Sunday 2 August 2015
Annaik Kili Unnaith Theduthe ,,Guitar Cover
ஞாயிறு பொழுதுபோக்கு இசைவிருந்து...இசைஞானி இளையராஜாவின் முதல்ப் படத்தில வந்து நதியோரம் பிறந்து கொடி போல வளர்ந்து பட்டி தொட்டி எல்லாம் "வெயிலோடும் மழையோடும் மனம்போல் நடந்து "பட்டையக் கிளப்பிய ஒரு தலை முறையைக் கிறங்க வைத்த பாடல்.இந்தப் பாடல் வரிகளை அன்னக்கிளி படத்தைத் தாயரித்த பஞ்சு அருணாசலம் எழுதி இருந்தார். இசை எவளவு அருமையோ அவளவு அளவு பாடல் வரிகள், " நதி என்றால் அதுக்குக் கரை ஒன்று காவல் கொடி என்றால் அதைக் காக்க மரமே காவல் புள்ளிபோட்டு ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுக்கப் போகையில் இந்தக் கன்னிக்கு யார் காவல் " என்று ஒரு கிராமத்துப்பெண் பற்றி அழகா " கனவோடு சில நாள் நினைவோடு சிலநாள் உறவில்லைப் பிரிவில்லை தனிமை பலநாள் " என்று ஏங்கும் எல்லோரினதும் இதயத்தை தொட்டு " உறங்காத கண்களுக்கு ஒலை கொண்டு மை எழுதி " இருக்கிறார் பஞ்சு அருணாசலம்.
Subscribe to:
Posts
(
Atom
)