Saturday 19 December 2015

ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .

MBS என்று செல்லமாக அழைக்கப்பட்டM.B. ஸ்ரீநிவாசன்,ஆந்திராவில் பிறந்து,மலையாளத்தில் புகழ்பெற்ற இவரை ,தமிழ் சினிமாவில் இசை அமைக்க அப்போது இருந்த ஜாம்பவான்களுக்கு சவாலாக ,. தனது தாய் மொழி மலையாளத்தில் தனக்குப் பிடித்தவரை தமிழ் சினிமாவில் இசைஅமைக்க K .J ஜேசுதாஸ் தமிழுக்கு கொண்டுவந்தார் என்கிறார்கள்!

                                        மலையாளத்தில் மறக்க முடியாத பல மெட்டுப் பாடல்களை அவர் K .J ஜேசுதாஸ் இக்குக் கொடுத்து அவரைப் பிரபலம் ஆகியவர்களில் இவரும் ஒருவர் எண்டு மலையாளிகள் பறைகிறார்கள் ! ஜேசுதாசுக்கு தமிழில் முதன் முதல் சந்தப்பம கொடுத்தவர். ..வீணை.S.பாலச்சந்தர்....பொம்மை திரைப் படத்தில்...1963.இல் இத் திரைப் படத்தில் K.V.மகாதேவனும் நடித்திருந்தார் எண்டு நண்பர் ஆதவன் சொன்னார் ,. அதிகம் தமிழ்படம் இசை அமைக்காத M.B. ஸ்ரீநிவாசன் ஜேசுதாசுக்கு தமிழில் சந்தப்பம கொடுத்தஇசைஅமைத்த சில பாடல்களே "செம ஹிட்" ஆகிஇருக்குது! அருமையான பாடல்களை தந்தவர்.சில பாடல்கள் ஆயினும் நிலைத்து நிற்கிறார்.

                                        ஜான் ஆபிரகாம் என்ற புகழ் பெற்ற மலையாள ஆர்ட் பட இயக்குனரின் "அக்கிறகாரத்தில் கழுதை " என்ற படத்தில அவர் ஹீரோவா நடித்தும் இருக்குறார், அந்தப்படம் தேசிய விருது பெற்றது!70 ல்களின் இறுதியில் சிவகுமார் நடித்து வந்த " மதனனமாளிகை " படத்தில் ,ஹிந்துஸ்தானி சாயல் அதிகம் உள்ள " அமீர் கல்யாணி என்ற ராகத்தில "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா .."என்ற   இந்த ப்பாடல் இசை அமைக்கப்பட்டது!

                                    இசையானி இளையராஜா இவரிடம் உதவியாளரா இசை அமைப்பு பழகப்போன நேரத்தில் ராஜாவுக்கு "வெஸ்டர்ன் நோட்ஸ்" வாசிக்க தெரியாததால் அவரி தனராஜ மாஸ்டரிடம் "வெஸ்டர்ன் கிளசிகள் பியானோ" படிக்க அனுப்பி இருகிரர்ராராம் ஸ்ரீநிவாசன் ,,என்றும் ஒரு நண்பர் சொன்னார் ,,ஸ்ரீனிவாசனும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றி எதாவது பாடல்கள் வெளிவந்ததா எண்டு எனக்கு தெரியாது ..

                               இந்தப் பாடல் கிடாரில் வெஸ்டர்ன் சுர அமைப்பில் எந்த " scale " இல் வரும் எண்டு எனக்கு சரியா தெரியவில்லை(? ) ! குருடன் பெண்டிலுக்கு அடிச்சா மாதிரி ஒரு குத்து மதிப்பில வாசித்து இருக்கிறேன் ! பின்னணி மிருதங்கம் எனோட கிடாரில மேளம் போல தட்டி வாசித்தால் கொஞ்சம் ஓகே போல இருக்கும் இதே படத்தில "ஒரு சின்னப்பறவை அன்னையை தேடி" என்ற பாடலும் இருக்குறது !

                                    M.B. ஸ்ரீநிவாசன் "மார்படைபால்" திடீர் எண்டு இந்தியாவுக்கு அருகில் உள்ள இலட்ச தீவுகள் என்ற நாடுக்கு சுற்றுலா போனபோது இறந்துவிடார், அவரோட இசையின் ஆன்மாவை நீங்கள் இந்த பாட்டு "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "கேட்கும் போது உணரமுடியும், K .J .ஜேசுதாஸ் உம் P .சுசிலாவும் பிறந்ததே பாடுறதுக்கு எண்டதுபோல பாடி இருக்குறார்கள்! இதே படத்தில் தான் உஷா உதுப் பாடிய Under the Mango Tree...என்ற ஆங்கிலப் பாடலும் இருக்குதாம் என்று சகோதரி அருந்ததி சொன்னார்கள் ..

                                       M.B. ஸ்ரீநிவாசன் இசையின் Chords Arrangements ல் தெலுங்கு வெங்கடேச தட்சனாமுர்தியின் ஸ்டைல் இவரிடம் இருக்குது! இந்த "ஏரியிலே ஒரு கஷ்மீர் ரோஜா "பாடலை அழகாக கலை அம்சமாக படம்பிடிக்கவில்லை! சிவகுமார் ஒரு பைத்தியக்காரன்போல தலை மயிரை வளர்த்து கொண்டு,சம்பந்தா,சம்பந்தம் இல்லாமல் நடனம் ஆடுவார் ! இப்படி பல பாடல்களை கவுத்துருகின்றார்கள் தமிழ் சினிமாவில்! " இளமை எனும் பூங்காற்று " பாடலை அப்படிதான் சொதப்பி படம் எடுத்தார்கள்!

                                               சத்தமே இல்லாமல் ,அரிதான ராகங்களில் ,புதுமையாக எதனை முறை கேட்டாலும் அலுக்கதா சில பாடல்ளை அவரின் " ஆன்மா பாடிய சங்கீதம்" போல M.B ஸ்ரீனிவாசனே இதை அவர் பாடலின் மூலம் தெரிவிக்கிறார் .வாழ்க அவர் புகழ்.வாழ்க அவர் சங்கீதம்
...................

1 comment :

  1. இப்படி பல பாடல்களை கவுத்துருகின்றார்கள் தமிழ் சினிமாவில்! " இளமை எனும் பூங்காற்று " பாடலை அப்படிதான் சொதப்பி படம் எடுத்தார்கள்!///

    ஹம்ம். சரியா சொன்னீங்க

    ReplyDelete