Tuesday 31 March 2015

வடதுருவ உல்லாசம் ..

பிரமாண்டத் 
தனிமையின் 
துணையை அனுசரித்து 
துருவக் 
கரடிகளும் 
உறைபனி
ஓநாய்களும்
இரை தேடிச் சென்ற
வழித் தடங்களை
விசாரித்து விலத்தி
திசையறி கருவி
பிரித்துக் காட்டிய
சுழற்சியில்
பாதைக் குறிப்புகளும்
வரை படங்களும்
பிரயாண முகவர்களுமில்லாத
பயணத்தில்
நண்பர்களோடு
நடந்தே கடந்து
தொலைந்து போனதை
எழுதிவைத்து
மறுபடியும்
நினைத்துப் பார்த்து
ரசிக்கத் தொடங்கி
பழைய
பரிமாணத்திற்குள்
பிரவேசிக்க
எந்த அடிக் குறிப்பும்
தேவை இல்லை.
.


.31.03.15

No comments :

Post a Comment