Wednesday 4 November 2015

தேவதைகள் உறைபனியில்...

அகோச்டிக் கிட்டார் இசைக் கலைஞ்சர் ஜோனாஸ் பிஜெல் நோர்வேயின் இயற்கைப் பாடகர். நோர்வேயில் இயற்கை எப்படி இன்னும் இயற்கையாக இருக்கோ அதே போல ஜோனாஸ் பிஜெல் பாடல்களில் இயற்கையைப் பாடாத பாடல்களே இல்லை,," 

                              தேவதைகள் உறைபனியில்,," Engler i sneen (Angels in the Snow), என்ற இந்தப் பாடல் இன்றுவரை நோர்வேயின் உறைபனிக் கால தனிமை மனிதர்களின் இதயத்தை உரசிச் செல்லும் வரிகளில் வந்த ஒரு முக்கியமான பாடல். ஜோனாஸ் பிஜெல் வட துருவ நோர்வேயின் அந்நியமான தனிமை நகரமான பூடோ என்ற கிராமத்தில் பிறந்தவர்,அந்த இயற்கை நகரத்தின் பாதிப்பு அவர் பாடல்கள் முழுவதிலும் இருக்கு ,

                                  நாலு முறை நோர்வேயின் Grammy Award கிரம்மி விருது என்று சொல்லப்படும் Spellemannprisen பெற்ற கிராமியப் பாடகர் . இந்த நோர்வே மொழிப்படலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படித் தொடங்கி

                      Angels in snow - they’ve got their own song
                     When the night is at most dark - they sing about - the rising sun
                          I stood in the shadows - in the rain and wind,

                                  என்று நீண்ட நோர்வேயின் காடுகள்,மலைகள், கடற்கரைகள் ,கழிமுகங்கள் எல்லாம் மென்மையான இதயத்தைப் பிழியும் இசை சுழண்டு அடித்து, நீ கதவுகளைத் திறந்து என்னை உள்ளே அழைக்கும் வரை நான் ஒரு அந்நியன் என்று I was a stranger till you opened up - and let me in,என்ற கெஞ்சலுடன் முடிகிறது " தேவதைகள் உறைபனியில் " பாடல்


https://www.youtube.com/watch?v=_46wnWOECck
.

1 comment :

  1. I was a stranger till you opened up - and let me in

    Beautiful

    ReplyDelete