Wednesday 4 March 2015

சந்தேகமில்லாத காரணங்கள்..

நியாயம் 
பெற்றுக் கொள்ள 
முடியாத
இறந்தகால 
அநியாயம் ஒன்றின் 
பெறுமதியை
நியாயப்படுத்த 

முயற்சிப்பது போல
கவிதை எழுத
சந்தேகமில்லாத
காரணங்கள்
தேவைப்படுகிறது......

மனம் நிறைந்து
மறந்து போன
காதல்ப் பாடல்களை
மறுபடியும்
கிட்டாரில்
ரசித்து வாசிக்க...

சொல்லாமலே
தொலைந்து போன
கவிதைகளைத்
தேடி எடுத்து
இதயத்தோடு நேசிக்க,

இரக்கமில்லாமல்
இழந்து போன
வார்த்தைகளை
நித்திரையில்
உளறிப் பிசத்த,

சந்திக்காமலே
கடந்து போன
காலதுக்காக
காலம் கடந்து
கண்ணீரோடு 

கவலைப்பட ,

பதட்டத்தில்
பார்க்க மறந்த
கடிதங்களுக்கு
பரிதாபத்தில் 

பதில் போட,

அந்நியப்படுத்த முடியாத
இவைகளை வைத்து
நிகழ் காலத்தில்

புனைகதைகள்
எழுதித் தள்ள
காரணங்கள்
தேவைப்படுவதில்லை,

ஆனால்
ஒரு கவிதை எழுத
மூன்று காலத்திலையும்

சந்தேகமில்லாத
காரணங்கள்
எப்பவுமே
தேவைப்படுகிறது!.


.

No comments :

Post a Comment