பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது போன்றது ஒரு நகரத்தை நாலுவிதமாக ரசிப்பது . சலிப்புக்கள் எல்லாம் தாண்டி சந்தோசமான விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள் வாழுமிடம் உத்தரவாதங்கள் தரலாம் . இந்த உலகில் சந்தோசம் எங்கோ பதுங்கி இருக்கு என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !
ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி இருந்தாலும் குரங்குபோல தொன்மையான அடையாளங்களை வைப்பாட்டியாக வைத்திருக்கும் நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன்
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே எழுதுவதுக்கு இன்னமும் படங்களும் இடங்களும் இருக்கு. ஒருவித சலிப்பில் அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன் . எதையுமே அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும் துன்பமாக இருக்கும். இல்லையா ?
சிலநேரம் இங்கே என் மொபைல் போன் மஹாலக்ஷ்மி எடுத்த படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...
ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி இருந்தாலும் குரங்குபோல தொன்மையான அடையாளங்களை வைப்பாட்டியாக வைத்திருக்கும் நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன்
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே எழுதுவதுக்கு இன்னமும் படங்களும் இடங்களும் இருக்கு. ஒருவித சலிப்பில் அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன் . எதையுமே அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும் துன்பமாக இருக்கும். இல்லையா ?
சிலநேரம் இங்கே என் மொபைல் போன் மஹாலக்ஷ்மி எடுத்த படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...
பறவைகளை
எதேச்சையாகக் கடக்கும்போது
தயவுசெய்து
கலவரம் ஆகாதீர்கள்
உங்கள் கவனம்
அவைகளின்
ஒரு நாளையே
குழப்பிவிடலாம்
இந்தப் படம்
அந்தச் செய்தியைச்
படபடத்து சொல்லிவிட்டு
வெய்யிலோடு
வெளியே போய்விடுகிறது
கவிதை
அதையொரு இடத்தில
கொண்டு வந்து
நிற்பாட்டி விட்டு
வானத்தை
வாடகைக்கு எடுத்து
விரித்து வைத்து
இருட்டுவதுக்குள்
எழுதிவிடு என்கிறது.......
இறக்கை முளைத்த
வெள்ளைப் புறாக்களையும்
அவை சூரியனோடு மோத
சுதந்திரச் சிறகை விரித்தது
பற்றியும்
எல்லாரும் எழுதியறுத்து
வெறுத்துப் போனதால்
இதுக்குமேலே
எழுத விருப்பமில்லை
எதேச்சையாகக் கடக்கும்போது
தயவுசெய்து
கலவரம் ஆகாதீர்கள்
உங்கள் கவனம்
அவைகளின்
ஒரு நாளையே
குழப்பிவிடலாம்
இந்தப் படம்
அந்தச் செய்தியைச்
படபடத்து சொல்லிவிட்டு
வெய்யிலோடு
வெளியே போய்விடுகிறது
கவிதை
அதையொரு இடத்தில
கொண்டு வந்து
நிற்பாட்டி விட்டு
வானத்தை
வாடகைக்கு எடுத்து
விரித்து வைத்து
இருட்டுவதுக்குள்
எழுதிவிடு என்கிறது.......
இறக்கை முளைத்த
வெள்ளைப் புறாக்களையும்
அவை சூரியனோடு மோத
சுதந்திரச் சிறகை விரித்தது
பற்றியும்
எல்லாரும் எழுதியறுத்து
வெறுத்துப் போனதால்
இதுக்குமேலே
எழுத விருப்பமில்லை
ஒரு
விட்டில் பூச்சியின்
தற்கொலைக்கு ஒப்பான
திடுக்கென்ற ஆச்சரியத்தை
ஆர்கிஸ்எல்வா ப்ரோ
பாலத்தைக் கடக்கும்போது
சந்தித்தேன்
தண்ணியின் தாளங்களை
தனியாக
எண்ணி எடுத்து
ரசித்துக்கொண்டிருந்தாள்
மரணத்தைப் பற்றின
அறிமுகத்தோடு
தொடங்கியது
வருடங்களாய்
சந்திக்க முடியாமல் போன
அவளின் உரையாடல்
அளவுக்கதிகமாக
மெலிந்து போய்
கூந்தல் இழந்து
விரிசல் விழுந்திருந்தாள்
தனிமையைத் தள்ளி
வேரோடிய புற்றுக்களோடு
போராடுவதாக
தலையைத்
தாங்கிப்பிடித்துக்கொண்டிரு ந்தாள்
ஒன்றாக வேலை செய்தபோது
கடமை முடிய
வாசலை தாண்டினவுடனே
அற்பாயுளில்
மடிந்துவிடும் நிலையில்
எங்களின் நட்பு
ஒருபோதும் இருந்ததில்லை
ஒரே புள்ளியில்
தற்போதைய
என்னைப் பற்றி சொல்ல
ஒன்றுமில்லை என்றேன்
சமாளிப்புகளை
இறுகப் பற்றின
வாசனைகளால்
அவள் வார்த்தைகள்
நிறைந்திருந்தது
நம்பிக்கையை
நம்பிக் கை விடாதே என்றேன்
வலிகள் தரும்
சலிப்பிலிருந்து விலகி
எப்போதாவது
மீட்டெடுத்துக் கொள்ளும்
அற்புதமான
தருணம் இதுவென்று புறப்பட்டாள்
சலசலத்து
இயங்கிக்கொன்டிருந்த
ஆர்கிஸ் எல்வா நதியின்
சத்தத்தின் பின்னணியில்
அவள் முகம்
இறந்துபோயிருந்தது
அதிகம் போதாத
ஒருவிதமான விசிறியடிப்பில்
பிர்ச் மரங்கள்
வில்லோப் புதர்கள்
மேப்பிள் மலர்களைக்
குளிப்பாட்டுது மழை....
நடைபாதைக்
கரையோரமெல்லாம்
வழுக்கியபடி
இறகுகளை ஈரமாக்கி
கொண்டை இழுத்து
சண்டை பிடிக்கும்
சாம்பல்ப் புறாக்கள்..
சோலையில்
சின்னக் குருவிகள்
நாளை வெயில் பற்றிய
நம்பிக்கையற்று
இன்றைய பொழுதுக்கு
மர வேரடியில்
புழுக்கள் தேடுகின்றன......
அவைகளைத்
திடீர் திடீர் என்று
திடுக்கிட வைத்துப்
பூச்சாண்டி காட்டுகின்ற
மரஅணில்கள்
இன்று வரவேயில்லை...
மழை
கிளைகளின் வழியாக
இலைகளில்
சொந்தம் கொண்டாட
மரங்களின் கீழே
சத்தமில்லாமல் இருட்டு
தியானம்செய்கிறது
சூடு கொடுக்கின்ற
அங்கிகளில்
கைகளை நுழைத்து
குடைகளை மறந்துவிட்டு
தலைநனைவதைக் கவனிக்காத
மனிதர்கள்
வேலைக்குப் வெளிக்கிடுகிறார்கள்
என்னைப் போலவே.......
அதிகம் போதாத
ஒருவிதமான விசிறியடிப்பில்
பிர்ச் மரங்கள்
வில்லோப் புதர்கள்
மேப்பிள் மலர்களைக்
குளிப்பாட்டுது மழை....
நடைபாதைக்
கரையோரமெல்லாம்
வழுக்கியபடி
இறகுகளை ஈரமாக்கி
கொண்டை இழுத்து
சண்டை பிடிக்கும்
சாம்பல்ப் புறாக்கள்..
சோலையில்
சின்னக் குருவிகள்
நாளை வெயில் பற்றிய
நம்பிக்கையற்று
இன்றைய பொழுதுக்கு
மர வேரடியில்
புழுக்கள் தேடுகின்றன......
அவைகளைத்
திடீர் திடீர் என்று
திடுக்கிட வைத்துப்
பூச்சாண்டி காட்டுகின்ற
மரஅணில்கள்
இன்று வரவேயில்லை...
மழை
கிளைகளின் வழியாக
இலைகளில்
சொந்தம் கொண்டாட
மரங்களின் கீழே
சத்தமில்லாமல் இருட்டு
தியானம்செய்கிறது
சூடு கொடுக்கின்ற
அங்கிகளில்
கைகளை நுழைத்து
குடைகளை மறந்துவிட்டு
தலைநனைவதைக் கவனிக்காத
மனிதர்கள்
வேலைக்குப் வெளிக்கிடுகிறார்கள்
என்னைப் போலவே.......
சரசமாடும்
நகரப் பாதையில்
தேங்கிய மழைத் தண்ணி
என்னையும்
நிழலாக சேர்த்து இடிக்க
அந்த முதியவர்
பொறுமையாக என்னுள் பார்த்து
சிரித்தார்.
வலியோடு
குனிந்து பார்த்து
அவசரமான
நிமிடங்களை நிறுத்தி வைத்து
வழியை விலத்தி
சிரித்துத்
தயங்கி நின்றேன்
கதைக்கத் தொடங்கினார்..
.
என் சந்தேகங்களை
சாட்சியாக்கி
தன் ஆத்மாவுடன்
விசாரணையை ஆரம்பிக்க
எல்லாவற்றிலும்
உணர்வுகள்
தூறல் தூவிச்சென்றது
அவர் கேட்ட
சில கேள்விகளுக்கு
சிக்கனமாகப் பதிலளித்தேன்.
நான் கேட்ட
ஒரேயொரு கேள்விக்கு
இதயத்தின் பெரும் பகுதியின்
வெற்றிடத்தை
திறந்துகாட்டினார்.
ஒவ்வொரு
எதிரொலியிலும்
தனிமையோடு
போராடிக்கொண்டிருப்பதால்
யாரா இருந்தாலும்
கதைப்பேன் என்றார்
அவரின்
கதை கடந்து போன
வயதான அனுபவத்தில்
நான் இருப்பேனாவென்று
தெரியவில்லை
சில நேரமது
என்னையும் தொடரலாம்
இதன் அவலம்
அப்போது
என்னை அசைக்கவில்லை
தடமிழந்து
வாழ்வு நகர்த்த எதுவுமில்லா
வயசாகும் போது
தெரியுமிந்த வலி.
யன்னலைக்
காற்றுவர்ற பாதியில்
திருகித் திறக்க
நேரத்துக்கே எழும்பிவந்த
அவசர வெய்யில்
காலத்தை
நிலமெல்லாம் பரப்பி வைச்சு
பல்லாங்குழி
விளையாடிக்கொண்டிருந்தது
ஏனோ
சரியாகப்படவில்லை
தொலைவில்
முந்திக்கொண்டு
காதில்அறைந்து
பதினோரு மணிக்கு
ஞாயிற்றுக்கிழமை
பிராத்தனை
மணியடித்தது
விடுப்பு பார்த்து
தேவாலய
மணிக் கோபுரத்தை
நின்று நிமிர்ந்து நிதானித்துக்
கவனிக்க
வலஞ்சுழியில்
மணிக் கம்பியையும்
நிமிடக் கம்பியும்
ஒன்றயொன்று திரத்த
ஞானம் தெளிந்தது
நடுச் சாமமே
நேரத்தோட
ஒரு
மணித்தியாலம்
கையை உதறிப்போட்டு
பின்னுக்குப் போய்விட்டதாம்.
இயற்க்கை
தோல்வியில் கூட
சரியாக புரிந்து கொள்ளாமல்
அவசரமான தற்கொலைகளுக்கு
முடிச்சுப்போட்டுப்
பார்ப்பதில்லை
அன்னியப்பட்டுப்
போவதில்லையென்ற முடிவோடு
உதிர்ப்பை உணர்ந்து
தன் வீழ்ச்சிக்கும்
பூசு மஞ்சள் குளித்து
வர்ணம் பூசிப் பார்க்கிறது
மெல்லிய காற்று
பனிமழையுடன் பேசும்போது
மகிழ்ச்சியாகவிருக்கும்
மரங்கள்
காலநிலையின்மையை
சபித்துக்கொண்டு
ஒதுங்கிப்போவதில்லை
விழுந்துகொண்டிருக்கும்
இதய வடிவ
மேப்பிள் இலைகளுக்கு
சிறகுகள் கொடுத்து
முதல் நிலையில்
தன்னைச்சுற்றியே
அணைத்துக்கொள்கின்ற
அற்புதமான செய்தியில்
தன்னிருப்பையும்
அர்த்தப்படுத்துகிறது.
இதுக்கும் மேலே
இனியென்ன எழுதிக் கிழிக்க
என்றபோதுதான்
என் சின்ன மகள்
விழுந்த மஞ்சள் இலைகளை
நெஞ்சோடு அள்ளி எடுத்த
நினைவு குறுக்கிட்டு வந்தது
திசை தேவையில்லாமல்
நடந்த பாதைகளில்
ஒட்டிக்கொண்டு
நுழைந்த முகங்கள்
இன்னமும்
என் காதில்
கிசுகிசுப்பது போலவே
இருக்கிறது.
வருடங்களின்
முன் கடந்து சென்ற
வீதிகளில்
ஏனோ
மிகவும் தெளிவாக
விபரித்திருந்த
தோல்வி தெரிந்தது
தெளிவற்ற
ஆரம்ப கட்டத்தில்
விரிந்திருந்த
வழித்தடங்கள்
வெறும்
ஆர்வக்கோளாறென்று
அதிகாலைக் கனவோடு
உதறி எழுந்த போது
புரிந்துகொண்டேன்
ஜன்னலில்
இலையுதிர் மரங்கள்
குளிர்ந்த வெய்யில்
கசங்காத வானம்
பார்த்த போது
நினைத்துக்கொண்டேன்
போனது
எப்படியோ போகட்டும்
இனியாவது
எதிர்காலம்
அழகாக இருக்கவேண்டும்
எந்தப் புள்ளியிலும்
சேராமல் விலகுகிறோமென்பது
தெரியாமல்
நினைவில் நிற்கும்
கதைகளோடு
தள்ளிக்கொண்டே போகிறது
க்ருன்ட்லான்ட்
நடுநிசி நகரம் ..
எல்லா
ReplyDeleteவெளிச்சங்களும்
வெளியே
தெரிவதில்லையென்று
தனக்குள் புழுங்குது
இலையிழந்துகொண்டிருக்கும்
மேப்பிள் மரங்கள்... ///
எப்படி உங்களால்மட்டும் முடிகிறது இந்தமாதிரி அழகாய் எழுத .. வவியப்புத்தரும் கவிவரிகள்