Friday 9 October 2015

ஜோன் லெனன்!

இன்று ஜோன் லென்னனின் பிறந்தநாள். உலக மக்களின் சந்தோசத்தை, சுதந்திர விடுதலையை வலியுறுத்தி பாடிய ஜோன் லெனன்,இங்கிலாந்தின் மேற்க்கு கரையில் உள்ள துறைமுக நகரமான லிவர்பூலில் ஒரு ஐரிஸ் நாடுக் கடல் ஓடி என்ற " சைலருக்கும்" , டீன் ஏஜ் வயசு அம்மாவுக்கும் பிறந்தவர்.அவர் பிறந்து 6 மாதத்தில் அவரின் பெற்றோர் அவரை ஒரு சிறிய தாயிடம் தள்ளி விட்டு கானாமல்ப்போக ..அனாதையாக வளர்ந்தவர் 

                                         அவரின் டீன் ஏஜ் வய்சில்  அவரோட லிவர்பூலில் நகரத்தில் பிறந்த , பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற "Beatels "இசை குழுவை உருவாக்கி, அந்த இசைக்குழுவில் lead கிடாரிஸ்ரா, ரிதம் கிட்டார் வாசித்து ,அந்த இசைக்குழுவின் நிறைய ஹிட் ஆனா பாடல்களை ,அந்த இசைக்குழுவின் இன்னுமொரு  உலக இசைப் பிரபலமான போல் மக்கட்னியுடன் சேர்ந்து எழுதியவர்!  பின்னர் மனஸ்தாபத்தில் "Beatels "இசை குழுவை பிரிந்து போய் தனியாக அல்பம் இசைஅமைத்தவர்,
.
                                                     அவரின் பாடல்கள் இசைக்காத நாடுகளே இல்லை, பாடாத மேடைகளே இல்லை , மயங்காத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்குக் கலக்கியவர் !ஜான் லனன்னன் எழுதிய பாடல்கள் எல்லாமே இலக்கியதரம் மிக்கவை . அவர் எழுதிய  " எலினோர்  ரிக்பி "   என்ற ஒரு பாடல் இலங்கையில் Advance Level ஆங்கில இலக்கியம் படிக்கும் பாடசாலைப் பாடப் புத்தகத்தில் இருக்கு. உலகம் முழுவதும் அவரின் பல பாடல்கள் அதன் இலக்கிய கவிதைத் தரதுக்ககா இன்றைக்கும் அதிகம் கவனிக்கப்படுகின்றது !  போல் மக்கட்னியுடன் சேர்ந்து  அவர் எழுதிய காதல்ப் பாடல்கள் " பிடில்ஸ்மேனியா" என்ற ஒரு அலையை அடிக்கவைத்தது அறுபதுகளிலும் , எழுபதுக்களிலும் !
.
                              ஜான் லெனன்னன் சின்னவயசில், பெற்றோர் பிரிந்துபோக, அவரை அவற்றின் சிறிய தாய் வளர்த்தா, அவர்  விடுதிப் பாடசாலையில் தனிய தங்கிப் படித்தார். அவர் படித்த அந்த விடுதிப் பாடசாலை பற்றி "ச்ற்றோபேரி பீல்ஸ் போர் எவர் " எண்டு ஒரு பாடல் எழுதிப் பாடினார் ! அந்தப் பாடல் இன்றும் உலகப் பிரபலமான ஒரு பாடல் ! அந்த பாடல் கொடுத்த இசை மயகய்தில் இன்றும் உலகம் எனக்கும் இருந்து அவர் படித்த அந்த ச்ற்றோபேரி பீல்ஸ்  விடுதிப் பாடசாலையைப்பார்க்க " Beatels " இசைக் குழுவின் அபிமானிகள் போகின்ர்ரர்கள் !
.
                                         யாழ்பாணத்தில அந்த ஜோன் லென்னன்  என்பவர் கிடார் வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் ,எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் ,அவரின் மகனுக்கு கணக்கு சொல்லிகொடுக்கப் போன என்னோட பெரிய அண்ணனனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுக்க அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது ,
.
                                                அதுக்குப் பிறகு " பீடில்ஸ் " இசைக்குழுவின் விபரம் அறிய , "ஜப்னா முநிசிபால்டி பப்ளிக் லைபெறேரியில்" இருந்த " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது..ஜோன் லென்னன் பிரபலம் ஆகுமுன் சிந்தியா என்ற பெண்ணை காதலித்து, ஒன்றா வாழ்ந்தார் ! பின்னர் அவர் பிரபலம் ஆகா கூடவெ நிறைய ஈகோ ,பொறாமை , சார்ந்த குடும்ப பிரச்சினை வர அவர்கள் பிரிந்துவிட்டார்கள் !  

                                       ஜான் லென்னன் அதன் பின் ,ஜப்பான் நாட்டு ஜோகோ ஓனோ என்ற ஒரு ஓவியரை , லண்டனில்  ஒரு ஓவியக்  கண் காட்ட்சியில் சந்திக்க  , காதலாகி கடைசிவரை அவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். ஆனாலும் ஜோகோ ஓனோ என்ற  அவரின் காதலியின் இம்மைசை பொறுக்கமுடியாமல் ,அந்த குழுவில் இருந்து விலகி மற்ற்ற மூன்று பெரும் போக , லெனன் அமரிக்கா போய் தனியா இசை அல்பம் வெளியிட்டவர்!-
.
                                        "Beatles " இசைகுழுவில் இருந்து பிரிந்து தனியாக வந்தபின், ஜான் லென்னென் பாடியது "Imagine", இந்த பாடலின் ஆரம்பம்,அவரின் காதலி ஜோகோ ஓனோவின் டைரியில் இருந்த சில வரிகளை வைத்து எழுதியது, இந்த உலகத்தில் உள்ள எல்லாரும், எல்லாவற்றையும் ,பிரித்து,பகிர்ந்து, சமய, சாதி,வர்க்க, எல்லைகள், இல்லாத ஒரு நிலையில் வாழ்நதால், எல்லாரும் சந்தோசமாக வாழலாம் என்ற concept உள்ள பாடல்,

                                               " Imagine there's no heaven,It's easy if you try ,No hell below us, Above us only sky, Imagine all the people ,Living for today." என்று தொடங்கும் இந்த பாடல் " Imagine all the people, Sharing all the world." என்று முடியும் . இந்த பாடலை லெனென் பியானோ வாசித்துகொண்டு பாடியிருந்தார்! இன்றுவரை இந்தப்பாடல் ஒரு " சமூக விழிப்புணர்வு " பாடல் வகையில் முதல் இடத்தில இருக்குது!

                                         ஜோன் லேனென் ஒரு அருமையான இசை மேதை,,,கவிஞ்சர்,மனித நேயர்,கிடரிஸ்ட்,பாடகர். உலக மக்களின் சந்தோசத்தை, சுதந்திர விடுதலையை வலியுறுத்தி பாடிய, இங்கிலாந்து ,லிவர்பபூளில் பிறந்த, ஜான் லென்ணனை அமரிகாவின் நியூ ஜோர்க் நகரதில வைத்து சுட்டுதள்ளினார்கள்  ! உலக சமாதான விரும்பிகள் என்ற போர்வையில் இயங்கிய இன்னமும் " இனம் தெரியாதவர்கள் ".. அவரை சுட்டவர் சொன்ன அற்ப காரணம் ,இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது !.

https://www.youtube.com/watch?v=BJZr11u9q1Q&feature=youtu.be



1 comment :

  1. https://www.youtube.com/watch?v=BJZr11u9q1Q&feature=youtu.be

    ReplyDelete