Sunday 26 July 2015

எனக்கும் இளகிய இதயம் இருக்கு...

நோர்வே அதன் மேற்குக்கரையில் ஒரு நீண்ட கடற்கரை உள்ள நாடு கொஞ்ச நாளா வடக்கு ,வடமேற்கு நோர்வேயில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு பிரயாணிகள் கப்பல் எப்படிப் போகுது.அது எப்படி மனிதர்களை பிரயாணம் செய்ய வைக்குது என்று அந்தக் கப்பல் போகும் இடங்கள் எல்லாத்தையும் ரியல் டைமில் போடும் ஒரு நிகழ்ச்சி முக்கிய நோர்வே டெலிவிசனில் ஓடுது.
                                          சென்ற நூற்றாண்டில் ரெயில்வே, நெடுஞ்சாலைகள் போடப்பட்டு தரைவழி பிரயாணம் இணைக்காத நேரத்தில் .தொலை தூர வட மேற்கு கடற்கரை நகரங்களின் முக்கிய இணைப்பாக அந்தக் கப்பல் இருந்தது. இப்போது அதிகம் உல்லாசப்பயணத்துறை அதைப் பயன்படுத்தி கொண்டு இருக்கு .ஆனாலும் இப்பவும் பல நோர்வே மக்கள் தங்கள் நகரங்களுக்கு அந்தக் கப்பலில் தான் பிரயாணம் செய்வார்கள்
                                                இந்த நிகழ்ச்சி வடமேற்கு நோர்வேயின் மலைகளுக்கு நடுவில் கடல் வரும் பிஜோர்ட்ஸ் என்ற இயற்கையான இடங்களை அந்தக் கப்பல் வளைந்து வளைந்து கடந்து செல்வதைக் காட்டும் ஒரு கப்பல் பயண நிகழ்ச்சி .நோர்வேயின் அழகை பார்க்கவேண்டும் என்றால் கட்டாயம் இதை யாரும் தவறவிட முடியாது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடக்குது.
                                       என் வேலை இடைவெளி நேரங்களில் அதையும் நான் பார்ப்பேன். அந்த படத்தொக்குப்பில் வட மேற்க்கு நோர்வே பகுதிக்கு அந்தக் கப்பல் போகும்போது அந்த இடங்களில் உள்ள மனிதர்கள் தங்கள் பகுதிக்கு அந்தக் கப்பல் வரும்போது தங்களின் அன்புக்கு உரியவர்க்களின் பெயர்களை ஒரு பெரிய மட்டையில் எழுதி வாழ்த்துச்செய்தி போல காட்டுவார்கள்
                                             நோர்வே டெலிவிசனில் வருவதாலோ என்னவோ நேற்று அந்த படத்தொகுப்பில் ஒரு வயதான தம்பதிகள் தங்கள் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஒரு மட்டையில்
                                          " இஸா. மாரியா , மார்க்கோ ,அன்றியாஸ் , கிறிஸ்டினா ,,நீங்கள் எங்களை விட்டு சிதறிப் போனாலும் நாங்கள் உங்களோடு எப்போவும் இருப்போம் "
                                     என்று தங்கள் பிள்ளைகள் பிரிந்து போனதை அப்படி எழுதி அந்தக் கப்பலுக்கு காட்டிக்கொண்டு இருந்தார்கள்,இதைப் பார்த்த போது என் சொந்த அனுபவ இழப்பு மனத்தைக் கனதியாக்கியது. நானே ஒரு பெரிய குடும்பதில் உடன்பிறப்புகளோடு பிறந்தவன்,என் நிலைமையும் ஏறக்குறைய இது போலத்தான் .நான் முகத்தைச் துடைச்சுப் போட்டு என் வேலையைப் பார்க்கப் போனேன்.
                                        இந்த உலகத்தில் அன்புக்கு உரியவர்கள் கை விட்டுப் போவதுதான் உலகத்தின் மிகப்பெரிய கொடுமை.அதை என்னோட தனிப்பட்ட தோல்வியாக நானே நினைத்துக்கொண்டு இருப்பதால் அதுக்கு மேலே என்னால் ஒண்டுமே செய்ய முடியவில்லை.l
                                  உலகம் மற்றப்பக்கம் சுத்தினாலும் நான் லேசில தடுமாறமாட்டேன்.பல விசியன்களில் இந்த உலகத்தை தெளிவான " அஸ்ட்ரோ பிஸிக்ஸ் மார்க்ஸ் பிளான்க் குவாண்டம் மெக்கானிக்ஸ் தியரியில் " குழப்பமான அணுகுமுறையில் ஜோசிப்பவன்.
                              ஆனாலும் என் ரெஸ்ட்ரோடிண்டில் முன்னுக்கு பரிமாறும் வேலை செய்யும் இளம் பெண்கள் என்னை கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள் நான் ஏன் எமோசனலா குழம்புறேன் என்று, ,ஒருத்தி வந்து
                                    " நீ இரும்பு மனிதன் போன்ற ஒருவன் ஏன் இப்படி சென்டிமென்டலா பீல் பண்ணுறாய் "
                                            என்று கேட்டாள். நான் அதுக்குப் பதில் சொல்லவில்லை .ஆனால் எனக்கும் இளகிய இதயம் இருக்கு என்று விடிய விடிய அவளுக்கு விளங்கப்படுதிக்கொண்டு இருக்கவா முடியும். சொல்லுங்க பார்ப்பம். 
.
..

1 comment :

  1. இந்த உலகத்தில் அன்புக்கு உரியவர்கள் கை விட்டுப் போவதுதான் உலகத்தின் மிகப்பெரிய கொடுமை.அதை என்னோட தனிப்பட்ட தோல்வியாக நானே நினைத்துக்கொண்டு இருப்பதால் அதுக்கு மேலே என்னால் ஒண்டுமே செய்ய முடியவில்லை.///
    வலி

    ReplyDelete