சென்ற வருடம் முகநூலில் நிலைத்தகவலாக எழுதிய எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவைகள் சிக்கனமான வகையில் சுருங்கச் சொல்லும் வடிவ எழுத்துருக்கள், நேரமெடுத்து வாசிக்க எவ்வளவு பொறுமை இருக்கோ அந்தளவில் வாசித்துக்கொளுங்க!
*
புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
கவிதைத் தொகுதி.....
*.
தனியாகக்
குறுக்கிக்கொண்டு
மழை அழுதுமுடித்த கணம்
நடைப்பாதையில்
வட்டமாகத்
தேங்கும் தண்ணியில்
முகத்தைப் பார்த்தால்
ஞாபகம் வரும்,
பூர்வீக வீட்டுக்
கட்டுக்கிணறு
குறுக்கிக்கொண்டு
மழை அழுதுமுடித்த கணம்
நடைப்பாதையில்
வட்டமாகத்
தேங்கும் தண்ணியில்
முகத்தைப் பார்த்தால்
ஞாபகம் வரும்,
பூர்வீக வீட்டுக்
கட்டுக்கிணறு
*
சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....
*
பால்
நிலவு நாட்களில்
பாக்குமரங்களின்
நிழலசைவுகள்
குளிக்கும் தொட்டியில்
முங்கி இறஙகி முழுகி விளையாடும்,
விடிவை முந்திய
காலை
பாதிவரை தேய்ந்த படிக்கல்லில்
வாசசந்தனம் அரைக்கும்
பாட்டி ஞாபகம் ,!
*
புயல்
வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு
*
ஒரு
திருக்கார்த்திகை
விளக்கீட்டுநாள்
தட்செயலாகத் தவறிவிழுந்த
பித்தளை சொம்பு
நீர் மொண்டுகொண்டு வரும்,
மனஅழுத்த நாட்களோடு
போராடிக்கொண்டு
தோய்கல்லில
யோசித்து உட்கார்ந்திருந்த
பெரியக்காவின்
உயிரோடிருந்த வருடங்கள்
ஞாபகத்திலேறி வரும் !
*
உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..
*
பார்த்திங்களா
மழை
அள்ளிக்கொட்டிப்போட்டு
தவறவிட்ட எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கி எடுத்ததால்
நேற்று
ஒருநாள் மட்டும்
எங்கள் வீட்டுக்
கட்டுக்கிணற்றடியில்
நிறைவாக வாழமுடிந்தது.
*
மலர்களின்
அவல
ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.
அவல
ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.
*
நிறைமாத மேகத்துக்கு
பிரசவ இடமொதுக்கும்
வானம்,
ஒழித்துப் பிடித்து விளையாடும்
ஒட்டுப்பொட்டு
நட்சத்திரங்கள்.
உருப்பெருக்கிக் கொண்ட
அலைகளின் விளிம்பில்
கடல்
கட்டாக்காலியாக அலைச்சலுறும்
சாம்பல்க் கழுதைகள்
வெளுத்தபாலைப் பிரதியெடுக்கும்
வெள்ளைப் பவுர்ணமி
நிலவு
இப்படியேதான்
கனவில் வந்து உட்காரும்
முடியாத வாசம் !
*
மிச்ச ஆயுளையும்
வாழ்ந்துவிடச் சொல்லும்
ஆசைகளோடு
பிரிந்து சென்ற இடங்களுக்கு
மீண்டும் செல்லவேண்டும் !
பிடிப்புக்கள்
பிரிந்து சென்ற இடங்களுக்கு
மீண்டும் செல்லவேண்டும் !
பிடிப்புக்கள்
நெருங்கி வருகிறதெல்லாம்
எப்பவோ முடிந்த எதற்காகவா ?
இல்லையேல்
யாருமில்லாத யாருக்காகவா ?
இல்லையேல்
பழங்கனவிலிருந்து முழிக்கவா ?.
எப்பவோ முடிந்த எதற்காகவா ?
இல்லையேல்
யாருமில்லாத யாருக்காகவா ?
இல்லையேல்
பழங்கனவிலிருந்து முழிக்கவா ?.
*
கிணற்றைச் சுற்றிக்
இரவாகவும்
பகலாகவும் காவல்
தலையைக்குணியமறுத்த
இப்பில்இப்பில் மரங்கள்
நினைவுகளில்
இலை துளிர்க்கும் ,
சேறையும் பாசியையும்
அள்ளிக்கொண்டு
நாலுமுறை
அடிநெளிந்த தகரவாளி
ஏறிவருவார
கொட்டுத் துலாமரத்தில்
பிரயாசையோடு துளைப்போட்டு
தன்னம்தனியாகக் குடியிருந்த
கரிச்சான் குருவி.
முன்னுக்குவரும்,
சொல்லமுடியாத
கதை
எழுதவிரும்பாத
எழுதவிரும்பாத
வார்த்தைகள்
தனியாகக்
தனியாகக்
காற்றில் அசைந்து
யாருக்கு
யாருக்கு
அர்த்தம் கொடுக்கப்போகுது ?.
மறந்தும்
விடமுடியவில்லை !
மறந்தும்
விடமுடியவில்லை !
மூச்சடங்கிய இருட்டில்
வரலாற்று ஆவணத்தில்வராத
ஒரேயொருவனின்
இலட்சியத்துக்கும்
அவனைத் தவிர்த்த
மற்றெல்லாரின் விருப்பத்துக்கும்
மத்தியில் நழுவுகிற
அசரீரி இடைவெளிகளில்
இன்னொருமுறை
அவனைத் தவிர்த்த
மற்றெல்லாரின் விருப்பத்துக்கும்
மத்தியில் நழுவுகிற
அசரீரி இடைவெளிகளில்
இன்னொருமுறை
நடந்துபோய்த்
தேடியடைய முடிந்தால்
இன்னொருமுறையும்
காலடிச்சுவடுகளைக்
தேடியடைய முடிந்தால்
இன்னொருமுறையும்
காலடிச்சுவடுகளைக்
கண்டுபிடிக்கலாம் !
*
ஒரு கணம் ஆழ்ந்த மௌனம் நிலவிய
அவள் முகத்தில்
வெட்கம் நிரப்பி
கிறுகிறுக்கவைக்கும் புன்னகை,.
சங்கடப்பட்டு நின்ற
உரையாடல்
வாக்கியங்களின் கைகோர்த்து
நீடிக்கும் போலிருக்கிறது .
இது
அவளைப்பொறுத்தவரை
ஆழ்ந்திருக்கும் கனவாயிருக்கலாம்
இது
மகோன்னதமான
என் கொண்டாட்டம் !
ஒரு கணம் ஆழ்ந்த மௌனம் நிலவிய
அவள் முகத்தில்
வெட்கம் நிரப்பி
கிறுகிறுக்கவைக்கும் புன்னகை,.
சங்கடப்பட்டு நின்ற
உரையாடல்
வாக்கியங்களின் கைகோர்த்து
நீடிக்கும் போலிருக்கிறது .
இது
அவளைப்பொறுத்தவரை
ஆழ்ந்திருக்கும் கனவாயிருக்கலாம்
இது
மகோன்னதமான
என் கொண்டாட்டம் !
*
மௌனமாய் பின்விளைவுகளில்
மறையும் நினைவிடங்கள் ,
விரட்டும்
நிரந்தரமற்ற கனவுகளில்
கொடுமைகள் ,
அவற்றைவிட
விரைந்து பின்வாங்கும்
நெகிழ்வான நினைவுகள்,
ஆர்ப்பரிக்கவேண்டிய
நம் காலத்தில்
நமக்குரியவைகளே
உக்கிரமாக
இறந்தகாலமாகிவிடுகின்றன !
மௌனமாய் பின்விளைவுகளில்
மறையும் நினைவிடங்கள் ,
விரட்டும்
நிரந்தரமற்ற கனவுகளில்
கொடுமைகள் ,
அவற்றைவிட
விரைந்து பின்வாங்கும்
நெகிழ்வான நினைவுகள்,
ஆர்ப்பரிக்கவேண்டிய
நம் காலத்தில்
நமக்குரியவைகளே
உக்கிரமாக
இறந்தகாலமாகிவிடுகின்றன !
*
அலங்காரங்கள்
அனைத்துக்கும் அப்பால்
ஒரு
பூஞ்சோலையின்
துவக்கத்திலும் முடிவிலும்
அப்படியென்னதான்
இருக்கிறது ?
ஒரு
புல்லாங்குழல்
ஊஞ்சலாடிக்கொண்டே
உள்ளிழுக்கும்
இளவேனில்க் காற்றின்
ஓசை நயத்தில்
உங்களைத்
தொலைத்துப் பாருங்கள்,
அப்போது தெரியும் !
அலங்காரங்கள்
அனைத்துக்கும் அப்பால்
ஒரு
பூஞ்சோலையின்
துவக்கத்திலும் முடிவிலும்
அப்படியென்னதான்
இருக்கிறது ?
ஒரு
புல்லாங்குழல்
ஊஞ்சலாடிக்கொண்டே
உள்ளிழுக்கும்
இளவேனில்க் காற்றின்
ஓசை நயத்தில்
உங்களைத்
தொலைத்துப் பாருங்கள்,
அப்போது தெரியும் !
*
பொருந்தி வாசிக்கும்
கண்களும்
இட்டு நிரப்பும்
செவிகளும்
விருப்பத்துக்குரிய
நிழல் சாய்த்து
அசைகளை உருவாக்கி
அபூர்வமாகவே
ஆழ்மனத்தேவைகளை
ஒப்புக்கொள்கிறது !
ஏனெனில்,
அவற்றுக்கான குரல்
உள்ளத்தில்
எப்போதும் இருப்பதில்லை. !
பொருந்தி வாசிக்கும்
கண்களும்
இட்டு நிரப்பும்
செவிகளும்
விருப்பத்துக்குரிய
நிழல் சாய்த்து
அசைகளை உருவாக்கி
அபூர்வமாகவே
ஆழ்மனத்தேவைகளை
ஒப்புக்கொள்கிறது !
ஏனெனில்,
அவற்றுக்கான குரல்
உள்ளத்தில்
எப்போதும் இருப்பதில்லை. !
*
அவ்வப்போது
தவறான முடிவுகளோடு
அழைத்துச் செல்லும்
அச்சுறுத்தலான
பாதைகளில்க்கூட
விசித்திரமான
சுவாரஸியங்களிருக்கலாம் ,
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
வெகு நேரம்
நீடிக்கும் போலிருக்கிற.
மிகவும் பிடித்தமானது
மிக ஆழமான
ஏதோவொன்றைத்
தேர்வு செய்வதுதான்
கடினம். !
*
அவ்வப்போது
தவறான முடிவுகளோடு
அழைத்துச் செல்லும்
அச்சுறுத்தலான
பாதைகளில்க்கூட
விசித்திரமான
சுவாரஸியங்களிருக்கலாம் ,
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
வெகு நேரம்
நீடிக்கும் போலிருக்கிற.
மிகவும் பிடித்தமானது
மிக ஆழமான
ஏதோவொன்றைத்
தேர்வு செய்வதுதான்
கடினம். !
*
ஊடுருவிச் செல்லும்
எண்ணங்களின்
மாய உள்ளடக்கம் ,
அதன்பின்…
தொடர்நிகழ்வுகளாய்
மீளமுடியாத
அசாதாரண ஒலிகள் ,
தேர்ந்தெடுக்கப்பட்ட
எதையெல்லாமோ நம்புகிற
பயம்கள் ,
சிந்திக்கமுடிந்த
ஓர் கட்டத்தில்
ஆவிகளின் நிழல்கள் போலவே
பிரதிபலிக்கப்படுகிறது
தனியிரவு !.
எண்ணங்களின்
மாய உள்ளடக்கம் ,
அதன்பின்…
தொடர்நிகழ்வுகளாய்
மீளமுடியாத
அசாதாரண ஒலிகள் ,
தேர்ந்தெடுக்கப்பட்ட
எதையெல்லாமோ நம்புகிற
பயம்கள் ,
சிந்திக்கமுடிந்த
ஓர் கட்டத்தில்
ஆவிகளின் நிழல்கள் போலவே
பிரதிபலிக்கப்படுகிறது
தனியிரவு !.