Thursday 5 March 2015

" சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..."

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடிய இளமைப்பருவப் பாடகி ஒருவர் இந்த வட இந்தியக் குரல் தமிழில் அதிசயங்கள் பாடி அசாத்திய திறமையில் பலரை வியக்க வைத்த அந்தப் பாடகி அழகி படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெஸ்டர்ன் ரிதம் இசையின் பின்னணியில் பாடிய " பாட்டு சொல்லிப் பாடச் சொல்லி .." தமிழ்ப் பாடலுக்கு தேசிய விருது பெற்ற ஹிந்தி மொழிப் பாடகி சாதனா சர்க்கம் .
தமிழில் பாடிய பல பாடல்களில் இன்றுவரை அலைபாயுதே படத்தில் அல்லா ரக்கா ரகுமானின் இசையில் பாடிய " சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..." பாடல் ரகசியமாக தமிழர்கள் எல்லாரையும் வயது வேறுபாடு இன்றி இந்தக் குரல் சின்னச் சின்னதாய்க் கோரிக்கைகள் வைத்து கவர்ந்து சென்றது . அல்லா ரக்கா ரகுமான் ஒரு பேட்டியில் தான் கொடுக்கும் மெட்டைத் தான் எதிர்பார்ததுக்கு மேலாக அட்டகாசமாகப் பாடி அசத்தும் ஒரே பாடகி சாதனா சர்க்கம் என்று சொல்லியுள்ளார்,
சாதனா சர்க்கம் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம், வட இந்திய கஸல், தும்மிரி இசை வடிவங்கள் எல்லாம் முறைப்படி சின்ன வயசிலேயே படித்து அதில் இருந்து சினிமா பின்னணிப்பாடகியாகி மெல்லிசைக்கு வந்த பாடகி. தன் உடல் அமைப்புக்கும் கணீர் என்ற சுருதி பிசகாத பிச்சில் பாடும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல் பாடும் சாதனா சர்க்கம் தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி இசை அமைப்பாளர்களோடும் தன் குரலைப் பதிவு செய்துள்ள பாடகி,
" சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே.." பாடல் மூன்று ராகங்கள் கலந்த ஒரு ராகமாலிகா என்று சொல்லுறார்கள்,சரியா எனக்கு தெரியவில்லை ,பல்லவியில் சாருமதி, சிந்துபைரவி, இராகமும் சரணத்தில் மோகனம் என்றும் சொல்லுறார்கள் ,இது சரியா என்று எனக்கு தெரியலை யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
https://www.youtube.com/watch?v=xVQBOAajJF0


No comments :

Post a Comment