" குட் ஆப்டர்நூன் , என்ன செய்யுரிங்க ,எப்படி சுகம், இன்றைக்கு யாரைக் கவுக்கிற பிளான் "
" முன்மாலை வணக்கமுங்கோ, ஏதோ உங்க புண்ணியத்தில் இருக்கேன்பா, கழுவிக் கவுக்க இங்க குசினியில அண்டா குண்டா சட்டி பானைதான் இருக்கு "
" நீங்க ஏன் ஒஸ்லோவில் தமிழ் பெண் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்குறிங்க போல இருக்கே , பார்க்கப் பாவமா இருக்கு உங்களை "
" அதெல்லாம் லண்டனில இருக்கிற உங்களுக்கு எப்படி தெரியும், வெத்திலையில் மை போட்டுப் பார்த்திங்களா அல்லது சொந்தமா உளவுத்துறை ஏதும் வைச்சு இருக்குரின்களா "
" ஹஹஹா இல்லை ,,நீங்க எழுதுற கவிதைகளில் பெண் துணை தேடும் அந்தத் தனிமை எப்பவும் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு இருக்குமே "
" ஏன்பா நான் தலையிடி இல்லாமல் நின்மதியா இருக்கிறது பிடிக்கவில்லையா உங்களுக்கு,
" பிறகேன் கவிதை எழுதுறிங்க ,அதுவும் பதடிக் லோன்லினஷ் ஆக "
" கவிதைதான் இப்ப யாருமே எழுதலாமே அதால நானும் சும்மா பொழுதுபோக எழுதுவேன் "
"வேற உள் நோக்கம் ஒன்றும் அதில இல்லையா "
"அதில வெளிப்படையாகவே ஒரு மண்ணும் இல்லை "
" இல்லை, ஏன் அப்படி நினைக்குரிங்க, "
"வேற எப்படி நினைக்கச் சொல்லுரிங்க "
" என்னைப்போல நல்ல குடும்பப்பாங்கான லட்சணமான தமிழ் பெண்களும் இருக்கிறார்கள் தானே "
" நல்ல பெண்கள் இருப்பார்கள் ,ஆனால் அவர்கள் எல்லாரும் அடக்க ஒடுக்கமா இப்ப கலியாணம் கட்டி குடும்பமா எல்லா இருப்பார்கள் "
" ஏன் நானும்தான் இப்ப என்னோட மூன்றாவது புருசனையும் டைவேர்ஸ் செய்து போட்டு தனியாத் தானே இருக்கிறேன். ஏன் என்னக்கும் இன்னுமொரு ஒரு சான்ஸ் வரலாம் தானே "
" எங்களுக்கு பொருத்தம் இல்லைப்பா, கெருட புராணத்தில் மாங்கல்யம் பொருந்த ராசி,நட்சத்திரம் மட்டுமில்லை அங்கலட்சணமும் பொருந்த வேண்டும் என்று சொல்லுறார்கள் "
" அதென்ன பொருத்தம், கெமிஸ்ட்ரி வேர்க் அவுட் ஆக வேண்டும் என்டுவார்களே அதுவா.
ஓம் ஓம் அதுதான்
அதுக்குதான் என்னவாவது ஒரு அசிட் எடுத்து உடம்பில பூசினா கெமிஸ்ட்ரி ஓட்டோமாட்டிக்கா வேலை செய்யுமே "
" உண்மைதான் எங்களுக்குள்ள ஜோடிப் பொருத்தம் இல்லைப்பா சாத்திரத்தில் அது முக்கியம் பா "
" இதுக்கு என்ன அர்த்தம் ஓஓஓஓ என்ன சொல்றிங்க Clear ஆகக் கதைங்க pls,, ஏன் நான் வடிவில்லையா "
" அதுவும் ஒரு முக்கிய பொருத்தம் , அப்படிதான் சொல்லுறார்கள் "
" Ok, நீங்க நரிக்குறவர் போல கையைப்பிடிச்சு ரேகை பார்த்து அறுவத்தெட்டு பொருத்த சாத்திரம் எல்லாம் பார்ப்பின்களா "
" இல்லை,அதெல்லாம் தெரியாது ,ஆனால் இராசிப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம் ,,நவாம்ச நிலைப் பொருத்தம் எல்லாம் கலியாணத்துக்கு முக்கியம் என்று சொல்லுவாங்க "
" என்ன இப்ப சொல்ல வாரிங்க, டச்சுப் பொருத்தத்துக்கு ஹொலண்டுக்கு போகவேண்டுமா "
" இல்லைப்பா, அந்த டச்சு இல்லை , இது ரச்சுப் பொருத்தம் ,உங்களுக்கு நான் சரி வரமாட்டேன் பா, நான் ஏற்கனவே ஒரு அரைப் பயித்தியம் பா "
" உன்னால எனக்குதான் முழுப் பைத்தியம் பிடிக்கப்போகுது "
" ஹஹஹா,,அப்ப இன்னும் பிடிக்கவே தொடங்கவில்லையா "
" இப்ப அதுக்கு என்ன செய்வம், நல்ல அல்டநேடிவ் ஐடியா சொல்லன் "
" நீங்களே சொல்லுங்க பார்ப்பம் பேசாம சோமாலியாவுக்கு ஓடிப் போவமா "
" No problem உங்கள கட்டாயம் நான் சந்திக்கவேண்டும் எங்களுக்குள்ள உறவை ஏற்படுத்த விரும்புறிங்களா? Yes or no ரெண்டில் ஒரு முடிவு சொல்லுங்க "
" எனக்கு இப்ப எதுவுமே சொல்ல முடியவில்லை , சரி ஒரு கேள்விக்கு கேட்கிறேன் என்னை சந்திச்சா என்ன செய்விங்க "
" முதல்ல ஓரு அறை தருவேன் மடையா "
" என்னது தங்க ஹோட்டலில் அறை எடுத்து தருவிங்களா ,,,சூப்பர் ஐடியா பா "
" முகத்தில் அறை தருவேன் என்று சொன்னேன் மோட்டுக் கழுதை , இதுக்குள்ள ஆசையைப் பார், pls விளையாடாதிங்க Serious கதைங்கபா "
" நீங்க வடிவா இருந்த நேரம் ஏன்பா என்னை காணலை,,இப்ப எனக்கு நாய் குணம் வாற நாற்பத்தி அஞ்சு வயசு ஆகிவிட்டதே "
" அதுதான் வள் வள் என்று என்னில பாயுரின்களா அதெல்லாம் ஆம்பிளைகளுகுதான், ஏன் இப்ப நான் வடிவில்லையா என்னை பிடிக்கலயா "
" இல்லை நீங்க நல்லா வடிவாத்தான் இருகுரிங்க காஞ்சிபுரம் சீலையில சிறீதேவி போலவும், பஞ்சாவி சுடிதாரில் நயன்தாரா போலவும், டைட் டெனிம் ஜீன்ஸில் அமலா போலவும் இருகுரின்களே "
" ஹஹஹஹஹா,, மவனே ஒழுங்கா உண்மையதான் சொல்லுறியா இல்லை,,ஐஸ் கட்டிய தலையில வைக்குரியா, "
" இல்லை,,உண்மையாதான் சொல்லுறேன் "
" இந்த உடுப்பு போட்டு ஒருபடமும் நான் உனக்கு அனுப்பவில்லையே, வெறும் ப்ரோபில் படத்தில உள்ள முகத்தை வைச்சு எப்படி சொல்லுறாய். "
" ஆமா,,அந்த முகத்தைத்தான் லோங் சொட்டில இந்த உடுப்பு எல்லாம் போட்டு நினைச்சு பார்த்தேன் "
" அப்படியா, ஒரு காலத்தில் , யூனிவெர்சிட்டி காலத்தில் நண்பர்கள், நண்பிகள் , கேள்வி கேட்க யாருமில்லை, பதில் சொல்லவேண்டிய தேவை யாருக்குமில்லை "
" அட அட அள்ளிக்கொட்டி இருகிறிங்க போல இருக்கே "
"ஹ்ம்ம்,, இங்கிலாந்தின் வசந்தகால வாழ்கைபோல இனி எங்க வரப்போகுது " "
"அப்படியா , போன பஸ்ஸில ஏற நினைப்பதில்தான் திறில் இருக்குது "
" And both that morning equally lays ,In leaves no step had trodden black.Oh, I kept the first for another day! Yet knowing how way leads on to way,I doubted if I should ever come back....."
" இதென்ன புரியாத மொழியில என்னவோ சொல்லுரிங்க "
" டேய்,,மடையா,,இது இங்கிலிஸ் டா ,,நான் எப்பவும் நினைக்கும் கவிதை ,,யார் எழுதினது தெரியுமா "
" நீங்களா "
" அய்யோ,கடவுளே உன்னோட மண்டைக்குள்ள என்னடா அரைச்ச மிளகாய்த்தூளா அடைஞ்சு வைச்சு இருகிறாய் "
" அட,,எனக்கு தமிழே ஒழுங்கா தெரியாது "
" இது ராபர்ட்ஸ் பிரெட்ஸ் எழுதின கவிதை டா "
" அப்ப நல்லா வேண்டிய மாதிரிக் கூத்து அடிச்சுப் போட்டு இப்ப வந்து, அழுகுரின்களே ,கோவம் கோவமா வருகுது ,
" எதுக்கு உனக்குக் கோபம் வருகுது ,சொல்லு "
" உங்க இளமைக் கொண்டாடத்தை நினைச்சால் பொறாமையா இருக்கு "
" ஓம் நல்ல fun life pa நிறைய boy friends எல்லோரும் சுத்தி சுத்தி வந்தாங்க ஓரே attention மகாராணி போல Free coffee ,free lunch ,
" ஒ ,,ஓசியில வாழ்கையை வைச்சு உல்லாசமா ஒட்டி இருகிறிங்க போல இருக்கே "
" ஹ்ம்ம், இரவுகளில் பார்ட்டி,,பிறகு ஒக்ஸ்போர்ட் சிட்டி முழுவதும் ஓசிக் காரில் சுற்றுவது "
" யப்பா சாமி என்ன கொடுமைடா இது, ஒ வேற என்ன பிறியா கிடைச்சுது, ,,,,,,,,,,, அதுவுமா "
" அடி செருப்பால, நான் நெருப்பு போல யாரும் தொட முடியாது என்னை , தொட்டவன் எரிவான்,
" தண்ணிய அள்ளி ஊத்திப் போட்டு தொட்டு இருப்பாங்களே நம்ம ஆட்கள் "
" ஆனாலும் நான் college க்கு வருவதப் பார்க்கவே ஓரு கூட்டம் wait பண்ணிக்கொண்டு வாசலில நிற்கும்,ஹ்ம்ம் முதுக்குக்கு பின்னால Attention யாருக்குதான் பிடிக்காது "
" மகாராணி போல, என்டுரிங்க ,,,ஹஹஹஹ்ஹா,ஒரு வயசில பன்டிக் குட்டியும் அழகா இருக்கும், ஏன்பா உங்களைச் சுற்றின அவங்களுக்கு ஒழுங்கா கண்பார்வை இல்லையா "
" ஆமாட மடையா,,என்னோட ஸ்டைல் உனக்கு எங்க தெரியப் போகுது , ஹை ஹில்ஸ் போட்டு கொண்டு போற ஒரே பெண் நான் தான் அந்த பொலிடிகல் சயன்ஸ் மாஸ்டர் டிகிரி பட்சில் "
" ஒ ஏன் நீங்க அவளவு கட்டையா "
" அடப் பரதேசி.எது சொன்னாலும் எனக்கு எதிராகவே அதைத் திருப்பி கவுக்குறியே ,நானே அஞ்சடி ஒம்பது அங்குலம் உயரம் "
" அட ,,ஹேமா மாலினி போல இருந்து இருப்பிங்க போல இருக்கே "
" ஹ்ம்ம், ஸ்கூல் நெட் போல் டீமில் ஸ்ட்ரைக் பண்ணுற லீடரா இருந்து இருக்கிறேன், அதுவும் செட் அப் ரவுண்ட்ஸ் கேமில தெரியுமா ,சும்மா நெட்டுக்கு மேலால தலை நிக்கும் "
" இல்லைப்பா,,உங்க உயரம் எனக்கு தெரியாது அதனால கேட்டேன், "
" கொண்டையை வகிடு பிரிச்சு உர்சுலா அண்ட்ரிஸ் போல உயர்த்திப் போடடுக் கொண்டு போனால் என்னோட கதைக்க அடிப்படுவான்க என் கண் பார்வைக்கு ஏங்கி இருப்பாங்க "
" உங்களோட கதைச்சா அவங்களுக்கு விசர் எல்லோ வரும், என்னப்பா சொல்லுரிங்க, சரி அது யார் உர்சுலா அண்ட்ரிஸ் உங்க சொந்தக்கார அன்ரியா "
" ஆனா நான் அவங்கள் ஓருவரையும் திரும்பி பார்க்க மாட்டேன், அடே லூசூ மடையா உர்சுலா அண்ட்ரிஸ் ஜேம்ஸ் பொன்ட் படதில வாற கனவுக் கன்னியடா "
" ஏன் ஓருவரையும் திரும்பி பார்க்க மாட்டிங்க ,உங்களுக்கு கழுத்து சுளுக்கா "
" போடா மடையா , Onky 5 11 inch hright இருந்தாதான் , அவங்களத் தான் பார்ப்பேன் , Very choose நான் .அது ஓரு வயசில அப்படி எடுப்பா இருந்தேன் "
" ஒ நானும் அந்தக் காலத்தில் விக்ரமாதித்தன் போல அழகா இருந்தேன் பா "
" அது யார் விக்ரமாதித்தன் , நான் கேள்விப்பட்டதே இல்லையே, இப்ப படம் நடிக்குரானே விக்ரம் அவனை போலவா "
" இல்லைப்பா , அந்த மன்னன் தான் முருங்கை மரத்தில ஏறி வேதாளத்தை இழுத்து தோளில போட்டு கொண்டு போக,வேதாளம் ஒரு கதை சொல்லி அந்தக் கதை முடிவில் ஒரு குழப்பக் கேள்வி கேட்கும் "
" அப்படியா,, நீயும் ஒரு வேதாளம் , எங்க சொல்லு பிறகு என்ன நடக்கும் "
" மன்னன் பதிலில் குழம்ப அந்த இடைவெளியில் வேதாளம் மறுபடியும் தப்பிப் போய் முருங்கை மரம் ஏறும், "
" அட, நல்லா இருக்கே , பிறகு "
" முருங்கை மரத்தோடும் வேதாளத்தோடும் தான் விக்கிரமாதித்தன் வாழ்க்கை சீரழியும் பா "
" ஒ இதுவா சங்க இலக்கியம் எண்டுறது , சங்க இலக்கியக் கதைலயா இது வருகுது "
" கிழிஞ்சுது.... இது அம்புலிமாமா கதை, அதுதான் எனக்கு விளங்கும் ,விரும்பி படிப்பேன் "
" ஒ ,,அப்படியா,உன் அறிவுக்கு ஏற்றது தானே உன் மண்டைக்கு விளங்கும், சரி என்னோட மிச்சக் கதையைக் கேளேன் "
" சரி சொல்லுங்கோ, கதை முடிவில வேதாளம் போலக் கேள்வி ஒண்டும் கேட்க மாட்டிங்க தானே "
" ஹஹஹா , அந்த நேரம் லெக்சர் ஹோலுக்கு நடந்து போக்கேயே என்னை பார்த்து ஜொள்ளு விட்டு லைட் post ல் அடிபாடுவாங்கள் போய்ஸ் எல்லாம் தெரியுமா "
" ஏன்பா அவளவு வெறியா அவங்களுக்கு "
" இல்ல என் கண் பார்த்து மயங்கி எங்க நடக்கிறது என்று தெரியாம லைட் போஸ்ட்டில மோதுவாங்க ,ஆனால் இப்பவும் நீங்க பார்க்க ராஐகுமாரன் போலதான் இருகுரிங்க, ஆனால் ஒரு லூசூ போல கதைகுரின்களே,அதுதான் பயமா இருக்கு "
" ஏன்பா கண் பார்த்து மயங்கி எங்க நடக்கிறது என்று தெரியாம லைட் போஸ்ட்டில மோத அவங்கள் இதுக்கு முதல் பொம்பிளையையே பார்க்கலையா "
" ஹ ஹ ஹ அதுதான் எனக்கும் புரியலைப்பா, நீயும் தான் அந்த வயசில் நல்லா லுக்கு விட்டு இருப்பாய் ஆம்பிளைகளுக்கு புத்தி அப்படிதான் குறுக்க போகும் "
" என்ன புரியலை,, நீங்க மேக்கப் போடாமல் போயிருந்தா இவளவு அவலம் அவங்களுக்கு நடந்து இருக்குமா,"
" டேய் வாயை மூடடா , வந்து நேர்ல என்னட்டை மாட்டினால் வாயில போடுவேன் , இப்ப என்ன செய்துகொண்டு இருக்குறாய், ஏன் ரிப்ளே லேட் ஆக வருகுது வேற பெண்டுகளோட குஜாலா போடுறியா எருமை மாடு ."
" ஹ்ம்ம்,,சும்மா கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறேன் "
" அட,,அட இதை நான் நம்பவா,,சரி நீ ஏன் இப்ப கதை எழுதுறதில்லை "
" எழுதுவேனே "
" இப்ப என்ன எழுதிக்கொண்டு இருகிறாய் "
" மூன்று கணவன்மார்கள்.."
" என்னது ,,"
" ஆமாப்பா,,மூன்று கணவன்மார்கள்..என்று ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன் "
" ஒ,,ஆனால் இந்த தலைப்பே தண்ணி தெளிக்குதே,,தமிழ் கலாசாரத்தில் இப்படி இல்லையே "
" யார் சொன்னது ,கதை தானே "
" கதைதான்,,எனக்கு விளங்குது ஆனால் ,,எதிர்ப்பு கிளம்புமே ,,இப்படி எழுதினால்,,அதென்ன சொல்லுவாங்க தமிழ் கலாச்சாரதில் , இப்படி இல்லையே பா , அதென்ன குடும்ப விளக்குமாறுகள் ,,அதுதானே,,அவங்கதானே பொது அடையாளம் "
" அது குடும்பக் குத்துவிளக்குகள் பா "
" ஒ,,அப்படியா,,என்னவோ எழுது,,ஆனால் கற்பனை என்று போடாதை "
" இல்லைப்பா இப்படி எல்லாம் எழுதினால் கட்டாயம் யாவும் கற்பனை என்று போடவேண்டும் ,,இல்லாட்டி பிரசினை வரும் "
" ஹஹஹஹா ,,அய்யோ,,அய்யோ,,கோதண்ட ராமா "
" எதுக்கு இப்ப சிரிச்சிங்க "
" டேய், ஏமாந்த சோணகிரி ,,உனக்கு ஒன்று தெரியுமா,,,கற்பனைக் கதைகளில் வாற கற்பனையை விட நிஜ வாழ்கையில் கேவலம்கெட்ட அசிங்கமான ஆண்கள் நிறையப்பேர் வெள்ளையும் சொள்ளையுமா உலாவுறாங்க "
" ஹ்ம்ம் அது உண்மைதான் "
" ஒரு கதையில ஒரு பெண் ஐந்து சகோதர்களை கலியாணம் கட்டி வாழுவாவே ,,அதென்ன கதை ,,சின்ன வயசில படிச்ச கதை "
" அது கதை அல்ல,,காப்பியம் ,,மஹாபாரதம் ,,திரவ்பதி பஞ்ச பாண்டவ சகோதர்களைக் கலியாணம் கட்டுறா "
" ஓம்.ஓம் அதுதான் அதுவும் கதை தானே ,,பிறகென்னத்துக்கு சும்மா நடிக்கினம் "
" ஹ்ம்ம்,,,அதை வேதவியாசர் என்ற முனிவர் எழுதினார்,,,இதை நான் எழுதுறேன் ,,அதுதான் பயமா இருக்கு "
" பயப்பிடாதை,,நீ எழுதடா,,நான் சப்போட் தாரேன், சரி இப்ப என்ன செய்யுறாய் "
" ஒரு கையால எழுதிக் கொழுவிக் கொண்டு , மற்றக் கையால சைனிஸ் டிராகன் நூடில்ஸ் முள்ளுக் கரண்டியில் கொழுவி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் "
" அடப்பாவி, அதெப்படி சாப்பிடுக்கொண்டு என்னோட சட் பன்னுறாய் , மவனே நீ கட்டாயம் வேற பெண்டுகளோடு சொட்டு நீலம் போடுறாய் போல இருக்கு , எனக்கு பதில் போடடா , டேய் ஒரு நேரத்தில் ஒன்றையாவது ஒழுங்கா செய்யடா "
" ஹஹஹஹா , ஓகே ,,எனக்கு இப்ப சாப்பாடுதான் முக்கியமா இருக்கு,,இன்னொருநாள் கதைகுறேன்,
" சரி கதை "
" நீங்க ஏன் உங்க மூன்று முன்னாள் கணவன்மார்களையும் டைவேர்ஸ் செய்திங்க என்று, சொல்ல விரும்பினால் சொல்ல முடியுமா "
" ஹஹஹஹஹா,,"
" இதுக்கும் சிரிப்பா "
" ஒரு பெண்ணை பெண்ணாக நடத்தத் தெரியாத , அந்த ஒண்டுக்கும் உதவாத படிச்சுக் கிழிச்ச கனவன்களைப் பற்றிக் கதைப்பதே டைம் வேஸ்ட், "
" அப்படியா, மூன்றுபேரும் நல்லாப் படித்தவர்களா "
"ஹ்ம்ம்,மூன்று பேரும் அக்கடமிக் லெவலில் படிச்ச ஆட்கள், அதோட நல்ல ஹான்ட்சம் , அதிலயும் முதல் ஹஸ்பன்ட் ஜாக்கி ஷரிப் போல "
"அது யாரு ,,ஜக்கி வாசுதேவ் என்கிறாங்க அந்த சாமியார் போலவா "
"அறைஞ்சன் எண்டா காதில, ஜாக்கி ஷரிப் ஹிந்தி நடிகர் டா ,, "
" ஓ,,,அப்ப கட்டாயம் ,,பெண்கள் பின்னால சுத்தி இருப்பார்களே "
" ஹ்ம்ம்,,,அதுதான் நடந்தது , நான் அதில இருந்து உஷார் ஆகி இருக்க வேணும் ,,,சரி விடு ,,வேற கதை சொல்லு "
" உங்க அளவுக்கு என்னிடம் சுவாரசியமா ஒன்றும் இல்லையே "
" சரி ,,வேற ஏதும் சுவாரசியமா பிறகு இன்னொருநாள் கதைப்பம் ஓகேயா வாலில்லாத குரங்கு "
" ஓகே Bye,ஆனால் உங்க கணவர்மார் கதை சொல்லுவிங்கதானே "
" ஓகே,சொல்லுறேன் , கழுதைப் பிடிச்சு நெரிகாதை. ஓகே தானே , Bye Bye "
.....தொடரும் ....
.
.