Sunday 1 March 2015

திருப்பிக் கொடுங்கள்

எதைக்
கடல்ப் பயணங்களில்
திருடினீர்களோ
அதை முதலில்
திருப்பிகொடுங்கள் 
அப்போதுதான்
எதிர்கால
உத்தரவாதங்களை
நிபந்தனையின்றிப்
பெறமுடியும்.....
நீல வானத்தின்
கல்யாணக் கனவு
வண்ணத்தையும்,
கடல்ப் புறாக்களின்
தென்மாங்குக் காதல்
பாட்டையும்,
அலைகளின்
செல்லோ வயலின்
இசையையும்,
பாய் மரங்களில்
புயல் எழுதிய
ஒப்பாரியையும்,
கடலின்
ஆழிவரை ஆழமான
கவிதையையும்,
உப்புக் காற்று
விரித்து வைத்த
புத்தகத்தையும்,
முதலில்
திருப்பிகொடுத்து.....
உள்ளதில் இருந்து
உருவாக்குபவராகுங்கள்
இதை
மறுதலித்து
எதிர்த்துப் போய்
இல்லாத ஒன்றில் .
உயிரோட்டமுள்ளவராக
நீங்கள்
இருக்கவே முடியாது.



2 comments :

  1. இல்லாத ஒன்றில்...!
    அழகான வரிகள் .. அருமையான கிளிக்.

    ReplyDelete
  2. இல்லாத ஒன்றில்...!
    அழகான வரிகள் .. அருமையான கிளிக்.

    ReplyDelete