Saturday 21 March 2015

தவற விட்ட சந்தர்ப்ப்பம்...

எல்லா ஒப்பீடுகளின்
துவக்கமுமே
தவறாக உள்ள
இயற்கையில்
பூச்சிகள் 
சிறகிருக்கும் வரை
தம்மை
வீழ்ச்சிகளுடன்
ஒப்பிடுவதேயில்லை....
பூனையின்
உயர்வு மனப்பான்மையால்
பெருமைப்படும்
பெரிய உலகத்தை
தாழ்வு மனப்பான்மை
பாதிக்க அனுமதிக்காத
பூச்சிகளின்
சின்னஞ்ச் சிறிய
வெட்ட வெளியுடன்
எப்படி
ஒப்பிட முடியும்?
மேல் என்றோ ,
கீழ் என்றோ
எண்ணுவதற்கு .
இடம் கொடுக்காத
பரிணாம வழிகளில்
மனிதாபிமானம்
வரையறுக்கப்படாமல்
தமக்கே உரிய
தனித் தனியான
தந்திரங்களை
வைத்துள்ளது
பிராணிகள் ..
பலியாகப் போகும்
ஜந்துக்கு
தப்பி வாழ்தல்
எவ்வளவு
முக்கியமானதென
அறிவுரை
சொல்லி முடிக்க முன்னர்
பலி எடுக்கும்
மிருகம்
தவற விட்ட
சந்தர்ப்ப்பம் பற்றி
கவிதை
எழுதித் தரச்சொல்லி
கேட்கிறார்கள்
மனிதர்கள்.
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 21.03.15.

கிரீச்சிடும் மொழியில்

சிட்டுக் குருவிகளுக்கும் 
எங்களுக்கும் 
இடையே
சினேகிதமான 
உரையாடல் 
கிட்ட வைத்து
நிகழ்வதற்கு
எந்த வாய்ப்புமில்லை...

ஒரு
மென்மையான
அனுபவமாக
அன்பை அழைக்கும்
கிரீச்சிடும் மொழியில்
அவைகள்
எதையும்
வலிந்து வலியுறுத்த
விரும்புவதில்லை...

இன்று
அதிகாலை
வரத் தவறியிருந்தால்
கோபிக்காமல் .
நேற்று வந்த
நினைவுகளைத்
மரங்களின் தளிர்களில்
ஒற்றி எடுத்து
அதில் வாழலாம்......

சிட்டுக் குருவிகளின்
சின்னச்
சிறகடிப்பு
அழகின் ஆசிர்வதிப்பில்
மொட்டுகள் மலரும்
அமைதியின் அனுபவம்
அதைக்
கவிதையாக
எழுத
சிறகை விரித்தால் போதும்
முழு வானமும்
உங்களுடையதாகிவிடும்.
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 20.03.15