Sunday 29 March 2015

ஒரு ஞாபகம் மட்டுமே...

மரம் 
விழுத்திய 
இலையின்
நல்ல நினைவுகள்
நிறமற்ற 
வெய்யிலில்ப்
பரவலாகப் பறந்து
கொண்டிருக்கு...

கோடை மழையில்
உறை பனியில்
மஞ்சள் வெயிலில்
மெல்லிய தென்றலில்
பறவையின் இறகில்
அதன் அந்தரங்க
நினைவு நிறங்கள்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கலாம்

இறப்புப் போல
நேரம் குறித்த
உடைப்பின்
தொடர்ச்சியாக
இலை
கடைசிவரை
மரத்தின்
காலடி உறவை
உதறி விட்டு
எங்கேயும்
செல்வதில்லை....

மரம்
நம்பும் உலகத்தில்
இலை
ஒரு ஞாபகம்
மட்டுமே,
இடைவெளிகளை
நிரந்தரமாக நிரப்பும்
இருப்பு
அல்ல............... 
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 10.06.14

No comments :

Post a Comment