Wednesday 4 November 2015

நிலாக் காய்கிறது ....

பதின் மூன்று வயதில் ஒரு குழந்தைக் குரல் ஒரு பாரம்பரிய தமிழ்ப் பண்பாடு சுற்றியுள்ள குடும்பதை சுற்றி அமைக்கபட்ட திரைகதையுள்ள படத்தில் கர்நாடக இசைக் கருவிகளின் பிண்ணனியில் வந்த நேரமே ஹரிணி நிலவைப்போல பிரகாசமாய் ஒரு புதுக் குரலைப் பதிவு செய்து ஒரே இரவில் இசை உலகைப் பிரட்டிப்போட வைத்த பாடல் நிலாக் காய்கிறது ,,யாரும் ரசிக்கவில்லையா பாடல் .

                                        அதிகம் வெஸ்டர்ன் இசையில், சூபி இஸ்லாமியப் பாதிப்பில் கர்நாடகஇசைக்கருவிகளுடன் கோவித்துக்கொண்டு இருந்த இசை அமைப்பாளர் அல்லா ரக்கா ரஹுமானுக்கும் கீளைதேச பாரம்பரிய இசையில் இருக்கும் அதி திறமையை எளிமையான இந்தப் பாடலில் வெளியே கொண்டுவந்த புகழும் வெளிச்சத்துக்கு வரத் தொடக்கி வைத்த பாடல் ,

                                   இந்தப் பாடல் மாண்ட் என்ற ஹிந்துஸ்தானி ராகப் பாடல்,அந்த ராகத்தில் அதிகம் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத வடிவமான தும்மிரி,கஸல் இவைகளில் பாடல்கள் வந்த போதும் புல்லாங்குழலில் வாசிக்க அழகான மாண்ட் ராகத்தை அல்லா ரக்கா ரகுமான் தமிழ் பாடலில் பயன்படுத்தியது ஒரு இசை அதிசயம்.

                                   சந்தோஸ் சிவன் கமராவில் மிச்சக் பாடலின் வரிகளைக் கவிதை ஆக்க, சுகாசினி மணிரத்தினம் இயக்கிய இந்திரா ஒரு மயில்கள் தோகை விரித்து ஆடிய மழைக்கால மாலைப் பொழுதில் வானவில்லின் நிறங்களை மனவெளி எங்க்கும் அள்ளி எறிந்து ஆலாபனை செய்ய வைத்த படம்.,

                                 ஹரிணியயும் ,நிலாக் காய்கிறது நிலாக் காய்கிறது யாரும் ரசிக்கவில்லையா பாடலையும் பிரித்துப் பார்க்க முடியாமல் இந்தக் கூட்டு அணி இனி எப்பவ வரும் என்று ஏங்க வைத்த பாடல்..
.. https://www.youtube.com/watch?v=oqN5HriMAxg
.

1 comment :