Sunday 6 September 2015

Aaagaaya Vennilave Tharai Meethu..Guitar Cover ,,Arangetravelai..




தர்பாரிகானடா இராகத்தில் இசைஞானி இளையராஜா இசை அமைத்து தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் டாக்டர் கே ஜே ஜேசுதாஸ், உமா ரமணன் பாடிய ஒரு அருமையான பாடல்,ஆகாய வெண்ணிலாவைத் தாலாட்டி தரை மீது இறக்கி அதுக்கு அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளையில்
மேஸ்ட்ரோ இளையராஜா அசத்தினார் ,
                                          மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட வைத்த வரிகளை கவிஞர் வாலி எழுதி இருந்தார். கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே சூடஎன்று இரவுகளில் ஏங்க வைத்து இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட இது போல ஒரு பாடல் இனி எப்போது வரும் ?
                                                " அரங்கேற்ற வேளை " படத்தில வந்த இருவர் சேர்ந்து பாடும் ஒரு டுயட் போல உள்ள இந்தப் பாடலின் வரிகள் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வரும் . முக்கியமா சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது எல்லாப் பாடல்களிலும் ஒரு சின்ன இடைவெளி வரும் இந்தப் பாடலில் அப்படி வராது. வரிகள் அலைபோல ஒன்றன் மேல் ஒன்றாக தொடர்ச்சியாக வரும்.
                                          ஒரியினலா இந்தப் பாடல் வேற ஒரு ஸ்கேல் இல வரும். இங்கே நான் உபயோகித்து உள்ள பிண்ணனி கரோக்கி வாசித்துள்ளவர்கள் அதை ஒரு முழு நோட் குறைத்து வாசித்துள்ளார்கள். அதனால் அவர்கள் வாசித்துள்ள ஸ்கேலில் நானும் வாசித்துள்ளேன். அந்தக் குழப்பம் இந்த வீடியோவில் உள்ள சுருதியையும் ஒரியினல் பாடலில் உள்ள சுருதியையும் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்டால் தெரியும்.
                                         டெக்னிக்கலா சொன்னால் இந்தப் பாடல் இசைஅமைக்கப்பட்ட ஸ்கேல் இல் உள்ள பேஸ் நோட் இல இருந்து ஒக்டேவ் ஹை நோட் வரை அலாதியாகப் பாயும் . இந்த வீடியோ சும்மா என்னோட ஸ்டைலில் பொழுதுபோக வாசித்துள்ளேன். ஒரியினல் பாடல் போல சரியாக வாசிப்பு இல்லாவிட்டால் என் கிட்டார் அறியாமையைப் பொறுத்துக்கொள்ளுங்க .
.
.06.09.2015

2 comments :

  1. கஸ்ரமான இசை .. நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete