிலத்தில் "MUSICAL இசை நாடகமாக" இசைஅமைத்தால் உலக அளவில் எங்களின் இழப்புகளின் கண்ணீர்கதைக்கு குறைந்தது ஒரு அர்த்தமாவது கிடைக்கும்! செய்வார்களா?


Ithayam Oru Kovil ...Mestro Ilayaraaja





இதுதான் இளையராஜா இசையின் தனித்தன்மை. மற்றவர்களின் பாடல்களை கேட்டால் உங்களுக்கு ட்யூன் மனதில் பதியும் அல்லது வரிகள் மனதில் பதியும், ராஜா இசையில் மட்டுமே முன்னிசை, இடையிசை, பின்னிசை, பின்னணி இசையென ஒவ்வொரு துணுக்கும் மனதில் பதிந்து விடும். அவர் பாடலை பாடத் துவங்கினால் உங்களை அறியாமல் இசை கோர்வைகளை முணுமுணுக்கத் துவங்கி விடுவீர்கள்.இது சமகாலத்தில் எந்த இசை கலைஞனும் சாதிக்காதது. அவர் பாடல்களை வெட்டி ஒட்டாமல் முழுமையாக உருவாக்குகிறார் என்பதே இதன் காரணம். 'ஓர்கானிக் மூசிக் ' என்பார்கள் இவ்வகை இயற்கையுடன் முழுமையாக இயைந்து இசைந்து இனைந்து உருவாக்கப்படும் கலைப் படைப்புகளை. சென்ற சில நூற்றாண்டுகளில் இசைக் கலைக்கென உருவான அப்படிப்பட்ட ஒரு முக்கிய ஜீனியஸ் களில் இளையராஜாவும் ஒருவர் ...

மலை தந்த கதை....

சில கதைகள் காலத்தோடு அடிப்பட்டுப்போய் அதன் காலத்துக்காய்  மறைந்த இருக்கும். மழையோடு காளான் வெளிக்கிடுவது போல  ஒரு நேரத்தில் அது தன்னை வெளிப்படுத்திவிடும்.   குமார் அண்ணை ஒரு நாள்க் கேட்ட கேள்வியால், வருடங்களாக நானே மறந்த அந்த இலங்கையில் மலை ஏறிய சம்பவத்தை நோர்வேயில் எனக்கே நினைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. 

                              சிவனொளிபாத மலை என்று தமிழிலும், " ஸ்ரீ பாத " எண்டு சிங்களத்திலும், " ஆடம்ஸ் பீக் " என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இலங்கையின் மத்திய மலை நாட்டில் இருக்கும் மலையில், கொழும்பில் வேலை செய்த போது ஒரு விடுமுறை தினத்தில் என்னோட வேலை செய்த பியசேனா என்ற  சிங்களவரின் குடும்பம் போன போது, நானும் அவர்கள் ஹையர் பண்ணிப் பிடிச்சுக் கொண்டு போன வானில தொத்தி ஏறி, அவர்களுடன் அந்த மலையில் ஏறிய அனுபவத்தைப் பல வருடம் மறந்து போய் இருந்தது உண்மை.

                                 நோர்வேயின்  ஒஸ்லோவில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீட்டை எடுத்து, பல இடைஞ்சல்களுடன் சமாளித்து இருந்த போது, ஒருநாள் எனக்கு தெரிந்த முழுமை இல்லாத சிங்களத்தில் இலங்கையில் உள்ள ஒரு சிங்கள நண்பருடன் கதைத்ததைக் கேட்ட, அந்த வீடில எங்களுக்கு  லீடர் போல இருந்த குமார் அண்ணை கேட்ட அந்தக் கேள்வி, புலம் பெயர்ந்தபின் பின், வருடங்களாக நானே மறந்த அந்த இலங்கையில் மலை ஏறிய சம்பவத்தை நோர்வேயில் எனக்கே நினைக்கும்படியான அந்த  சம்பவம் நடந்தது. 

                                           அந்த வீட்டில் என்னோடு மாச வாடகைக்கே  அழுது கொண்டு  இருத்த சக அலுப்புகளில், கொஞ்சமும்  அலுப்பு இல்லாத எப்பவும் அமைதியான குமார் அண்ணை, சின்ன வயசிலையே நோர்வேயிட்கு வந்திட்டார், வலிகாமம் வடக்கில் ஒரு விவசாயக் குடும்பத்தில்ப் பிறந்த அவர் எண்பத்து மூன்றில் பலாலி வீதியில் கண்ணிவெடி வெடித்த கையோடு, கொழும்பில்க் கலவரம் வெடிச்சு அடங்கிய சில மாதங்களில், இனி யாழ்பாணத்தில இருந்தால் பிரசினை எண்டு அவரோட அப்பா அவரைப் பிடிச்சு சங்கானை மனியத்திண்ட வெங்காய லோரியில ஏற்றி கொழும்புக்கு அனுப்பி இருக்குறார் ,

                                குமார் அண்ணையை செக்கட்டித் தெருவில ஒரு லொட்சில சில வாரம் வைச்சு, ஏஜென்ட் இந்திரலிங்கதோட " இறங்கினாப் பிறகுதான் காசு " எண்டு பேரம் பேசி, " ஹெல்மெட் பாஸ் போட்டில" தலை மாத்தி, கே எல் எம் லுப்தான்சா விமானத்தில ஏறி மலேசியாவில தரை இறங்கி, அங்கிருந்து உருளைக்கிழங்கில " போர்ட் என்றி " விசா அடிச்சு உக்கிரேன் கீவ் இல ரகசியமா இறங்கி, கிழக்கு ஐரோப்பிய  ஊசி இலைக் காடுகள் எல்லாம் நடையா நடந்து ,போலந்து போடர் தாண்டி  , கிழக்கு ஜெர்மனிக்கால மேற்கு ஜெர்மனிக்கு இழுத்து எறியப்பட்டு ,டென்மார்க்  பாதையால நோர்வேயிட்குள்ள அரசியல் அகதியா வந்த பாதையில் அவர் ஒரு நாளுமே ஒரு சிங்களவனையோ, சிங்கள மொழியையோ அறிந்ததே இல்லை. 

                                         ஒரு நாள்ப் பின்னேரம், அன்றைக்கு நான் சிங்களம் பேசுவதைக் கேட்ட அவர்

          " சிங்களம் தலைகாரணமா பேசுறீர் உமக்கு எப்படி ஐசே  சிங்களம் புளுவண்டா தெரியும் "

                               எண்டு கேட்டார்,எனக்கு அது எழுத  வாசிக்கத்  தெரியாது

                           " ஆப்பக் கடை நோனா ஆட்டுக்கறி வைச்ச மாதிரி "

                             பேச மட்டும் தெரியும் எண்டு சொன்னேன்,

                           அவர் விளங்காமல்ச்  சிரிச்சார். இவர் ஏன் இதைக் கேட்டார் ,சில நேரம்  சிங்கம் புலி  அரசியல் என்னவும் தொடக்கி தேன் கூட்டுக்கு கல் எறிஞ்சு இருக்கிற கொஞ்ச நின்மதியையும் கெடுக்கப் போறாரோ எண்டு நினைச்சு,

                       " ஏன் குமார் அண்ணே சிங்களம் பேசுறது அதென்னவோ பெரிய விசியம் போலக் கேட்குறிங்க " எண்டு கேட்டேன்,

                                அவர் அதுக்கு சடார் எண்டு

                               " இல்லை ஐசே ,நீர் சிங்களநாட்டில இருந்த மாதிரி இருக்கு "

                              "   இல்லைக்  குமார் அண்ணே,,கொழும்பில் வேலை செய்தபோது  கொஞ்சம்  சிங்களம்  பேசமட்டும் பழகினேன், அதுவும் பிழை பிழையாத்தான் கதைக்கப் பழகினேன்  "

                               "  அப்ப  புளுவண்டா  கதைக்க  மாட்டீர்  எண்டு  சொல்லுறீரோ, நல்லாக் கதைகிரீரே  "

                                   "  அப்படிதான் உங்களுக்கு  இருக்கும் , சிங்களம்  இலகுவா பிடிக்கலாம், இலக்கண சுத்தமா பேசாமலே விளங்கும்  அது "

                                   "  உம்மட்டை  ஒண்டு கேக்கவே,,கன  நாளாய்க் ஜோசிக்கிரனான், சரியான ஆட்கள் அம்பிடவில்லை கேட்க  "

                                 "   சரி,,கேளுங்கோ  குமார்  அண்ணை,, என்ன சிங்களப் பெட்டைகளை சிம்பிளா  சிங்களம் கதைச்சால் மடக்கி  விழுத்தலாம் எண்டு  கேக்கப்போரின்களோ "

                           "  இல்லை,,ஐசே,,இது  வேற  ஒரு  கேள்வி "

                             " சரி  கேளுங்கோ,,தெரிந்தால் சொல்லுறேன் அண்ணே "

                              " சிவனொளிபாத மலை ஏறி இருக்குரிரோ, அது ஏறுறதுக்கு பயங்கர மலையாம் நீர் ஏறி  அதில சிவபெருமானோட  பாதம் இருக்காம் அதைப் பாத்தநீரோ "

                          எண்டு கேட்டார்.

                      இவரோட இந்தக் கேள்வியைக் கேட்ட ஹோலில காலையில மக்டோனாலில  வேலை செய்து முறிஞ்சு வந்து சுருண்டு படுத்துக் கிடந்த  இரண்டு வன்னிப் பொடியளும், பெட் சீட்டை ஒதுக்கி விலதிப் போட்டு எழும்பி இருந்து

                              " குமார் அண்ணே, இண்டைக்கு மணிரத்தினம் படம் ஓடப்போகுது போல,நல்ல கேள்வியத்தான் கேட்டியள்,எங்களுக்கும் ஒரு மண்ணும் தெரியாது அந்த மலையைப் பற்றி ,அரசன்னே சொல்லுங்கோ கேட்பம் "

                          எண்டு என்னைப் பார்த்தாங்கள். 

                                     குமார் அண்ணைக்கு அந்த மலை பற்றி என்னவோ " குருடன் யானையைத் தடவிப் பார்த்த " மாதிரி ஒரு அபிப்பிராயம் இருக்க வேண்டும் எண்டு நினைச்சு ,

                                " நீங்க வேற என்ன அறிங்சிங்க அந்த மலை பற்றி அதை முதல் சொல்லுங்க முதலில் " எண்டு கேட்டேன்.

                      அவர் மறுபடியும்

                     " இல்லை ஐசே, படிக்கிற நேரம் சமயப் புத்தகத்தில் அதைப்பற்றி படித்தது, மற்றப்படி அது எப்படி இருக்கும் எண்டு கற்பனை மட்டும் தான் செய்து பார்த்து இருக்கிறேன்,, ,,,, "

                       எண்டு கொஞ்சம் சொன்னார்.

                                       முக்கியமா அவர் அந்த மலை ஏறுவதை டிஸ்கவரி டிவி சனலில் காட்டுவார்களே ,நிறையக்  கயிறு, சின்னக் கொக்கிகள், குத்து ஊசிக்  கொளுவிகள் எல்லாம் உடம்பு முழுவதும் கொழுவிக் கொண்டு அங்குலம் அங்குலமா ஒரு சின்னக் கைக் கோடாலியால கொத்தி கொத்தி ஏறுவார்களே அதுபோலதான் அது ஏற வேண்டும் என்பது போல சொன்னார் ,அதுதான் எல்லா சமயப் புத்தகங்களின் விவரணங்களில் வருவது போல, பல நம்ப முடியாத விவரிப்புப் பாதிப்பால் அவர் ஓவரா கற்பனை பண்ணக் காரணமா இருந்து இருக்கலாம் போல இருந்தது.

                                 சிவனொளிபாதமலை  ஒரு முக்கியமான  புனிதமான மலை  இலைங்கையில் . அதுக்குப்  பின்னே  உள்ள நம்பிக்கை இமயமலை போல உறுதியானது. ஆனாலும்  அந்த   மலைக்கு ஒரு தரம ஏறாவதவரும் முட்டாள்.... ஒன்றுக்கு மேற்பட்ட தடவையும் ஏறுகின்றவர் படு முட்டாள் எனக் கூறப்படுவதுமுண்டு  என்பார்கள். எப்படியோ ஒரு புனிதமான மலையை ஏறுவது என்பது ஆன்மிகத்துக்கு அப்பாற்ப்பட்டு உயரங்களை இலக்காக்கித் தொடும்  ஒரு  அலாதியான அனுபவம், அதனால்தான் மலை ஏறும் போது திரும்பிக் கீழே பார்க்கக்கூடாது  என்றும்  சொல்லுவார்கள் 

                                   சிவனொளிபாத மலை, மத்திய மலை நாட்டில் ஹட்டன் நகரத்துக்கு அண்மையில் ,வெலிமட மேட்டு நிலத்தின் தொடர்ச்சியாக, ஒப்பிட்டு அளவில் தனியாக இருக்கும் ஒரு மலை. பியசேன குடும்பத்தோடு  அந்த மலைக்கு பல முறை போய் இருப்பதாக சொன்னார்,எனக்கு அதுதான் முதல் முறை. அந்த மலை இரண்டு விதமாக இரண்டு பக்கம் இருந்து ஏற முடியும் எண்டும் சொன்னார்,கொஞ்சம் சரிவு குறைந்த படிக்கட்டுக்கள் பெரிதாக இருக்கும் பக்கத்தில் இருந்து ஏறப்போறதா சொன்னார்,

                                              முதியான்சலாகே தர்மசிறி  பியசேன, தெற்கு இலங்கையின் அம்பலாங்கொட நகரத்தில் பிறந்தவர், துட்டகெமுனுவின் ஹரவா சிங்கள இரத்த வம்சதைச் சேர்ந்த பவுத்த சிங்களவர். ஸ்ரீலங்கா ஆர்மி " கெமுனு வாச் ரெஜிமென்டில் " அதிகாரியா வேலை செய்தவர், கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் பாதை ஓரக் கிளைமோர் கன்னி வெடியில் மயிர் இழையில் தப்பிப், பின்னர் வடக்கில் எங்கோ ஒரு ஆர்மிக் காம்பில் இருந்து லீவில் வந்த நேரம்,அவர் மனைவி அழுது குளறிப்

                                        " பிச்சை எடுத்து எண்டாலும் சாப்பிடுவம், என்னையும் பிள்ளைகளையும் அந்தரிக்க விட்டுப் போட்டுப் போக வேண்டாம் "

                          எண்டு சொல்ல

                                           அதன்பின் பியசேன வேலைக்குப் போகவே இல்லை, தலை மறைவாகி அவரோட கிராமத்தை விட்டு நாற்பது விதமான மக்கள் ஒன்றாக வாழ்ந்த  கொழும்பில் வசித்தார். எங்களோடு அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கசியர்  வேலை செய்தார், என்னைப் பூனைக்கும் பயப்பிடும் ஒரு தமிழன் எண்டு நினைச்சோ என்னவோ எனக்கு எல்லாம் பயப்பிடாம சொல்லுவார் பியசேன.  

                                      என்னை " யாப்பனே மல்லி  " என்றுதான் சொல்லுவார்.  அதுக்கு  தமிழில்எ அர்த்தம் " யாழ்ப்பாணத் தம்பி " என்று வரும், என்னோட   பின்னணிகள் பற்றி ஒருநாளும் கேட்டதில்லை. தன்னோட ஒரு தம்பி காட்டுயானை வயல் அறுப்பு நேரம்  அவர்கள் கிராமத்துக்கு வந்து வீட்டை உடைச்ச நேரம் அவரோட தம்பியை நித்திரைப்பாயில் வைச்சு நெரிச்சு சாகடித்துப் போட்டுது  என்றும், நான்  ஏறக்குறைய அவரோட தம்பி போல  உருவத்தில் இருந்ததால்  யாப்பனே மல்லி  என்று  சொல்வதாகச்  சொல்லுவார்.

                                        ஹையர் வானில மத்தியானம் கொழும்பில இருந்து மத்திய மலைநாட்டு ஏற்றம் தொடங்கும் மாவனல்ல போகவே மழை  அடிச்சு ஊத்தியது, மல்வான என்ற இடத்தில வானை நிட்பாடி  பியசேன இறங்கிப்போய் ஒரு ரம்புட்டான் பழம் ஒரு கூடை நிறைய வேண்டிக்கொண்டு வந்தார். வரக்காப்போளை  என்ற இடத்தில  கொரக்காப்புளி  நல்லா  இருக்கும்  என்று வானை நிற்பாட்டி இறங்கிபோய் ஒரு சொப்பிங் பாக் முழுக்க அதை நிரப்பி வேண்டிக்கொண்டு வந்தார்.

                             இருட்டின நேரம் ஹட்டன் நகரத்துக்கு அண்மையாகப் போய் ஒரு காட்டுப் பாதையால மலை அடிவாரம் போக மழை விட்டுத்  தூரல் போட தூவானத் திரைச்சீலையில் மலையைப்  பார்க்க பாக்கியராஜ் படத்தில வார கனவுக் காட்சி போல மங்கலாக தெரிந்தது. அந்த இடத்தில் சிங்கள மொழியும் சிங்களவர்களும் அதிகம் காற்றில் சுற்றிச் சுழற சிவபெருமானையே அடிச்சு திரத்தின மாதிரி ,சைவ சமயப் புத்தகத்தில் உள்ள மாதிரி எந்த விதமான இந்து சமய அடையாங்களும் இருக்கவில்லை.

                                          மலை அடிவாரத்தில் ஒரு புத்த கோவிலும், பன்சாலையும் இலங்கை ஒரு " சிங்கள பவுத்த நாடு " என்பது போல கம்பீரமாக இருந்தது. ஒரு வயதான ஐயா மட்டும் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, நீண்ட வெள்ளைத் தாடியைத் தடவிக்கொண்டு, ஒரு சின்னச் சாமியார் போல ஒரு சின்னக் கடை வைச்சு இருந்தார்,அவர் கடையில ரேடியோவில சிங்களப் பாடல் பாடிக்கொண்டு இருக்க, தேங்காய், கற்பூரம்,சாம்பிராணி மேசையில் அடுக்கி வைத்திருக்க, 

                          அவரிடம் போய் " ஐயா நீங்க தமிழா " எண்டு கேட்டேன்

                         அவர் " ஆமாங்க ", என்று மலையகத் தமிழில்க்  கதைத்தார்,

                          என்னைப்பற்றிக் கேட்டார், நான் யாழ்பாணம் என்றேன்,அவரோட மகளை சின்ன வயசில் யாழ்பாணத்துக்கு ஒரு டாக்குத்தர் துரை வீடுக்கு வேலைக்கு அனுப்பியதா பெருமையா சொன்னார், மலையைப் பற்றிக் கேட்டேன், தான் கடை பலவருடம் நடத்துவதாகவும், மலை ஏறுவதில் ஒரு தத்துவம் இருக்கு எண்டும் சொன்னார் அது என்ன எண்டு கேட்டேன் ,  

                      " மேல ஏறினவன் கீழே இறங்கி வர வேண்டும்,அது போலதான் வாழ்கையும் " எண்டு தத்துவம் போலக் கதைத்தார், அவரோட கடையில அவரைப்போலவே ஒரு சாமியார் படம் பெரிதாக மாட்டி இருந்தார்,

           நான் " அந்தப் படத்தில இருப்பது யார் உங்க குருநாதரா " எண்டு கேட்டேன்,அவர் சிரிச்சுப்போட்டு ,

                       "நான் சாமியார் இல்லங்க , தனியா இருக்கேன் அதனால சாமியார் போல தாடி  வளர்குறேன்க ,  இப்பிடி சாது போல இருந்தாலும் அப்ப அப்ப ரால் ஆமிப் போலிசுக் காரங்கள் வந்து கொட்டி இருக்கா கொட்டி இருக்கா எண்டு கட்டி இருக்கிற வேட்டியையும் உருவி செக் பண்ணுறானுங்க 

                               "அடக் கடவுளே   வயதான  உங்களையும்  இப்பிடிப் போட்டு உலைக்குரான்களே "

                                   " நீங்க வேற தம்பி, இங்கே  தமிழில் கதைத்தாலே  எல்லாருக்கும்  சந்தேகம் "

                                 " ஓம் ஓம் அய்யா ,இது இலங்கை முழுக்க உள்ள குழப்பம் தானே "

                               "அப்புறம் தம்பி  என்ன கேட்டிங்க  அந்தப் படத்தில இருக்காரே அவரு திருவள்ளுவர், திருக்குறளை எழுதின தெய்வப் புலவர் அவர் தாங்க, இது கூட அறிஞ்சுக்காம இருகீங்க "

                                "  ஓம் ஓம்,,இப்ப விளங்குது ,"

                                        "  தம்பிக்கு சைவ சமயம் இல்லைப்போல இருக்கே,,வேதக்கார ஆகமம் போல பேசுறிங்க "

                                " இல்லை  அய்யா  நான்  சுத்த சைவம் தான்,,இப்ப  தாறுமாறா இடம் வலம் தெரியாமல் இலங்கை முழுவதும் ஓடுவதால் என்னோட அடையாளமே தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்குறேன் "

                                "   யாழ்பாணத்தில மிச்சம் பேர் இந்து ஆகமத்தில இருக்காங்க இல்லையா "

                                 "     ஓம் ஓம் "

                                " எண்டுதான்  அங்கே போயிட்டு வந்த  என்னோட மவேன் மாரிமுத்து சொன்னானே " 

                              என்றார்,

                                              நான் அவரிடம் நூறு ருபா தாளைக் கொடுத்து ஒரு தேங்காயும்,கற்பூரமும் வேண்டிக்கொண்டு, என்னோட அப்பப்பா போல அவர் இருந்ததால்  மிச்சக் காசை வேண்டவில்லை. 

                              நான் வெறும் கையை விசுக்கிக்கொண்டு தான் போனேன். பியசேன எனக்கும் சேர்த்து சாப்பாடு சமைச்சு கொண்டு வாறதா சொல்லி இருந்தார். அவர் குடும்பத்தில்  பிளாஸ்டிக் தண்ணிப் போத்தல் எல்லார் கையிலையும் இருக்க, சாப்பாடுக்கு நொறுக்கு தீனிப் பாசல் கட்டின " ட்ரவலிங் பாக் "  ஐத் தோளில கொழுவிக் கொண்டு வந்த பியசேன

                           "கெதிப் படுத்துங்க ,கெதிப் படுத்துங்க , இப்பபே மெல்ல மெல்ல ஏறுவோம், அப்பத்தான் மேல இடம் கிடைக்கும் ,ஏறி முடிய உச்சியில்  கையைக் காலை நீட்டி கொஞ்சம் களைப்பாறிப் போட்டு,  காலையில் சூரியன் உதிப்பதைப் பார்க்கலாம் "

                                     எண்டு சொன்னார்.

                                                  நான் அவர்கள் தூக்கப் பாரமான பையை என்னிடம் தரும்படி கேட்டேன்.அதுக்குப் பியசேன

                          " நீ இளம் பொடியன் சந்நியாசி போல மூட்டை முடிச்சு காவிக் கொண்டு ஏறினால் ஸ்டைலா இருக்காது "

                                    எண்டு மறுத்து விட்டார். மலை ஏறும் பாதை முழுவதும் கும்பலில் கோவிந்தா போல பல இடங்களில் இருந்து வந்த மக்களும் எங்களோடு ஏறினார்கள்,சில வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும் கமராவைக் கொழுவிக்கொண்டு,சுவிங்கம் சப்பிக்கொண்டு ஏறிக்கொண்டு இருந்தார்கள். 

                              பியசேன ஒரு காலை  இழுத்து இழுத்து தான் நடந்தார். எங்காவது ஒரு சண்டை முனையில் வெடி விழுந்து சன்னம் பாஞ்சு இருக்கலாம் போல இருந்தது. சில இடங்களில் மலைப் படிகளில் பாசி படர்ந்து இருக்க வழுக்கியது, பியசேன பொஞ்சாதி மிகக் கவனமாக அவரை அந்த இடங்களில் கைத்தாங்கலாகப் பிடித்து பிடித்து நடந்தா . திடகாத்திரமாய் இருந்த எனக்கே தொடையில் கண்டத்தசைகள் பிடிப்பது போலிருந்தது ஏறும்போது. 

                                               அரைவாசி மலைக்கு முன்னதாக  வளைந்து வளைந்து போகும் ஏற்றப் பாதை முழுவதும் சின்ன சின்ன கடைகள் இருந்தது. அதில நிறைய பொருட்கள் சில்லறைக்கு  விற்றுக்கொண்டு இருந்தார்கள். பியசேன ஒரு கடையில் நிற்பாட்டி

                              " இப்ப இஞ்சி போட்ட ப்ளேன் டீ ஒண்டு குடிச்சா கியால வடக் நா "

                                      எண்டு நாக்கில தண்ணி ஊற வெளியில போட்டு இருந்த வாங்கில இருக்க, அந்த கடை ரேடியோவில் எச் அர் ஜோதிபால என்ற சிங்கள பைலாப் பாடகர் பாடின " ரோசப்பாட்ட நோனாவின் சுதுப்பாட்ட கக் குள ,,, " என்ற டபிள் மீனிங் கொசப்புப் பாட்டு அலறிக்கொண்டு இருந்தது.

                               பியசேன அவரோட யாழ்ப்பான நாட்கள், மடக்களப்பு பெண்கள் பற்றி ஒரே கலகலப்பா கதை சொல்லிக்கொண்டு இருந்தார். மலை ஏறின பாதை முழுவதும் இனப்பிரசினை தொடங்க முதல் அவர் ஒரு சாதாரண சிப்பாய் ஆக எப்படி யாழ் தேவி ரெயிலில் யாழ்பாணம் போன அனுபவத்தை, அங்கே பனம் கள்ளு குடித்த நினைவுகளை நான் என்னவோ கூடப்பிறந்த சகோதரம் போல நெருக்கமா,

                           " யாப்பனே மல்லி , உனக்கு  விசியம்எ  தெரியுமால்லா சிங்கள அரசியல்வாதிகளும் ,அவங்களின் கிழிஞ்சு போன  கட்சிகளும் சுத்த ஓட்டு மாத்து ,தேர்தலில் வெல்ல என்னவும் சொல்லி வெண்டபின் அரசாங்க காசை சுளையா சுருட்டி முன்னேறி  விடுறாங்க, "

                         "  ஹ்ம்ம் ,, சொல்லுங்க  பியசேனா "

                              "  பாவப்பட்ட பொது மக்கள்தான் பாணும் பருப்பும்  தின்னுறது  , இதுக்குள்ள சிங்களம் தான் முக்கிய ஆண்டுவ பாசாவ எண்டு மொழிச்  சண்டையை இழுத்து  இனப் பிரச்சினைத்  தொடக்கி, யாப்பனே மல்லி  எனக்கு  இலங்கையில்  எல்லா இன மக்களும் ஒன்றுதான் "

                          "    ஹ்ம்ம்,,,எனக்கும்தான் பியசேன "

                      "  யாப்பனே மல்லி,,உண்மையாவே  சொல்லுறேன்   எங்களைப்போல சாதாரண மனிதர்களின் பிள்ளைகளை யுத்த முனைக்கு அனுப்பிப்போட்டு அவங்கட பிள்ளைகளை றோயல் கொளிச்சிலையும் ,தேர்ஸ்டன் கொளிச்சிலையும்,  இண்டர்நசினால் ஸ்கூல்லயும் இங்கிலீஷ்ல  படிப்பித்து கொண்டு இருப்பாங்க " 

                        "  ஹ்ம்ம்ம்,,அது  உண்மைதான்  பியசேனா "

                      " உனக்கு  சிங்கள  ஆட்களில்  துவேஷம்  இருக்கா,,யாப்பனே மல்லி "

                        "   ஹ்ம்ம்,,,இல்லை..ஆனால்  பல  சிங்களத் தலைவர்கள் தமிழர்களை மனிதர்களாகவே  நடத்தவில்லை "

                       "   ஹ்ம்ம்,,அது  உண்மைதான்  யாப்பனே  மல்லி,,நானும்  அதுக்கு வெட்கப்படுகிறேன்  "

                                                   எண்டு வெறுப்பாகச் சொல்லிக் கொண்டு நடந்தார் , நான் அந்த லைட் இல்லாத  இருட்டுப் பாதையில் மின் மினிப் பூச்சிகள் முகத்தில மோத ,சில்வண்டுகளின்  இரைச்சல் காதில ஊசி குத்த,  பேசாமல் கேட்டுக்கொண்டு நடந்தேன். மேலே ஏற ஏற குளிர் அதிகமாகி , ஒட்சிசன் குறைவு போல இருந்தாலும் அதிகாலை தான் மலை உச்சிக்கு போய்ச் சேர்ந்தோம்.

                                         மலை உச்சிக்கு போன கையோட ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் ஏதும் வரும் எண்டு நினைச்சேன். பதிலா குடலை உருவுற பசிதான் வந்தது, பியசேனாவின் பொஞ்சாதி அதை அறிந்த மாதிரி அவா வைச்சு இருந்த சாப்பாட்டுப்  பார்சலை எனக்கு தந்தா,

                 நான் " அக்கே, நீங்க, பியசேனா,  லமாய்  முதலில்  சாப்பிடுங்க " என்றேன்,

               அதுக்கு அவா

                                         " மல்லி, புதுப் பொம்பிளை போல வெட்கப்படாத, பசி உன்னோட முகத்திலேயே செய்தி வாசிக்குதே, காமே பாலப் புறுத்து கிராம நிலதாரி கமே கெதர.... " எண்டு

                                                 ஒரு கொசப்பு  ஜோக்கான சிங்களப் பழமொழி சொல்லிச் சிரிச்சா, நான் சாப்பிட தொடங்க அந்தப் பாசலில் மாசிக் கருவாடு போட்டு பிலாக்கா கறியும், பொன்னி அரிசிச் சோறும் இருந்தது. பியசேன பொஞ்சாதி கையில கொட்டுக்கொலை  சம்பலை அள்ளிக்கொண்டு வந்து என்னோட பாசலில் போட்டுட்டு

                                       " மல்லி , என்னோட  சாப்பாடு எப்படி, பியசேன என்னோட கொஸ் கறிக்கு சுருண்டுதான் என்னைக் கடத்திக்கொண்டுபோய்க் கலியாணம் கட்டினார் "

                                எண்டு சொல்லி சிரிச்சா. சொல்லிப்போட்டு  தண்ணி போத்தலை பக்கத்தில கொண்டுவந்து வைச்சா. உண்மையில்  பியசேன பொஞ்சாதி சமைச்சுக்கொண்டு வந்திருந்த கொஸ்கறி அமர்களமாதான் இருந்தது. அந்தக் கறிக்கு  இந்த  ஒரு  பியசேன மட்டுமில்லை  அந்த  ஊரில  இருந்த  எல்லாப் பியசேனாக்களுமே மயங்கி இருப்பார்கள்  என்று  அவாவுக்கு  சொன்னேன். ஹஹஹஹா  என்று  சிரிச்சா.

             பியசேன " போட்டுத்  தாக்கு, கேட்டு வேண்டி சாப்பிடு..." , எண்டு  சிரிசுக் கொண்டு ஒரு கல்லில குந்தி இருந்தார். 

                                           காலையில் மலை உச்சியில் இருந்த ஒரு சின்னப் பன்சாலையில் வெண்கல பானையை  எலி விழுந்து உருட்டின மாதிரி மணி அடிச்சார்கள், அந்த மணி யாழ்பாணத்தில என்னோட வீட்டுக்கு அருகில் இருந்த வீராளி அம்மன் கோவில் வைரவர் மணி போலதான் சத்தம் எழுப்பியது. கொஞ்ச நேரத்தில் பன்சாலையில்  இருந்து புத்த பிக்கு போட்ட என்னமோ ஒரு மந்திரம் போன்ற சத்தம்  லவுட் ஸ்பிகரில் இருந்து வந்து எல்லாரையும் அரக்கப் பரக்க எழும்பி சூரியனைத்  தேட வைத்தது,

                      " அது என்ன மந்திரம் "

                          எண்டு பியசேனாவைக் கேட்டேன்.  

                       அவர் அது " தம்ம பதத்தில் உள்ள பிரித் ஓதி மெடிடேசன் செய்யும் போது சொல்லும் மந்திரம் "

                                       என்றார்,எனக்கு என்னவோ ஒரே தாளக் கதியில் திருப்பி திருப்பி வரும் அந்த மந்திரம் சொல்லும் மெட்டு,புத்த சாசனத்தின் மேல சத்தியம் பண்ணி    " தமிழனை விடமாட்டேன்....,தமிழனை விடமாட்டேன்.....கடைசித் தமிழனையும் அழிக்காமல் விடமாட்டேன்...."  என்பது போல இருந்தது.

                                               சிவனொளி பாத மலையில் எல்லா சமயத்தவரும் தங்கள் தங்கள் கடவுள் காலை வைச்சு பதிந்தார் எண்டுதான் சொல்லுறார்கள். நான் என் பங்குக்கு சிவபெருமானின் பாதத்தைத் தேடினேன்,ஒரு கருங்கல்லில்ப்  பாதம் போல ஒரு அடையாளம் இருக்கும் இடத்தை சுற்றி நிறைய மலர்கள் வைத்து,ஊதுபத்தி கொளுத்தி வைச்சு  இருந்தார்கள். கிழக்கில் நக்கிள்ஸ் மலைகளின் மேலாக மஞ்சள் வெளிச்சம் வர ஹாமத்துரு மந்திரத்தை நிட்பாட்டிப் போட்டு

                              " சூரியன் அதன் பொற்கிரகஙன்களை வீசி எழும்பி வருகின்றான்,,,"

                                  எண்டு சொல்லிக்கொண்டு இருந்தார். உண்மையில் விஞ்ஞானப்படி  பூமிதான் சுழண்டு கீழே போகுது,சூரியன் சுழறுவதில்லை என்று சயன்சில் படித்ததை நினைக்க கொஞ்சம் குழப்பமா இருந்தது. இந்த உண்மையை அந்தப் புத்த பிக்குவுக்கு சொல்லப் போனால் என்னோட சிங்கள உச்சரிப்பை வைத்து என்னைத் தமிழன் எண்டு அடையாளம் கண்டால்,அந்த  ஹமத்துரு  முதல் வேலையா என்னை அந்த மலையில் இருந்து உறட்டி விடத்தான் அலுவல் பார்பான் எண்டு போட்டு ஒண்டுமே சொல்லவில்லை... 

                                                        இந்த மலை பற்றி இலங்கையில் வாழ்ந்த  உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய " சயன்ஸ் பிக்சன் " எழுத்தாளர் டாக்டர் ஆதர் சி கிளார்க் அறுபதுக்களில் எழுதிய அவரோட " ஸ்பேஸ் ஒடிசி"  நாவலில் இந்த மலை உச்சியில் இருந்து வேற்றுக்கிரக வானுலகம் போகும் ஒரு பாதை இருந்ததா அந்த நாவலில் எழுதி இருக்கிறார். கற்பனை அதிகம் உள்ள அந்த நாவலில் மலையின் அழகு பற்றியும் எழுதியது உலக அளவில் அந்த நாவல் பெற்ற பிரபலம்  போல ,அந்த மலைக்கு மேற்கு அறிவியல் உலகிலும் கவனிப்புக் கிடைத்து இருக்கு .

                                                         எதிர் காலத்தில் இந்த மலையில் இருந்து பல விண்வெளி அதிசய விசியங்கள் நடக்கும் எண்டு அந்த  " சயன்ஸ் பிக்சன் " னில் டாக்டர் கிளார்க் எழுதிய அந்த நாவல் கோடிக்கணக்கான மக்கள் வாசித்த போதும், இன்றைக்கு அந்த மலை உச்சிக்குப் போற பாதைக்கு லைட் போஸ்ட் நட்டு, கரண்ட்டு வயர் இழுத்து, மின்சார பல்புகள் போட்டதை விட வேற ஒரு விஞ்ஞான விந்தையும் இதுவரை  நடக்கவில்லை.

                                                 சிவனொளி பாத மலையில் அதிகாலை சூரியன் உதிப்பதை இன, மொழி, சாதி ,சமயம் எல்லாம் கடந்து  பார்ப்பது ஒரு தேவலோக அனுபவம்.

                                            கிழக்கில் இருட்டு இழுத்து மூடி வைத்து நீண்டு கிடந்த நக்கிள்ஸ் மலைத்தொடர் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமா மஞ்சள் சிகப்பு நிறம் வர்ணம் தீட்ட, முகில்களின் மறைப்பில் மலை மகள் சோம்பல் முறிச்சு, முடிவுறாத ஒயில்ப் பெயிண்டிங்  ஓவியம் மெல்ல மெல்ல ஒளி பெறுவது போல விரிய, கீழே ஹட்டன்  நகரம் சின்னதாக நெருப்புப் பெட்டி வீடுகளுடன் வெளிச்சமாக, வெலிமடை மேட்டு நில உருளைக்கிளங்குத்  தோட்டங்கள் பச்சை நிறத்தில் இருட்டை விரடிக்கொண்டு இருந்தது . 

                                                                 அதிகாலையிலேயே வடக்கே பருவ மழையை விசாரிக்கப் போகும் மேகங்களைத் தெற்கில் இருந்து ஊடறத்து அதிகாலைப் பறவைகள் உற்சாகமாகப் பறக்க, விலகியும் விலகாத மத்திய மலை நாட்டுப் பனி கோபமாக வெளிக்கிடும் சூரியனின் கோபக் கதிர்களை வடிகட்டி மென்மை ஆக்க, தூரத்தில்  தேயிலைத்தோட்டத்தில கொழுந்து பிடுங்க போற  கூடை சுமந்த பெண்கள் எறும்பு போல மெல்ல மெல்ல தடமாகி நீண்டு போவது  


                         அருகருகே இரண்டு  நீத்தேக்கங்கள் , நமுனகுலைக் குன்றுகள்  நிலமகளின் குத்திட்டு நிற்கும் மார்பகங்கள் போல எம்மி விம்மி பூரித்து நிற்க ,  மத்திய மலை நாடு,ஏன் இலங்கைத்தீவு ,இந்து சமுத்திரம் எல்லாம் கடந்து தொல்காப்பியம் சொன்ன   "வேங்கடம் குமரி தீம்புனல் பெளவமென்று இந்நான்கு எல்லை தமிழது வழக்கே" வரைக்கும் நினைவுகளின் சந்தோஷ உலா உலகத்தை மறக்க வைக்க......

                        "  உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றது... " என்ற குறுந்தொகை வரிகளுக்கு ஆத்மா கொடுத்தது போன்றது சிவனொளிபாத மலை ஏறி  இறங்கிய அனுபவம் அப்போது இருந்தது ! இப்போது நினைக்கும்போது குமார்  அண்ணை  நினைச்ச மாதிரி  டிஸ்கவரி டிவி சனலில் காட்டுவார்களே ,நிறையக்  கயிறு, சின்னக் கொக்கிகள், குத்து ஊசிக்  கொளுவிகள் எல்லாம் உடம்பு முழுவதும் கொழுவிக் கொண்டு அங்குலம் அங்குலமா ஒரு சின்னக் கைக் கோடாலியால கொத்தி கொத்தி ஏறுவார்களே அதுபோல திரிலாகத்தான் அந்த நினைவுகளே இருக்கு !

.
.06.09.14.

Aaagaaya Vennilave Tharai Meethu..Guitar Cover ,,Arangetravelai..




தர்பாரிகானடா இராகத்தில் இசைஞானி இளையராஜா இசை அமைத்து தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் டாக்டர் கே ஜே ஜேசுதாஸ், உமா ரமணன் பாடிய ஒரு அருமையான பாடல்,ஆகாய வெண்ணிலாவைத் தாலாட்டி தரை மீது இறக்கி அதுக்கு அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளையில்
மேஸ்ட்ரோ இளையராஜா அசத்தினார் ,
                                          மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட வைத்த வரிகளை கவிஞர் வாலி எழுதி இருந்தார். கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே சூடஎன்று இரவுகளில் ஏங்க வைத்து இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட இது போல ஒரு பாடல் இனி எப்போது வரும் ?
                                                " அரங்கேற்ற வேளை " படத்தில வந்த இருவர் சேர்ந்து பாடும் ஒரு டுயட் போல உள்ள இந்தப் பாடலின் வரிகள் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வரும் . முக்கியமா சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது எல்லாப் பாடல்களிலும் ஒரு சின்ன இடைவெளி வரும் இந்தப் பாடலில் அப்படி வராது. வரிகள் அலைபோல ஒன்றன் மேல் ஒன்றாக தொடர்ச்சியாக வரும்.
                                          ஒரியினலா இந்தப் பாடல் வேற ஒரு ஸ்கேல் இல வரும். இங்கே நான் உபயோகித்து உள்ள பிண்ணனி கரோக்கி வாசித்துள்ளவர்கள் அதை ஒரு முழு நோட் குறைத்து வாசித்துள்ளார்கள். அதனால் அவர்கள் வாசித்துள்ள ஸ்கேலில் நானும் வாசித்துள்ளேன். அந்தக் குழப்பம் இந்த வீடியோவில் உள்ள சுருதியையும் ஒரியினல் பாடலில் உள்ள சுருதியையும் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்டால் தெரியும்.
                                         டெக்னிக்கலா சொன்னால் இந்தப் பாடல் இசைஅமைக்கப்பட்ட ஸ்கேல் இல் உள்ள பேஸ் நோட் இல இருந்து ஒக்டேவ் ஹை நோட் வரை அலாதியாகப் பாயும் . இந்த வீடியோ சும்மா என்னோட ஸ்டைலில் பொழுதுபோக வாசித்துள்ளேன். ஒரியினல் பாடல் போல சரியாக வாசிப்பு இல்லாவிட்டால் என் கிட்டார் அறியாமையைப் பொறுத்துக்கொள்ளுங்க .
.
.06.09.2015