Sunday 1 March 2015

பக்கப் பார்வையில்...

காகங்கள்
நாங்கள்  
ரசித்துப் பார்க்க
நேரம்
ஒதுக்குவதில்லை...  

ஏதோவொரு
தருணத்தில், 
மரத்திலிருந்து
மதில் சுவரிலிருந்து
கரண்ட் வயரிலிருந்து  
திடீரென
எதிர்பாராமல்
பறந்து  வரும்.... 

அவசரமாக 
யாரும் கிட்ட
நெருங்க முடியாதபடி
வியூகம் அமைத்து 
படிப்படியாக  பத்துக் 
குவிய ஆரம்பிக்க
இரைச்சலாக 
சம்பாஷனை
தொடங்கும்.....

பக்கப்
பார்வையில்
நிலையில்லாமல் 
பார்த்தபடி  
பதட்டமான
ஒன்று கூடலை
நாங்கள்  
வழமை போல 
நிதானமாகப் 
பார்க்கத் தொடங்க 
பக்கவாடில் 
பறந்து போகும்...

சரியாக 
உற்று நோக்கினால், 
நடப்பது 
அவசரம்  என்பதை விட
அந்த அவதியில் 
ஏற்படுத்தப்பட்ட
கவனயீர்ப்பே 
முக்கிய பங்களிப்பது
தெரிய வரும்...

காகங்கள் 
எப்போதும்
சாதாரண சவால்களை 
எப்போதும் 
அசாதாரண நிலைமையில் 
விரும்புவதால் . 
அதிசயங்களும்
மர்மங்களும்
அதற்கு மிகவும் 
விருப்பமான
ஒன்றாகி விடுகிறது.


No comments :

Post a Comment