Tuesday 2 June 2015

வேரும் விழுதுகளும்!!

தாத்தாவின் 
கைப் பிரம்பு 
ஓய்வு பெறுவது போல
பேசுவதுக்கு 
சந்தர்பங்களை 
இழந்து கொண்டு போக
அகஸ்திய மொழியின்
வசனங்களில்
இலக்கணம்
அசந்து தூங்கி விடுகிறது....

வேலையை
இரவல் மொழியில்
சமாளிக்க
இன்னொரு வழியில்
அந்நியமான வீட்டில்
அப்பாவின்
படத்துக்குக் அருகிலேயே
எல்லாத் திருப்பங்களிலும்
பசை போல
வேறு பாசைகள்
ஒட்டிக் கொள்கிறது.......

என்
பிள்ளைக்குக்
கிட்ட வராமல்
விட்டு விலகிப்
போய்க்கொண்டே
பூஞ்சணம் பிடிக்கும்
என்
தாய் மொழியில்
" தன் மொழியை மறந்தவன் "
என்ற தலைப்பில்
கவி விதையை எழுத
முதல் வரியை
தொடக்கினேன்...

அதை
எழுதி முடிக்க
வார்த்தைகள் தேடி
வழியிலாமல்
திணறிய போது தான்
உறுதி மொழியாக
குளத்தடி முடுக்கில்
நாலு தலைமுறைக்கு
அசையாமல்
விழுது விட்ட
ஆல மரம்
நினைவுக்கு வந்தது,
.


.
13.04.15
ஒஸ்லோ .

1 comment :