Monday 7 December 2015

Enkeyum Eppothum Sankiitham ..M.S.V



ஒரு "சிம்பிள்" கதை! ஒரு இசைகுழு இந்தியாவில் இருந்து மலேசியா போய் இசைநிகழ்ச்சி செய்ய,அந்த இசை குழுவின் கிட்ராருக்குள் ஒரு பெண், ஒருவித நிர்பந்தத்தால போதைவஸ்து வைத்து கடத்த,அதே பெண்ணை அந்த குழுவின் முதன்மைப் பாடக்ர் மலேசியாவில காதலிக்க, அந்தப் பெண் கான்சர் இருப்பதை மறைத்து காதல் செய்ய,கமரா மலேசியா ,சிங்கபூரை 360 பாகையில் சுழண்டு படம் பிடிக்க, நாங்கள் எல்லாம் தியேட்ரில் "ஆ " எண்டு வாய்பிளந்து பார்க்க, வெள்ளி திரைகள் கிழிய கிழிய உலகம் எங்கும் ஓடியது "நினைத்தாலே இனிக்கும் "!
                                   இந்த படத்தில காமடிநடிகர் யாரும் இல்லை ,ஆனால் இதில நடித்த எல்லாருமே காமடி பண்ணுவார்கள். " Bodyய இந்தியா எடுத்திட்டு போறிங்களா ,இல்லை இங்கே மலேசியாவில அடக்கம் பண்ணபோறிங்களா " எண்டு பூர்னம் விஸ்வநாதன் சொல்லும்போது தியேட்டர் அத்திவாரமே அதிரும்!
                                      "இது ஒரு தேனிசை மழை"அப்படித்தான் அப்போது படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. படத்தின் முடிவு கூடஜெயபிரதா சாகிறதை காட்டவில்லை K.பாலசந்தர் ,பதிலாக , "சிம்பலிக்கா " ,ஜெயபிரதா ரத்தவாந்தி எடுக்க, "இனிமை நிறைந்த உலகம் இருக்கு" பாடலைபாட படம் முடியும் ! அருமையான பாடல்கள் படம் முழுவதும். மெல்லிசை மன்னர் M.S.V ,கவியரசர் கண்ணதாசன் கூட்டணி பின்னிஎடுத்த படம் !
                                அந்தப் படத்தில் "ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்" எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய சிங்கப்பூரின் வீதிகளில் போதைமருந்து செலுத்தப்பட்ட பெண்ணாக ஜெயப்பிரதா ஆடிப்,பாடிய பாடல் சூப்பர் "சர்-ரியலிசம் ".இந்தப் படத்தில் தமிழ்த்திரையுலகத்தின் பெரும் பெண்பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வாணி ஜெயராம், எஸ்.ஜானகி, நால்வரும் ஜெயப்பிரதாவுக்கு இந்த ஒரு படத்திலேயே பாடியிருக்கிறார்கள். இப்படியொரு வாய்ப்பு வேறெந்தக் கதாநாயகிக்கும் வாய்த்திருக்கிறதா என்று தெரியவில்லை!....
                              கவலைகள் மறக்கு வைக்கும் உல்லாசப் பாடல்களின் கவிதைத்தொகுப்பு "நினைத்தாலே இனிக்கும் " அதை இப்ப நினைத்தாலும் இனிக்கிறது...,

1 comment :