ஞாயிறு பொழுதுபோக்கு இசைவிருந்து.... நடபைரவி இராகத்தில் வந்த ஒரு அருமையான இளையராஜா பாடல் " புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை...." நடபைரவியில் முழுவதும் இருந்தாலும் சங்கராபரணம் இராகம் மிகச்சிறிய அளவில் கலந்து இருக்கு.. " அலைகள் ஒய்வதில்லை..." படத்தில் எஸ்.ஜானகி பாடிய இந்த அருமையான பாடல் வரிகளைக் கங்கை அமரன் எழுதியிருந்தார்.
இந்தப் பாடல் உண்மையில் மருதாணி என்ற படத்துக்கு இசியாமைக்கப்பட்ட பாடல் என்றும் அந்தப் படம் பல காரணங்களால் வெளிவரவில்லை என்று அதைப் பின்னர் இளையராஜா குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேசன்ஸ் தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் தொடக்க பாடலாகப் போட்டும்,அதுவும் படத்துக்கு நீண்டு விட்டதால் வெட்டிவிட்டார்கள்.
மருதாணி படத்துக்கு பூஜை போட்ட போது எந்தவித காட்சியும் இல்லாமல் கங்கை அமரன் இந்த பாடல் வரிகளை ஒரு காலைப்பொழுது எப்படி இருக்கும் என்று மனத்தால் நினைத்து வரிகள் எழுதிய பாடல் . ஆனால் அண்மையில் வந்த மேகா படத்தில இதை இசைஞானி புதிதாக இசை அமைத்து , ஹங்கேரி நாட்டு இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி அதை மறுபடியும் பாடலாக்கி இருக்கிறார்..
எண்பத்தி ஒன்றில் இசைஅமைத்த இந்தப் பாடலுக்குள் தொடக்கம் முதல் விளையாடும் புல்லாங்குழல் வாசித்தது வர்ஜினிய நிக்கொலோய் என்ற நிங்கி.இசைஞானி இளையராஜாவோடு சில வருடம் இசைஅமைப்பில் வாசித்த நிங்கி நெதர்லாந்துநாட்டு வெள்ளை இனப் பெண்மணி (இப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை). நிங்கி பற்றி தனியாக ஒரு போஸ்டிங் பதிவு எழுதியுள்ளேன் . .இதில் பிழைகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக்கொள்ள அந்தக் கருத்துக்கள் மிகவும் உதவும் எனக்கு
Excellent ... மிகமிக பிடித்த பாடலும்கூட..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete