வளைந்து நெளிந்து
நகர்ந்துகொள்ளத் தடுமாறும்
பார ஊர்திகள் !
முடிவேயற்ற
மூச்சு ஏற்றத்தில்
நீண்ட நெடுஞ்சாலை !
நடைபாதையில்
படுத்திருக்கும்
பளிங்குச் சலவைக்கற்கள் !
கோர்வையாக நெய்யப்படும்
நேர்க்கோட்டில்
தடுமாற்றமில்லாத
எறும்புகள்!
*
வெளியேறவேண்டிய
சரியான தருணம்
திகைப்பில் தாமதிக்குது,
இனி
நடனமாடியபடியே
சுழன்றடிக்க
இடைவெளிகளுமில்லை !
பலவிதத்திலும்
தனித்து நிற்கிறது
முடிவின்மையின் காத்திருப்பு !
ஆயாசமானவைகளைத்
தவிர்த்த பிறகும்
எதற்காக
மவுனமாகவிருக்குது
நேரம்?
*
மழை பெய்யும் நாட்களில்
மரணம்
நெஞ்சில் அடைப்பது போலிருக்கும்
எதிர்காலத்தைத்
தெளிவுபடுத்தமுடியாமல்
மவுனித்திருப்பேன் !
வெய்யில் நேரங்களில்
மீதமான வாழ்க்கை
வெளியே அழைப்பதுபோலிருக்கும்
சமீபிக்கின்ற ஓசைகளிலிருந்து
இறந்தகாலத்தை
வித்தியாசப்படுத்தத் தெரியாமல்
நடந்துகொண்டிருப்பேன் !
இரவுகள்
ஆழந்த அமைதியோடு
முத்தமிட்டுக்கொள்ள
மனசெல்லாம்
மெல்லத் திரும்பிவிடுகிறது
தற்போதைய நிலவரத்துக்குள் !
*
காலம் மங்கிய
கறுப்பு வெள்ளைப்
புகைப்படங்கள் !
நிதானமாகத்தான்
பார்க்கவேண்டியிருந்தது !
ஒவ்வொன்றிலும்
வாழ்ந்துபோன மனிதர்களைப்
பாரமாக்குகின்றது
தலைமுறைத் திசைமாற்றங்கள் !
நிறங்களில் இல்லாத
சந்தோஷ அலைகளை
நிரம்பியிருந்தது
அவர்களின் முகங்களில் !
*
தேவாலயத்துக்கு
மிக அண்மையிலிருந்தது
சவுக்காலை !
தங்களில்
யாரோவொருவரைப் புதைத்துவிட்டு
மவுனத்தை வெளியேற்றும்
வயதான மனிதர்கள் !
சற்றுநேரம்
நானும் இறந்து போய்விட்டேன் !
பிறகு
புரிதலற்ற இடைவெளியைக் கடந்தபடி
கைகளை உதறிக்கொள்கிறேன் !
இப்போது
ஒவ்வொருவரும் அவதியாக
வாழ்வைத் துரத்த வெளிக்கிடுகிறார்கள் !
எனக்குரியவைகளைப் பின்தொடந்தபடி
நானும்தான் !
உயிரோடு
விலகிநின்று பார்த்ததனால்
ஒரு சிரிப்போடு
சமாளிக்கமுடிந்தது !
*
வெய்யிலில்
வேடிக்கைபார்க்கவும்
மனதில்லை !
எங்கேயோ
அனர்த்தங்கள்
நிகழவாய்ப்பிருக்கின்றது போல
தசைகள் முறுக்கிக்கொள்கின்றன !
இந்த வலி
தனிப்பட்ட துயரம்,
உலகத்தை அளித்துச் செல்கிற
பின் உளைவு !
இது
நிரந்தரமாகவே
சஞ்சரிக்கும்
நேரங்களிளெல்லாம்
கைவிடப்பட்ட உணர்வு !
*
மிகப்பெரிய
வேடந்தாங்கல்
நீர்ப்பரப்பை அளவெடுத்தபடி ,
கோடைக் காற்றோடு
சிறகசைந்தபடியே
கரணமடித்து வந்திறங்கியவுடன்
மூச்சு முட்டி நிற்கின்றன
திசைப் பறவைகள் ,
இந்த வெற்றிடம்
நீண்ட பறத்தலில்
தற்காலிகமானதுதான் !
இப்படியான
இடங்களுக்குள்
நானெப்போதும்
தனியனாகவே நுழைய விரும்புகிறேன்.!
*
பழைய வீதி
நேற்றுப்போட்ட நடைபாதை
புத்தம்புதிய வீடுகள்
நவீனமான நெருக்குதல்
நான்
முகத்தைத் துடைத்து
என்னோடும்
வெய்யிலோடும் நடந்த
உன்னோட காலடிகளைத்
தேடுகிறேன் !
அதே
மணிப்புறாக்கள் பறக்கின்றன
அதே
குடை விரித்த மரங்களிலிருந்து !
இப்போது
எல்லாமே பழையதாய் மாறுகிறது!
*
" அவள் எங்கேடா " மச்சான் ?
அதே வழக்கமான புன்னகையோடு
நெடுநாளைய நண்பன்
ஆரம்பிக்கின்றான் !
நினைவுகளை
உறிஞ்ச ஆரம்பிக்கிற
வாசனைகளெல்லாம்
மிதக்கத்தொடங்குகிறன !
" எங்கேயென்று
தெரியாதடா மச்சான் " என்கிறேன் !
அவளுக்கேயுரிய
ஜீவனைத் தீண்டும் கண்களில்
அதே மின்னொளி ஆச்சரியம் !
சட்டென்று
நிசப்த மனசாட்சி
நீண்ட இரைச்சலாகியது !
எதற்காகப் பொய் சொன்னேன் ?
மவுனத்துக்குள்
நுழைந்துகொள்ளும் மனதுக்குள்
நினைவுகள்
உறிஞ்ச ஆரம்பிக்கிற நேரமமெல்லாம்
அவள் இங்கேதானேயிருக்கிறாள் !
*
உஷ்ணமாகும்
வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது
மிகவும்குளிர்தான் ,
வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி
நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு
மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !
*
தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள்
கிழிக்கப்படுகின்ற
இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல
அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான
பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள
ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!
*
குறுகலான
சந்து முடுக்கில்
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று
உரையாடல் துவங்கும் போதே
ஒருமையில் தான்
ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!,
நான்
நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல்
கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த
விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது.
*
பின் மனசில்
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி
ஓடிக்கொண்டேயிருக்கும்
காட்சி ஞாபகம் ,
புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய்
என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண்
காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது
எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !
நகர்ந்துகொள்ளத் தடுமாறும்
பார ஊர்திகள் !
முடிவேயற்ற
மூச்சு ஏற்றத்தில்
நீண்ட நெடுஞ்சாலை !
நடைபாதையில்
படுத்திருக்கும்
பளிங்குச் சலவைக்கற்கள் !
கோர்வையாக நெய்யப்படும்
நேர்க்கோட்டில்
தடுமாற்றமில்லாத
எறும்புகள்!
*
வெளியேறவேண்டிய
சரியான தருணம்
திகைப்பில் தாமதிக்குது,
இனி
நடனமாடியபடியே
சுழன்றடிக்க
இடைவெளிகளுமில்லை !
பலவிதத்திலும்
தனித்து நிற்கிறது
முடிவின்மையின் காத்திருப்பு !
ஆயாசமானவைகளைத்
தவிர்த்த பிறகும்
எதற்காக
மவுனமாகவிருக்குது
நேரம்?
*
மழை பெய்யும் நாட்களில்
மரணம்
நெஞ்சில் அடைப்பது போலிருக்கும்
எதிர்காலத்தைத்
தெளிவுபடுத்தமுடியாமல்
மவுனித்திருப்பேன் !
வெய்யில் நேரங்களில்
மீதமான வாழ்க்கை
வெளியே அழைப்பதுபோலிருக்கும்
சமீபிக்கின்ற ஓசைகளிலிருந்து
இறந்தகாலத்தை
வித்தியாசப்படுத்தத் தெரியாமல்
நடந்துகொண்டிருப்பேன் !
இரவுகள்
ஆழந்த அமைதியோடு
முத்தமிட்டுக்கொள்ள
மனசெல்லாம்
மெல்லத் திரும்பிவிடுகிறது
தற்போதைய நிலவரத்துக்குள் !
*
காலம் மங்கிய
கறுப்பு வெள்ளைப்
புகைப்படங்கள் !
நிதானமாகத்தான்
பார்க்கவேண்டியிருந்தது !
ஒவ்வொன்றிலும்
வாழ்ந்துபோன மனிதர்களைப்
பாரமாக்குகின்றது
தலைமுறைத் திசைமாற்றங்கள் !
நிறங்களில் இல்லாத
சந்தோஷ அலைகளை
நிரம்பியிருந்தது
அவர்களின் முகங்களில் !
*
தேவாலயத்துக்கு
மிக அண்மையிலிருந்தது
சவுக்காலை !
தங்களில்
யாரோவொருவரைப் புதைத்துவிட்டு
மவுனத்தை வெளியேற்றும்
வயதான மனிதர்கள் !
சற்றுநேரம்
நானும் இறந்து போய்விட்டேன் !
பிறகு
புரிதலற்ற இடைவெளியைக் கடந்தபடி
கைகளை உதறிக்கொள்கிறேன் !
இப்போது
ஒவ்வொருவரும் அவதியாக
வாழ்வைத் துரத்த வெளிக்கிடுகிறார்கள் !
எனக்குரியவைகளைப் பின்தொடந்தபடி
நானும்தான் !
உயிரோடு
விலகிநின்று பார்த்ததனால்
ஒரு சிரிப்போடு
சமாளிக்கமுடிந்தது !
*
வெய்யிலில்
வேடிக்கைபார்க்கவும்
மனதில்லை !
எங்கேயோ
அனர்த்தங்கள்
நிகழவாய்ப்பிருக்கின்றது போல
தசைகள் முறுக்கிக்கொள்கின்றன !
இந்த வலி
தனிப்பட்ட துயரம்,
உலகத்தை அளித்துச் செல்கிற
பின் உளைவு !
இது
நிரந்தரமாகவே
சஞ்சரிக்கும்
நேரங்களிளெல்லாம்
கைவிடப்பட்ட உணர்வு !
*
மிகப்பெரிய
வேடந்தாங்கல்
நீர்ப்பரப்பை அளவெடுத்தபடி ,
கோடைக் காற்றோடு
சிறகசைந்தபடியே
கரணமடித்து வந்திறங்கியவுடன்
மூச்சு முட்டி நிற்கின்றன
திசைப் பறவைகள் ,
இந்த வெற்றிடம்
நீண்ட பறத்தலில்
தற்காலிகமானதுதான் !
இப்படியான
இடங்களுக்குள்
நானெப்போதும்
தனியனாகவே நுழைய விரும்புகிறேன்.!
*
பழைய வீதி
நேற்றுப்போட்ட நடைபாதை
புத்தம்புதிய வீடுகள்
நவீனமான நெருக்குதல்
நான்
முகத்தைத் துடைத்து
என்னோடும்
வெய்யிலோடும் நடந்த
உன்னோட காலடிகளைத்
தேடுகிறேன் !
அதே
மணிப்புறாக்கள் பறக்கின்றன
அதே
குடை விரித்த மரங்களிலிருந்து !
இப்போது
எல்லாமே பழையதாய் மாறுகிறது!
*
" அவள் எங்கேடா " மச்சான் ?
அதே வழக்கமான புன்னகையோடு
நெடுநாளைய நண்பன்
ஆரம்பிக்கின்றான் !
நினைவுகளை
உறிஞ்ச ஆரம்பிக்கிற
வாசனைகளெல்லாம்
மிதக்கத்தொடங்குகிறன !
" எங்கேயென்று
தெரியாதடா மச்சான் " என்கிறேன் !
அவளுக்கேயுரிய
ஜீவனைத் தீண்டும் கண்களில்
அதே மின்னொளி ஆச்சரியம் !
சட்டென்று
நிசப்த மனசாட்சி
நீண்ட இரைச்சலாகியது !
எதற்காகப் பொய் சொன்னேன் ?
மவுனத்துக்குள்
நுழைந்துகொள்ளும் மனதுக்குள்
நினைவுகள்
உறிஞ்ச ஆரம்பிக்கிற நேரமமெல்லாம்
அவள் இங்கேதானேயிருக்கிறாள் !
*
உஷ்ணமாகும்
வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது
மிகவும்குளிர்தான் ,
வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி
நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு
மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !
*
தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள்
கிழிக்கப்படுகின்ற
இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல
அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான
பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள
ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!
*
குறுகலான
சந்து முடுக்கில்
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று
உரையாடல் துவங்கும் போதே
ஒருமையில் தான்
ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!,
நான்
நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல்
கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த
விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது.
*
பின் மனசில்
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி
ஓடிக்கொண்டேயிருக்கும்
காட்சி ஞாபகம் ,
புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய்
என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண்
காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது
எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !