Thursday 19 March 2015

நாட்டு நடப்புகளின் பேச்சுத்துணை..

அடம் பிடிக்கும்
அவலங்களைச்  
தள்ளி வைத்து விட்டு
நட்பாகச் 
சந்திக்கும் ஒரு 
ரகசிய புள்ளியில் 
கலவரமான 
நவீன கண்டு பிடிப்புக்களின் 
நடமாட்டமில்லாத 
ஊரின் 
பொழுது போக்கு 
நாட்டு நடப்புகளின் 
பேச்சுத்துணை..

எண்ணங்களை
எதிராகப்   பார்க்கும் 
கருத்துக்கள் 
வேண்டுமென்பதுதான் 
லட்சியமென்றாலும் 
குறைந்த பட்சம்
ம் ம் ம் என்று 
ஒத்துக் கொண்டே
பதிலைக் 
விட்டுக் கொடுத்துவிட்டு  
அமர்ந்து விடுகின்றனர்.....

அடிப்படையில்
இடிந்து போன 
அன்றாட வாழ்க்கையை 
தாயக்கட்டை உருட்டி 
விளையாடி 
ஆளுங்கட்சியும் 
எதிர்கட்சியும்
அவர்களின்     
அப்பாவித்தனத்தைத் 
வாக்குகளில் 
பங்கு போட்ட போதும் ....

செய்திகளில் 
எழுப்பப்படும் 
சில ஓங்கிய குரல்களுக்கு
வெள்ளாந்தியான 
மனிதர்களின் 
ஒற்றுமையைப் 
பதிலாக்க 
முடிந்ததென்று 
சந்தோஷப்பட்டுக்கொண்டே 
கிராமங்கள் 
சொர்க்கங்களை 
மறைத்து 
வைத்திருக்கிறது.
                                         
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 19.03.15

///இந்த வாட்டர் கலர் ஓவியம் ,,புகழ் பெற்ற ஓவியர் ராஜ்குமார் சேதுபதி துரிகையில் வரைந்த அன்றாட மனிதர்கள் என்ற தொகுப்பில் பார்த்த போது இப்படி வரிகளில் எழுதத் தோன்றியது///.

No comments :

Post a Comment