Saturday 21 March 2015

கிரீச்சிடும் மொழியில்

சிட்டுக் குருவிகளுக்கும் 
எங்களுக்கும் 
இடையே
சினேகிதமான 
உரையாடல் 
கிட்ட வைத்து
நிகழ்வதற்கு
எந்த வாய்ப்புமில்லை...

ஒரு
மென்மையான
அனுபவமாக
அன்பை அழைக்கும்
கிரீச்சிடும் மொழியில்
அவைகள்
எதையும்
வலிந்து வலியுறுத்த
விரும்புவதில்லை...

இன்று
அதிகாலை
வரத் தவறியிருந்தால்
கோபிக்காமல் .
நேற்று வந்த
நினைவுகளைத்
மரங்களின் தளிர்களில்
ஒற்றி எடுத்து
அதில் வாழலாம்......

சிட்டுக் குருவிகளின்
சின்னச்
சிறகடிப்பு
அழகின் ஆசிர்வதிப்பில்
மொட்டுகள் மலரும்
அமைதியின் அனுபவம்
அதைக்
கவிதையாக
எழுத
சிறகை விரித்தால் போதும்
முழு வானமும்
உங்களுடையதாகிவிடும்.
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 20.03.15

No comments :

Post a Comment