Friday 13 March 2015

ஒருங்கிணைந்து செல்லும் போது

உறைபனிக்கு
இடம்பெயர்ந்து போன
பறவைகள்
திரும்பி வரும் போது
வெயிலோடு போராடி 
நிறங்கள்
மாறினாலும்
வாழ்வு கொடுத்த
மரங்கள்
வாக்குத் தவறி
மற்றொன்றாக
மாற முயல்வதில்லை..
பயனற்ற பேச்சுக்கள்
உறைந்து போய்
நிகழ்காலத்தில்
சலிக்க விடாமல்
கூட்டிக்கொண்டு வந்த
குஞ்சுகள்
கிளைகளில் அலகு தீட்டி
அனுபவிப்பதை
அவைகள்
தடுப்பதுமில்லை .
இயற்கையில்
எல்லாமே அழகாக
ஒருங்கிணைந்து
செல்லும் போது..
வாழ்வின்
அற்புதங்களில் இருந்து
நம்மைப்
பிரித்துப் போடும்
அறிவு தான்
எப்பவுமே எதிரி.
கோடை காலம்
முழுவதுமே
பறவைகளும்
மரங்களும்
ஏற்படுத்திக்கொண்ட
புரிந்துணர்வுதான் தான்
முதலும்
கடைசியுமான
சுதந்திரம்.
.

No comments :

Post a Comment