Thursday 12 March 2015

புறாக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்……

விட்டுப் பறந்து
போய் விடுமோவென்ற
பயமெல்லாம்
நமக்குள்
கூடு கட்டி வாழ
வாய்ச்சண்டையைக்
விரும்பாத
புறாக்கள்
என்றும் தனித்து
வாழ விரும்புவதில்லை...
சுமையாகிப் போன
சின்னஞ்சிறு
விஷயத்தையும்
பார்ப்பதற்கு
கொண்டாட்டமாக
மாற்றி விட்டு
எந்தவித
எதிர்ப்பார்ப்புகளையும்
பதிலுக்குக்
கேட்பதில்லை.
குறைத்து மதிப்பிடுவது
கூடவே பிறந்த
எங்களிடம்
அன்பைக் கொடுத்து
நீங்கள்
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளுங்களென்று
முழு சுதந்திரத்தையும்
அனுமதிக்கிறது.
தலைக்கனத்தால்
கற்றுக் கொள்ள
தவறிய
தன்னடக்கத்தை
புறாக்களிடம்
கற்றுக்கொள்ளுங்கள்..
முட்டாள்தனத்தை
குணங்களின்
குறியீட்டு சொல்லாகப்
பழக்கத்தில்
வைத்துள்ள
மனிதர்கள் போல
மற்றப் பறவைகள் பற்றிய
கதைகளை
அவை கேட்பதில்லை.
தத்திச் செல்லும்
நடையால் கவர்ந்து
வாஞ்சையோடு
பழக விரும்பும்
புறாக்கள் போல்
சில நிமிடங்களே
நடக்க முயற்சிக்கவும்
முடிவில்
மனிதன்தான் என்ற
நினைப்புக்கு
வந்து விடுகிறது
.
.// சில வாரம் முன்னர் வேலைக்குப்போகும் போது ஒஸ்லோ நகரத்தில் சந்தடியான ஒரு இடத்தில் இந்தப் புறாக்களைப் மொபைல் போன் கமராவில் படம் எடுத்தேன்///

No comments :

Post a Comment