Saturday 21 March 2015

தவற விட்ட சந்தர்ப்ப்பம்...

எல்லா ஒப்பீடுகளின்
துவக்கமுமே
தவறாக உள்ள
இயற்கையில்
பூச்சிகள் 
சிறகிருக்கும் வரை
தம்மை
வீழ்ச்சிகளுடன்
ஒப்பிடுவதேயில்லை....
பூனையின்
உயர்வு மனப்பான்மையால்
பெருமைப்படும்
பெரிய உலகத்தை
தாழ்வு மனப்பான்மை
பாதிக்க அனுமதிக்காத
பூச்சிகளின்
சின்னஞ்ச் சிறிய
வெட்ட வெளியுடன்
எப்படி
ஒப்பிட முடியும்?
மேல் என்றோ ,
கீழ் என்றோ
எண்ணுவதற்கு .
இடம் கொடுக்காத
பரிணாம வழிகளில்
மனிதாபிமானம்
வரையறுக்கப்படாமல்
தமக்கே உரிய
தனித் தனியான
தந்திரங்களை
வைத்துள்ளது
பிராணிகள் ..
பலியாகப் போகும்
ஜந்துக்கு
தப்பி வாழ்தல்
எவ்வளவு
முக்கியமானதென
அறிவுரை
சொல்லி முடிக்க முன்னர்
பலி எடுக்கும்
மிருகம்
தவற விட்ட
சந்தர்ப்ப்பம் பற்றி
கவிதை
எழுதித் தரச்சொல்லி
கேட்கிறார்கள்
மனிதர்கள்.
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 21.03.15.

1 comment :