மானம்பூ
.
உனக்கு மானம்பூத் திருவிழா வாழை வெட்டில் வீர ஆவேசமாக யாதுமாகி நின்றாய் காளி
எங்கட
சனங்களுக்கோ
கொலு வைச்சுக் காத்திருந்த
சீருடைகள்
ஆயுத பூசையில்
சப்பாத்துக் கால்கள்
கல்வியா
செல்வமா
வீரமா
எண்டு ஆராய்ந்த
புலனாய்வுப் பார்வைகளின்
நவ ராத்திரிகளிருந்து
தப்பிக்க
ஓரமாக ஒதுங்கி நின்ற
நேரமே
மானம் போய்விட்டது !
.
வலிக்கிற வரிகள் ..
ReplyDelete