சிட்டுக் குருவிகளுக்கும்
எங்களுக்கும்
இடையே
சினேகிதமான
உரையாடல்
கிட்ட வைத்து
நிகழ்வதற்கு
எந்த வாய்ப்புமில்லை...
ஒரு
மென்மையான
அனுபவமாக
அன்பை அழைக்கும்
கிரீச்சிடும் மொழியில்
அவைகள்
எதையும்
வலிந்து வலியுறுத்த
விரும்புவதில்லை...
இன்று
அதிகாலை
வரத் தவறியிருந்தால்
கோபிக்காமல் .
நேற்று வந்த
நினைவுகளைத்
மரங்களின் தளிர்களில்
ஒற்றி எடுத்து
அதில் வாழலாம்......
சிட்டுக் குருவிகளின்
சின்னச்
சிறகடிப்பு
அழகின் ஆசிர்வதிப்பில்
மொட்டுகள் மலரும்
அமைதியின் அனுபவம்
அதைக்
கவிதையாக
எழுத
சிறகை விரித்தால் போதும்
முழு வானமும்
உங்களுடையதாகிவிடும்.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 20.03.15
எங்களுக்கும்
இடையே
சினேகிதமான
உரையாடல்
கிட்ட வைத்து
நிகழ்வதற்கு
எந்த வாய்ப்புமில்லை...
ஒரு
மென்மையான
அனுபவமாக
அன்பை அழைக்கும்
கிரீச்சிடும் மொழியில்
அவைகள்
எதையும்
வலிந்து வலியுறுத்த
விரும்புவதில்லை...
இன்று
அதிகாலை
வரத் தவறியிருந்தால்
கோபிக்காமல் .
நேற்று வந்த
நினைவுகளைத்
மரங்களின் தளிர்களில்
ஒற்றி எடுத்து
அதில் வாழலாம்......
சிட்டுக் குருவிகளின்
சின்னச்
சிறகடிப்பு
அழகின் ஆசிர்வதிப்பில்
மொட்டுகள் மலரும்
அமைதியின் அனுபவம்
அதைக்
கவிதையாக
எழுத
சிறகை விரித்தால் போதும்
முழு வானமும்
உங்களுடையதாகிவிடும்.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 20.03.15
No comments :
Post a Comment