Wednesday 18 March 2015

நெஞ்சோடு பதிவு செய்தாய்..

வாடைக் காற்றுக்கு
வாழ்க்கைப்பட்ட
மணக் கோலம்
முடிய முன்னமே
அடங்க மறுத்து 
புறப்பட்டுக்கொண்டிருந்த
அழுக்கான
செம்மண் புழுதியில்....
அவசரத்தில்க்
குறுக்க வந்த மாதிரி
மேகங்களின்
நிறைவேறாத
ஆசையின்
கோபம் போல
நேரம் கெட்ட நேரத்தில்
அழுதுகொண்டே
இறங்கியது
கோடை மழை,
ரசிக்கத் தெரியாமல்
சேற்றில் விளையாடி
வெள்ளம்
போட்டு முடியாத
நீர்க் குமிழிகளைத்
தேடித் தேடி
உடைத்தேன்
நான்.....
கைகளை
முடிந்தவரை
அகலமாக்கி
வான் நோக்கி
விரித்து
முகத்தில் விழுந்து
கன்னத்தில் வழிந்த
துளிகளை
துடைக்க மனமிலாமல்
நெஞ்சோடு
பதிவு செய்தாய்
நீ
பிற்காலத்திலும்
மழைக்கு
குடையாகவும்
வெயிலுக்கு
செருப்பாகவும்
நீ
காத்திருக்க
அலட்சியத்தோடு
அலைந்தே
புயல்களை விலைக்கு
வேண்டி
வீணாகிப் போனேன்
நான்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 17.03.15

1 comment :

  1. அரசனால் மட்டுமே இப்படி எழுதமுடியும்.. மிகமிக அருமையா இருக்கு.

    ReplyDelete