Tuesday 18 April 2017

மனம் திறந்து ...........

 கவிதை எழுதுவதில் உள்ள அசாத்தியமான சவாலே, ஒவ்வொருவரும் அவரவருக்குரிய தனித்துவமான அடையாளங்களோடு தங்கள் படைப்புக்களை வெளிக்கொணரவேண்டும். ஆனால் இன்றைய முகநூலைக் கவனித்தால் அதிகம் அப்படி வருவதுபோல தெரியவில்லை. பல கவிதைகள் பத்து இடத்தில உள்நுழைந்து காவுவேண்டிய வார்த்தைஜாலங்களை வசதிப்படி  டிக்கரிங் செய்துவருவது போலிருக்கு. பலரோட கவிதை படித்தால் கட்டாயம் " stimulation or arousal of the mind, feelings, etc, to special or unusual activity or creativity "  என்ற நிலைமை எங்களை அறியாமலே உள்நுழைந்து விடும் அதைத் தந்திரமாகத் தடுக்கவேண்டும். 


                                                ஒவ்வொருவர் வாழும் இடத்திலயே விளிம்புநிலை மனிதர்களின் சொல்லமுடியாத வார்த்தைகள்  வாய்ப்புகளுக்கு காத்திருக்கும்  ஏகப்பட்ட கவிதைகள் எழுத எப்பவுமே இருக்கும் ,அதை அதிகம்பேர் எழுதுவதில்லை .அதெல்லாம் விட்டுப்போட்டு என்பதுக்களில் வானம்பாடிக் கவிஞ்சர்களே வேண்டியமட்டும் எழுதிக் கவுத்துபோட்டு போயுள்ள, காதல் ஏக்கம் ,காதல் தோல்வி, காதல் மயக்கம், காதல் கனவு ,காதல்  பிரிவு, காதல் விரசம், காதல் விரகதாபம்   அது இது எண்டு சென்டிமென்டலா எழுதிக்கொண்டிருக்கிறார்களென்று விளங்கவில்லை.  


                                                        எனக்குக் கட்பனைகளை பறக்கவிடத்   தெரியாது , கட்பனைகளைக் கட்பனை செய்யவும் அதிகம் தெரியாது , நான் பார்க்கும் உலகம் எனக்கு உள்ளே எப்போதும் உள்ளிறங்கி சில கேள்விகளை எழுப்பிவிடும் , அது இயல்பாகவே எனக்கென்று  எழுதென்று வார்த்தைகளை கோர்த்துத் தரும். அந்த சுதந்திரம் அடுத்தவர்கள்  எழுதும்  " கான்செப்ட் " , அவர்கள் கையாளும்  கவிதைமொழி, அவர்கள் எழுதும் " ஸ்டைல் "  இவற்றை மனச்சாட்சிக்கு விரோதமாகத்  திருடவேண்டிய அனாவசிய ஆபத்திலிருந்து எப்போதுமே காப்பாற்றிவிடும் . 


                                                என்னைச் சுற்றி நடப்பவைகளில் என்னை நானே அடையாளம் காண்கிறேன் . அதில் ஆதிக்கம் செய்தவைகளை மிகவும் கண்ணியமான ஒரு சில சொல்லாடல்களில் உள் வாங்கி எழுதிய கான்செப்ட்கள்தான் மிகப்பிடித்தமான ஒரு பொழுதொன்றில் வார்த்தைச்சித்துக்களாகி இப்படியே வந்துவிழுந்துவிட்டன, இதில பெரிய கவித்துவ சிந்தனைப் போக்குகள் இல்லாமலிருக்கலாம், ஆனாலும் வார்த்தைகள் சொல்லவரும் விசயங்கள் கடினமானவை

                                                     அப்படியாக  இன்றைக்கு நேசத்துக்குரிய வாசனைகளோடு சில கவிதைகள் என் முகநூல் சுவரில் எழுதினேன். அதை எழுத உட்சாகம் கொடுத்ததே கர்த்தரான  ஜேசுநாதர் பெரிய வெள்ளிக்கிழமை  சிலுவையில் அறையப்பட்டு  இறந்து , ஒரு மரணக் குகையைத் திறந்துகொண்டு  உயிரோடு எழுந்து வந்த  செத்துப்பிறந்த கொண்டாடட நாட்களில் ஸ்டோக்ஹோலாம் நகரத்தை ஒரு ரவுண்ட் அடிக்க கால அவகாசம் கொடுத்தது அப்போது. சில படங்கள் என் மொபில் போன் மஹாலட்சுமியில் எடுத்தேன். 

                                                            முகநூல்  சுவரில் இப்பெல்லாம் நான் படங்கள் போட்டு கவிதை எழுதுவதில்லை. அதுக்கு முக்கியமான மூன்று காரணம் என்று நான் நினைப்பது. ஒன்று படங்கள் கட்பனையின் எல்லை வீச்சை ஒரு எல்லைக்குள் ஒடுக்கிவிடும். ரெண்டாவது பலர் குறை சொல்வது " நாங்க என்ன நேர்சரியில் படிக்கும்  பால்குடி பபா  சின்னப் பிள்ளைகளா படம் பார் பாடம் படி என்பதுபோல எதுக்கு எங்கள் விசாலமான வாசிப்பு அறிவைக் குறிக்கிவிடுறிங்கள் " என்று குறை சொலவ்து.  இதிலும் நிறைய  உண்மை இருக்கு.  

                                                  மூன்றாவது காரணம் படம் போடடால்  " ஸ்மார்ட் மொபைல் போனில் " அது நிறைய இடத்தை  தொடுதிரை மேட்பரப்பில் உள்வாங்கி ஸ்மார்ட் மொபைல் போனில்  வாசிக்கும் பலருக்கு   மூட்டைப் பூச்சி கடிக்கிற மாதிரி  அரியண்டம் கொடுக்கும். இந்தப் பிரசினைகள் இருப்பதால்  என்னோட அகன்ற மின்னேறிஞ்ச வெளி இணையப் பூங்காவன   ப்லோக் சுவரில்   நான் எடுத்த படங்களுடன் அவை தந்த உந்துதலால் எழுதப்பட்ட கவிதைகளையும் போடுகிறேன். நேரமுள்ள  போது  உங்க அபிப்பிராயம் மனம் திறந்து சொல்லுங்க ............. 







தெருச்சுவரில் 

அபத்தமான ஓவியம் வரைபவன் 

தயங்கித் தயங்கிய 





கோடுகளையும் புள்ளிகளையும் 





சில கோணங்களையும் 



பல வளைவுகளையும் 



சில பல சுழிப்புகளையும்



இணைத்துக்கொண்டிருக்கிறான் ,



வீடில்லாதா செய்திகள் 



அவனின் 



கலைந்த கற்றையான தலைமயிரிலும்



குளிப்பு முழுக்கு இல்லாத 



விட்டேந்தியான வியர்வை வாசனையிலும் 



முன்னுரை எழுதிக்கொண்டிருக்கு, 



அவனின் 



நிறத்தெரிவுகள் 



அவனின் மனப்பிறழ்வுகள் போலவே 



புரியமுடியாமலிருந்தது ! 



இந்தச் சுவர் 



அவனுக்கென்றே பிரத்தியேகமான 



தோல்விகளில் விடைதேடும் 



நாட்க்குறிப்பாகவிருக்கலாம் !



சொல்ல முடியாத 



வார்த்தைகளை அவன் காயப்படுத்தாமல் 



மிக மிக மென்மையாகவே 



மை விசுறும் கொள்கலனை 



அசைத்துக்கொண்டிருக்கிறான் ! 



நான் 



கொஞ்சநேரம்தான் அவடத்தில் 



முழங்காலில் குந்தியிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன் 



ஒரு 



பெரிய கதையைப் 



பகுதி பகுதியாக்கிப் புகுத்தி விடும் 



நேர்மையான நேர்த்தியில் 



நான் 



இதுவரையில் வாழ்க்கையை வலிந்து 



எழுதிய எல்லாக கவிதைகளும் 



அர்த்தமிழந்துவிட்டது !





குளிருக்கு 
மாங்கல்யத் தாலிகட்டி 
பதிவிரதைப் பவ்யத்துடன் 
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல 
வெய்யிலின் சூடான 
கோடை அரவணைப்புகளையும்
துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான முன்னறிவிப்புகளையும்
பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்
மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்
விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன்
ஒரு
பகல் பொழுதில்
அலைகழிந்தே கழிந்துவிடும் நேரம்
இருட்டில் தான்
அதிகமான இடங்களை ஆக்கிரமிக்குது
ஒரேயொரு
மெழுகுதிரி தியாகமாகிடும்
வெளிச்சச் சிதறல்களை
நெஞ்சோடு நெருக்கமாக்கி
ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்து
ஒரு
வாழ்வின் கதையை எழுதிவிட நினைக்கிறேன்





ஒரு
பயணத்தின் முடிவு 
இன்னொரு வாசலின் தொடக்கம் 
இடைப்பட்ட 
யாத்திரையின் 
சொட்ப கணங்களுக்குள் சிக்கியுள்ள 
நம்பிக்கைகளை விபரித்துச்
சொல்லவேமுடியவில்லை !
நீண்டகால சந்தேகம்
தறிகெட்ட தட்பெருமை
ஒரு
திடீர் திருப்பத்தில்
இன்னுமொரு நம்பமுடியாத இடத்துக்கு
நாளையையும்
நகர்த்திவிடலாம் !
ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம்
நுட்பமான தந்திரம்
மனதை வடித்துவிடும் முடிவுகள்
இவற்றோடுதான்
எப்போதும்
ஆழமான மனப்பதிவுகளாக
கனவுமுடிகிறது .
நிறங்கள் அடர்தியானவொரு
ஓவியத்தின்
இருட்டின் நிழல்த் தெரிவுகள்
அருகருகில் தடுமாற்றமாய் நிக்க
இப்போதைய தேவையெல்லாம்
ஒரு
மூலையிலாவது
பதுங்கியபடியிருக்கும்
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும்
முயட்சி மட்டுமே !




தொலைபேசி இணைப்புகள்தான் 
இப்போதும் 
உடன்பிறப்பு உறவுப்பாலத்தை இனைக்கக் 
விருப்பமோடு காத்திருக்கு
நானாகவே நானிருக்கும் 
பழக்கத்தை வழக்கமாகி வைத்திருப்பதால்
அந்தப்பக்கத்தில்
நீங்கள்
உருவாக்கி வைத்திருக்கும்
அளவுக்கதிகமான ஆடம்பரங்களில்
எனக்கு
ஆச்சரிய அக்கறைகளில்லை !
செய்வினை சூனியம் போலவே
வேகமெடுத்துக் கடந்த காலம்
நினைவுகளை சுற்றிவைத்து
எதிர்காலத்தை
சூனியமாக்கிக்கொண்டிருப்பதிலிருந்து
தப்பமுடியவில்லையென்பது உண்மைதான்!
அவ்வளவு இலகுவாக
வரட்டுக்கவுரவதை உதறவிட்டுப் பேசுவத்துக்கு
உங்களையே ஆட்டுவிக்கும்
மனதில் உத்தரவுகள் இல்லை !
ஆனாலும்
உங்களுக்கேயுரித்தான
நேரமில்லை என்ற சமாளிப்பில்
நேர்மைகள் இல்லவேயில்லை !
ஒரேயொரு
அழைப்பில் சொல்லிமுடிக்காத
இழப்புக்களின் பெறுமதியோடு
என்
தொலைபேசி இலக்கங்கள் சரியாகவே
இயங்கிக்கொண்டிருக்க
இந்தப் பக்கம்
இப்பவும் அப்பவும் எப்பவும் போலவே
நிறைய அன்புடன்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன் !









என் 
முகவரி பிரபலமில்லை 
இப்போதும்தான் 
அதுவொரு கைவிடப்பட்ட பாதையொன்றில் 
காலத்தில் பாழடைந்த 
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர் தேடிவந்ததில்லை

நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !
என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியேதான் விட்டுவைத்திருக்கிறேன் !
சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,
மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !








18-04-2017
ஸ்டோக்ஹோலம்  ,சுவீடன்